Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Sept 2012



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன புரட்டாசி (செப்டம்பர் - 2012)                                                       விலை:ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்


உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு
2. மகான் காலாங்கிநாதர் ஆசி நூல்
3. இருள்சேர் இருவினை சேராமல் காக்கும் இறைவனே வள்ளுவபெருமான் - குருநாதர் அருளுரை
4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர்

மகான் காலாங்கிநாதர் ஆசிநூல்:-

ஆசியுண்டு ஞானத்திருவடி நூலை
அனுதினமும் வாசிக்கும் குடியில்
நேசமிலா நிலை கொண்ட உறவோர்
நிலை தடுமாறும் தீயபழக்கம் கொண்டோர்

கொண்டதொரு உறவுகள் அவரவரும்
குறை நீங்கி தெளிவு காண்பர்
உண்டாகும் ஒழுக்கம் திடம்
உயர்சிந்தை செயல் வேகமடைவர்

அடைவரே பலரும் வியக்க
ஆற்றலுடன் ஆக்கை திடம்
சோடை விலகி ஆயுள் பலம்
சுபிட்ச வாழ்வும் கண்டிடுவர்
- மகான் காலாங்கிநாதர் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.


திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
08.07.1997 அன்று அருளிய
அருளுரை
இருள்சேர் இருவினை சேராமல் காக்கும்
இறைவனே வள்ளுவபெருமான்

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்,

திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது. மற்ற நூல்களிலும் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். இன்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்கின்ற வாழ்க்கை. அது இல்லறமாகும். உலக அறிஞர்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், இனிமையாக பேச வேண்டுமென்று சொல்வார்கள்.

ஆனால் வீடுபேறு பற்றி தமிழன்தான் அறிந்திருக்கின்றான். வீடுபேறு என்றால் மரணமிலா பெருவாழ்வு அல்லது மோட்சலாபம். மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நமது ஞானிகள். மகான் இராமலிங்க சுவாமிகள் முதற்கொண்டு ஆசான் அருணகிரிநாதர் வரை மரணமிலா பெருவாழ்வு என்ற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

அறிஞர்களெல்லாம் விஞ்ஞானத்தைப்பற்றி பேசியிருக்கிறார்கள். உலகத்தை அணுவணுவாக ஆராய்ந்திருக்கிறார்கள். எல்லா கிரகங்களையும் ஆராய்ந்திருக்கிறார்கள். அணுவின் இயக்கத்தைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் நமக்கு மின்சார விசிறி, டேப்ரெக்கார்டர், ஃபிரிட்ஜ், ஏ.சி, மிக்ஸி, துணி துவைக்கும் மெஷின் போன்ற கருவிகளை தமது நுட்பமான அறிவால் தந்திருக்கிறார்கள். ஆக விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்களெல்லாம் மனிதவர்க்கத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதை பாராட்ட வேண்டியதுதான். மெய்ஞானத்துக்கு இது தெரியும். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதிக்கக்கூடாது. இதற்கும் அதற்கும் பகையில்லை, நட்புதான்.

ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்புக்கு நோய் வந்தால் விஞ்ஞானத்தால் குணமாக்கலாம் என்று சொல்லலாம். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.

விஞ்ஞானத்தால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், மருந்துகளும் மனிதவர்க்கத்துக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அது மனிதன் மட்டுமே அடையக்கூடிய மோட்ச லாபத்தை தர வேண்டுமல்லவா?
மோட்ச லாபம் என்பது உடம்புக்குள்ளே சூட்சுமதேகம் அல்லது ஒளி உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒளி உடம்பைப் பற்றி அறியணும்.

ஒளியுடம்பை அறிவதற்கு பக்தி ஒன்றுதான் வழி. ஒளி உடம்பை பெற்றவர்கள் அதை வீடுபேறு, மோட்சலாபம், முக்தி அல்லது முக்திநெறி என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த ஒளிஉடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்தணும், அவர்களிடம் அன்பு செலுத்தணும் என்பார்கள்.

பக்தி எதற்கு செலுத்த வேண்டும்? மோட்சலாபம் அடைவதற்கு.
மோட்சம் அல்லது வீடுபேறு அல்லது முக்திநெறி அடையவேண்டுமென்றால் பக்தி செலுத்தணும்.
பக்தியை யாரிடம் செலுத்துவது?

நாம் செலுத்துகின்ற பக்தியெல்லாம் ஒரு வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் போகும். அவரவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி பக்தி செலுத்துவார்கள்.
ஞானிகளெல்லாம், முற்றுப் பெற்றவனாகவும், எவன் மரணமிலா பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்தும் அழியாது இருக்கிறானோ அவனுடைய ஆசி பெறுவதற்காக ஞானிகள் பக்தி செலுத்துவார்கள். அவர்களுடைய ஆசியை பெறணும்.

ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் பிசிறு இல்லாமல் தெளிவாக இருக்கும். எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்துக்குத்தான் பொருந்தும், இந்த காலத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய நூலை எழுதியிருக்கிறார். என்ன காரணம் என்றால் அவர் வீடுபேறு அறிந்தவர், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர், அறியாமை நீங்கியவர்.

அறியாமை நீங்கியதால்தான் அப்படிப்பட்ட நூலை அவரால் எழுத முடிந்தது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், வீடு பேறைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மகான் திருவள்ளுவபெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.

எனவேதான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த விஞ்ஞானியாலும், எந்த அறிஞராலும் புறக்கணிக்க முடியாததாகவும், இது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நூலை அவர் எழுதவில்லை. 1330 குறளும் அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவனால் எழுதப்பட்டது. அவர் பிறவி நீங்கியவர் பிறவிக்கு காரணமாகிய பேதைமையை நீக்கினவர்.
இந்த உடம்பு பேதைமையை உண்டுபண்ணும். இந்த உடம்பின் இயல்பை அறிந்து அதிலிருக்கும் மாசை நீக்கினார்.

இந்த உடம்பே மாசு. இந்த உடம்புக்கு எப்படி மாசு வந்தது? தாய் தந்தை சேர்க்கை காரணமாக, பெண்ணும் ஆணும் கூடிய சேர்க்கையின் காரணமாக மும்மலம் வந்தது. மும்மலத்தால் ஆன ஆணும் பெண்ணும் கூடி எடுத்ததுதான் இந்த தேகம்.

ஆக இந்த தேகம் மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பால் எடுத்த அசுத்ததேகம். ஆக அசுத்தமும் அசுத்தமும், அழுக்கும் அழுக்கும் சேர்ந்து எடுத்த தேகம்.

ஆக இந்த தேகத்தை அறிந்து அதிலுள்ள மாசை நீக்க வேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் அழுக்கு, மாசு அல்லது மும்மலக்குற்றம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்ற இந்த கசடை நீக்கியதால்தான் அவன் இனி பிறக்க மாட்டான். அவனே பேதைமை நீங்கியவன்.

இந்த உடம்புதான் பேதைமையையும், அறியாமையையும் உண்டு பண்ணும். இந்த உடம்பு தன்னைப்பற்றி புரிந்துகொள்ள முடியாத பலகீனத்தை உண்டு பண்ணும். இயற்கை நமக்கு இந்த உடம்பை இப்படித்தான் கொடுத்தது.

அப்ப மும்மலம் எப்படி வந்தது? மும்மலம் பசியால் வந்தது. தாய் தந்தையின் மும்மலத்தால், மல, ஜல, சுக்கிலத்தால் அல்லது மல, ஜல, சுரோணிதத்தால் இந்த தேகம் வந்தது. இத்தேகத்தை வென்றவன் முதலில் பசியை அறிந்தான், பசியை அறிந்து, அந்த பசிதான் உடம்பை வளர்க்க காரணமாக இருக்கிறது என்பதையும் அறிந்தான்.
ஆக மனிதனுக்கு பசிதான் உடம்பை வளர்க்க காரணமாக இருக்கிறது. பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதுவும் பசிதான். அதை வென்றுவிட்டான்.

பசியை எப்படி வென்றான்? இந்த உடம்புக்குள்ளேயே ஒரு உஷ்ணத்தை உண்டு பண்ணினான். இந்த புறஉடம்பு என்று சொல்லப்பட்ட மாசுள்ளதேகம், அசுத்த தேகம் அல்லது அழுக்கு தேகம் நம்மைவிட்டு கழியகழிய நீங்கநீங்க உள்ளே ஒரு ஜோதி தோன்றுகிறது, உஷ்ணம் தோன்றுகிறது. அந்த உஷ்ணத்தின் துணை கொண்டுதான் புற உடம்பை நீக்கினான்.

மும்மலச் சேறு நீங்கியது, களிம்பு நீங்கியது. அது நீங்கநீங்கநீங்க ஒரு ஒளி உடம்பு உண்டாகிறது. அதனால் அமிழ்தபானம் சாப்பிடுவான். அந்த அமிழ்தபானம் சாப்பிடும்போது பசியற்றுப்போகும்.

எந்த உடம்பில் உஷ்ணமிருக்கிறதோ, எந்த உடம்பு பசிக்கு காரணமாக இருக்கிறதோ, அதே வெப்பத்தின் துணைக் கொண்டு உள்ளே முறையோடு, வகையோடு உஷ்ணத்தை ஏற்றினால் இந்த உடம்புக்குள்ளே அமிழ்தபானம் சிந்தும் என்றார். அந்த அமிழ்தபானத்தை உண்ணுகின்ற மக்களுக்குத்தான் பிறவியற்றுப் போகுமென்பார். இதை மகான் மஸ்தான் சொல்வார்,

ஆடிய கூத்தினைப் போற்றி – அருள்
ஆனந்தஞ் சேரர்க்கு அருளினிற் றோற்றி
ஓடிய காற்றினை யேற்றி – அதில்
உருகியொழுகும மிர்தத்தைத் தேற்றி.
- மகான் மஸ்தான்சாகிபு - ஆனந்தக் களிப்பு - கவி எண் 13.

அங்கே உள்ளே எழுகின்ற கனல் மூலமாக கபாலத்தில் ஏற்றி அதன் மூலமாக வருகின்ற அமிழ்தபானத்தை சாப்பிடுகின்ற மக்களுக்கு பசி இருக்காது.
இத்தகு தவத்தின் போது உடம்பில் மூன்று வகையான ஜோதிகள் தோன்றும். தவத்தின் ஆரம்ப கட்டத்தில் உந்திக்கமலத்திற்கு கீழ் உள்ள ஆதித்தன் மண்டலத்தில் ஒரு ஜோதி தோன்றும். அது தொடர்ந்து நில்லாது விட்டுவிட்டு நட்சத்திரம் போல சூரியப்பிரகாசத்துடன் மின்னிமின்னி தோன்றும். பிறகு தவத்தின் மத்தியில் ஐந்து நிறங்களை உடைய ஜோதி ஒன்று தோன்றும்.

இது உடம்பிலுள்ள களிம்பை முற்றிலும் நீக்கும். தேகமாசு முற்றிலும் நீங்கியவுடன் சந்திர மண்டலம் எனப்படும் உடம்பிலுள்ள வெட்டவெளியில் சதகோடி சூரியப்பிரகாசமுள்ள ஒரு மின்னாத ஒரே சீரான அதீத பிரகாசமுள்ள குளிர்ச்சியான ஜோதி ஒன்று தோன்றும். இது மறையவே மறையாது.

இதுவே சந்திர மண்டல ஜோதியாகும். இதுவே தவத்தின் இறுதி நிலையாகும். இந்நிலையிலேயே அமிழ்தம் உடம்பில் உற்பத்தியாகும்.

மூல நெருப்பைவிட்டு மூட்டுநிலா மண்டபத்தில்
பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
- மகான் பத்ரகிரியார் - மெய்ஞ்ஞானப் புலம்பல் - கவி எண் 96.

பசியற்றுப்போனால் தேகத்தில் இருக்கின்ற மலக்குற்றங்கள் நீங்கும். மலக்குற்றங்கள் நீங்கினால் உள்ளே ஜோதி தோன்றும். ஞானிகள் எல்லோரும் இத்தகைய உடம்பைப் பெற்றவர்கள். அவர்களின் வல்லமைக்கு ஈடே கிடையாது. அவர்கள் எதையும் செய்வார்கள். இந்த வல்லமையை, ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
- திருக்குறள் - தவம் - குறள் எண் 269.

பக்தி செலுத்தியதன் மூலம் அவர்கள் இந்த வாய்ப்பை பெற்றார்கள். பக்தி யார் மீது செலுத்தினார்கள்? ஆசான் அகத்தீசர், நந்தீசர், திருமூலதேவர் போன்ற ஞானிகள் மீது பக்தியும், அன்பும் செலுத்தினார்கள்.

பக்தியும் அன்பும் ஞானிகள்மீது செலுத்த செலுத்த, இவனுக்கு அந்த அறிவை தருகிறார்கள். வாசியை வசப்படச் செய்து, ஓடுகின்ற காற்றை புருவமத்தியில் செலுத்தி வைத்து, அதன் மூலமாக கனல் ஏற்றச் செய்து, அந்த கனல் மூலமாக இந்த உடம்பில் உள்ள கசடுகளை நீங்கச் செய்து, அதன் மூலமாக ஞானிகள் இவனுக்கு அமிழ்தபானத்தை ஊட்டுகிறார்கள். இப்படிப்பட்ட ஒன்றை ஞானிகளால்தான் செய்ய முடியும்.

ஞானிகள் திருவடியைப் பற்றினால் அதை உணர்த்துவார்கள். அவர்கள் உணர்த்தும்போதுதான் இந்த மலக்கசடு, பேதைமை நீங்குகிறது. ஆக அறியாமையை உண்டு பண்ணுகின்ற கசடுகள் நீங்குது. இதை ஆசான் திருவள்ளுவ பெருமான் சொல்வார்,

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
- திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 359.

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் - எல்லா உயிரிலும் சார்ந்திருப்பது மும்மலம். அந்த மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம் அல்லது அசுத்த தேகத்தைப் பற்றி உணர்ந்தான், பிறகு எல்லா உயிரையும் நரகத்திற்கு தள்ளக்கூடிய மும்மலத்தை உணர்ந்து அதை நீக்கக் கற்றுக்கொண்டான்.

மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் - மீண்டும் இவனை அழித்து மீண்டும் இவனுக்கு பிறவியை உண்டாக்கும் இந்த தேகத்தை வசப்படுத்தி தேகத்தை அழியாமல் பாதுகாப்பதால் மரணம் வராது. அதனால் மரணம் வந்து மீண்டும் அவன் பிறக்க மாட்டான்.
இவையெல்லாம் யோகிகளுக்குத்தான் தெரியும். பக்தி செலுத்தினால் இதைப்பற்றி சொல்வார்கள். இந்த இரகசியத்தை அறிந்த மக்கள் தான் மரணமிலாப் பெருவாழ்வு பெறலாமென்று சொல்வார்.

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.
- திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 357.

ஓர்த்து - ஆராய்ந்து. உள்ளது உணரின் - உண்மைப் பொருளை உணரின். ஒருதலையா - ஒருதலைப் பட்சமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆசான் திருவள்ளுவர், நீ உண்மைப் பொருளை உணர்ந்தால், சாகமாட்டாய் என்பார். இதில் இப்படி ஒரு மர்மம் உள்ளது.
இதை அடைய யோகிகள் என்ன செய்கிறார்கள்?
தினம்தினம் பூஜை செய்து ஆசி பெறுகிறார்கள்.
எப்படி பூஜை செய்கிறார்கள்?
சாதாரண மக்கள் போல பூஜை செய்யமாட்டார்கள். இரகசியமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள்.
அப்ப யாரைக் குறித்து தியானம் செய்ய வேண்டும்?
யாரெல்லாம் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்களோ அவர்களை தியானம் செய்ய வேண்டும்.

ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம என்று சொல்லி நாமஜெபம் செய்கிறான். இப்படி நாமஜெபம் செய்யும்போது, இவன் நோக்கம் என்னவென்று ஞானிகள் பார்க்கிறார்கள்.
அப்ப ஞானிகள் ஆசி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தானம் செய்ய வேண்டும். நாம் பேராசைக்காரனாக இருக்கக் கூடாது, வஞ்சகனாக இருக்கக் கூடாது, பாவியாக இருக்கக்கூடாது. நாமஜெபம் செய்யசெய்ய எல்லாவகையான குணக்கேடுகளும் நீங்கிவிடும்.

ஞானிகள் பாவிகளுக்கு அருள் செய்யமாட்டார்கள். அவன் தியாக சிந்தை உள்ளவனாக, புண்ணியவானாக இருக்க வேண்டும். புண்ணியத்தை மேற்கொண்டவனாக இருக்க வேண்டும்.

அப்ப இவன் புண்ணியவான்களான ஞானிகளை தினம் தினம் பூஜை செய்கிறான். பூஜை செய்ய பூஜை செய்ய இவனிடமிருந்த குணக்கேடுகள் எல்லாம் பையப்பைய நீங்கிவிடுகிறது.

இவன் தூய்மையானவர்களையும், உயர்ந்தவர்களையும், பெருந்தகையாளர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும் பூஜை செய்கிறான். அவர்களை வணங்க வணங்க எல்லாவகையான குணக்கேடுகளும் வீழ்ச்சியடைந்து விடுகிறது.

இவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே செய்துவிடுவார்கள். இவனுக்கு தேவையான பொருளையும் கொடுத்து, தகுதியுள்ள தொண்டரையும் கொடுத்து, முறையறிந்து, வகையறிந்து தவத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் ஞானிகள் தருவார்கள்.
நம்முடையது காமதேகம். ஞானிகள் காமத்தை வென்றவர்கள்.

என் மனம் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் பெண்ணைப் பற்றியே நினைக்கிறேன். இதிலிருந்து விடுபட வேண்டும். நீர்தான் அருள் செய்ய வேண்டும் ஐயா! என்று இவன் கேட்கிறான். வறுமையிலிருந்து விடுபட வேண்டுமென்றும் ஞானிகளிடமும் கேட்கிறான்.
இப்படி கேட்ககேட்க வறுமை தீர்கிறது. பொல்லாத காமதேகம் தீர்கிறது. பொல்லாத காமதேகம் நீங்கநீங்க தெளிவான அறிவும் உண்டாகும்.

நமக்கு தெளிவான அறிவு தருவதும், பொல்லாத மடமையை தருவதும், நம் மனதைச் செம்மைப்படுத்தாமல் தடுமாறச் செய்வதும் நம் பொறிபுலன்கள்தான், நம்முடைய காமதேகம்தான் அன்றி வேறு யாருமில்லை. ஆசான் ஆசியால் காமதேகம் நீங்குகிறது.

நாம் வணங்கக்கூடிய தலைவன் பொருள் வெறியனல்ல, காமுகன் அல்ல, ஜாதிவெறியன் அல்ல, துர்குணம் என்பது கடுகளவும் இல்லாதவன். ஆக அவனை வணங்க வணங்க பொல்லாத காமதேகம் விடுபட்டுப் போகிறது. பேராசை அற்றுப்போகுது, வறுமை தீர்கிறது, வாழ்வு உயர்கிறது, மனம் அமைதி பெறுகிறது.
ஆக நாம் வணங்கக்கூடியவன் மிக உயர்ந்த வல்லமை உள்ள ஆசானாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், எதையும் அவர்கள் செய்வார்கள்.


அப்ப தலைவனை நெருங்க நெருங்க அவர்களும் நம்மை சார்ந்திருந்து எல்லா குறைகளையும் முடித்து, பகையை நீக்குகிறார்கள், பண்பை பெருக்குவார்கள். நம்மிடம் இருக்கும் அறியாமை தீரும், மூடத்தனம் நீங்கும். இவையெல்லாம் எப்படி நீங்கியது?

காமதேகம் நீங்கியது அறியாமை தீர்ந்தது, காமதேகம் நீங்கியது தெளிவான அறிவு வந்தது. பொல்லாத வறுமை தீர்ந்தது, செல்வம் பெருகியது, மனதில் அமைதி இருக்குது. மேலும் உயர்ந்த எண்ணங்களும், பெருந்தன்மையும் உண்டாகும். கடவுள் ஆசியால் பெருந்தன்மை வரும். கடவுளின் ஆசியை பெறும்போதுதான், இந்த குணப்பண்புகள் இருக்கும். இதை மகான் திருமூலர்,

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
- திருமந்திரம் - அருளுடைமையின் ஞானம் வருதல் - கவி எண் 1645.

பிரானருள் உண்டெனில் உண்டு நற்செல்வம் - பொய் சொல்லாமல் குவியும் செல்வமே நல்ல செல்வமாகும். இந்த நல்ல செல்வம் யாரிடமும் கேட்டு பெறுவதல்ல. ஆசானே செல்வத்தைக் குவித்து விடுவார். செல்வம் குவியும், வேண்டிய அளவு நிறைய அள்ளிக் கொள்ளலாம். அதில் வஞ்சனை இருக்காது.
பிரானருள் உண்டெனில் உண்டுநல் ஞானம் - ஞானிகளை வணங்க வணங்க நல்ல செல்வம் பெருகும், நல்ல சிந்தனை வரும், பெருந்தன்மை வரும்.

ஆக பெருந்தன்மை வருவதற்கும் ஞானிகள் ஆசியிருக்க வேண்டும். ஞானிகள் ஆசி பெறுவதற்கு தினம்தினம் பூஜை செய்ய வேண்டும்.
ஆக தினம் பூஜை செய்வதனால் என்ன ஏற்படும்?
நல்ல மனது வந்தது, நல்ல செல்வம் வந்தது, நல்ல ஞானம் வந்தது, நல்ல நட்பு கிடைத்தது, பகைமை நீங்கியது, மனம் ஓர்மைப்பட்டது, உற்சாகம் வந்தது, மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்று ஆர்வம் வந்தது. இவையெல்லாம் ஞானிகளை பூஜை செய்வதால் வந்தது.

இப்படிப்பட்ட பூஜை செய்கிறவர்கள் கடவுள் தன்மையை அடைகிறார்கள். அவர்களை ஆசான் திருவள்ளுவபெருமான் பொறிவாயில் ஐந்தவித்தான் என்று சொல்லி அறிமுகப்படுத்துவார். அடுத்து ஆசான் திருவள்ளுவர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 5.

இருள் என்பது அறியாமை. அறியாமையை உண்டு பண்ணுவது உடம்பா, உயிரா, அறிவா, ஊழ்வினையா, இயற்கையா, செயற்கையா, ஆணா, பெண்ணா , ஒளியா அல்லது இருளா என்று கேட்டால் அறியாமைதான்.
இதைத்தான் இருள்சேர் என்பார். ஆக நிலையில்லாததை நிலையென்று மயங்குகின்ற மயக்கம்தான் அறியாமை. அதுதான் இருள். அதுதான் மயக்கமான அறிவு.

எந்த காலத்திலும் நாம் இருப்போம் என்று நம்புவது நமக்கு கேடு. நாம் எப்படியும் ஒரு நாள் இறப்போம் என்பதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 337.

நாளைக்கு இருப்பானா? இருக்க மாட்டானா? என்பது இவனுக்கு தெரியாது. நிலைத்து இருப்போம் என்ற அறியாமையின் காரணமாக நிறைய பொருளாதாரத்தை சேர்க்க வேண்டும். அதை அப்படி செய்ய வேண்டும், இதை இப்படி செய்ய வேண்டுமென்று கற்பனை செய்து கொண்டிருப்பான். மேலும் ஆசான் திருவள்ளுவர்,

நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 334.

வாழ்வைப் புரிந்து கொண்டார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். நாட்கள் ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்நாளை அறுக்கக்கூடிய வாள் என்று உணரவேண்டும். ஆக வாளது உணர்வார்ப் பெறின் - உணர்கின்ற அறிவு. பெறின் என்றால் பெருமைக்குரிய அறிவு.

பெருமைக்குரிய அறிவைப் பெற்ற மக்கள், நாள் ஒவ்வொன்றும் தம்முடைய வாழ்நாளை அறுக்கக்கூடிய வாள் என்று உணர்வார்கள். இப்படி சொன்னவர் ஆசான் திருவள்ளுவபெருமான்.
அடுத்து ஒருபொழுதும் வாழ்வது அறியார் என்பார். வாழ்க்கையின் தத்துவத்தை நொடிப்பொழுதேனும் அறிய மாட்டாமல் மக்கள் இருக்கிறார்கள்.

ஏனய்யா அறியாமல் அவன் இருக்கிறான்? இவன் தன்னுடைய முயற்சியில் ஈடுபடுகிறான். தன்னுடைய அறிவு, கல்வி திறமையைக் கொண்டு வாழ்க்கையை வாழ நினைக்கிறான்.

ஞானிகள் நம்மிலும் மேலானவர்கள். அவர்களின் ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிறப்பறிவு உண்டாகும். ஞானிகளெல்லாம் சிறப்பறிவு உடையவர்கள், கடல்போன்ற கல்வியறிவு உள்ளவர்கள், மிகப்பெரிய வல்லமை உள்ளவர்கள், எதையும் செய்யக் கூடியவர்கள். அவர்களைப் பற்றி சிந்தித்து வணங்காமல், இவனாகவே சிந்தித்து இவனுடைய அறிவு திறமை ஆற்றலை நம்பிக் கொண்டு கற்பனையில் மூழ்கி இருக்கிறான். அப்பொழுதுதான், ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதும் கோடியும் அல்ல பல என்றார்.

எனவே ஞானிகளை வணங்குகிறோம். ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி அறிந்தவர்கள். எனவே ஞானிகளை தினம்தினம் பூஜை செய்கிறான். பூஜை செய்ய பூஜை செய்ய அவனுக்கு தெளிவான அறிவை ஞானிகள் கொடுப்பார்கள்.
இவன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறான். வாழ்நாளைப் பற்றி அறிந்ததால் பயம் வரும். ஐயோ! நாட்கள் வீணாகிறதே. ஒவ்வொரு நாளும் வீணாகாமல், நாம் ஆசான் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பு பூஜை செய்தால் வரும்.

தினம் தினம் பூஜை செய்ய பூஜை செய்ய வாழ்க்கையில் உள்ள பலகீனங்களை புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் உள்ள பலகீனங்களை புரிந்து கொண்டால், நம்முடைய உடம்பு நலியும் என்றும், பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது என்றும், அதற்கு முதுமை வரும், சாவு வரும். இப்படி நலிவு வருவதற்கு முன்பே விரைவாக ஞானிகளின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைவனை பூஜை செய்தால்தான், விரைவாக ஆசி பெற்று ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வை தலைவன் தருவான்.

ஆகவே நிலையில்லாத வாழ்வை பெற்றிருக்கிறோமென்ற அறிவு வந்தால்தான் பூஜை செய்வான். நாம்தான் எக்காலத்தும் இருப்போம் என்று இறுமாந்து இருந்தால் தலைவன் அவனுக்கு அருள் செய்ய மாட்டான்

ஆக மனித வர்க்கம் நாளைக்கு என்ன நடக்க போகிறது? என்பது தெரியாமல் இருக்கிறது. விபத்து நடக்கலாம், புயல் வரலாம், பூகம்பம் வரலாம், இயற்கை சீற்றங்களாலும், விஷ ஜந்துக்களாலும், பகைவர்களாலும், மின்சார தாக்குதலாலும் இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதெல்லாம் நமக்கு புரியாது. ஆக நாம் கற்பனையில் மூழ்கி இருப்பதை ஞானிகள்தான் சுட்டிக் காட்டுவார்கள்.

ஏண்டா? கற்பனையில் உழன்று கிடக்கிறாய். ஆசானை வணங்கு. ஆசான் நிலையான அறிவு பெற்றவர். அவரை வணங்கும்போது நிலையில்லாததை உணர்த்துவார். நிலையில்லாததைப் பற்றி உணர்த்தினால்தான் இவனுக்கு ஒரு உணர்வு வரும். எனவே ஆசானை பூஜை செய்கிறான். பூஜை செய்ய பூஜை செய்ய பலகீனம் தெரியும். பின்பு நிலையானதைப் பற்றி அறிகிறான்.

இந்த உடம்பே மாசு. இந்த உடம்பு நமக்கு தீமை செய்கிறதென்று உணர்ந்தால் மட்டும் போதுமா? இதற்கு ஞானிகள் என்ன செய்கிறார்கள்? இவன் உள்ளே சார்ந்திருந்து மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுக்காற்று இயக்கத்தோடு கலந்திருந்து உள்ளே உள்ள அசுத்தங்களை நீக்குகிறார்கள்.

அசுத்த தேகம் நீங்க நீங்க சிறப்பறிவு உண்டாகும், சிறப்பறிவினால் இது நிலையானது, இது நிலையற்றது என்பதை அறியமுடியும். இது நிலையில்லாதது, இது நிலையானது என்று உணர்கின்ற அறிவு வந்தால் நிலையானதை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு வரும்.

நிலையானதை பற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு வரும்போது அதைப் பெறுவதற்குள்ள பயிற்சியில் ஈடுபடுவான். அப்படி பயிற்சியில் ஈடுபடும்போது அவனிடம் உள்ள பலகீனங்கள் நீங்குகிறது.
பலகீனம் என்பது மாசுள்ள தேகம், களிம்பான தேகம், அசுத்த தேகம், காமதேகம். காமதேகம் நீங்கநீங்க தெளிவான அறிவு வரும். ஆக அதுபோல் தெளிவான ஒரு அறிவு வந்தால்தான் நம்மிடம் இருள் நீங்குகிறது.

இருள் என்பது என்ன? அறியாமையா, உடம்பா அல்லது உயிரா? இருள் என்பது உயிரிலே இருந்ததா? ஆக இருள் என்பது அறியாமை. அறியாமையை உண்டு பண்ணுகின்ற உடம்பு நீங்க நீங்க தெளிவான அறிவு வரும். எனவே அந்த அறியாமையை உண்டு பண்ணுவது மும்மலம் என்று சொல்லப்பட்ட கசடு அல்லது களிம்பு ஆகும். இதைத்தான் இருள்சேர் இருவினை என்றார்.

ஞானியர்களெல்லாம் இருவினை அற்றவர்கள், ஒளி உடம்பு பெற்றவர்கள். அங்கே அறியாமை இல்லை, காமதேகம் இல்லை, வஞ்சனை இல்லை. காமதேகத்தை பொடியாக்கியதால் அவர்கள் சிறந்த ஒளிஉடம்பை பெற்றிருக்கிறார்கள், அறியாமை நீங்கியது.

ஆக அறியாமை காரணமாகத்தான் இருவினை வந்தது என்பார் ஆசான் திருவள்ளுவர். இருவினைக்கு காரணம் என்ன? இருவினைக்கு காரணம் வந்து போகின்ற இந்த காற்றுதான். மூச்சுக்காற்று வந்து போனால் இருவினையை உண்டாக்கும். இந்த காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால் இருவினை அற்றுப்போகும்.

ஆக ஞானிகள், மூச்சுக்காற்றோடு சார்ந்திருந்து, உடம்பின் உள்ளே ஒரு விதமான இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உண்டுபண்ணி காமதேகத்தை நீக்குவார்கள்.
காமதேகத்தை நீக்கினால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் இருள் தீரும். அப்போது இருளுக்கு காரணம் அறியாமை. அறியாமைக்கு காரணம் மும்மலமாகிய காமதேகம்.
எனவே காமதேகம் நீங்கினால் அறிவு பெருகுகின்றது, மும்மலம் நீங்குகிறது. காமதேகம் நீங்கியது சிறப்பறிவு வந்தது.

சிறப்பறிவு வந்தது, தன்னைப் பற்றி உணர்ந்தான். தன்னைப் பற்றி உணர்ந்ததனால் தான் முன்னேற முற்படுகின்றான். இதற்கு ஆசான் துணையிருக்கிறார். அவரின் ஆசியின் காரணமாகவும், அருளின் காரணமாகவும் இந்த காமதேகம் நீங்கியது. இந்த காமதேகம் நீங்கியவுடன் அறியாமை தீருகிறது.

எனவே அறியாமையை உண்டு பண்ணுவது உயிரா , அறிவா, ஊழ் வினையா, இயற்கையா அல்லது செயற்கையா என ஆராய்ந்து பார்க்கும்போது, இயற்கை நம்மை தோற்றுவிக்கும்போதே இருளோடுதான் தோற்றுவித்தது.

இருள் என்பது தாய்தந்தையால் எடுத்த காமதேகம். இந்த தேகமே நமக்கு அறியாமையை உண்டு பண்ணுகிறது. அப்ப தாய் தந்தையால் எடுத்த காமதேகம் அறியாமையை உண்டாக்கினாலும், எந்த உடம்பு நமக்கு அறியாமையை உண்டாக்கியதோ அந்த உடம்பைக் கொண்டே, உள்ளுடம்பாகிய ஒளியுடம்பை இவன் பெறுகிறான். ஆகவே இருள் தீர்ந்தது.
இருள் என்பது என்ன? ஒரு அழகிய பெண் ஆரத்தழுவினாலும் உணர்ச்சியற்ற தேகம் பெறுவதுதான் இருள் நீங்கியதற்கு அர்த்தம்.

அப்போது அந்த தேகத்தில் காமம் இல்லை, அறியாமை இல்லை. அறியாமை இல்லையென்றால் தெளிவான அறிவிருக்கும், தெளிவான அறிவிருந்தால் எதையும் செய்வான்.
ஆக அறிவு மாசு நீங்குகிறது, உடல் மாசு நீங்கியது, உயிர் மாசு நீங்கியது. உயிருக்கு மாசு உண்டாக்குவது இந்த உடம்பு. இருளை உண்டாக்குவது இந்த உடம்பு. அறியாமையை உண்டாக்குவது இந்த உடம்பு. ஆக தோற்றுவிக்கும்போதே இப்படி ஒரு பலகீனமான நச்சுத்தன்மையை, களிம்பை உண்டாக்கி வைத்திருக்கிறான்.

அறியாமை காரணமாகத்தான் நல்வினை, தீவினை வந்தது. புண்ணியம் செய்தால் நல்ல பிறவி வரும். பாவம் செய்தால் தீமையான பிறவி வரும்.
மேலும் இருவினை என்பது வருகின்ற காற்றும், போகின்ற காற்றுமாகும். வருகின்ற காற்று நல்வினை. போகின்ற காற்று தீவினை. அதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வருகின்ற காற்றை தீவினையாகவும், போகின்ற காற்றை நல்வினையாகவும் வைத்துக் கொள்ளலாம். ஆக எப்படி இருந்தாலும் இது இருவினைதான். இந்த இருவினை அற்றுப்போக வேண்டும்.

நமக்கு ஒன்பது வாசல் இருக்கிறது. இந்த ஒன்பது வாசல் வழியாக வாழ்கின்ற வாழ்க்கை இருவினைக்குத்தான் கொண்டு செலுத்தும். பத்தாம் வாசல் என்று சொல்லப்படுகின்ற புருவமத்தியாகிய சுழிமுனையை அறிந்து வாசியை செலுத்திவிட்டால் அங்கே இருவினை அற்றுப்போகும். இருவினை நீங்கி ஒருவினையாகும். மீண்டும் பிறவிக்கு காரணமான உடம்பு நீங்கியது.

புருவமத்தியை பதி என்று சொல்வார்கள். பத்தாம்வாசல் என்று சொல்லப்பட்ட புருவ மத்தியாகிய சுழிமுனையில் வாசியை செலுத்திவிட்டால், அப்படி செலுத்தியதின் காரணமாக உடல் மாற்றம் ஏற்பட்டு, அசுத்ததேகம் நீங்கியது. அசுத்த தேகம் நீங்கியதால் பத்தாம் வாசல் எனும் சுழிமுனை திறக்கிறது. சுழிமுனை கதவு திறப்பதால் அமிழ்தபானம் சிந்துகிறது. ஆக அமிழ்தபானத்தை உண்பவன் இனிபிறக்க மாட்டான்.

பத்தாம் வாசல் அறிந்த மக்கள் இனி பிறக்கமாட்டார்கள். அறியாமை நீங்கியது. காமதேகம் என்ற இருள் நீங்கியது. மும்மல தேகம் நீங்கியது. பசியற்ற தன்மை வந்தது. பசியற்ற தன்மை வரும்வரையில் அவன் மீண்டும் பிறப்பான். உணவு தேவையில்லை, உணவை விரும்பினால் சாப்பிடலாம், இல்லையென்றால் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். ஆக இனி தேகம் மாண்டு போகாது.

தேகம் மாண்டு போகாது என்பதற்கு காரணம் பசி அற்றது, காமம் அற்றது. அதனால் அறியாமை நீங்கியது, தெளிவான அறிவு வந்தது. யோகிகள் கண்ணை மூடினால் ஜோதியை காண்பார்கள். ஜோதியை காண்கிறவர்களுக்கு அறியாமை நீங்குகிறது.

ஆசான் இராமலிங்க சுவாமிகள் ஜோதியை மறைத்திருப்பது ஏழு திரைகள் என்று சொல்லுவார். அந்த ஜோதியை மறைத்திருப்பது இந்த உடம்புதான். மும்மலம் ஜோதியை மறைத்திருக்கிறது. ஞானிகள் பையபைய

உடம்பிலிருந்து அந்த கசடை நீக்குகிறார்கள். அப்படி நீக்கினால்தான் இருவினை அற்றுப்போகும். இனி அவன் கருப்பைக்கு போகமாட்டான்.

ஆக இருள் நீங்குவதற்கு ஒரேவழி தலைவனை வணங்கி ஆசிபெற்றுக் கொள்ள வேண்டும். தலைவன் அறியாமை இல்லாதவன், காமதேகம் அற்றவன், மரணமில்லாதவன், நரைதிரை அற்றவன், உயர்ந்தவன், உன்னதமானவன், ஒளி உடம்பை பெற்றவன், ஜோதியானவன், கடந்த ஒன்றை தம்முள் அறிந்தவன், எல்லாவற்றையும் கடந்து அறிந்தவன், அவன்தான் கடவுள்.

அப்பேர்ப்பட்ட தலைவனை பூஜை செய்ய வேண்டும். என்னிடம் பொறாமை இருக்கிறது, அறியாமை இருக்கிறது, வஞ்சனை இருக்கிறது என்றெல்லாம் சொல்லி அந்த குணக்கேடுகளெல்லாம் நீங்க வேண்டுமென்று அந்த தலைவனை பூஜை செய்து கேட்க வேண்டும்.
மகான் திருமூலர் எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்பதை சொல்வார்,

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
- திருமந்திரம் - பக்குவன் - கவி எண் 1701.

கடவுள் யாரென்று அறிந்த பின்பு அவரை வணங்க வேண்டும்.
அப்ப யார் கடவுள்?
எவர் மரணமில்லா பெருவாழ்வு பெற்றாரோ, எவர் காமதேகத்தை வென்றாரோ, எவர் ஒளியுடம்பை பெற்றாரோ, எவர் அழைக்கும்போதே வருகின்றாரோ, எவர் சித்தி பெற்றாரோ அவர்தான் கடவுள்.

ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலதேவர், ஆசான் போகர், ஆசான் கருவூர்முனிவர் போன்றவர்களெல்லாம் பெரிய மகான்கள். இவர்களெல்லாம் மேற்சொன்ன வல்லமையை பெற்றவர்கள். இவர்கள்தான் கடவுள். இவர்களிடம், நீங்கள் பெற்ற அந்த வாய்ப்பை அடியேனும் பெற அருள் புரியுங்கள் என்று கேட்க வேண்டும்.
எப்படி கேட்க வேண்டுமென்று ஆசான் திருமூலர் சொல்கிறார். இறையடி தாழ்ந்து ஐவணக்கமும் எய்தி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களையும் ஒருநிலைப்படுத்த வேண்டுமென்று சொல்வார்கள்.

அடுத்து ஐவணக்கமும் எய்தி என்பார். வணக்கம் என்றால் அவர்களிடம் கைகட்டிதான் நிற்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது. அவர்கள் பெரியோர்கள் அல்லவா? அவர்களெல்லாம் மரணமிலா பெருவாழ்வு பெற்றவர்கள் அல்லவா? எனவே அவர்களை பணிந்து வணங்கி கேட்க வேண்டும்.

நான் உலக நடையில் இருக்கிறேன். ஐயா, எனக்கு உணவு வேண்டும், உடை வேண்டும், பொருள் வேண்டும், நட்பு வேண்டும், மன அமைதி வேண்டும், உன் ஆசியும் வேண்டும். இப்படியெல்லாம் ஞானிகளை வணங்கி கேட்க வேண்டும்.

ஆக இப்படி ஞானிகளை கேட்டதால் வறுமை நீங்கியது, காமதேகம் ஒழிந்தது, பகைமை நீங்கியது, நல்ல நட்பு பெருகியது, மன அமைதி வந்தது, தவத்திற்குரிய இடம் கிடைத்தது. ஆக வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து, மனம் என்னென்ன வகையில் பாதிக்குமோ அதையெல்லாம் சரிப்படுத்தி நம்மைக் காப்பாற்றுவார்கள்.

மேலும் நம்மிடம் உள்ள குறையை, என்னய்யா எனக்கு பொருள் கொடுத்தாய், உன் ஆசி தந்தாய், நல்ல நட்பு தந்தாய், நல்ல தொண்டர்களை கொடுத்திருக்கிறாய், தவம் செய்வதற்குரிய இடம் கொடுத்திருக்கிறாய், பால் தந்திருக்கிறாய், பழம் தந்திருக்கிறாய், போக்குவரத்திற்காக வாகனம் தருகிறாய், மனம் அமைதி பெறுவதற்குரிய மார்க்கம் தருகிறாய், நூலறிவு கொடுத்திருக்கிறாய், படிப்பதற்கு அறிவு தந்திருக்கிறாய், இப்படியெல்லாம் கொடுத்திருக்கிறாய். ஆனாலும் இன்னும் மனம் செம்மைப்பட வில்லை, தடுமாறுகிறேன் என்று தன்னிடம் உள்ள குறைகளைக் கூறவேண்டும்.

நமது குறையை தகுதியுள்ள ஆசானிடம் சொல்ல வேண்டும். மேலும் முற்றுப்பெற்றவனாகவும், முனிவனாகவும் எல்லாவற்றையும் நமக்கு அருள் செய்யக்கூடியவனாகவும், வினையை நீக்குபவனாகவும், நம் பாவத்தை பொடியாக்குபவனாகவும் உள்ளவர்களை ஆராய்ந்து பார்த்து நம் குறைகளை சொல்ல வேண்டும். எனவேதான், ஆசான் அகத்தீசரையோ, ஆசான் நந்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ வணங்குகிறோம்.
ஆசான் திருமூலர் இதை குறையது கூறி என்றார். பிறரைப்பற்றி குறை சொல்லவேண்டிய அவசியமில்லை. அது நமக்கு தேவையும் இல்லை. நமது குறையை சொல்கிறோம்.
இன்னும் மனசு பலகீனப்படுகிறது. இன்னும் பெண்களைக் கண்டால் நாட்டம் இருக்கிறது. இதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இதிலிருந்து விடுபட அருள் செய்ய வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.

அது உண்மைதானப்பா, அது சின்ன விஷயமில்லை. அது உணர்வோடும் உணர்ச்சியோடும் காலம்காலமாக எடுத்த தேகத்திலிருந்து வருகிறது. எனவே இந்த தேகத்தை விட்டுவிடக் கூடாது. அதைப் பற்றி நினைத்து நீ கவலைப்படாதே, அதன் போக்கிலே போ என்று சொல்வார் ஆசான்.
மனித வர்க்கம் விரும்பியது எல்லாம் முன்னமே குவிந்து கிடக்கிறது. எல்லாவற்றிலும் நிறைவு இருக்கிறதே ஐயா! உனக்கு, இன்னும் என்ன குறை என்பார் ஆசான்.

இன்னும் என் மனம் செம்மைப்படவில்லை, இன்னும் உன் ஆசிபெறவில்லை, இன்னும் மனம் ஓர்மையுடன் உன் திருவடியை பற்றவில்லை. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். ஆசானை நெருங்க நெருங்க மனம் இலயப்படும். மனம் இலயப்படுவது என்பது சின்ன விஷயமில்லை .

மனம் செவ்வையாவதெப்போ நாம் உய்வதெப்போ
அப்ப மனம் செம்மையாகவில்லை என்று கேட்கிறான். அவனுக்கு இந்த சிந்தனை தவிர வேறுவகையான சிந்தனை இருக்கக் கூடாது. வேறு வகையான சிந்தனை இருந்தால் மனம் செம்மைப்படாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நான் பண்புள்ளவனாக வாழவேண்டும், வஞ்சகனாக வாழக்கூடாது, எனக்கு இன்னும் சினம் வருகிறது, இன்னும் கோபப்படுகிறேன், என்னிடம் பொறாமை இருக்கிறது, மற்றவர்களை அவமதிக்கிறேன். இது போன்ற குறைபாடுகள் என்னிடம் இருக்கிறதென்று ஆசானிடம் சொல்ல வேண்டும்.

சீஎன்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
என்று மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.
நான் பிறரை இன்னும் இகழ்ந்து பேசுகிறேன். மற்றவர்களை அவமதிக்கிறேன். நான் அதிகம் கல்வி கற்றிருப்பதாக நினைக்கிறேன். பிறரை மதிக்க கற்றுக் கொள்ளவில்லை. பிறர் மனம் புண்பட பேசுகிறேன். மற்றவனை புகழ்ந்து பேச என்னால் முடியவில்லை. அவனுடைய மனதை புண்படுத்துவதையே விரும்புகிறேன். பிறர் மனம் மகிழும்படியாக என்னால் பேச முடியவில்லை. இப்படிப்பட்ட குறைகளை ஆசானிடம் சொல்ல வேண்டும்.

ஒருவன் தவத்தை முடிப்பதற்கு பல அன்பர்கள் வருவார்கள், அன்பு காட்டுவார்கள். ஆனால் நமது மனம் அவன் வஞ்சகத்தோடு வந்திருக்கிறான். அவன் மோசம் செய்யப் போகிறான் என்று நம் மனம் நினைக்கும். ஆசான் ஆசியிருந்தால் இந்த எண்ணம் தவறென்று உணர்த்தப்படும். இவன் செய்த பாவம் இருக்கிற வரையில், நல்லவனை, கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் நினைக்கத் தோன்றும். இந்த பாவம் நீங்கும் வரையில் இந்த குணக்கேடு இருக்கத்தான் செய்யும்.
என்னிடம் இருக்கும் குறையை எனக்கு உணர்த்த வேண்டுமென்று ஆசானிடம் கேட்கிறான்.

என்னிடம் ஒரே ஒரு நிறை உள்ளது. அதை என்னால் உணர முடிகிறது. உன்னுடைய ஆசியை தெரிந்து கொண்டேன். உன் திருவடியைப் பற்றினால்தான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியுமென்ற ஒரேயொரு சிறப்பறிவு மட்டும்தான் என்னிடம் இருக்கிறது. உன்னை அடைவதற்கு என்னென்ன

பண்புகள் வேண்டுமென்று தெரியவில்லை. என்னிடமுள்ள பலகீனங்கள் நான் எந்தெந்த வகையில் பாவியாகிறேன் என்பதை எல்லாம் எனக்கு உணர்த்தி அருள் செய்ய வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.

எந்தெந்த வகையில் நான் புண்ணியவான் ஆவேனென்று எனக்குத் தெரியவில்லை, எந்தெந்த வகையில் அடியேன் பாவியாக வாய்ப்பிருக்கிறது, அதை எனக்கு உணர்த்த வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். நான் புண்ணியவானாகும்போது என்னை தடுத்து நிறுத்த வேண்டாம். நான் பாவியாக முயற்சிக்கும்போதெல்லாம் என்னை தடுத்து நிறுத்தி ஆட்கொள்ள வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். இப்படி ஒருவன் பூஜை செய்யும்போதுதான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியும்.

ஆக நம்மிடம் இருக்கும் குறை நமக்குத் தெரியாது. நம்மிடம் உள்ள குறை என்றைக்கு தெரிகிறதோ அன்றே நமக்கு ஞானம் என்று ஞானிகள் சொல்வார்கள். மகான் திருவள்ளுவர் இதை சொல்வார்,

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
- மகான் திருவள்ளுவர் - புறங்கூறாமை - குறள் எண் 190.

ஏதிலார் என்றால் பகைவர். ஆசான் திருவள்ளுவர் சொல்லும்போது பகைவர்களுடைய குற்றத்தை அறிகின்ற அறிவு உனக்கு இருக்கிறது, உன்னுடைய குற்றத்தை என்று நீ அறிகின்றாயோ அன்றே உன் ஆன்மாவுக்கு தீங்கு வராது, நீ முன்னேறலாம் என்று சொல்வார். அப்ப குறைகளைப் பற்றி அறிகிறோம். குறைகளைப் பற்றி அறியும்போது நிச்சயம் மாற்றிக் கொள்ளமுடியும்.

பொறாமை குணம், வஞ்சனை குணம், சினம், பிறரை அவமதித்தல், கர்வம் போன்ற குணக்கேடுகளெல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆனால் இதை வெல்வது சின்ன விஷயம் அல்ல. ஆனால் இப்படிப்பட்ட குற்றம் நம்மிடம் உள்ளதென்று உணர்ந்தாலே போதுமென்பார் ஆசான்.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
காண்கில் - கண்டால், பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு என்றார்.
நம்மிடம் உள்ள குறைகளை தெரிந்து கொண்டாலே போதும், கடவுளாகலாம். எனவே தெரிந்து கொண்டால் நீக்கிக் கொள்ளலாம்.

இவன் ஆசானிடம் கேட்கிறான். என்னப்பா அவன் மனமுவந்து எனக்கு தொண்டு செய்கிறான். அவனை அவமதிக்கிறேன். ஆசான் நல்லபடி இருக்க வேண்டும். அவர் மூலமாக நான் ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்று உருகி நம்மிடம் அன்பு காட்டுகிறான். அவனை என்னால் புரிந்து

கொள்ள முடியவில்லை. அவனை புரிந்து கொள்ளாமல் வேதனைப்படுத்துகிறேன். அதிலிருந்து நான் விடுபட வேண்டுமென்று ஆசானிடம் கேட்கிறான்.

அதற்கு ஆசான் சொல்வார். நியாயந்தானப்பா, அது உண்மைதான். நீ முன்செய்த வினையின் காரணமாக அப்படி ஒரு பலகீனம் இருக்கிறதென்று சொல்லி அந்த குணக்கேட்டையும் நீக்குவார். ஆக எல்லா வகையான குணக்கேடுகளையும் ஆசானைத்தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது. ஏனென்றால் எல்லா வகையான குணக்கேடுகளையும் நீக்கி வெற்றி கண்டவர் ஆசான்.
அத்தகைய வல்லமையுள்ள ஆசானிடம், என்னிடம் உள்ள குணக்கேடுகளை அறிந்துகொள்ள நீர் அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.

உன் திருவருள் கடாட்சத்தால், உன் ஆசியால், உன் அனுக்கிரகத்தால் என்னிடம் உள்ள சினம், வஞ்சனை, பொறாமை, பிறரை அவமதித்தல், தொண்டு செய்வோரை மதியாமை, பலகீனமாக பேசுதல் போன்ற குணக்கேடுகள் என்னிடம் இருக்கிறதென்று தெரிந்து கொண்டேன் ஐயா! இதை நீக்கவேண்டும் ஐயா! என்றான்.
தெரிந்து கொண்டாய் அல்லவா? அதுவே பெரிய புண்ணியம், அதுவே பெரிய பாக்கியம் என்றார் ஆசான்.

இதைத்தான், குறையது கூறிக் குணங்கொண்டு போற்ற என்றார் ஆசான் திருமூலர். பெரியவர்களின் பெருமைகளை பேச வேண்டும். அவர்களை புகழ்ந்து போற்ற வேண்டும். நாமும் குணப்பண்பு உள்ளவனாக இருந்து போற்ற வேண்டும்.

குணங்கொண்டு போற்ற என்றார். முதலில் கடவுள் யாரென்று அறிய வேண்டும்? மனம், மெய், மொழிகளால் வணங்க வேண்டும். மெய், வாய், கண், மூக்கு, செவி என்று ஐம்புலன்களும் ஒடுங்கி தியானம் செய்ய வேண்டும். நமது குறைகளையெல்லாம் சொல்லி, பெரியவர்களை போற்றி பேசவேண்டும்.

ஆசான் அகத்தீசர் பெரிய மகான், ஆசான் திருமூலர் பெரிய மகான், ஆசான் நந்தீசர் பெரிய மகான், ஆசான் போகமகாரிஷி பெரிய மகான் இவர்களை பெரிய மகான்களென்று வணங்க வேண்டும். மேலும் இவர்களை வணங்க வேண்டுமென்று பிறருக்கு சொல்ல வேண்டும். ஏனய்யா சொல்ல வேண்டுமென்றால் நாம் அறிந்ததை தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இப்பேர்ப்பட்ட பெரியோர்களின் பெருமைகளை பேசுவதால் அவர்களுக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது.

ஆக அங்கே இருள்சேர் இருவினை சேரா என்பார். இங்கே சிறையுடல் நீயற காட்டி என்பார்.
இந்த ஆன்மா என்று சொல்லப்பட்ட ஒன்று காமதேகமாகிய இரும்பு சிறையில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த இரும்புசிறை என்பது மும்மலத்தால் ஆனது. மும்மலம் என்று சொல்லப்பட்ட ஓர் அரண் அல்லது ஓர் இரும்பு சிறையில் அகப்பட்டுள்ளது.

இந்த சிறைப்பட்ட ஆன்மாவை எப்படி ஐயா சிறை நீக்குறது? இந்த உடம்பை சாகடிப்பதா? அல்லது பட்டினி போடுவதா? என்றால் முடியவே முடியாது. பட்டினி போட்டால் செத்துப்போவாய். உணவு தந்தால் காமம் வந்துவிடும். பிறகு எப்படி? அதன் போக்கிலேயே சென்று காமதேகத்தில் சிறைப்பட்டிருக்கின்ற ஆன்மாவை விடுபட செய்யலாம். அதன் போக்கிலேயே சென்று விடுபட செய்வது பெருமைக்குரியது. இதற்கு ஞானிகள் ஆசி வேண்டும்.

சிறையுடல் நீயறக் காட்டி - அற்றுப்போகும்படி காட்டினார். காட்டி என்றால் உணர்த்தி என்று அர்த்தம்.
சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கியாமே - ஆசான் அகத்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ வணங்கி, நான் பாவிதான் ஐயா, நீங்களெல்லாம் புண்ணியவான்கள், பெரியவர்கள், எத்தனையோ பஞ்சமாபாவிகள் உங்கள் ஆசியைப் பெற்றிருக்கிறார்கள். நாயினும் கடையேன் புழுத்த நாயாகிய என்னையும் ஒரு பார்வை பார்த்து அருள் செய்ய வேண்டுமென்று கேட்கிறான்.

மேலும் நான் மலத்தில் நெளியக் கூடிய புழுவினும் கடையேன், கொடிய பாவிதான் என்பதை அறிந்திருக்கிறேன். என்னை விட எத்தனையோ பஞ்சமாபாவிகள் எல்லாம் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள். நீ ஏன் எனக்கு கருணை காட்டக் கூடாது? நீ ஏன் என்னையும் கடைக்கண் பார்வை பார்க்கக்கூடாது? என்றும் கேட்கிறான்.

இப்படி கேட்க கேட்க ஞானிகள் ஆசி நமக்குக் கிடைக்கிறது. அவர்கள் ஆசியை உணர்ந்து கொள்ள உணர்த்துவார்கள். உணர்த்த, உணர்த்த, உணர்த்த உண்மை தெரியும். ஆக இது பக்தியினால்தான் முடியும். வேறு எந்த வகையாலும் முடியாது.

பக்தி செலுத்த செலுத்த ஆன்மா சிறைப்பட்டிருப்பது தெரியும். பக்தி செலுத்த செலுத்த சிறைப்பட்ட ஆன்மாவை விடுதலை செய்ய முடியும். ஆன்மா விடுதலையானால் அது ஒளி உடம்பாகும். ஆக ஆன்மாவைப் பற்றி இருக்கிற சிறையை உடைத்தெறிந்தால் அறிவு தெளிவடையும், ஆன்மாவைப்பற்றி இருக்கின்ற களிம்பு நீங்கினால் தெளிவான ஜோதி தெரியும்.

தினம் தினம் தியானம் செய்ய வேண்டும். எப்போது பார்த்தாலும் சன்மார்க்க அன்பர்களோடு பழக வேண்டும். உண்மையான சாது சங்க தொடர்பு இருந்தால்தான் இது முடியும். வெறும் பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்வதால் எந்த பயனுமில்லை.
நாம செய்வதெல்லாம் மேருபூஜை.
திருமூலதேவா நாங்களெல்லாம் பாவிதானப்பா, நீங்களெல்லாம் பெரியவங்க என்னையும் ஒரு பார்வை பாருங்க.

நந்தீசா நீங்களெல்லாம் பெரிய மகானாச்சே, என்னை ஒரு பார்வை பாருங்கள்.
போகமகாரிஷி ஐயா, நீங்கதான் பெரிய யோகியாச்சே ஐயா, என்னை ஒரு பார்வை பாருங்கள் ஐயா. கருணையே வடிவான காலாங்கிநாதர் ஐயா, என்னையும் ஒரு பார்வை பாருங்க ஐயா.

இப்படி தினம்தினம் நூற்றுக்கணக்கான அல்லது ஒரு பதினைந்து, இருபது நாமங்களை சொல்லி அவர்களிடம் வேண்டி கேட்க வேண்டும்.
என்ன கேட்க வேண்டும்?

நீங்களெல்லாம் பெரியவங்க, என்னை ஒரு பார்வை பார்க்கக்கூடாதா? நான் தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள்தான் பெரியவங்க ஆச்சே என்னை கவனிக்க கூடாதா? அவ்வளவு பெரிய பாவம் நான் என்ன செஞ்சேன்? உங்களை புரிந்து கொண்டேன் அல்லவா? உங்களுடைய நாமத்தை தெரிந்து கொண்டேன் அல்லவா? இதற்கு பிறகும் எனக்கு கருணை காட்டக் கூடாதா?

ஆசான் திருமூலதேவர் யாரென்று தெரியும். ஆசான் இராமலிங்க சுவாமிகள், ஆசான் மாணிக்கவாசகர், ஆசான் தாயுமான சுவாமிகள், மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், ஆசான் நந்தீசர், ஆசான் ஞான பண்டிதர், ஆசான் காலாங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர்முனிவர் போன்ற ஞானிகளைப்பற்றி தெரிந்து கொண்டேன் அல்லவா? அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு கிடைத்தது அல்லவா?

இதுநாள் வரையிலும் நான் சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு ஆட்டையும் கோழியையும் அறுத்து, பொங்கல் புளியோதரை வைத்து சாப்பிட்ட நான், இன்று உங்களை புரிந்து கொண்டேன். நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். உங்கள் ஆற்றலை தெரிந்து கொண்டேன். இப்பேர்ப்பட்ட பெரியோர்களை நான் புரிந்து கொண்டதை நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
ஆகவே, என்னையும் ஒரு பார்வை பார்க்க வேண்டுமென்று ஆசான் அகத்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் காலாங்கிநாதரையும், மகான் போகமகாரிஷியையும், மகான் கருவூர்முனிவரையும் கேட்க வேண்டும்.

ஆக இப்படி இவன் உருகி உருகி கேட்க இவனுடைய அன்பைக் கண்டு ஞானிகள் எல்லோரும் வேறு வழியில்லாமல் தடுமாறுவார்கள். அப்படி அவர்கள் தடுமாறி, அருள்செய்வார்கள்.
என்று ஞானிகளை நினைக்கிறோமோ அன்றே அவனுடைய நினைவில் ஞானிகள் சார்ந்து விடுவார்கள்.

இப்படியெல்லாம் ஞானிகள் சார்ந்திருந்து பக்தியை தந்து, அறிவையும் தந்து, ஆற்றலையும் தந்து மும்மலமாகிய அசுத்ததேகத்தில் இந்த ஆன்மா சிறைப்பட்டு கிடக்கிறது என்பதை சொல்வார்கள். அந்த சிறையிலிருந்து ஆன்மாவை மீட்பதற்கு ஒரே வழி, ஞானிகளை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்ய செய்ய அந்த சிறையிலிருந்து ஆன்மா விடுபடும். ஆக சிறையிலிருந்து மீட்கப்பட்ட ஆன்மா, மீண்டும் கருப்பைக்கு போகாது. இதுதான் இதிலிருக்கும் மர்மம்.

இந்த வாய்ப்பை பெறுவதற்கு ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் புண்ணியம் செய்தால் போதாது, பலநாள், பலஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால்தான் ஞானிகள் அந்த வாய்ப்பை தருகிறார்கள். குருகுலவாசம் பெற்றவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பை தருவார்கள். சரி அந்த வாய்ப்பில்லை. அப்படி இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்? ஞானிகளின் பெருமைகளை பேசி மற்றவர்களையும் அதை பின்பற்ற செய்ய வேண்டும்.

அப்ப சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கியாமே என்றார். சிவம் என்பது நிசப்தமானது, முற்றுப்பெற்ற, அழியாத, உயர்ந்த, பிரம்மத்திற்கு சிவம் என்று பெயர். பரப்பிரம்மத்திற்கு சிவமென்று பெயருண்டு. ஆக சிவம் யாரென்று அறிந்தான். அடுத்து,

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே என அடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.
- திருமந்திரம் - சிவகுரு தரிசனம் - கவி எண் 1580.

சிவனே சிவஞானி ஆதலாற் சுத்த சிவனே என அடி சேரவல்லார்க்கு என்று சிவனைப்பற்றி சொல்வார். ஆக சிவன் வேறல்ல. சிவனே சிவஞானி.
எவன் உண்மையை உணர்ந்தானோ, எவன் மும்மலத்தை வென்றானோ, எவன் காமத்தை வென்றானோ, எவன் மரணத்தை வென்றானோ, எவன் எதையெல்லாம் செய்யும் வல்லமை உள்ளவனோ, எவன் அடியார் துன்பத்தை தீர்ப்பவனோ, எவன் நம் பாவத்தையெல்லாம் பொடியாக்கி அரவணைத்து ஏற்றுக் கொள்பவனோ அவன்தான் சிவன். அப்ப சிவனும் சிவஞானியும் ஒன்றுதான்.

ஆக கடவுள் அத்தனை பேரும் உயர்ந்த எண்ணம் உள்ளவர்கள், சிறந்த நல்லமனம் உள்ளவர்கள், அளவிலா சித்தி பெற்றவர்கள், அன்பு உள்ளவர்கள், அவர்களை நாம் பூஜை செய்யும்போது அவர்கள் நம்மோடு இரண்டறக் கலப்பார்கள். இதை மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்,

தான் நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்
நான் ஆனான்சிற் றம்பலவன் அந்தோ நான் – வானாடர்
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற் கரியசுகம் ஏய்ந்து .
- திருஅருட்பா - ஆறாம்திருமுறை - கவி எண் 1498.

தலைவனை வணங்க வணங்க வணங்க நாம் வேறு அவன் வேறல்ல என்றார். நாம் மும்மலத்தோடு இருக்கிறோம். காமதேகத்தோடு இருக்கிறோம். ஆனால் அவன் அதை வென்றிருக்கிறான். அவனும் நாமும் இரண்டறக் கலந்த பிறகு இருவருக்கும் வித்தியாசமில்லை என்றார்.

அவன் கடவுள். நாம் மனிதன். அவர்கள் ஒளி உடம்பை பெற்றிருக்கிறார்கள். நாம் ஒளியுடம்பை பெறவில்லை. அவன் நிலை உயர்ந்திருக்கிறான். நாம் நரகத்தில் கிடக்கிறோம். அவன் சொர்க்கத்தில் இருக்கிறான். இரண்டுபேரும் அன்பு செலுத்த செலுத்த இருவரும் வித்தியாசமின்றி ஒன்றாகிவிடுவார்கள்.

ஆக தலைவனை நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அறிமுகப்படுத்துகிறது. நாம் பெரியோர்களை அறிமுகப்படுத்துகிறோம். அவர்களுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ள சொல்கிறோம். திருவடிகளை பற்றிக்கொள்ள சொல்லும்போது, முதலில் நமக்குள்ள பிரச்சனை என்ன என்பார்கள்?
வறுமைதானய்யா பிரச்சனை என்றால், அதை உடைத்தெறிவார்கள். நோய்தான் பிரச்சனை என்றால் அதை உடைத்தெறிவார்கள்
பகைதான் பிரச்சனை என்றால் அதை உடைத்தெறிவார்கள்.
எதையும் படிக்கமுடியாத பலகீனம் இருந்தால் அதை உடைத்தெறிவார்கள்.

நல்ல நூலை கொடுத்து படிக்க வைப்பார்கள், மேல் நிலைக்கு உயர்த்துவார்கள். இப்படி பூஜை செய்ய செய்யத்தான் எல்லா குறைகளும் நீங்குகிறது. குறை இருந்தால்தானே மனம் சோர்வடைகிறது.
வித்தைக்கு சத்ரு விசனம் என்பார். ஆகவே வேண்டிய பொருளாதாரத்தை கொடுத்து நமது மனதை தெளிவடைய செய்வார்கள்.
ஆக முதலில் பூஜை செய்ய வைக்கிறார்கள். பூஜை செய்த பிறகுதான் மேல்நிலைக்கு உயர்த்துவார்கள்.

ஒரு மனிதன் கடவுளை அடைவதற்கு எல்லா வகையான பலகீனங்களையும், எல்லாவிதமான குறைகளையும் ஞானிகள் உடைத்தெறிந்து விடுவார்கள்.

இருள் என்பது அறியாமை அல்லது மும்மலம் அல்லது இயற்கை. இருள் என்பது இயற்கையா அல்லது செயற்கையா என்றால் அதுவும் இயற்கைதான். நாம் பெற்ற அறிவு அதுவும் இயற்கைதான். ஆக அதுவும் இயற்கை இதுவும் இயற்கை.

நமக்கு அறியாமையை உண்டாக்குகின்ற உடம்பு இயற்கை. அதனுள்ளே இருக்கக்கூடிய ஒளி உடம்பு இயற்கை. நமக்கு பலகீனமான அறிவு இருப்பதும் இயற்கை. ஆசான் உபதேசத்தால் அதை வெற்றி காண்பதுவும் இயற்கை.
ஆக எல்லாமே நமக்குள்ளே இருப்பதுதான், ஒன்றும் வெளியிலிருந்து கொண்டு வருவது அல்ல. இருப்பதை சரிப்படுத்திக் கொள்கிறான்.

நமது உடம்புக்குள்ளே ஜோதி இருக்கிறது. அளவிலா சித்தி இருக்கிறது. இதுவும் இயற்கை. உடம்புக்குள்ளேயே மும்மலசேற்றையும் அமைத்து, உள்ளே ஜோதியையும் அமைத்து இருக்கிறான். உள்ளே ஜோதியை அமைத்தது நீயா அவனா என்றால் அதுவும் அதுதான். எல்லாம் இயற்கை செய்தது.

எல்லாம்வல்ல இயற்கை அன்னை மும்மலத்தையும் தந்து, அசுத்த தேகத்தையும் தந்து அதனுள்ளே ஜோதியையும் தந்திருக்கிறாள். ஆக வெளியில் இருந்து எதையும் பெறுவதல்ல, உள்ளே இருப்பதை அறிந்து கொள்வது அறிவு. ஆக எந்த இயற்கை நமக்கு இடையூறாக இருக்கிறதோ அந்த இயற்கையை வெல்கிறோம் என்று ஞானிகள் சொல்வார்கள். அடுத்து ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
- திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 358.

அப்ப பேதைமையை உண்டுபண்ணுவது உடம்புதான். இந்த உடம்பை நீக்கினால்தான் பிறப்பு என்னும் பேதைமை நீங்குகிறது. பேதைமை நீங்குவதற்கு ஞானிகள்தான் வழிகாட்டுவார்கள்.

செம்பொருள் எது என்றால் திருவடிதான். செம்பொருள் என்பது அழியாதது, தோற்றமாகும். எது நமக்கு பகைவனாக இருக்கிறதோ, எது நமக்கு வஞ்சனை செய்கிறதோ, எது மீண்டும் மீண்டும் நரகத்திற்கு செல்ல காரணமாக இருக்கிறதோ அத்தகைய உடம்புக்குள்ளே ஓர் உன்னத பொருள், செம்பொருளாகிய மேலான பொருள் இருக்கிறதென்று அறிகின்ற அறிவு எப்போது வந்ததோ அன்றே அவன் மரணமில்லா பெருவாழ்வு பெறுகிறான்.

செம்பொருளை கண்டவர்கள்தான் இங்கே கடவுள். அவர்களை அறிந்து கொண்டோம். ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலதேவர் ஆகிய அத்தனை பேரும் செம்பொருளை அறிந்தவர்கள். ஆக அவர்கள் செம்பொருளை, செவ்விய பொருளை, மேலான பொருளை அறிந்து நிலையான வாழ்வைப் பெற்றவர்கள். அவர்களை கடவுள் என்று சொன்னார். இதை ஆசான் திருமூலதேவர் சொல்வார்,

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே என அடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.
- திருமந்திரம் - சிவகுரு தரிசனம் - கவி எண் 1580.

அடுத்து ஆசான் நந்தீசர் குருவே சிவமென கூறினார். எவன் தன்னை வென்றானோ, எவன் மரணமிலா வாழ்வு பெற்றானோ, எவன் காமத்தை வென்றானோ, அவன்தான் குரு என்று ஆசான் நந்தீசர் சொன்னார். நான் சொல்லவில்லை ஐயா.

நாம் சுட்டிக்காட்டும் அத்தனை பேரும் சிவபெருமான்தான், அத்தனைபேரும் குருநாதன்தான், அத்தனைபேரும் மரணமிலா பெருவாழ்வு பெற்றவர்கள்தான். அத்தனைபேரும் காமத்தை வென்றவர்கள். அத்தனைபேரும் பசியை வென்றவர்கள். அத்தனைபேரும் இயற்கையை வென்றவர்கள். அத்தனைபேரும் வெற்றி கண்டவர்கள். இவர்களைத்தான் ஞானி என்றார். குருவே சிவமென கூறினன் நந்தி.

நான் செத்துப்போனவர்களை சுட்டிக்காட்ட மாட்டேன். நான் சுட்டிக்காட்டக் கூடியவர்கள் அத்தனை பேருமே சிவபெருமான்தான்.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்

குறித்து ஓரார் என்று எதற்கு சொன்னார்? ஓர்தல் - ஆராய்தல்.

அப்ப குறித்து ஓரார் என்றால் ஆசான் திருமூலதேவர் நிச்சயம் ஆற்றல் பெற்ற ஆசான், ஆசான் நந்தீசர் மிகப்பெரிய வல்லமையுள்ள ஆசான்.

ஆசான் அகத்தீசர் அண்டத்தை பொடியாக்கும் வல்லமை பெற்றவர். ஆசான் ஞான பண்டிதன் முதுபெரும் தலைவன், உலகத்திற்கே அவர் ஞானபண்டிதர் என்று அறிவதுதான் குறித்து ஓர்தல்.
அப்ப குறித்து ஓர்தல் என்றால் நுட்பமாக ஆராய்தல் என்று பெயர். ஆகவே குரு என்றால் யார்? அவர்தாம் சிவம். இதை ஆசான் திருமூலர் சொல்வார்,

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
- திருமந்திரம் - சிவகுரு தரிசனம் - கவி எண் 1581.

அப்ப குரு யாரென்று அறிந்து, அத்தனையும் புரிந்துகொண்டு, ஞானியரை பூஜை செய்கிறான். பூஜை செய்து ஆசான் யாரென்று தெரிந்து கொள்கிறான். ஆக,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 5.

என்று ஆசான் திருவள்ளுவர் கூறுவதிலிருந்து, தன்னைப்பற்றி அறிய முடியாத ஒரு பலகீனம்தான் இருள்சேர் என்பது.
இருள் சேர் இருவினை சேரா என்றால் அறியாமைக்கு காரணமாக உள்ளது இருவினை என்று அறியலாம். இருவினை இருந்தால் மீண்டும்மீண்டும் பிறக்கணும். மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்றாலே அவன் நிச்சயம் மடையன்தான்.

மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் அவன் வாசிவசப்பட்டவன்.
அந்த தேகத்தை விட்டவன், மீண்டும் பிறக்கிறான். தேகத்தை விடாதவன் மீண்டும் பிறக்க மாட்டான்.

ஆக இறைவன் அல்லது கடவுள் என்று சொல்லப்பட்டவன், மும்மலத்தை வென்றவன், மரணமில்லா பெருவாழ்வு பெற்றவன், பரிணாம வளர்ச்சிக்கு உட்படாதவன், முற்றுப்பெற்ற முனிவனாக இருப்பவன், இயற்கையை வென்றவனாய் இருப்பதால் ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 370.

என்றும் நிரம்பாத, ஆசையை உண்டுபண்ணுகின்ற இயற்கையை வென்றால், அதே இயற்கை நமக்கு நன்மையைத் தருமென்று சொன்ன முதுபெரும் தலைவன் ஆசான் திருவள்ளுவ பெருமான். அதை அறிந்தவன்தான் இறைவன். இறைவன் என்றால் கடவுள்.
இறைவன் என்று சொல்லப்பட்டவன் மிகப்பெரிய அறிவாற்றல் உள்ளவன், விவேகி, வெற்றி பெற்றவன், புகழுக்குரிய செம்பொருளை அறிந்தவன். செம்பொருளை அறிந்ததால்தான் அந்தளவுக்கு வந்திருக்கிறான். இதைப்புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

ஆகவே இறைவனைப் பற்றி புரிந்து கொண்டான். ஞானிகள் இருக்கிறார்கள், அருள் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான். ஆனால் புரிந்து செயல்பட வேண்டும் அல்லவா? செயல்படாமல் இருந்தால் முடியுமா?

கேட்டலுடன், சிந்தித்தல், கேடிலா மெய்த்தெளிவால்
வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ? – நாட்டமுற்று
மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான்
பொய்யாம் பிறப்பிறப்புப் போம்.
- மகான் தாயுமானவர் - உடல் பொய்யுறவு - கவி எண் 8.

இப்படி கேட்டால் போதுமா? எல்லாவற்றையும் புரிந்து கொண்டோம். ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலர், ஆசான் காலாங்கிநாதர், ஆசான் போகமகாரிஷி, ஆசான் கருவூர்முனிவர், ஆசான் சண்டீசர், ஆசான் சிவவாக்கியர் இவர்களெல்லாம் ஞானிகள் என்று தெரிந்து கொண்டோம். இவர்களைப்பற்றி சொல்வதை கேட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? புரிந்து செயல்பட வேண்டுமல்லவா? “ஆசான் திருவள்ளுவர் நானே கடவுள்தானய்யா!'' என்பார். இதெல்லாம் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டுமல்லவா?
எப்படி செயல்பட வேண்டும்? என்றார் ஆசான் திருவள்ளுவர்.

உன்னைத் தொடர்ந்து பற்றி வருகின்ற மும்மலமாகிய கசடை, உன்னை பற்றி வருகின்ற இருவினையை, உன்னை தொடர்ந்து பற்றி வருகின்ற பாவத்தை, உன்னை தொடர்ந்து பற்றி வருகின்ற அறியாமையை, உன்னை தொடர்ந்து பற்றி வருகின்ற மும்மலமாகிய களிம்பை நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றார்.

ஆசான் திருவள்ளுவ பெருமான் தான் கடவுள் என்று அறிந்து கொண்டாய். கடவுள் பெருமைக்குரியவன்தான். கடவுளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து சலிக்காமல் பாடுபட்டால்தான் முடியும். அப்ப மிகவும் கஷ்டப்பட்டு பாடுபடுவதா என்றால் அப்படியில்லை. சான்றோர்கள் நூல்களை படிக்க வேண்டும், திருமந்திரம் படிக்கவேண்டும். இதை ஆசான் திருமூலர் சொல்வார்,

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
- திருமந்திரம் - சற்புத்திர மார்க்கம் - கவி எண் 1496.

இதுநாள் வரை நூல்களை படிக்கிறோம், தொடர்ந்து திருவடியை பற்றுகிறோம். வேறுவகையான சிந்தனைகள் இல்லை. அப்படி சிந்தனைகள் இருந்தால் மும்மலம் என்று சொல்லப்பட்ட கசடை நீக்கமுடியாது.
ஆக ஞானிகளை புரிந்து கொள்வது மட்டும் அல்லாது அவர்கள் சென்ற பாதையையும் ஆசான் திருவள்ளுவபெருமான் நமக்கு சொல்லியிருக்கிறார்.
நாங்கள் எப்படிப்பட்ட பாதையில் சென்றிருக்கிறோம்.

நாங்கள் அரும்பாடுபட்டிருக்கிறோம். தினமும் நூல்களை படிப்போம். வேறு வகையான விவகாரத்தில் ஈடுபட மாட்டோம். உலக விவகாரங்களில் கலந்துகொள்ள மாட்டோம். அவனிடம் வம்பிழுக்க மாட்டோம். இவனிடம் வம்பிழுக்க மாட்டோம். வீண்பொழுது கழிக்க மாட்டோம்.

காலையில் தியானம் செய்வோம். மாலையில் தியானம் செய்வோம். இப்படி இருந்து ஆசி பெற்றுக்கொண்டோம். வீண் பொழுது போக்கியிருந்தால் நிச்சயம் நாங்கள் இறைவன் அடியை சேர்ந்திருக்க முடியாது. அப்போது அறியாமை எங்களை சூழ்ந்திருக்கும், மீண்டும் பிறவி வருமென்றார் ஆசான் திருவள்ளுவர்.

கடவுளைப்பற்றி புரிந்துகொண்டு கடவுளை அடைகின்ற மார்க்கத்தை தெரிந்து செயல்படுகின்றவனுக்குத்தான் இருள் சூழாது, அறியாமை தீருமென்றார்.
அறியாமை தீராமல் இருவினை நீங்காது. ஆக,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

என்ற பாடலில் இவ்வளவு இரகசியம் இருக்கிறது. அடுத்ததாக,
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை?
- திருக்குறள் - துறவு - குறள் எண் 345.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் - மற்றும் தொடர்ப்பாடு எதற்கடா வைத்திருக்கிறாய். யோகியாக வேண்டுமென்று விரும்புகிறாய் அல்லவா? நீ எதற்கு வந்திருக்கிறாய்? தலைவனை புரிந்து கொண்டாய், திருவடியை பற்றினாய், உருகி தியானம் செய்தாய், அதற்குரிய கொள்கை கோட்பாட்டை பின்பற்றினாய், இதைத்தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாது இருந்தாய், இப்படி இருக்கும்போது காமதேகம் நீங்கி ஞானதேகம் வந்துவிட்டது. பிறவித்துன்பத்தை ஒழிக்க விரும்புகிறவனுக்கு உடம்புதான் முக்கியம். இப்ப உடம்பு எது என்று கேட்டால் அது சுக்கிலம் அல்லது விந்துதான் உடம்பென்று அறிய வேண்டும். ஆக சுக்கிலமே உடம்பு. உடம்பை விட்டுவிட்டால் நிச்சயமாய் இறந்துவிடுவான்.

ஆக இந்த உடம்பு விந்துவா, சுக்கிலமா என்றால் எல்லாம் ஒன்றுதான். ஆரம்பத்தில் இந்த உடம்பை காமத்திற்கு செலவு செய்யலாம். காமத்திற்கு செலவு செய்பவனுக்கு ஜோதி தோன்றாது. ஆக இதே விந்துதான் உன்னை கைதூக்கும். இதே விந்துதான் உன்னை நிலை உயர்த்துகிறது. இதே விந்துதான் ஜோதியாக தெரிகிறது, இதே விந்து அறிவு தருகிறது. இதே விந்துதான் ஆக்கம் தருகிறது. இதே விந்துதான் ஐந்தொழிலும் செய்யும் வல்லமையை தருகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள ஞானிகள் ஆசி வேண்டும்.

தொடர்ப்பாடு எவன் கொல் என்றார். பிறவியை ஒழிக்க விரும்புகிறாய் அல்லவா? ஏன் மறுபடியும் தொடர்பு கொள்கிறாய். முன்பு இல்லறத்தில் இருந்துதான் இந்த அளவுக்கு வந்திருக்கிறாய். ஏன் மறுபடியும் “தொடர்பு ” கொள்கிறாய் என்ன காரணம்?
இல்லை ஐயா! என்னால் முடியவில்லை, தடுமாற்றம் இருக்கிறதென்பான்.
அந்த மாதிரி ஒரு குணக்கேடு இருக்கத்தான் செய்யும். என் திருவடியை பற்று என்பார் ஆசான் திருவள்ளுவபெருமான்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
- திருக்குறள் - துறவு - குறள் எண் 350.

திருவள்ளுவப் பெருமானாகிய என்னைப் புரிந்து கொள், நான் பற்றற்றவன், இதிலிருந்து விடுபட்டவன். என்னுடைய ஆசியில்லாமல் உன்னால் முடியாது, மனதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும், அடிக்கடி எங்களை கூப்பிடு. நாங்கள் இருந்து பார்த்துக் கொள்கிறோம் என்பார் ஆசான் திருவள்ளுவர்.

பூரணமாக மூலக்கனல் ஏறி உடம்பு பூராவும் பற்றி எரிந்து உடம்பெல்லாம் காந்தல் ஏற்படும் வரையில் வாட்டி வதைக்கத்தான் செய்யும். ஆசானை கேட்டுக் கொண்டிருந்தால் வெற்றி கொள்ளலாம்.


பிறவி துன்பத்தை ஒழிக்க விரும்புகிறவர்களுக்கு உடம்புதான் முக்கியம். உடம்பு என்பது விந்து அல்லது சுக்கிலம் என்று முன்னமே சொன்னோம். விந்தை விட்டால் நொந்து விடுவான். உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் என்பார் ஆசான் சிவவாக்கியர்.

உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தண்மையான காயமே தரித்துரூப மானதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 251.

இப்ப யோகிகள் என்பவர் யார்? யோகிகள் அல்லது கடவுள் அல்லது ஞானிகள் இவர்கள் அத்தனை பேரும் விந்து நிலைகண்டு விந்தையடைந்தவர்கள். அதை மகான் அகத்தீசர் சொல்வார்,

விந்துநிலை தனையறிந்து விந்தைகண்டால்
விதமான நாதமது குருவாய்ப்போகும்.
- மகான் அகத்தியர் அருளிய ஞானச்சுருக்கம் - 2.

அப்ப இந்த விந்துதான் தசநாதத்தை உண்டுபண்ணும். அமிழ்தபானத்தை தரும். அளவிலா சித்தியைத் தரும். இந்த இரகசியத்தை அறிந்தவர்கள்தான் இந்த இடத்துக்கு வரமுடியும். அவர்கள் ஞானிகளை தினமும் பூஜை செய்ய வேண்டும்.


சிந்தைதனில் பெண்மயக்கம் கொண்டாலன்றே
சிதறிப்போம் காயமுடன் யோகசித்தி.
- மகான் திருவள்ளுவர் - பஞ்சரத்தினம் - 6/500.

காயசித்தி வந்து கொண்டே இருக்கும். காயசித்தி தொடர்ந்து பூஜை செய்தால்தான் வரும். தொடர்ந்து பூஜை செய்கிறான், ஆசிபெறுகிறான். காயம் சித்தியாகும், அசுத்ததேகம் நீங்கிக்கொண்டு இருக்கிறது. இதைத்தான் காயசித்தி என்பார்கள். இதை யோகிகள் தான் செய்யமுடியும்.
ஆக ஒரு மனிதனுக்கு காமதேகம் இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் பிறப்பான் என்றும், காமதேகம் நீங்கும் வரையில் அவன் பாடுபட வேண்டுமென்று ஆசான் சொல்லுவார்.

இதைத்தான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு என்றார்.
புகழுக்குரிய தலைவன் எதையெல்லாம் மேற்கொண்டானோ, அதை அறிந்து செயல்பட வேண்டுமென்பார் ஆசான் திருவள்ளுவர். அப்படி செயல்பட்டால் நல்வினை தீவினை இருக்காது, மீண்டும் பிறக்க மாட்டான். ஆக ஆசான் நந்தீசர் ஆசியாலும், ஆசான் திருமூலதேவர் ஆசியாலும், ஆசான் போகமகாரிஷி ஆசியாலும் கருத்துக்களை சொல்லியிருக்கிறோம். இந்த கருத்துக்களை தலைவன் ஆசியில்லாமல் புரிந்துகொள்ள முடியாது.

ஆக அடிப்படை எப்படி இருக்கிறதென்றால், எது நரகமோ, எது நரகத்திற்கு இட்டு செல்கிறதோ அதுவே சொர்க்கத்திற்கு காரணமென்று அறிகின்ற அறிவு இருந்தால்தான் கடவுளாக முடியுமென்று ஆசான் திருவள்ளுவர் மறைமுகமாக சொல்லியிருப்பார். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 364.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 370.

எந்த இயற்கை நமக்கு வஞ்சனை செய்கிறதோ, நரகத்தை உண்டுபண்ணுகிறதோ அதே இயற்கை நமக்கு துணையாக இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் ஞானிகள். ஆசான் அகத்தியர் ஆசியும், ஆசான் நந்தீசர் ஆசியும், ஆசான் திருமூலதேவர் ஆசியும், ஆசான் காலாங்கிநாதர் ஆசியும், மகான் போகமகாரிஷி ஆசியும், மகான் கருவூர் முனிவர் ஆசியும், ஆசான் சட்டைநாதர் ஆசியும் பெற்று நாம் ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டும்.

எப்படி இருந்தாலும் தினம்தினம் ஆசானிடம் தொடர்பு கொள்ள வேண்டும். சற்குருவிடம் தொடர்பு கொள்ள வேண்டும். நான் (குடிலாசான்) சொற்குரு, வாசி வசப்பட்டவன், உடல்மாசு நீங்கினவன்.

என்றைக்கு புருவபூட்டு திறக்கிறதோ அன்று மன்மதன் எரிந்து போவான். மன்மதன் என்றால் காமன், பத்தாம் வாசல் எனப்படும் புருவமத்தி திறந்தால் அன்றே வீழ்வான் காமன். காமன் இறந்து போவான். இப்ப வாசி வசப்பட்ட மக்களுக்கு சொல்கிறோம்.

ஆசான் தட்சிணாமூர்த்தி தியானம் செய்து கொண்டு இருந்தாராம், அப்படியே மாதக்கணக்கில் மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம், இரு வருடம் என்று அப்படியே நிஷ்டையில் இருப்பார்கள். அவருடைய தவத்திற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று வாசலில் ஆசான் நந்தீசர் காத்து இருக்காராம்.

தேவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆசான் இன்னும் வெளிப்படவில்லை. பல ஆண்டுகள் ஆச்சு, ஆசானை தரிசிக்க வேண்டும். ஆசானை தரிசிக்க வேண்டுமென்று சொல்லி காமனை விட்டு கதவை திறக்கிறார்கள்.

ஆசான் நந்தீசர் காமனிடம், உள்ளே போகாதே, ஆசான் தவத்தில் இருக்கிறார். நெற்றிக்கண்ணை திறந்தால் செத்துப்போவாய் என்று சொல்லிப் பார்த்தார்.

நான் போகிறேன் என்று சொல்லி காமன் பாணம் விட்டான். இது தேவர்களெல்லாம் செய்த சதி. நாம் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஆசானை, அந்த கடவுளை தரிசிக்க முடியவில்லை. அந்த ஒளி பொருந்திய கடவுளை தரிசிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டு உள்ளோமென்று காமனை அனுப்பினார்கள். அவன் கதவை திறந்தான், நெற்றிக்கண்ணைப் பார்த்தான். ஆசான் நெற்றிக்கண்ணை திறந்தவுடன் காமன் இறந்து விட்டான்.

இது ஒரு பெரிய சிறந்த இரகசியம். புருவபூட்டு திறந்தால், காமதேகம் அற்றுப்போகும், எரிந்து போகும். காமன் எரிந்து போவான். இதுதான் காமபண்டிகை. மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக காமன் நட்டு, எரிந்த கட்சி, எரியாத கட்சி என்பார்கள்.

இப்ப உலகநடையில் சொல்வதென்றால், ஒரு பெண்ணோடு கூடியவுடன் மனம் மாறுதல் அடையும், மீண்டும் காமம் வந்துவிடும். அப்ப மீண்டும் காமன் பிழைத்துக் கொள்வான். அப்ப காமன் எரியவில்லை. இது எரியாத கட்சி.

ஞானிகளின் புருவபூட்டு அல்லது நெற்றிக்கண் திறந்தவுடன் காமன் எரிந்தே போய்விட்டான். மீண்டும் வரவே மாட்டான். இது எரிந்த கட்சி. ஆக இதுதான் அமைப்பு. ஆக இப்படிப்பட்ட நுட்பமான கருத்துக்களை ஓங்காரக்குடிலில் சொல்லி இருக்கிறோம்.

ஆசான் திருவள்ளுவ பெருமானே கடவுள் ஆகும். ஆசான் திருவள்ளுவ பெருமான் கடவுள் என்பதற்கு எடுத்துக்காட்டு அந்த நூலிலேயே இருக்கிறது. ஆக ஞானிகளின் ஆசிபெற்று, தினமும் தடையில்லாமல் எந்தவிதமான குறையில்லாமல், சலிக்காமல் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும்போது பூஜையில் இப்படி கேட்க வேண்டும்.

நாங்களெல்லாம் பாவிதானய்யா! பஞ்சமா பாவிக்கு தலைவன் நான், நீங்களெல்லாம் பெரியோர்கள், புண்ணியவான்கள். எத்தனை யோ பஞ்சமாபாவிகளை இரட்சித்திருக்கிறீர்கள். என்னையும் ஒரு பார்வை பார்த்து, என்னையும் காப்பாற்ற வேண்டும். உங்களைத்தவிர வேறு கதியில்லை.

இப்படி எவன் உருகி மன்றாடி கேட்கிறானோ அவர்களுக்கு அருள் செய்வார்கள். யாராக இருந்தாலும் கேட்டதை தரக்கூடியதுதான் ஞானிகளின் வேலை, கேட்பதை தருவார்கள். என்ன கேட்கணும் என்பதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362.

வேண்டுங்கால் வேண்டும் - எதை விரும்ப வேண்டுமென்றார். நாம் பூஜை செய்யும்போது எதைய்யா நீ விரும்புற என்பார். வீடு வேண்டும், வாசல் வேண்டும் என்றால் அவர் பாட்டுக்கு அள்ளிக் கொடுத்துட்டு போய்கிட்டே இருப்பார். ஆனால் எனக்கு செல்வம் வேண்டும், வறுமையில்லாத வாழ்வு வேண்டும், மன அமைதி வேண்டும், உடல் ஆரோக்கியம் வேண்டும், உன் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இவற்றை எல்லாம் கேட்டுவிட்டு, உன் ஆசியில் மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டுமென்று கேட்கவேண்டும். இதுதான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்பது.

ஆசான் திருவள்ளுவபெருமான் யோகி அல்லவா? ஒன்றை இப்படித்தான் சுட்டிக்காட்டுவார். முதுபெரும் தலைவன் ஆசான் வள்ளுவபெருமான் நமக்கு பூஜை செய்யும் முறையை சொல்லித்தருவார். நாம் விரும்பினால் அது மீண்டும் பிறக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

கடவுள் என்று சொல்லப்பட்டவன், ஒன்றை விரும்பவும் மாட்டான், வெறுக்கவும் மாட்டான், அவனுக்கு பசியில்லை, காமமில்லை, விருப்பில்லை, வெறுப்பில்லை, தூக்கமில்லை, துக்கமில்லை, அழுகையில்லை, ஆச்சரியமில்லை, விகாரமில்லை எல்லாவற்றையும் வென்று அப்படியே நிசப்தமாக இருப்பான்.
அவன் எதையும் விரும்பாமல் ஜோதி வடிவமாக இருப்பான். அப்படிப்பட்டவனை நீ கேட்க வேண்டுமென்று ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.

ஆசான் அகத்தீசரையும், ஆசான் நந்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தியானம் செய்து, மீண்டும் நான் பிறக்கக்கூடாது, அதற்கு நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும், நான் பிறக்க விரும்பவில்லை, அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும், அதற்குரிய அறிவும், பரிபக்குவமும், வீரதீர பராக்கிரமம் எனக்கு வேண்டும், முன்வைத்த காலை பின் வைக்காத ஒரு ஆற்றல் எனக்கு வேண்டுமென்று கேட்டுவந்தால் நிச்சயம் கைகூடுமென்று சொல்லியும் நீங்களெல்லாம் ஆசான் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.





திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

17. ஞயம்பட உரை

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பது நான்கு விதமான படி நிலைகளாகும். இந்த அறம், பொருள், இன்பம் வீடு எனும் நான்கு படிநிலைகளையும் கடந்து வெற்றி பெற்றவர்களே ஞானிகள் ஆவார்கள்.

இப்படி நான்கு படி நிலைகளின் தன்மையையும் அதன் உட்பொருளையும் உணர்ந்து வெற்றி கண்டவர்கள், மற்றவர்களும் நன்மைபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு பிரதிபலன் எதிர்பாராது அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல சொற்களை சொல்லுவார்கள். இப்படி சொல்லப்படும் சொற்களே ஞயமான சொற்களாகும். இவர்களது சொற்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடுமையான சொற்களாக இருப்பினும் ஜென்மத்தை கடைத்தேற்றும் வல்லமையுள்ளதால் அச்சொற்களே ஞயமான சொற்களாகும்.

அவ்வாறன்றி கேட்பதற்கு இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும், கவிநயமாகவும், அழகான அடுக்கான பேச்சாகவும், இலக்கண, இலக்கிய அழகுடையதாகவும் இன்னும் பலவிதங்களில் அவை திறம்பட அழகுபட கூறப்பட்டிருந்தாலும் அவற்றை கூறியவர்கள் இந்நான்கு படி நிலைகளின் தன்மையை உணராதவராயும், அந்த படி நிலைகளை கடக்காதவராகவும் இருப்பாராயின் அச்சொற்கள் எவ்வளவுதான் அழகுபட இருந்தாலும் அவை ஞயமான சொற்கள் அல்ல.

பொதுவாக சான்றோர்களுக்கு எல்லோரிடமும் இனிமையாக பேசுவதென்பது அவர்களுள் உள்ள இயல்பான தாய்மை குணத்தால் சிறப்பாக முடியும். ஆயினும் அத்தாயானவள் தன் குழந்தை தவறு செய்யும்போதும் தகாத வழியில் செல்லும்போதும் அன்புள்ள தாய் தன் மகனை கடிந்து கொள்வாள் அல்லவா, அது போல தாயன்பினால் சான்றோர் தம்மீது அன்புகொண்டவர்களிடம் சில சமயங்களில் வன்சொற்களால் கடிந்து அவரை ஆற்றுப்படுத்தி திருத்தி நன்னெறிப்படுத்துவர். அப்படி செய்யுங் காலத்து அவ்வன் சொற்கள் இன் சொற்களேயன்றி வன் சொற்களாகாது. அவை கேட்கும்போது செவிக்கு வேண்டுமானால் வன் சொற்களாக இருக்கும். ஆனால் ஆன்மலாபம் பெறும் தன்மையுடையனவாயுள்ளதால் அவை ஆன்மாவிற்கு இன்சொலாய் அமைந்துவிடும்.

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி(து) ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்குநல்லோன்
எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
- நன்னெறி - கவி எண் 2.

இங்கு துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு பெண்ணைப் பார்த்து சொல்வது போலுள்ள இப்பாடலில் அழகிய நெற்றியையுடைய பெண்ணே! குற்றமற்ற மனமுடையவரின் கடுஞ்சொல்லும் இனிமையாகும். ஆனால் குற்ற மனமுடையோர் பேசுகின்ற இனிய சொல்லும் கடுஞ்சொல் ஆகுமென அறிக! என அறிவுரையாக கூறுவதோடு, நற்குணமுடைய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அடியாராகிய சாக்கிய நாயனார் எனும் சிவபக்தர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் பொருட்டு எறிந்த கல்லானது சிவனுக்கு பூவானது. ஆனால் கரும்பை வில்லாகக் கொண்ட காமன் எறிந்த மணமுடைய அழகிய பூவானது மலராக ஏற்கப்படவில்லை எனக் கூறுகிறார்.

இப்படி கூறுவதன் மூலம் சான்றோர் சொற்கள் கற்கள் போல கடினமானதாக இருப்பினும், உட்கருத்தை காணுங்கால் அவை மலரைப் போன்று இனிமையானது. ஆனால் காரியம் சாதிக்கவும், சாதாரண மனிதர்களால் சொல்லப்படும் சொற்கள் மலர்போன்று இனிமையாக இருப்பினும் அவை பயன்படாது என்பதை உணரவேண்டும்.

மகான் வள்ளுவபெருமான் தமது போற்றுதற்குரியதான உலகப் பொதுமறையானதும் சன்மார்க்க வேதமென போற்றப்படுவதுமான தும் எக்காலத்தும் எம்மதத்தினருக்கும் எவ்வினத்தவருக்கும் மாறா கருத்துக்களை உடைய திருக்குறளில் இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் இனிய சொற்கள் என்பது எவை என்பதை உணர்த்தும் பொருட்டு பத்து குறட்பாக்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒரு சில...

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 91.

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
செவ்விய பொருளாகிய உண்மைப்பொருளை அறிந்தவர்கள் சொற்கள் அனைத்தும் ஞயமான சொற்களாகும்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96.

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 97.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 98.
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். இனியவை கூறல் அதிகாரத்திலும் பயனில சொல்லாமை அதிகாரத்தில்...

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று.
- திருக்குறள் - பயன் இல சொல்லாமை - குறள் எண் 197.

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
- திருக்குறள் - பயன் இல சொல்லாமை - குறள் எண் 198.

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
- திருக்குறள் - பயன் இல சொல்லாமை - குறள் எண் 199.

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
- திருக்குறள் - பயன் இல சொல்லாமை - குறள் எண் 200.

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.
இதன் மூலம் மகான் வள்ளுவபெருமான் இனிமையான சொற்களைப் பற்றி கூறுவதோடு அச்சொற்கள் பயனற்ற நிலையில் இனிமையாக இருந்தபோதும் இனிமையன்று என்றும், அதே அறிவுடையோர் பயனற்றதும், கேட்பதற்கு இனிமையாக உள்ளது என்பதற்காக ஒருபோதும் சொல்லமாட்டார்கள் என உறுதியாக கூறுகிறார்.

சும்மா இரு என்று சொல்லப்பட்ட மொழியை உணர்ந்தவர்கள், நிலையில்லாதவற்றை நிலையில்லாதவை என்றும், நிலையானவற்றை நிலையென்று உணர்ந்து அந்த நிலையானவற்றை கைவரப்பெற்றவர்களாகவும், அவர்கள் சொற்களே ஜென்மத்தை கடைத்தேற்றவல்ல இனிய சொற்களாகும். அவர்கள் மொழியே நிலைத்து நிற்கும் உண்மை மொழியாகும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
- திருக்குறள் - நீத்தார் பெருமை - குறள் எண் 28.

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மொழிகளே காட்டிவிடும்.
நன்றி - முனைவர் மு.வரதராசனார்
எனும் குறள் மூலம் இதன் உண்மையையும் அறியலாம்.

மகான் ஒளவையார் ஞயம்பட உரை என கூறுவது இலக்கண இலக்கிய அணி நயத்தோடு அடுக்கடுக்காக அழகாக கேட்பதற்கு இனிமையாக சொல்ல வேண்டுமென்பதை குறித்து இங்கு சொல்லவில்லை. மகான் ஔவையார் முற்றுப்பெற்ற ஞானியாவார். அவர் மனிதர்கள் இப்படி அழகாக பேசவேண்டும் என்பதற்காக இதை இந்த மனிதசமுதாயத்திற்கு சொல்லவில்லை.

உற்று நோக்கின் இங்கு ஞயம் என்பது சொல்லின் இனிமையை குறிப்பதன்று. அதன் பயன் குறித்துதான் அச்சொல்லின் இனிமை உள்ளது என்பதை உணர்த்துகிறார்.

எந்த சொல் ஒருவனது பிறவிப்பிணிக்கு மருந்தாக அமைகிறதோ, அதுவே ஞயமான சொல்லாகும். எவரொருவர் பிறவிப்பிணியை வென்றாரோ, அவரால் சொல்லப்பட்ட சொற்களே ஞயமான சொற்களாகும். அவர்கள் உரைப்பதுதான் ஞயம்பட உரைப்பது. எனவே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஞயம்பட உரைக்கவல்ல ஞானிகள் உரைத்த ஞயமான சொற்களை உரைத்து வாழ்வின் பயனை பெறவேண்டுமேயன்றி அழகாக பேசவேண்டுமென்று போலியான இன்சொல் சொல்லி அறியாமையை உண்டுபண்ணி, மூடத்தனத்தையும் உண்டுபண்ணக்கூடிய சொற்களை பேசாமல் இருப்பதும் நல்லதாகும்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment