Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Feb 2013



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை நந்தன மாசி (பிப்ரவரி - 2013)                                                     விலை: ரூ.10/-

நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு…
2. ஞானம் என்னும் நான்காம்படி இரகசியம் - குருநாதர் அருளுரை …
3. ஆத்திசூடி - குருநாதர் அருளுரை தொடர்…

மகான் பாம்பாட்டிச்சித்தர் ஆசி நூல்:-

அரசனும் அரங்கனும் அறுமுகனும்
அவதார ஞானியும் நீர்தானப்பா
தரங்கையில் ஞானப் புகழை
தட்டாது வீடு கொண்டு சேர்க்கும்

சேர்க்கும் ஞானத்திருவடி நூலை
சிவராஜ யோகியின் சேய் என்பேன்
பார்த்துரைக்க கண்டு கேட்டு
பழுதில்லா வாசித்து வருபவர்க்கு

வருபவர்க்கு உலக மாந்தர்களுள்
வாசி வசமாகும் ஞானம் கூடும்
குருவருள் வீடு தேடி வந்து
குறை தீர்க்கும் வளம் சேர்க்கும்
- மகான் பாம்பாட்டிச்சித்தர் ஆசி நூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக் கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935
துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
ஓங்காரக்குடிலில் 16.02.1997 அன்று அருளிய
அருளுரை

ஞானம் என்னும் நான்காம் படி இரகசியம்

அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்,

இன்றைய தேதி 16.02.1997, இடம் ஓங்காரக்குடில். தமிழக அன்பர்களும், மலேசிய அன்பர்களும் இருக்கிறீர்கள். ஆன்மீகத்தைப்பற்றி பல ஆண்டுகள் பேசியிருக்கிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம்.

கிட்டத்தட்ட பதிமூன்று பதினான்கு ஆண்டுகள் பல்வேறு கிராமங்களிலும் பேசியிருக்கிறோம், குடிலிலும் பேசியிருக்கிறோம். இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். அன்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தைப் பற்றி கேட்கின்ற கேள்வி மிகச்சிறப்பாக இருக்கும்.

வாசி வசப்படுதல் என்பது நான்காம்படி. முதல் படி சரியை, இரண்டாம்படி கிரியை, மூன்றாம்படி யோகம், நான்காம்படி ஞானம்.
சரியை என்பது தாய் தந்தையிடம் அன்பு காட்டுதல், மனைவியிடம் அன்பு காட்டுதல், இனிமையாக பழகுதல், பிறர் சொத்தை அபகரிக்காமல் இருப்பது, வன் சொற்கள் சொல்லாதிருத்தல், பொறாமைப்படாதிருத்தல், பேராசைப்படாதிருத்தல், சினமில்லாதிருத்தல் ஆகிய இதெல்லாம் சரியை மார்க்க ம்.

ஒருவன் நல்லபடி இருக்கிறான். அவன் யாரிடமும் எந்த பேச்சும் பேசமாட்டானைய்யா. அவன் வேலை உண்டு, வெட்டி உண்டு என்றிருப்பான். குனிந்த தலை நிமிராமல் போவான். அடுத்த வீட்டுக்காரனிடம் அதிர்ந்து பேச மாட்டான். அப்படியெல்லாம் பேர் வாங்க வேண்டும். இது சரியை மார்க்கம்.

அப்பா! அவனா? கொடுமையான ஆளாச்சே! யாரும் அவனிடம் பேச முடியாதே! பலபேரை தாக்கியிருக்கிறான். அவனால் அடிபட்டவர்கள், அல்லற்பட்டவர்கள் எத்தனையோ பேர். அப்படி சொல்வது சரியைக்கு விரோதமானது.

நல்லவனைய்யா யாரிடமும் பேசமாட்டான், கடமையை செய்வான். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான். இப்படி ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள். அதே சமயத்தில் சொன்ன சொல் மாறாமல் இருப்பார்கள். பொருள் திரட்டுவதே நேர்மைக்கு உட்பட்டுத்தான் திரட்டுவார்கள். இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டுப்போவான். வறுமை வந்தாலும்,

இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
- திருக்குறள் - சான்றாண்மை - குறள் எண் 988.

இதெல்லாம் பெரிய வார்த்தை. வறுமை ஒருவனுக்குக் குற்றமில்லை. அதை இழிவானதாக கருதமாட்டார்கள்.

சால்பு என்றால் சான்றாண்மை. உயர்ந்த பண்புள்ள மக்கள் சான்றோர்கள். சான்றோர்களுக்கு வறுமை வந்தால் அதை ஒரு பொருட்டாக பொதுமக்கள் நினைக்க மாட்டார்கள். ஆக அது போன்ற சிறந்த கொள்கையுள்ளவர்களாக இருப்பார்கள்.

அடுத்தது கிரியை மார்க்கம். தெய்வம் உண்டென்று நம்புதல், அதற்குரிய ஆசானைத் தேடி அலைதல், கடவுள் ஒருவன் இருக்கிறான் என்று நம்புவான். ஆறுமுகப்பெருமானாக இருக்கலாம், விநாயகராக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், கடவுள் உண்டு என்று நம்புதல், தினம் வழிபாடு செய்தல், பல ஊர்களுக்கு சென்று ஸ்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் மூழ்குதல், கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்தல், இதெல்லாம் கிரியை மார்க்கம்.

அடுத்தது யோகமார்க்கம். மூச்சுக்காற்றைப் பற்றி அறிதல், மூச்சுக்காற்றைப்பற்றி அறியும்போதே இந்த தத்துவங்களைப் பற்றியும் அவன் அறிய வேண்டும்.
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை. இதெல்லாம் தத்துவ கூறுகள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம், நல்வினை தீவினை, ஆணவம், கன்மம், மாயை என்றெல்லாம் சொல்வார்கள்.

அர்த்த ஏடனை, புத்திர ஏடனை, உலக ஏடனை என்பார்கள். ஏதேனும் நூல்களில் விஷயங்கள் இருக்கிறதா? தெரிந்து கொள்ளணும். பல விஷயங்களை விபரம் தெரிந்து கொள்ளணும் என்பது அர்த்த ஏடனை.
அடுத்து புத்திரர்களை பெற்றுக் கொள்ளுதல், அவர்களுக்கு போதித்தல், அவர்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவை புத்திர ஏடனை .
உலக விசயத்தை தெரிந்து கொள்ளுதல், அதோடு நடத்தல், சான்றோரோடு பேசுதல் இதெல்லாம் உலக ஏடனை.

இப்படி நீண்ட தத்துவங்கள் இருக்கிறது. யோகம் என்பது இடகலை, பிங்கலை, சுழிமுனையைப் பற்றி அறிவதாகும்.

யோகம் - இடகலை என்பது சந்திரகலை என்றும், பிங்கலை என்பது சூரியகலை என்றும், சுழிமுனை என்பது அக்கினி கலை என்றும் சொல்வார்கள். இதையெல்லாம் அறிந்து முயற்சிப்பது யோகமாகும். இந்த யோகத்தைப் பற்றி சிலபேர் பல இடத்தில் சொல்வார்கள். இப்படி யோகம் செய்ய வேண்டும்.

யோகாப்பியாசம் செய்ய வேண்டும். இந்த பக்கம் இழுத்து அந்த பக்கம் விடணும். பதினாறு முறை விடணும். முப்பத்திரெண்டு முறை இரேசிக்க வேண்டும். இப்படியெல்லாம் யோகத்தைப் பற்றி சொல்வார்கள்.

ஞானம் - ஞானம் என்பது ஆன்மாவைப்பற்றி அறிதல். ஆன்மா மாசுபட்டிருக்கிறது. புற உடம்பு அல்லது தூலதேகம் மும்மலத்தால் ஆனது. தூலதேகத்தை, சூட்சுமத்தை ஆட்டிப் படைப்பது ஆன்மா. தூலதேகத்தையும் சூட்சுமதேகத்தையும் பற்றி அறிவதுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதாகும். தூலத்தைப் பற்றியது புற உடம்பு. சூட்சுமம் என்பது அக உடம்பு. அது ஒளி உடம்பு. அது காரிய தேகம். ஆக காரிய தேகம் புற உடம்பு. காரண தேகம் அக உடம்பு. அதைப்பற்றி அறிதல்.

ஞானத்தைப் பற்றி அறிய முற்படுகின்ற மக்கள் வாசியைப்பற்றி அறிவது யோகம். ஞானத்தைப் பற்றி அறிதல் என்பது வாசியைப் பற்றி அறிவதாகும். இதன் மூலமாக ஆறாதாரத்தை அறிய வேண்டும்.

ஆசான் உடல் மாசை நீக்குவார், நாளுக்குநாள் உடல் மாசு நீங்குதல், உடல் மாசு நீங்க நீங்க அறிவு தெளிவடைதல், ஆசான் ஆசியில் தினம் பூசித்தல், ஆசானை அறிந்து கொள்ளுதல், அவர் ஆசியால் வாசி வசப்படுதல், வாசி வசப்பட்ட பின் ஏற்படுகின்ற மாற்றங்களால் அந்த மூச்சு வசப்படும். ஞானம் என்ற நான்காம் படிக்கு வருவதற்கு, இவையெல்லாம் வேண்டும். இது ஞானிகள் ஆசி இல்லாமல் முடியாது.

ஏதோ பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாக ஒரு ஞானி கிடைப்பார். அவர் வாசி வசப்படுகின்ற முறையை சொல்லிக் கொடுப்பார். பிறகு நீ பூஜை செய்தால்தான், உள்ளே தங்குகின்ற காற்று வேலை செய்யும் என்பார். யாரை நீ பூஜை செய்யணும்? இந்த வாசிக்கெல்லாம் தலைவர், மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்தவர், அந்த மூச்சுக்காற்றை இலயப்படுத்தி அதன் மூலமாக உடல் மாசையும், உயிர் மாசையும் நீக்கியவர் திருவடியை பூஜை செய்ய வேண்டும்.

உடல் மாசு நீங்கினால், உயிர் மாசு நீங்கும். உயிர் மாசு நீங்கி ஆன்மாவை ஜோதியாக காணுதல். இது பெரிய விசயம், நான்காம் படி.

உள்ளே தங்குகின்ற காற்றை பார்க்க வேண்டும். முறையறிந்து தினந்தினம் தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது ஆசான் பார்க்கிறார். இவன் யார்? இவனுக்குத் தகுதி என்ன? இதை கடைப்பிடிப்பானா? வாசிவசப்பட்ட மக்கள் பெண்கள் உறவு வைத்துக் கொள்ள முடியாது. காமக்கனல் ஏறினால், யோகக்கனல் தடைபட்டுப் போகும்.

ஆக அந்த வாசி வசப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள், வாசி நடத்தித் தருகின்றார். வாசி நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தேகத்தில் தங்குகிறார். அப்போது வாசி வசப்பட்ட மக்களுக்கு குணக்கேடுகள் இருக்க முடியாது. அப்படி இருந்தால், இவன் என்ன செய்வான் என்று அவர்களுக்கு தெரியும். ஆக வாசி நடத்திக் கொடுத்து அவன் கூடவே இருந்து காப்பாற்றுவார்கள். வாசி நடத்திக் கொடுத்தவன் பெண்ணுறவு கொண்டால் என்ன ஆகும்?

சாவதுதான் எதனாலே வந்த தென்றால்
சண்டாள மனம் நிலைக்கா தோசத்தாலே
ஆவதுவும் அழிவதுவும் விந்தாலப்பா
ஆச்சரியம் பாழ் குழியின் ஆசையாலே
காவலதும் கட்டழிந்து போனதாலே
காட்சியெல்லாம் பொய்யாச்சு கண்டுபார்
பாவதுதான் சுண்ணாம்பில் ஒட்டினாற்போல்
பரமகுரு பீடமதை பதிந்து பாரே.

ஆக இந்த நான்காம் படிக்கு வந்தவர்களுக்கு கொடுமையான தேகம் இல்லாமல் ஒரு மென்மையான தேகம் இருக்கும், காமம் இருக்கத்தான் செய்யும், பொல்லாத பீஜம் இல்லாமல் ஓரளவுக்கு மென்மையான உடம்பாக இருக்கும். இப்படிப்பட்ட உடம்பு இருந்தால்தான் அவனால் செம்மையாக இருக்க முடியும்.

ஆக இதெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்படி இருந்தால்தான் முடியும். தினந்தினம் தியானம் செய்ய வேண்டும். முதுபெரும் தலைவன் ஆசான் ஞானபண்டிதரையோ, ஆசான் அகத்தீசரையோ வணங்க வேண்டும். ஆசான் ஞானபண்டிதன் வாசிக்கு கடவுள். இப்படி யாரை வணங்கினாலும் ஒன்றுதான்.

இவர்கள் தேகத்தைச் சார்ந்து வாசியை ஒடுங்கச் செய்வார்கள். ஒடுக்கச் செய்து தினம் தியானம் செய்யத் தூண்டுவார்கள், கூடவே இருப்பார்கள். கூடவே இருந்தால்தான் முடியும். வாசி வசப்பட்ட அந்தக் காற்று கலையாமல் இருக்க வேண்டும். அதுதான் பிரச்சனை, இவனுக்குத் தெரியாது, இருப்பதே அரை அங்குலம் தானே? அந்த காற்று கலையாமல் இருந்தால்தான் நல்லது.

பூசிக்க பூசிக்க போட்ட குளிகையாம், என்பார்.
பூசிக்க என்று சொல்லாமல் பூசிக்க பூசிக்க, யாரை பூசிப்பது? எல்லாம் ஞானிகள் தான். சென்ற நூற்றாண்டில் மிகப்பெரிய கருணைக்கடலாக இருந்த இராமலிங்க சுவாமிகள், நல்ல மனதோடு மக்கள் முன்னேற வேண்டும், எல்லோரும் கடவுளை அடைய வேண்டும், எல்லோரும் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டுமென்று சொல்லி, ஞானத்தை அள்ளி இறைத்துவிட்டு போனார்.

ஆசான் இராமலிங்க சுவாமிகளும், மகான் மாணிக்கவாசகரும், மகான் தாயுமான சுவாமிகளும், மகான் பட்டினத்தாரும் இவர்கள் அனைவருமே ஞானிகள் தான். இவர்களை பூசிக்கணும் என்று சொல்லித்தருவார்கள். முன் ஜென்மங்களில் ஞானிகளுக்கு தொண்டு செய்திருப்பான்.

ஞானியை வணங்காமல் ஞானியின் திருவடியைப் பற்றவே முடியாது, சேரவே விட மாட்டார்கள்.
ஒரு முறை ஞானியின் நாமத்தை சொன்னால், அது கற்பகோடி காலத்தைக் காட்டும் என்பார். அவ்வளவு வல்லமை உள்ள ஞானிகளை, ஆசான்களைத்தான் இவர்கள் பூசிக்க வேண்டும். அப்ப வாசி வசப்பட்டால் போதுமா? பூசித்தால்தான் அந்த காற்று செயல்பட ஆரம்பிக்கும்.

பூசிக்க பூசிக்க போட்ட குளிகையாம் பூசிக்க பூசிக்க பொன்மலையாகும் பூசிக்க பூசிக்க என்றான். பூசிக்க பூசிக்க காற்று நழுவாமல், அங்கேயேயிருந்து தங்கி செயல்படும். அப்படி காற்று தங்கி செயல்பட ஆரம்பித்தால்தான், இந்த தேக மாசும், மும்மல சேட்டைகளும் நீங்கும். தொடர்ந்து ஞானிகளை பூசிக்கிறான்.

"ஐயா! எந்த உணவை சாப்பிடணும்?” என்று கேட்டான். அதற்கு ஆசான் உப்பில்லாமல் சாப்பிட்டாக வேண்டுமப்பா! என்றார். இது சின்ன விஷயமல்ல. வாசி வசப்பட்டவன் அறுசுவை சாப்பிட்டால் கை கால் வீங்கி செத்துப்போவான். அதோடு சரி அவன் வாழ்க்கை .

ஆனால் இவனுக்கு ஞானிகள் அதற்குரிய அறிவை தந்துவிடுவார்கள். இதற்கு அறிவு மட்டும் கொடுத்தால் போதுமா? அறிவும் தந்து, வைராக்கியமும் தருகிறான். பத்தாண்டுகள், இப்ப அடையோகம் ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆயிற்று. இன்றோடு பத்து வருடம் மூன்று நாட்கள் ஆயிற்று.

இந்த அளவுக்கு ஒரு வைராக்கியத்தையும் ஆசான் கொடுத்தார், உப்பில்லா உணவு சாப்பிடுகின்ற வாய்ப்பையும் தந்தார். இப்படி இருந்தால்தான் வாசி வசப்பட்டதற்கு அர்த்தம். இல்லையென்றால் உடம்பெல்லாம் வெந்து தொலைந்துவிடும்.

வாசி வசப்பட்டவர்கள் தேகசம்பந்தம் கொண்டாலும் ஆபத்து, அறுசுவை சாப்பிட்டாலும் ஆபத்து. பூஜை செய்யாமல் இருந்தால் ஆபத்து. பூஜை செய்யாமல் இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆக ஞானிகளைத்தான் பூஜை செய்ய வேண்டும். ஆக இந்த பூஜையும் ஆசான் ஆசியில்தான் செய்ய வேண்டும்.

எல்லா பூஜைகளையும் ஞானிகள் தான் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களும் கூடவே இருப்பார்கள். ரொம்ப அன்புள்ள பண்புள்ள தொண்டர்களையும் சேர்த்து விடுவார்கள். ஏனென்றால் தவத்திற்கு தொண்டர்கள் வேண்டும். மிக மிக இன்றியமையாதவர்கள் அன்பர்கள்.

அடுத்தது அறிவு, அடுத்தது வைராக்கியம், அடுத்தது பொருள், சுற்றுப்புற சூழ்நிலை. எல்லாவற்றையும் குவித்தாக வேண்டும். அப்படி குவித்தால்தான் இவன் தேற முடியும். அப்ப அவன் பூசிக்கிறான். பூசிக்கும்போது வாசி வசப்படுகிறது. போட்ட குளிகை - குளிகை என்றால் மாத்திரை. ஒரு நொடிப்பொழுது என்று சொல்வது ஒரு மாத்திரை. பொழுது என்பது நொடிப்பொழுது அந்த பொழுது மூச்சுக்காற்று அது ஆக்கம் பெறும்.

வாசி இருந்தால் தான், வாசி தங்கி இருந்தால் தான் இவனுக்கு செல்வநிலை பெருகும். வாசி தங்கவில்லையென்றால் நினைத்த காரியம் எல்லாம் அடிபட்டுப்போகும். அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது.

என்னடா! வாசி வசப்பட்டதே! என்று நினைத்திருப்பான். இவன் பூசிக்காமல் விட்டிருப்பான். அதுதான் வாசி வசப்பட்டு விட்டதே? நமக்கு பூசை தேவையில்லையே? என்று நினைத்துக் கொள்வான். அப்படி இருந்தால் அவன் என்ன செய்வான்.

வாசி கலைந்து விட்டால் பொருளாதாரம் நின்று போய் விடும். பொருளாதாரம் நாளுக்கு நாள் வருவதும், தேவையான பொருளாதாரத்தை குவித்தலும், அறப்பணி செய்தலும் இது போன்ற ஒரு மங்களகரமான சிவத்தொண்டு செய்வதற்கு வாய்ப்பு தருவார்கள். ஞானிகள் நம்மை விட்டு போகவே மாட்டார்கள்.

வாசி வசப்பட்ட மக்களிடம், வாசி வசப்பட்ட அந்த தொண்டனை விட்டு ஞானிகள் போவதே இல்லை. எதையடா அவன் கேட்கிறான்? அவன் பல ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறான். அவன் என்ன கேட்கிறான்? கேட்டதை கொடுத்து விடு என்று சொல்வார்கள்.

ஞானிகள் கூடவே இருந்து வேண்டுமென்பதை அள்ளி அள்ளி கொடுப்பார்கள். அன்புள்ள தொண்டரை தருவார்கள், அறிவு தருவார்கள், வைராக்கியம் தருவார்கள், எந்த வகையிலும் அவனது தவத்திற்கு இடையூறு இல்லாமல் பாதுகாத்து வருவார்கள். அப்ப பொன்மலை ஆகும்.

முதலில் அடிப்படை வேண்டும். மனம் தளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கும் ஆசான் ஆசி வேண்டும். அதே சமயத்தில் காமவிகாரங்கள் மனதை பாழ்படுத்தாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆக , காமவிகாரம் அற்றிருக்க வேண்டும், பேராசை அற்றிருக்க வேண்டும், பொல்லாத வறுமை இருக்கக் கூடாது. இந்த துறைக்கு வறுமை வந்ததென்றால் தொலைந்தே போவான். ஒன்றுமே செய்ய முடியாது. இவன் அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது? என்ற ஏக்கம் இருந்தால் போச்சு. என்ன செய்வேன் என்கின்ற ஏக்கமே அவசியமில்லையடா! வேணுமென்பதை அள்ளிக் கொடு என்பார்.

எல்லா ஞானிகளும், மகான் புஜண்ட மகரிஷியும், ஆசான் திரூமூலதேவரும், மகான் காலாங்கி, ஆசான் போகர், மகான் கருவூர்முனிவர் போன்ற ஞானிகள் சூழ்ந்திருப்பார்கள். அப்படி சூழ்ந்து கொண்டு வேண்டியதை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் என்ன வேண்டும்? என்பார்கள். போதுமைய்யா போதுமென்கிற அளவிற்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தேவையை கேட்டுக் கொண்டே இருக்கணும். அப்படி கேட்டுக் கொண்டே இருந்தால்தான் அருள் செய்வார்கள்.
வாசி வசப்பட்ட மக்கள் என்ன செய்யணும்? வாசி வசப்பட்ட மக்களுக்கு என்ன இலட்சியம் இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டுமென்பதை ஆசான் உணர்த்துவார்.

அன்னதானம் செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு குடிநீர் தர வேண்டும், அன்பர்கள் தங்குவதற்கு நாலு மாடி கட்டிடம் வேண்டும். சரி! கட்டித்தரலாம்.

நோக்கம், நான் மட்டும் முன்னேறினால் போதாது. இந்த துறையில் எத்தனையோ பேர், சென்ற நூற்றாண்டில் அவதரித்த ஆசான் இராமலிங்க சுவாமிகளுக்கு பிறகு, அங்கு தொண்டு செய்தவர்களும், சன்மார்க்கவாதிகளும் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வந்து தங்கவும், அவர்கள் ஆறுதல் அடையவும், அவர்களுக்கு தெளிவான பாதை காட்டவும் இங்கு கட்டிடங்கள் அமைத்திருக்கிறார்கள்.

சென்ற காலத்தில் யாருக்குமே இந்த வாய்ப்பு கிடையாது. சென்ற கால ஞானிகளெல்லாம் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுதான் எங்களுக்கு வேலையா? போடா! என்று போயிடுவார்.

ஆக இந்த காலம் ஞானசித்தர் காலம் என்பதாலும், மிகப் பெரிய ஒரு சமுதாய மாற்றத்தை செய்ய வேண்டி இருப்பதாலும், கட்டிடங்கள் கட்டுதல், வருகின்ற அன்பர்களுக்கு சுவையான உணவு, ஆசானே கொடுக்கிறார், நாம் கொடுக்கவில்லை.

இங்கே எந்த உணவு சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். என்னய்யா? எல்லாம் கை தேர்ந்த நிபுணர்களா? சமையல் செய்பவர்களெல்லாம் வெளிநாட்டில் போய் படித்தவர்களா? என்றால் இல்லை. அவன் எதைத் தொட்டாலும் ஆசான் பார்க்கிறார். பார்க்கிறார் உணவை! பார்த்து அன்பர்கள் சாப்பிடட்டும் என்பார்.

ஆக சுவையான உணவு, மன ஆறுதல் , தங்குவதற்கு ஏற்ற இடம் இது. இங்கே எந்த காலத்திலும் வஞ்சனை இருக்காது. ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, வஞ்சனை இருக்கவே முடியாது. அப்படி வஞ்சனை யோடு இருப்பவர்கள் குடிலில் இருக்கவும் முடியாது.

அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கி, தூய்மையான அன்பர்கள் இருக்க முடிகிறது. சில ஆன்மீக சங்கங்களில் அன்பர்கள் முகத்தில் ஒரு மிரட்சி, என்ன ஏற்படுமோ? அவன் வந்தால் நம்மை வெளியே தள்ளுவானோ? இவன் வந்தால் நம்மை வெளியே தள்ளுவானோ? கையெழுத்து போடச் சொன்னால் என்ன செய்வது? சொத்து முழுவதும் பறிபோய் விட்டதே! இனிமேல் நாமென்ன செய்யப் போகிறோம்? மனைவிமக்களை விட்டு வரச்சொல்லி விட்டானே? இப்ப நாம் யாரிடம் போவது? என்ற அச்சம் இருக்கும்.

ஆனால் இங்கு ஓங்காரக்குடிலில் அப்படியெல்லாம் இருக்காது. இங்குள்ள எல்லா அன்பர்களும் அவரவர்கள் இல்லறத்தில் இருக்கிறார்கள், அவரவர்கள் சம்பாதிக்கிறார்கள். இங்கு சேர்ந்த அன்பர்கள் அத்தனை பேரையும் எனக்கு நன்றாக தெரியும். அவரவர்கள் வாகனத்தோடும், மகிழ்ச்சியோடும், மனைவி மக்களோடும் அவரவர்கள் தடையில்லாமல் வாழ்க்கை நடத்துகிறார்கள். எங்களுக்குத் தெரியும். அப்போ முன்னே இருந்த நிலையும் எங்களுக்குத் தெரியும். இப்ப இருக்கிற நிலையும் எங்களுக்குத் தெரியும்.

ஓங்காரக்குடிலைச் சார்ந்த அன்பர்கள் யாரும் கெட்டுவிடவில்லை. ஓங்காரக்குடிலைச் சார்ந்த அன்பர்களிடம் பணம் கொடு, அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கவில்லை. வறுமை வந்தால்தானய்யா, தொண்டர்களைப் போட்டு நசுக்கணும், பேராசை இருந்தால்தானே அதில் கையெழுத்துப் போடு. இதில் கையெழுத்து போடு. சொத்தை கொண்டு வந்து கொடு என்று கேட்கணும்? அவசியமே இல்லை . எல்லா அன்பர்களும் தடைபடாது தங்கவும், பசியாறவும், மனம் விட்டு பேசவும், தொண்டு செய்ய வாய்ப்பிருக்கு.

தலைவன் ஆசான் ஆசியில், இப்படியெல்லாம், இதெல்லாம் உருவாக்கித் தந்தால்தான் முடியும். நம் சங்கத்தில் இலட்சக்கணக்கில், பல இலட்சங்கள், கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி ஆசான் கொடுத்து விட்டு, அவரவர்கள் பசியாறும்போது, அன்பர்கள் உண்பதையும், ஏழை எளிய மக்கள் உண்பதையும், பொதுமக்கள் வாங்கி செல்வதும், தொண்டர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது எல்லாம் பார்த்து ஞானிகள் இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனய்யா இதெல்லாம் அவர்களுக்கு வேலையா? இந்த காலத்தில் தானப்பா இந்த தத்துவத்தை பரப்புதல் வேண்டும். அதற்காக நாங்கள் இறங்கியிருக்கிறோம். ஆகவே தொண்டர்கள் வந்து செய்யட்டும். ஆக நம் தொண்டர்களெல்லாம் சாப்பிட்ட பிறகுதான், ஞானிகள் இந்த இடத்தை விட்டு போவார்கள். என்னப்பா? என்றால் உடனே மூன்றில் சொல்வார்கள். தென்மேற்கு திசை (மூன்றில்) பல்லி சகுணம் சொன்னால் அது நன்மை தரும் சகுணமாகும். இந்த துறையில் வருகிறவர்களுக்கு பல்லி சகுண சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டும். இங்கே இருக்கிறேனப்பா என்பார்.

இப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலை துறையூரில் அமைந்திருக்கிறது. ஆக பூசிக்க பூசிக்க போட்ட குளிகையாம், பூசிக்க பூசிக்க பொன்மலையாகும் என்று சொல்வார். பொன்மலை என்பது பொருள் குவியும். இந்த குடிலில் என்றைக்காவது இந்த பத்து வருடமாக எந்த தேதியிலாவது சாப்பாடு இல்லையென்றோ, தொண்டர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்றோ, பேச்சே இருக்க முடியாது. அந்த மாதிரி பேச்சு இருக்கிறதா இங்கே? இல்லையில்லை.

தொண்டர்கள் பசியோடு இருக்கிறார்கள். உணவில்லை, ஆக்கின சோறு பாதிபேர் சாப்பிட்டு விட்டார்கள், வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள். இருக்கிற தொண்டர்கள் ஆளுக்கு சிறிது சிறிதுதான் சாப்பிட்டார்கள் என்ற பேச்சே இல்லை. வந்தவர்களும் சாப்பிடுகிறார்கள். இங்கிருப்பவர்களும் சாப்பிடுகிறார்கள். இனிமேல் வருபவர்களும் சாப்பிடலாம். இதையெல்லாம் ஆசான் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதற்கு தலைமை தாங்குபவர் ஆசான் அகத்தீசர்.

இதையெல்லாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய கடமை இருக்கு , செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, இந்த காலத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று தத்துவங்களும், யோக நெறிகளும் பின்பற்றப்படும். எங்கு பார்த்தாலும் சங்கம் உருவாகும், எங்கு பார்த்தாலும் பசியாற்றுதல், அறநெறிகள், சுத்த சன்மார்க்கம் பரவும். ஆகவே இதெல்லாம் பொன்மலையாகும் என்றார்.

இந்த சங்கம் ஆயிரம் திருமணம் செய்து வைத்திருக்கிறது. மற்றவர்களால் செய்ய முடியவில்லை. என்ன காரணம்? இந்த சங்கத்தார் மேற்கொள்கின்ற காரியங்களுக்கு ஆசான் துணை இருக்கிறார். இந்த சங்கத்தில் நான் தான் செய்கிறேன் என்று சொல்வதற்கு எனக்கே அருகதை இல்லை. நாம் என்ன செய்வோம்? தினந்தினம் என்னால் முடிந்ததை செய்கிறேனப்பா. பார்வை மந்தமாக இருக்கிறது. என்னால் முடிந்ததை செய்திருக்கிறோம். இதில் குறை இருக்கலாம், நிறையும் இருக்கலாம். நீர்தான் ஏற்று மேலும் தொண்டு செய்வதற்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்வோம்.

அதே மாதிரி தொண்டர்களும் கேட்கிறார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும்? அடிப்படை இந்த சங்கத்தைச் சார்ந்திருப்பது புண்ணியமாகும். சார்ந்திருப்பவர்கள் அத்தனை பேரும் ஞானியாவார்கள். காரணம், எங்கு பார்த்தாலும் ஞானிகள் உருவாக வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. ஆகவே ஓங்காரக்குடிலைச் சார்ந்திருந்து தடையில்லாமல் தொண்டு செய்ய வேண்டும். இப்ப ஆயிரம் திருமணம் அன்பர்கள் துணை கொண்டு ஆசான் கிருபையாலும் செய்து வைத்திருக்கிறோம்.

வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு ஐநூற்றி எட்டு திருமணம் செய்து வைக்க திட்டம் வைத்திருக்கிறோம். யாரை நம்பி சொல்லியிருக்கிறோம்? ஆசானை நம்பியும், அன்புள்ள தொண்டர்களை நம்பிதான் சொல்லியிருக்கிறோம். இப்ப என்னிடம் இருக்கும் பலகீனங்கள் என்னவென்றால் தொண்டு செய்ய முடியாது, நீங்கள் தான் செய்யணும்.

அதுதான் நேற்றே “நான் சாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னேன். சாவு என்றால் என்ன? புறஉடம்பு வீழ்ச்சியடைகிறது. புற உடம்பு வீழ்ச்சியடைந்தால்தான் பார்வை இழக்கும். நான் அந்த எல்லைக்கு வர வேண்டும்.

இப்ப இனிமேற்பட்டு எங்கள் உடம்பு மாற்றமடைவதனால், மிகப் பெரிய காரியங்கள், அற்புத செயல்கள் எல்லாம் குடில் அன்பர்கள் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு சங்கத்தலைவன் தனக்கென பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சங்கத்தலைவன் சிறந்த கொள்கை உள்ளவனாகவும், அருள் பலமுள்ளவனாகவும், ஆசான் திருவடியைப் பற்றுகின்ற பண்புள்ளவனாகவும் இருந்தால்தான் தொண்டர்கள் தொண்டு செய்ய முடியும்.
ஆக தலைமை நன்றாக இருக்கிறது, எந்த தடையும் இல்லை. தலைமைக்கு தலைவனுக்கு தலைவனே இறங்கி அருள் செய்கிறான். இப்படிப்பட்ட தலைமைக்கு கீழ் இருக்கும் தொண்டர்களுக்கு எந்த குறையும் வராது.

எந்த காலத்திலும் நடுக்கடலில் இருந்தாலும் ஆசான் கைகொடுத்து காப்பாற்றுவார். அப்பேர்ப்பட்ட வாய்ப்பிருக்கிறது. ஆகவே நான்காம் படியாகிய யோக ஞானத்தைப் பற்றி ஆசான் கிருபையாலே நாங்கள் அறிந்திருக்கிறோம். நான்காம்படி என்பது வாசி வசப்படுதல், அதனுடைய இயக்கத்தை அறிதல், பூஜை செய்தலாகும். இதன் காரணமாக பொருள் வந்து குவிகிறது.

ஓங்காரக்குடிலில் ஒரு பக்கம் வெளியூருக்கு தண்ணீர் கொடுப்பார்கள், ஒரு பக்கம் விறகு உடைப்பார்கள், ஒரு பக்கம் கட்டிட வேலை நடக்கும். இப்படி பலவகைகளில் எட்டு வகையான வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். இவ்வளவு வேலை நடக்குதையா , ஐ நூற்றி எட்டு திருமணம் என்று சொல்கிறார்களே? நூற்றியெட்டு திருமணம் என்றுதான் நோட்டீசில் போட்டிருக்கிறார்கள். இப்ப ஐநூற்றி எட்டு என்கிறார்கள். தொண்டர்களுக்கும் புரியாது. ஒரே ஒரு உண்மை தெரிந்து கொள்ளணும். தினந்தினமும் தியானம் செய்தால்தான் முடியும். இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

தினந்தினம் தியானம் செய்தால்தான் ஆசான் பொருளுதவி செய்வார்கள். எங்களுடைய வேலையே காலையில் எழுந்திரிக்கும்போதே தியானம் செய்வோம். ஐந்து நிமிடம் உட்கார்ந்து ஆசான் சுப்ரமணியரையோ, மகான் அகத்தீசரையோ, இன்று மேற்கொள்கின்ற அறப்பணிகள் எல்லாம் செம்மையாக நடக்க வேண்டுமெனவும், தண்ணீர் தானமும், அன்னதானமும் சிறப்பாக நடக்க வேண்டுமென கேட்போம்.

அதே போல அரை மணி நேரம் தியானம் செய்ய மதியம் ஒரு மணிக்கு போவோம். மற்ற வேலைகள் செய்யும்போதும், குளிக்கும் போதும் கூட பத்து நிமிடம் நாமஜெபம் செய்வோம். ஆக ஆசான் நாமஜெபம் செய்து கொண்டே இருப்பதால் தான் பொருளாதாரம் குவிகிறது. ஒடுக்கப்பட்ட வாசி மூலாதாரத்தில் கட்டப்பட்ட வாசி அந்த கட்டப்பட்ட வாசி இயக்கத்திற்கு காரணம் நாம் செய்யும் பூஜைதான்.

பூஜை செய்யாவிட்டால் அப்படியே நின்று விடும், ஒன்றுமே செய்ய முடியாது, பொருளும் வராது, ஒன்றுமிருக்காது. ஆகவே இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது. இதெல்லாம் ஏன் சொல்கிறோமென்றால், ஒருவன் ஞானியாகணும், பிறவிப் பிணி அற்றிருக்கணும், மரணமிலாப் பெருவாழ்வு பெறணும், மும்மலம் அற்றிருக்கணும், மாசு நீங்கணும் என்றால் பூஜை செய்தால்தான் முடியும்.

நாங்கள் அப்படி இருந்து கொண்டிருக்கிறோம். அன்பர்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், கிரியை மார்க்கத்திலிருந்து ஞானிகளை வணங்குகிறீர்கள். நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்கிறீர்கள். பிறரிடம் பாவி என்று பெயரெடுக்காமல் இருக்கிறீர்கள். ஆசானை வணங்குகிறீர்கள். இது சிறந்த வழிமுறையாகும். இதுதான் பக்தி.

பக்தியின் விளைவு யோகத்தைப் பற்றியும் ஞானத்தைப் பற்றியும் அறிகின்ற வாய்ப்பு கிடைக்கும். நான்காம் படியைப் பற்றி கேட்கும்போது சரி தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்வோம். ஆனால் சொன்னாலும் புரியாது. ஆகவே ஒவ்வொருவரும் நான்காம் படியாகிய ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னால், அதற்கு ஒரே வழி பக்திதான் முக்கியமாக இருக்கும். பக்தியை தவிர வேறு வழியேயில்லை.

பிராணாயாமம் செய்தால், பிராணாயாமம் செய்பவர்கள் செத்துப் போவார்கள் என்று முன்னமே சொல்லியிருக்கிறோம். ஏனய்யா நீங்கள் செய்யவில்லையா என்று கேட்பான். நாங்கள் செய்துதான் நான்காம் படியில் இருந்திருக்கோமைய்யா.

முன்ஜென்மத்தில் பெருமைக்குரிய தவத்தோனுக்கு வழுவாது தொண்டு செய்திருக்கிறோம். அவன் இருந்து எனக்கு அருள் செய்திருக்கிறான். நீங்கள் இப்போது கை வைத்தால் வாழ்க்கை வீணாக போய்விடும் என்று சொல்வோம். மீறி செய்பவர்களைப் பொறுத்து எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் விட்டுவிடுவோம்.

ஆகவே நான்காம் படி என்பது திருவருள் கொண்டு மட்டுமே செய்வதாகும். எந்த அளவுக்கு உருகுகிறோமோ, அந்த அளவுக்கு உள்ளே இயக்கம் நடக்கும். உருக உருக உருக அந்த இயக்கம் தானே நடக்கும். இதை களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார் ஆசான் திருமூலதேவர். உடம்பில் இருக்கும் மாசுகளையெல்லாம் ஆசான் அறுத்து விடுவார். நாமாக அறுக்க முடியாது. களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி - அவன் அறுத்தே விடுவான். மேலும்

ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தந்
தீமேவு பலகர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 120.

அவன் பிரிக்கின்றான். தனிமன்றில் தன்னந்தனி நித்தம், பூசிக்க பூசிக்க பூசிக்க அவன் இரண்டற கலந்து விடுகிறான். அப்படி இரண்டற கலக்கும் போது இருள் தேகம் நீங்கி அருள் தேகம் உண்டாகும்.

அருள் தேகம் உண்டாக, இரண்டற கலப்பதற்கே இவ்வளவு நெருக்கம் இருக்கவேண்டும். நெருங்க நெருங்க நெருங்க இரண்டற கலந்து விடுகிறான். அவனை பூசிக்க பூசிக்க பூசிக்க பூசிக்க நம்மோடு சார்ந்துவிடுகிறான்.

ஆகவே பூசைதான் முக்கியம். ஆக நான்காம் படியாகிய உடல் மாசு நீங்குதல், யோகநெறி இதைப் பற்றி கேட்கும் போது நாங்கள் இப்படி சொல்வோமே தவிர, எப்படி சொன்னாலும் புரியாது.

ஆக இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு ஆசான் ஆசி வேண்டும். இதற்காக பக்தி நெறி சொல்லியிருக்கிறோம், அறிமுகப்படுத்துகிறோம், அகத்தீசர் போன்ற ஞானிகளை அறிமுகப்படுத்தி பூஜை செய்விக்கிறோம். பூஜை செய்ய செய்ய நிச்சயம் அந்த இடத்திற்கு வருவார்கள்.

ஆனால் நாம் அவர்கள் ஆசியில்லாமல் செய்ய முடியாதென்று சொல்லியிருக்கிறோம். ஆகவே இப்ப என்ன சொல்கிறோம். பூசிக்க பூசிக்க பொன்மலையாகும். பொன்மலை என்றால் தேவையான பொருள் கிடைக்கும். பத்தாண்டுகள் குடிலில் நடக்கும் செயல்பாடுகள் மனிதவர்க்கத்தால் சாதிக்க முடியாதென்று சொல்லியிருக்கின்றோம்.

ஆசான் கிருபையால் தான் யாரொருவர் தொடர்ந்து பூஜை செய்கிறாரோ, அவர் இல்லறத்தானாக இருந்தாலும் சரி! செல்வத்தை அள்ளிக் குவிப்பார்கள். கேட்கும்போதே அவர்களுக்குத் தெரியும். மற்ற தெய்வங்கள் போன்று சிறுதெய்வமில்லை, அகத்தீசா என்றால் அண்டத்தில் இருக்கும் ஒன்பது கோடி பேரும் என்னவென்று கேட்பர். அடியேனுக்கு செல்வநிலை பெருகணும் என்று கேட்டால், அப்படி லேசா சிரித்து விட்டு, அள்ளி கொடுத்துவிட்டு போயிடுவார்கள்.

அப்புறம் என்ன வேண்டுமென்று கேட்டால், பிள்ளைகளுக்கு கல்வி வேண்டுமென்பான். அது நியாயமென்பான். அடுத்து என்ன வேண்டுமென்பான்? அடியேனுக்கு ஞானம் சித்திக்கணும். அதற்கு வேண்டிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும் என்பான். அப்பா! பெரிய கேள்வி கேட்கின்றானப்பா! இதுநாள் வரை மனிதவர்க்கம் இது போல் கேட்கவில்லை. அடியேனுக்கு ஞானம் சித்திக்கணும்.

அதற்கு வேண்டிய அறிவும், பரிபக்குவமும், சூழ்நிலையும் வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்கின்ற மக்கள் தான் தெளிவடைவார்கள். இது எங்களுக்கு தெரியும்.

சாதாரணமாக இல்லறத்தானுக்கு பொருளாதாரம் வேண்டும்தான், இதுவும் எங்களுக்கு தெரியும். வறுமையில் ஆழ்ந்து கிடக்க முடியாது. ஆகவே வறுமையில்லாத வாழ்வு இருக்க வேண்டும். தினம் தியானம் செய்கின்ற வாய்ப்பு கிடைக்க ஆசானையே கேட்கணும். தினம் தியானம் செய்கின்ற வாய்ப்பு எனக்கு தரணும் என்று கேட்கணும்.

தியானத்துக்குரிய வாய்ப்பும், அதற்குரிய சூழ்நிலையும் அமைய வேண்டும். இல்லையென்றால் என்னால் முடியாது. நீர்தான் அதை உருவாக்கி தர வேண்டுமென்று கேட்க வேண்டும்.

ஆகவே இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தால் நல்லது. எந்த காலக்கட்டத்திலும் ஓங்காரக்குடிலும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமும் உலக மக்களுக்கு தெளிவான பாதை காட்டும். இதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம். நாம் ஆசான் கிருபையில் உண்மையான ஆன்மீகத்தை பேசிக் கொண்டு வருகிறோம். ஆகவே இது மனித வர்க்கத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

ஆக இந்த சங்கம் வளர்ச்சியடைய அடைய எல்லா மக்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சபராரிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஐநூற்றி எட்டு திருமணங்கள் செய்து வைத்ததால், எத்தனையோ ஏழை எளிய மக்கள் கடன் சுமையிலிருந்து விடுபட்டு அவரவர்கள், இல்லறத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அன்பர்களும் பத்து நாள் முன்னமே இருந்து பாடுபடுவார்கள். தெரியும் எங்களுக்கு. இதற்கு பொருளும் ஆசான் கொடுக்க வேண்டும். அன்பர்கள் கட்டுக் கோப்பாக இருந்து, ஒரு தாய் மக்கள் போல் இருந்து இதை செம்மையாக செய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் பிரச்சனை இங்கே இருக்க முடியாது. அவர் உயர்ந்தவரா? இவர் உயர்ந்தவனா? என்பதெல்லாம் இல்லை. நாம் ஆசானை வீழ்ந்து வணங்கி உன்னுடைய ஆசியில் இங்கு செயல்பாடுகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் செய்வதற்கு அருள் செய்ய வேண்டும். குற்றம்குறை இருந்தால், மன்னிக்க வேண்டுமென்று சொல்லி கேட்போம்.

அதேபோன்று தொண்டர்கள் அனைவரும் அவரவர்கள் ஆசான் அகத்தீசனுக்கு தொண்டு செய்வதாக நினைக்க வேண்டும். குடிலாசானுக்கு தொண்டு செய்வதே ஆசான் அகத்தீசருக்கு செய்யும் தொண்டாகும். குடிலாசானுடைய தொண்டுதான் இது. குடிலாசானுக்கு செய்யக்கூடிய எல்லா தொண்டுகளும் ஆசான் அகத்தீசருக்கே போய்ச் சேரும்.

இது எங்களுக்கு தெரியும். ஆகவே இந்த சங்கம் மேற்கொள்கின்ற அறப்பணிகளுக்கு தொண்டு செய்ய வேண்டும். பூசிக்க பூசிக்க பொன்மலையாகும் என்றார். உண்மைதான் செல்வத்தை பெருக்கும். அடுத்து என்ன சொன்னார்? பூசிக்க பூசிக்க புகட்டுவாள் ஞானம் என்றார். தலைவனை பூசிக்கிறோம். செல்வநிலை பெருகுது. சிறப்பறிவு வருகிறது. சுற்றுப்புற சூழ்நிலை அமைகிறது. புகட்டுவாள் ஞானம்.

இங்கே உலக உயிரினங்களை உலக மக்களை படைத்தது மட்டுமில்லாமல் நம்மோடு சார்ந்திருந்தாள் சக்தி. ஆதிதான் சக்தி. அவள் தான் இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கிறாள். அவள் என்ன செய்கிறாள்? உணர்த்துவாள், புகட்டுவாள்.

புகட்டுவாள் என்றால் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த உடம்பே நமக்கு தாயாக இருக்கிறாள். முன்னே அவள் காமுகியாக, மோகினியாக, காளியாக, பிடாரியாக , விரோதியாக இருந்தாள். அதை உணர்ந்து ஆசான் திருவடியை பற்ற பற்ற தினந்தினம் தியானம் செய்ய செய்ய மோகினியாக, காமுகியாக, கொடுமைக்காரியாக, காமரூபியாக இருந்தவள் சாந்தமே வடிவாக சாந்த சொரூபியாகிறாள்.

ஆசான் கிருபையாலே உடல் மாசு நீங்க நீங்க நீங்க நம் உடம்பே வாலைத்தேவியாக மாறுகிறாள். புகட்டுவாள் ஞானம். அறிவு தெளிவடைந்து கொண்டே இருக்கிறது. எப்போது என்றால் விகாரதேகம் நீங்க நீங்க நீங்க அறிவு தெளிவடைகிறது. அறிவு தெளிவடைய தெளிவடைய தாய் உதவி செய்கிறாள். இதை புகட்டுவாள் ஞானம் என்றார். இது பூஜை செய்தால்தான் முடியும். இல்லையென்றால் முடியாது.

அதற்காகத்தான் பூஜை செய்வதற்கு ஆசி கேட்கிறோமல்லவா? நான் காலையிலே பூஜை செய்ய முடியவில்லை. பூஜை செய்ய முடியவில்லை என்று தடுமாறிக் கொண்டிருக்கிறேன். பூஜை செய்வதற்கு வாய்ப்பு நீ தர வேண்டுமென்று ஆசானை கேட்கிறேன். இல்லையென்றால் என்னாலே முடியாதப்பா.

நான் பல்வேறு பிரச்சனையில் இருக்கிறேன். எனக்கோ பல பிரச்சனைகள். குடும்பம் இருக்கு. பல சிக்கல் வருகிறது. தொண்டர்களுக்கு ஒரு வாய்ப்பு என்னவென்றால், அகத்தீசன் பெருமையை பேசுவதே பூஜை செய்வதாகும். அது அரைப்பங்கு. ஞானிகள் பெருமையைப் பேசுவதே சிறந்த பூஜைக்கு ஒப்பாகும். நாங்களெல்லாம் இப்போ ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தியானம் செய்தால் போதும். மற்ற நேரங்களில் ஞானிகள் பெருமையை பேசிக்கொண்டு வருகிறோம். இதுவே சிறந்த பூஜையாகும், சிவத் தொண்டாகும். ஆக பூஜை செய்து வருகிறோம். பூஜை செய்ய செய்யத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆகவே அன்பர்கள் பூஜை செய்தால்தான் புகட்டுவாள் ஞானம் என்றார்.

அப்பப்பா! நான்காம் படி இது. இதெல்லாம் சரியை, கிரியையிலேயே இந்த நான்கு படியும் வந்து கொண்டிருக்கும். ஆகவே, புருவ மையம் என்று சொல்லப்பட்டது என்ன ஆகும்? இந்த உடம்பில் நாளுக்கு நாள் வெப்பம் மிகுதியாகி, கீழ் நோக்கி, மூலாதாரத்திலிருந்து வினாத்தண்டு வழியாக அக்கினி மிகுதியாகி புருவ மத்தி என்கிற ஒரு திரை இருக்கிறது. அது அக்கினி திரை. அதை உடைத்தெறிய வேண்டும். அங்கேதான் ஜோதி தெரியும்.

அந்த ஜோதியைக் காண்பதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். இதை நாம் அடைந்தால் மட்டும் போதாது. எல்லா மக்களும் அடைய வேண்டும். எல்லா மக்களும் அடைவதற்கு நாம் தொண்டு செய்ய வேண்டும். தொண்டு செய்தால் பாதி பூஜையாக ஏற்றுக் கொள்கிறார்கள். பாதி பூஜையை இவன் செய்கிறான் என்று அர்த்தம். அதுவும் பூஜையாகும். அதுவே சிறந்த பூஜை.

அடுத்து ஞானிகளை வணங்குகிறோம். நான்காம் படி இதுதான். புருவமத்தி என்கிற இரகசியத்தை அறிந்து கொள்வது என்று சொன்னால், நாம் அறியத்தான் போகிறோம். நாம் மட்டுமல்ல. இந்த உலகமெல்லாம் அறியப்போகிறது. அதைப்பற்றி ஆசான் கோரக்கர் தனது நூலில், தானதர்மம் தத்துவ யோகம் அதிகமாகும். உலக மக்கள் ஞானியாவார் என்று பதினெட்டு பாடல்களில் சொல்கிறார்.

உலகமாற்றம் என்கிற தலைப்பில் பல பேர் ஞானியாவார்கள் என்று பல இடத்தில் சொல்லியிருக்கிறார். அதை அன்பர்கள் அறிந்து கொள்ளணும். ஆகவே, இதுநாள் வரை நடந்த விசயமும் கூட்டு முயற்சிதான். தனி முயற்சியில்லை. இந்த கூட்டு முயற்சி மேலும் தொடர வேண்டும். இதற்கு நோக்கம் என்னய்யா? இந்த சங்கம் ஏன் தினம் அன்னதானம் செய்யணும்? நாமா செய்கிறோம்? ஆசான் பொருள் கொடுக்கிறான். அதை செய்கிறோம். மக்கள் பசியாறுகிறார்கள். தண்ணீர் கொடுக்கிறோம்.
உலக மக்கள் உண்மை அறிய வேண்டுமென்பதற்காகத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே,

பலிக்குமே நினைத்ததெல்லாம் கலிகாலத்தில்
பலங்கொண்ட தெய்வமகா லிங்கந்தன்னை
சலிக்காமல் கண்டு தரிசித்த பேர்க்கு
தனமொடு சகல சௌபாக்கியங்களுண்டாம்
ஒலிக்குமே உலகத்தார்க்கு உதவி மெத்த
உண்மையாம் சுந்தரனும் உதவி மெத்த
சொலிக்குமே சதுரகிரி மலையைப் பற்றி
சொன்னார் என் ஐயன் நன்னூல் காட்டினாரே.

சதுரகிரி மலை என்பது கொல்லிமலை. கொல்லிமலை அருகில் இப்படி ஒரு குழு அமையப் போகிறது. இப்படி ஒரு சங்கம் அமையப்போகிறது. அவர்களால் நாட்டு மக்கள் சுப சேமம் அடையப்போகிறார்கள், உண்மையை அறியப்போகிறார்கள். எல்லோரும் பிறவிப்பிணி நீங்கி, அவரவர் முன் செய்த பாவத்தை நீக்கி, செல்வத்தையும், ஞான செல்வத்தையும் அள்ளிச் செல்லப் போகிறார்கள் என்பது இந்த பாடலுடைய பொருளாகும்.

ஆகவே, பலிக்குமே நினைத்ததெல்லாம் கலிகாலத்தில் என்றார். ஆக நாம் நினைத்ததெல்லாம் கலிகாலத்தில் பலிக்கும். பலங்கொண்ட தெய்வமகா லிங்கங்தன்னை என்றார். அது புருவமத்தியில் ஜோதி லிங்கம் என்றார். சலிக்காமல் கண்டு தரிசித்த பேர்க்கு - புருவ மத்தியில் கவனம் செலுத்தி பார்க்கும்போது இரண்டு கண்களும் வலிக்கும். அது கண்டு சலிக்கக் கூடாது. வலது கண் பூராவும் சிவந்து விடும். கண்கள் சிவக்கும்.

ஜோதியைக் கண்டு ஊன்றி கவனிக்க வேண்டுமென்பார். ஒலிக்குமே உலகத்தார்க்கு உதவி மெத்த - ஆக நமது சங்கம் வளர்ச்சி அடைய அடைய மக்கள் உண்மைப் பொருளை அறிவார்கள், பாவத்திலிருந்து விடுபடுவார்கள், செல்வநிலை பெருகும், மனைவி மக்களோடு இன்பமாக இருப்பார்கள், நோய் நொடி சூழாது, எய்ட்ஸ் நோய் என்றோ, புற்று நோயோ எந்த நோயும் நம்மை அணுகாது. அப்படி அணுகினாலும் ஆசான் கிருபையினாலே அதை உடைத்தெறிய முடியும்.

இது வரையிலும் பேசினோம். அன்பர்கள் சில விசயத்தை ஒவ்வொரு முறை வரும்போதும் கேட்பார்கள். அவை நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அன்பர்கள் சில விசயத்தை கேட்க வேண்டுமென கேட்கிறோம்.

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 113.

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய் கொண்டு - மேல் நிலையில் ஞானிகளெல்லாம் இருக்கிறார்கள். ஞானிகள் ஒவ்வொருவரின் உடம்பையும் பார்த்தால் எல்லாம் ஆயிரத்தெட்டு மாற்று. எல்லாம் நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். நிர்வாணமே தெரியாது. கண்கொள்ளா காட்சி. என்ன காரணமென்று கேட்டான். இதனுடைய முடிவு. வீரியங்கள் அத்தனையும் அற்றுப்போகிறது. வீரியமென்பது சுக்கிலம் என்பது அற்றே போகும். அதுதான் பெரிய விசயம்.

ஞானத்தின் முடிவு எது என்று கேட்டான்? ஒருத்தனை பேடியாக்குவது என்றார். என்னய்யா! இப்படி ஒரு தத்துவமா? இது என்னய்யா ஆச்சர்யம்? யாரைய்யா சொல்வான்? சொல்லாதே தொண்டர்களுக்கு மட்டும் சொல்லு. யார் உண்மையாக இருக்கிறானோ அவன் பயப்படுவான். ஐயோ நம்மை பேடியாக்கிவிட்டானே! பேடியாவதா?

ஆண்மை இருந்துதானே அழிந்து அழிந்து போனாய். ஆண்மை இருந்து இருந்து தானே நரகத்திற்குப் போனாய்? ஆண்மை இருந்துதானே கருப்பைக்கு போனாய்? ஆண்மை இருந்துதானே புற்றுநோய் வந்தது. ஆண்மை இருந்துதானே பாவம் செய்தாய். ஆண்மை இருந்துதானே எல்லா வகையான துன்பங்களுக்கும் ஆளானாய். அவன் முடிவு என்ன என்று கேட்டால், அது பேடியாக்குவது என்றார். இதுதான் ஞானிகளின் இரகசியம்.
ஆக அந்த வாய்ப்பு அடைந்தால் தான் முடியும். ஞானிகள் அத்தனை பேரும் ஆயிரத்தெட்டு மாற்று ஒளி உடம்பை பெற்றது எப்படி என்று கேட்டால், அவன் ஆண்மை இல்லாதவன். பேடி என்றான். இப்ப நம்மை பேடிப்பயல் என்றால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? ஞானிகளிடம் சொன்னால் ஆமாமப்பா. இதுநாள் வரை என்னை வஞ்சித்து நரகத்தில் தள்ளிய சுக்கிலம் அற்றுப் போச்சு. அது உடம்புக்குள்ளேயே சார்ந்துவிட்டது. உடம்பிலேயே சார்ந்து கொள்ளுதல். அது பெரிய அனல் ஏறும்.

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.
- திருமந்திரம் - விந்து ஜயம் - போக சரவோட்டம் - கவி எண் 1949.

அது என்னவென்றால் மூலக்கனல் ஏற ஏற சுக்கிலம் பூராவும் கட்டிக்கும்.

காமப்பா விந்து அங்கே உறைந்து போகும்
கல் தேகம் கைலாச தேகம் ஆகும்

இந்த நோக்கத்தை அடைவதுதான். பேடி என்பது சமுதாயத்தில் சிலபேர் ஆண்மை குறைவாக ஆண்மையற்று இருப்பார்கள். அவர்களை அலி என்பார்கள். அவர்களைப் போன்று அல்ல. ஆனால் ஞானிகள் அத்தனை பேரும் அளவிலாத ஆண்மை உடையவராக இருப்பார்கள். ஆனாலும் உற்பத்தியாகும் இந்திரியத்தை காமத்திற்கு பயன்படுத்தி வீணாக்காமல், உடம்பில் ஊறும் இந்திரியத்தை தவத்தினால் உடம்பில் உள்ள மூலக்கனல் உதவி கொண்டு ஆசான் ஆசியால் மீண்டும் உடம்பிற்குள்ளேயே அசத்தை பிரித்து சத்தை மட்டும் சார்ந்துவிடச் செய்வார்கள்.
பிறவிக்கு காரணமான விந்தே மீண்டும் உடம்போடு உடம்பாக இரண்டற கலந்துவிடும். அதன்பின் அவர்களுக்கு காமமில்லை, பசி இல்லை, மலஜல சுக்கிலம் இல்லை, மான அபிமானம் இல்லை, விகாரமில்லை, கோபமும் இல்லை, விருப்பு இல்லை, வெறுப்பில்லை. இப்படி எல்லாம் அற்ற நிலையை அடைவார்கள். இந்நிலையே பேடி நிலை என்பார்கள். அதாவது ஆண் தோற்றத்திலிருந்தாலும் காமவிகாரத்திற்கு உட்படாது பெண்ணைக்கண்டு மயங்காது உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் தேகம் ஜடப்பொருள் போன்று உணர்வற்றும் இருக்கும்.

ஞானிகளுக்கு சுக்கிலம் அற்றுப் போனவுடன் உடம்பிலேயே சார்ந்து விடும். உஷ்ணம் ஏற ஏற அது அப்படியே உடம்பில் சார்ந்து விடும். அக்கினியின் காரணமாக அப்படியே சுக்கிலம் தங்கி விடும். தங்குகின்ற காலத்திலே உஷ்ணம் ஏறும். உஷ்ணம் ஏறுவதாலே கீழ் நோக்கக்கூடிய அக்கினி மேல் நோக்கும். மேல் நோக்குவதனாலே உடம்பில் இருக்கும் மாசு நீங்கும். மாசு நீங்கினால் உடம்பில் இருக்கும் சட்டை கழலும். சட்டை கழன்றால் உடம்பு ஒளி உடம்பை பெறும்.

அவன் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. ஏனய்யா இப்படி பாடுபட்டு, பலகோடி ஜென்மங்களில் பாடுபட்டு, இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறான். அவன் ஏனய்யா இங்கே வரணும்? இவன் கேட்கிறான் "நான் செய்தது நல்வினையோ, தீவினையோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் உன் பெருமையை நான் புரிந்து கொண்டேன். திருமூலதேவா , நந்தீசா , கருவூர்தேவா, போக மகாரிஷி, காலாங்கிநாதா உங்களை நான் தெரிந்து கொண்டேன். எனக்கு அதுதான் தெரியும். உங்களைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனாலும் உங்களை ஆசான் மூலமாகத் தெரிந்து கொண்டேன். என்னுடைய வினைப்பயன் என்ன வென்று எனக்குத் தெரியாது. நான் நல்வினை செய்திருக்கிறேனா? அல்லது தீவினை செய்திருக்கிறேனா? உன் பாதத்தை பற்றுகின்ற யோக்கிதை எனக்கு இருக்கிறதா? உன் பாதத்தை அடைய நான் நினைக்கிறேன். எனக்கு அதற்குரிய ஞானம் இருக்கிறதா? அதற்குத் தகுதிதான் இருக்கிறதா? நான் நரகத்தில் இருக்கிறேனா? அல்லது சொர்க்கத்தில் இருக்கிறேனா? என் அறிவு சிறப்பறிவா? அல்லது சிற்றறிவா? பேரறிவா? அல்லது என்னிடம் இருப்பது மூடத்தனமா? என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

நல்ல கருத்துதானப்பா! உன்னிடம் இருக்கும் வினையைப் பற்றி உனக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரியும். நீ யார் என்பதும் தெரியும். ஆனால் நீ பூஜை செய்கிறாய். என்னை நோக்கி பூஜை செய்கிறாய். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்கிறாய், நியாயம்தான். உன்னுடைய வேண்டுகோள் நியாயம்தான்.

ஆனாலும் இதே கேள்வியை தொடர்ந்து உன்னால் கேட்க முடியாது. ஏனய்யா என்றான். வினை உன்னை விடாதப்பா! நாங்கள் உனக்கு அருள் செய்ய நினைக்கிறோம். நீ கேட்கணும். உன்னை கைதூக்கி விடணும். நீயும் நிலை உயரணும் என்று நினைக்கிறோம். எத்தனை நாள் உன்னால் பூஜை செய்ய முடியும்? இந்த வார்த்தையை நீ எத்தனை நாள் கேட்பாய்? ஆறு மாதம் கேட்பாய். அதற்கப்புறம் வீழ்ச்சியடைவாய். உன்னுடைய சிந்தனைகள் தளர்ச்சியடைந்து வீழ்ச்சியடைந்து விடும்.

ஆனால் தொடர்ந்து உன்னால் கேட்க முடியாது. யாரேனும் ஒரு ஆசான் உன்னை தூண்டிக்கொண்டே இருக்கணும். இல்லையென்றால் நீ சோர்வு அடைவாய், பிராணாயாமம் செய்வாய். அதனால் உன்னுடைய உடம்பில் உஷ்ணம் ஏற்படும், செத்துப்போவாய். மறுபடி நீ அடுத்த ஜென்மம் எடுப்பாய். இப்படித்தான் இருக்குமே தவிர, லட்சியம் அடையும் வரையில் பொறுமையாக இருக்க உன்னால் முடியாது. பொறுமையாக உன்னால் கேட்க முடியாது.

ஆக எப்படியோ பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாக உன் திருவடியை பற்றுகிறேனப்பா! என்னை ஏற்றுக் கொள்! இதற்கு ஆசான் திருமூலர் சொல்வார், விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய் கொண்டு - ஞானிகள் மேல் நிலையில் இருக்கிறார்கள், ஆயிரத்தெட்டு மாற்று ஒளி உடம்பு, புனுகு ஜவ்வாது வாடை வீசுகிறது.

ஆனால் நமக்கோ கற்றாழை நாற்றமும், துர்நாற்றமும் வீசுது. இரண்டு நாள் குளிக்கவில்லையென்றால் கொடுமை வந்து விடும். இரண்டு நாள் குளிக்காவிட்டால் உடம்பு நாறி போயிடும். இப்பேர்ப்பட்ட தேகம் இருக்கு.

ஞானிகளோ புனுகு ஜவ்வாது வாடை மணக்கக் கூடியவர்கள், ஒளி உடம்பை வெளியே காட்டமாட்டார்கள். இப்பொழுது இங்கே நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாது. இங்கே புஜண்டமகரிஷி , ரோமரிஷி , கருவூர்தேவர் இவர்களெல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பாங்க. என்ன பேசுகிறான் என்று கேட்டுக் கொண்டே இருப்பாங்க. நானா பேசுகிறேன்? நான் பேசவில்லை ஆசான் பேசுகிறார். இன்று பேசுகின்ற பேச்சு உலக சமுதாயத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

விண்ணின்று இழிந்து - விண் என்றால் மேல் நிலை. மேல் நிலையிலிருந்து இழிந்து என்பது மாறுபட்டு, ஏனய்யா ஆயிரத்தெட்டு மாற்றுள்ள ஒளி உடம்பு உள்ளவர்கள் காமதேகத்திற்கு ஏனய்யா வந்தார்? ஞானிகள் கருணையே வடிவான மக்கள்.

அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந்தான்

என்றார். ஞானிகள் அத்தனை பேரும் ரொம்ப நல்ல மனது உள்ளவர்கள். உலக மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும். எல்லோரும் இந்த துறையை அடைய வேண்டுமென்று சொல்லி, அளவில்லாத மகிழ்ச்சி உள்ளவர்கள். ஆனாலும் நாம் அவர்களுடைய திருவடியை பற்ற தூண்டனும், வாய்ப்பு தரணும். ஆசான் என்ன செய்வார்? நம்மை (ஓங்காரக்குடிலாசானை) பேச வைப்பார்கள். இப்ப நாங்கள் பேசவில்லை. உலக மக்களுக்காக ஆசான் என்னை பேச வைக்கிறார்.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு என்றார். அவரவர் வினைக்கேற்றார்போல் இவன் கேட்கிறான். அடியேனுக்கு ஞானம் சித்திக்கணும், ஞானம் சித்திக்கணும் என்று கேட்கிறான். அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி இருந்தாலும், வினை அவனை விடாது. பொல்லாத காம தேகம், பொல்லாத வறுமை, பொறாமை, பழிவாங்குதல் போன்ற கொடுமைகள் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற குணக்கேடுகள் நீங்கும்மட்டும் இந்த இடத்திற்கு வரமுடியாது.

ஆசான் வந்து சாரும்போது, இவனுக்கு பழிவாங்கும் எண்ணம், பொறாமை, வஞ்சனை போன்ற கொடுமை இருந்தால் உள்ளுக்கு போவானா? உள்ளுக்கு போகமாட்டான். எல்லா குணக்கேடும் நீங்கும் வரை பார்த்துக் கொண்டே இருப்பான். இன்னும் அவனுக்கு பொறாமை நீங்கவில்லை. இன்னும் கொடுமைக்காரனாக இருக்கிறான். இன்னும் பொல்லாத காமதேகத்தில் இருக்கிறான். இன்னும் ஜாதி வெறி இருக்கிறது. இன்னும் அவன் குற்றத்தை மன்னிக்க மாட்டேன் என்கிறான். அரவணைக்க மாட்டேன் என்கிறான். கற்றோம் என்னும் திமிர் இருக்கிறது. பெருமை பேசிக்கொண்டு இருக்கிறான். இப்படிப்பட்ட குணக்கேடு இருக்கும் மட்டும் தலைவன் உள்ளே வரமாட்டான். அதுதான் சொன்னார்.

எப்போது சாந்தம் வந்ததோ, எப்போது பண்பு வந்ததோ, எப்போது பிறரை மதிக்கின்றோமோ, பிறருக்கு பசியாற்ற நினைக்கின்றோமோ, தன்னடக்கமாக இருக்கிறோமோ, எல்லா வகையான குணப்பண்பும் வரும் வரையில், கிட்டேயே வரமாட்டான். இந்த வார்த்தை பெரிய வார்த்தை.

நல்வினை மிகுந்துவிடுகிறது. தீவினை நீங்குகிறது. தீவினை நீங்குது என்றாலே சாந்தம் வந்தது. தீவினை நீங்கினாலே பொறாமை அற்றுப் போச்சு. தீவினை நீங்கினாலே பொல்லாத சினம் அற்றுப் போச்சு. தீவினை நீங்கினாலே ஜாதிவெறி அற்றுப் போச்சு. ஆக இன்னும் எல்லா வகையான குணக்கேடுகளும் நீங்குதென்றாலே தீவினை நீங்கிப் போனது என்று அர்த்தம். நமக்கு முன் செய்த வினைகள் இருக்கும் வரையில் குணக்கேடு நீங்காது. குணக்கேடு நீங்கும் வரையில் நம்மிடம் ஆசான் வரமாட்டார்.

முன்செய்த நல்வினை இருந்தால் நம் உடம்பில் சார்வான். மெய் என்றால் உடம்பு. உடம்பில் சார்கிறான் என்றால் அந்த தகுதி வந்தது என்று அர்த்தம். இல்லையென்றால் வரவே மாட்டான். நீ என்னதான் கர்ணம் அடித்தாலும், கோகர்ணம் அடித்தாலும் சரி! கிட்டேயே வரமாட்டான்.

ஆக நல்வினையை பெருக்கிக் கொள்வதற்கு சாது சங்கம் வேண்டுமென்றான். அப்ப உடம்பில் சார்கிறான். நமக்கு நல்வினை மிகுதி ஆக ஆக, தினம் தியானம் செய்ய வேண்டும்.

தினம் தொண்டு செய்ய வேறு எங்கும் போக வேண்டாம். ஓங்காரக்குடிலில் நடைபெறும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தாலே வினை பொடிபடப் போகுது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், எந்த தொண்டரும் இங்கே வந்ததற்குப் பிறகு நல்லபடியாக இருக்கிறார்களே தவிர, யாரும் கெட்டுப் போகவில்லை. அங்கே வேறு சங்கத்தில் அப்படி இருக்கமுடியாது. இங்கே எங்கு பார்த்தாலும் அமைதி இருக்கிறது. நல்வினையை பெருக்கிக் கொள்கிறோம். நல்வினை பெருக பெருக நம்மை தலைவன் சார்கிறான்.

நல்வினை மிகுதி ஆக ஆக, குருபக்தி மிகுதி ஆக ஆக குணக்கேடு நீங்கி சாந்தம் வந்தது. சாந்தம் வந்தது மட்டுமல்லாமல் சிறப்பறிவு வந்தது. சிறப்பறிவு வந்தது மட்டுமல்லாமல் வைராக்கியம் வந்தது. இதெல்லாம் ஞானிகள் கொடுக்கக்கூடிய பிச்சை. இப்ப நான் பேசுவதெல்லாம் தலைவன் கொடுத்த பிச்சை ஆக இப்படி ஒரு உணர்வு வர வேண்டும். நாம் கற்றது, கேட்டது, உணர்ந்தது, அறிந்தது அத்தனையும் உன் திருவருள் கடாட்சம் என்று சொல்கின்ற அறிவு எப்போது வந்ததோ, அப்போதே தலைவன் வந்து விட்டான் என்று அர்த்தம்.

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து - உருகி தியானம் செய்ய செய்ய தலைவன் புருவமத்தியில் ஒடுங்கி அவனுடைய இருகால் கொண்டு நம் இருகால் ஆட்டுவான். கால் என்றால் மூச்சுக்காற்றாகும். இரு கால் என்றால் இடது பக்க சுவாசம் ஒரு கால், வலது பக்க சுவாசம் ஒரு கால் ஆக இருகால். இதை இடகலை, பிங்கலை என்பார்கள். அவனுடைய இடகலை, பிங்கலையை அசைப்பான். நம் மூச்சுக்காற்றை பொதிகை மலையிலிருந்து அவர்களால் அசைக்க முடியும். அவர்களுக்கு பூச்சரம் போன்று தெரியும். மூச்சுக்காற்றை அசைக்கிறான். அசைத்தால் அவனுடைய இடகலை, பிங்கலையை நம் புருவமத்தியில் செலுத்திவிடுவான்.

தண்ணின்ற தாளை - குளிர்ச்சி பொருந்திய திருவடியை, தலைக்காவல் முன்வைத்து புருவமத்தியில் செலுத்திவிடுகிறான். நாம் செய்ய முடியாது. தலைக்காவல் முன்வைத்து உள்நின்று உருக்கி ஓர் ஒப்பில்லா ஆனந்த - அவன் உள்ளே சேர்ந்ததற்கு அப்புறம் என்ன ஆகும்? ரிஷிப்பண்டம் இராத் தங்காது என்பது போல அசுத்த சுக்கிலமெல்லாம் ஊற்றியே போய்விடும். ஊற்ற ஊற்ற உணர்வுகள் ஓங்கும். அதுதான் இதில் இரகசியம்.

ஆக பூஜை செய்தால்தான் அந்த வாய்ப்பைத் தருவார்கள். இல்லையென்றால் அந்த வாய்ப்பைத் தர மாட்டார்கள். நதி மூலம் ரிஷி மூலம் அறியக்கூடாது என்பார்கள். ஆக இது நான்காம் படி. உபதேசம் முப்பது பாடல்கள். இது முதல் பாடல்.
ஆக தலைவனை நெருங்க நெருங்க நெருங்க எல்லா வகையான நன்மையும் கிடைக்கும். ஒரு ஆயிரம் பவர் உள்ள ஒரு விளக்கு எரியுது. நாம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறோம். நம் மீது லேசாக படும் அந்த வெளிச்சம். ஆக ஆயிரம் பவர் உள்ள லைட் போட்டிருக்கிறோம். ஆனால் நம் மீது அடிப்பது மினுக்கு மினுக்கு என்று சிறிய வெளிச்சம்தான் அடிக்கிறது. இப்ப எங்கிருக்கிறோம்? கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டரில் இருக்கிறோம்.

ஒன்றரை கிலோமீட்டரில் இருந்து ஆயிரம் பவர் உள்ள தலைவனை நெருங்குகிறோம். நெருங்க நெருங்க நெருங்க நம் மீது வெளிச்சம் அதிகமாகிறது. இதுவாகிலும் ஆயிரம் பவர். தலைவன் ஆயிரத்தெட்டு மாற்றுள்ள ஒளி உடம்பை பெற்றவன். ஒரு ஜோதி சுடர் நிற்கும். உள்ளே தங்கியிருந்து உருக்கி விடுகிறான்.

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 366.

ஆசைக்கு அஞ்சுதல் அறம் என்பான். ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா என்றான். உன்னை யாரடா வஞ்சிக்கிறான்? கடவுளா வஞ்சிக்கிறான். நம்மை தோற்றுவிக்கும்போதே நமக்கு ஒரு நச்சுத்தன்மையை உருவாக்கிவிட்டான். நச்சுத்தன்மை விஷம். நம் உடம்பே நமக்கு விஷமாக இருக்கிறது. சுக்கிலம் விஷம். உடம்பு விஷம். இது என்ன ஆகிறது? ஆசான் தங்கி என்ன செய்கிறான்? உருக்கி உருக உருக உருக அனல் ஏறுகிறது. இந்த விஷத்தன்மை கண்டஸ்தானத்தோடு சரி.

அதற்கு மேலே உச்சிக்கு சுக்கிலம் வந்து விட்டால் அது அமிர்தமாக மாறிவிடும். கண்டஸ்தானம் வரையிலும்தான் விஷம். அதனால்தான் நீலகண்டன் என்று சொல்வான். உடம்பில் கண்டஸ்தானத்திற்கு கீழே சுக்கிலம் இருந்தால் அது நச்சுத்தன்மை. கண்டஸ்தானத்திற்கு கீழே இருந்தால் சுக்கிலம் நச்சுத்தன்மை, விஷம்.

அதே சுக்கிலமானது அனல் ஏறி உச்சிக்கு வந்து விட்டால், அப்பா! அதுதான் அமிழ்தபானம். இதை திருப்பாற் கடலை கடைவது என்பார்கள். இரண்டு பாம்பு வைத்து அதெல்லாம் உலக நடைக்கு சொன்னது. ஆகவே இது போன்ற வாய்ப்பை அடைவதற்கு நாமென்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு நாம் அடைந்திருக்கிறோம். அந்த வாய்ப்பு ஆசான் ஆசியால் எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆசான் ஆசியில் நச்சுத்தன்மையான உடம்பு நீங்கியது. ஆசான் ஆசியால் நம்மை வஞ்சிக்கக்கூடிய இந்த காமத்தை அல்லது சுக்கிலத்தை வென்றுவிட்டோம். இப்படி ஆசான் ஆசியில் வென்று, இப்போது கண்டஸ்தானத்தில் வந்து நிற்கிறது, உச்சியை அடைகிற காலம் வந்து விட்டது. அதற்குரிய நேரம் வந்து விட்டது.

அதனால்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்களெல்லாம் இந்த வாய்ப்பை அடைய வேண்டுமென்று சொல்கிறோம். இதுதான் இந்த பாடலின் இரகசியம். ஆகவே, களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார். அடுத்த பாடல் இது,

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 113.

என்று சொன்னார். இது நான்காம் படி என்றார். அப்ப கண்ணின்று காட்டி களிம்பறுத்தான் என்றார். எதுக்கைய்யா இருக்கிறான் என்றார். நீ என்னய்யா அப்படி புண்ணியம் செய்து விட்டாய். உன் உடம்பு பல ஜென்மங்களில் உன்னை நரகத்தில் தள்ளி விட்டதே! பல ஜென்மங்களில் கற்பழித்தாய், பல ஜென்மங்களில் பேராசை கொண்டிருந்தாய்! அதுதான் சொல்கிறேன். பாவத்திற்கே காரணம் யாரென்றால் உடம்புதான். "அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா", "கண்ணின்று காட்டி களிம்பறுத்தானே " கண்ணின்று என்பது இங்கே மனக்கண்ணிற்கு புலப்படும்படி செய்வான். அதை ஏன் என்ன காரணம்? பூஜை செய்ததினாலே.

களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார்.
யாருக்கு?
தலைவன் ஆசி பெற்ற மக்களுக்கு.
இல்லையென்றால் முடியுமா. பட்டினி கிடந்தால் முடியுமா. அப்படி பட்டினி கிடந்தால் செத்துப் போவான்.

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 113.

என்பது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம். அந்த வாய்ப்பை நாமெல்லாம் அடைய வேண்டும். இந்த பதிவு நாடாவை கேட்பவர்களுக்கு அந்த வாய்ப்பு அமைய வேண்டுமென்று நினைக்கிறோம். இந்த நாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிற்கு போனாலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
அதை அவரவர்கள் தங்கள் பாஷையில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அது போன்று அமைத்திருக்கிறோம். அப்ப சரியை, கிரியை, யோகம், ஞானத்தைப் பற்றி பேசியிருக்கிறோம்.

உடல் மாசு அல்லது களிம்பு அறுப்பதைப் பற்றி ஆசான் ஆசியால்தான் உணர்த்தப்படும். களிம்பறுத்தான் என்றுதான் சொல்லியிருக்கிறானே தவிர, நாம் ஒன்றும் செய்ய முடியாது. அப்ப ஈசனே என்ன செய்திருக்கிறார்? ஈசன் என்று சொல்லப்பட்ட ஞானியும் தன் உடம்பில் கனல் ஏற்றி தவம் செய்தான். கீழ் நோக்கி பாயக்கூடிய சுக்கிலத்தை கண்டஸ்தானத்திற்கு மேலே ஏற்றி, கண்டஸ்தானம் வரை நச்சுத்தன்மையாகவும், அதே சமயத்தில் மேல் நோக்கினால் அமிர்தமாக இருக்கக்கூடிய அந்த இரகசியத்தை அறிந்தான்.

நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆக இதை கேட்பவர்கள் உண்மையிலேயே ஆசான் ஞானிகளின் ஆசி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று சொல்லி, இந்த பதிவு நாடாவை கேட்கும் போது எல்லாம் வல்ல ஞானிகள் துணையாய் இருந்து அவரவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

இப்ப நாங்கள் சொல்லக்கூடிய விசயம் உங்கள் மனதில் பட வேண்டும். உங்கள் ஊழ்வினைக்கேற்றவாறுதான் உங்கள் மனதில் படும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
- திருக்குறள் - ஊழ் - குறள் எண் 373.

இப்ப உபதேசம் என்பது முப்பது பாடல்கள். அது முந்நூறுக்கு ஒப்பானது. மூவாயிரத்திற்கு ஒப்பானது. மூன்று இலட்சத்திற்கு ஒப்பானது. மூன்று கோடிக்கு ஒப்பானது. இதை தெரிந்து கொண்டால் போதும். முப்பது பாடல் தெரிந்தால் முந்நூறு பாடல் தெரியும். முந்நூறு தெரிந்தவனுக்கு மூவாயிரம் தெரியும். இவை அப்பேர்ப்பட்ட பாடல்கள். ஆகவே அப்பேர்ப்பட்ட நுட்பமான பாடல்களாக இருந்தாலும் திருவருள் துணை கொண்டால்தான் இந்த கல்வி உங்களுக்கு ஒட்டும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
- திருக்குறள் - ஊழ் - குறள் எண் 373.

பூஜை செய்யக்கூடிய அளவிற்குதான் அறிவு மிகுதியாகும். பூஜையை நிறுத்திவிட்டால் அந்த அறிவு தெரியாது. அதே சமயத்தில் ஆசான் திருமூலர் சொல்லும்போது கூட,

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
- திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - கவி எண் 60.

ஆக தலைவன் ஆசியிருந்தால் தான் இப்போது சொல்லப்பட்ட பேசப்பட்ட கருத்துக்களை உணர முடியும். பூஜை செய்துதான் இந்த பதிவு நாடாவை கேட்கலாம். பூஜை செய்து கேட்டால் கொஞ்சம் விளக்கமாகும். மறுநாள் பூஜை செய்தால் இன்னும் கொஞ்சம் விளக்கமாகும். அவ்வளவு விஷயத்தை அள்ளி கொட்டியிருக்கிறோம். ஏன்னா என்னுடைய அனுபவத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் என்றார். பூஜை செய்ய செய்யத்தான் தெளிவடையலாம் என்று சொல்லி இதை கேட்கின்ற மக்கள் அதை கவனமாக கேட்பதற்கும் ஆசியிருக்கிறது என்று சொல்லி, கேட்பவர்களெல்லாம் சுத்தசிவ சன்மார்க்கத்தையும் சுத்த சிவ தத்துவத்தையும் யோகஞான கருத்துக்களையும் அடைய வேண்டுமென சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.


திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

22. பருவத்தே பயிர் செய்

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற ஞானத்திற்கான படிநிலைகள் நான்கையும் முழுதும் அறிந்தவர்கள் தான் ஞானிகள். இதையே அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு நிலைகளாகவும் சொல்வார்கள்.

ஆக ஒரு மனிதன் முற்றுப்பெற வேண்டுமானால் இந்த நான்கு நிலைகளையும் கடந்துதான் இறுதியில் வீடுபேறாகிய பேரின்ப நிலையை அடைய முடியும். இது எல்லா ஞானிகளும் அறிவார்கள்.

அப்படி முற்றும் உணர்ந்து முழுதும் கடந்தவர்தான் மகான் ஒளவையார். ஞானிகள் ஒரே கருத்தை உரைநடையில் உலக மக்களின் நலன் பொருட்டு உலக நடையில் அவர்கள் வாழும் சமுதாய வாழ்க்கையை ஒட்டி பொருள் படும்படியும், அதே கருத்தை உட்பொருள் பொதிந்த ஞான இரகசியங்களை கொண்ட மாபெரும் கருத்துக்களுடன் கூடியதாகவும் ஞானமார்க்கத்துக்கு உண்டான விளக்கத்தையும் அளிக்கும் விதமாக அமைத்திருப்பார்கள். எப்படி திருக்குறளானது சமுதாயம், தனிமனிதன், அரசு, பொது நிறுவனங்கள், துறவி, யோகி இப்படி பலவிதமானவர்களுக்கும், அவரவர்க்கும் தகுந்தாற் போல் பொருளைத் தந்து அவரவர் வாழ்வை வளப்படுத்தும் உபதேசங்களை உடையதாய் உள்ளதோ, அதுபோலவே ஆத்திசூடியும் நேரடியாக சமுதாய நலனுடைய பொருளாகவும், சூட்சுமத்தில் ஞானத்துறையில் உள்ளவர்களுக்கு உண்டான ஞானப்பொருளையும் அளிப்பதாகவும் இருக்கும்.

இங்கு பருவத்தே பயிர் செய் என்கிறார் மகான் ஒளவையார். பயிர்களில் பலவகை உண்டு. புல் வகை, செடி வகை, கொடி வகை, மர வகை மற்றும் கிழங்கு போன்ற பூமிக்கு கீழே விளையக்கூடியவைகளும் நீரில் விளையக்கூடிய பயிர்களும் உள்ளன.

இவற்றிற்கான விவசாய முறைகளும் பாரம்பரியமாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தற்காலத்தில் நவீன விஞ்ஞான முறையில், எப்பயிரை எந்த காலத்தில் எப்படி செய்தால் எந்த நிலத்தில் எவ்வளவு நாளில் என்னென்ன செய்தால் நல்ல மகசூல் பெறலாம் என்றெல்லாம் தெளிவாக ஆராய்ந்து துல்லியமாக பட்டியலிட்டு வைத்துள்ளார்கள். இப்படி விவசாயம் செய்பவர்கள் நெல் எனில், அதை எப்போது விதைக்க வேண்டும். எந்த காலத்தில் நாற்று விட வேண்டும். எவ்வளவு நாட்களில் நாற்றுகளை வயலில் இடம் மாற்றி நட வேண்டும். எவ்வளவு நாள் எவ்வளவு நீர் பாய்ச்ச வேண்டும். கதிர் வரும் காலம் என்ன? கதிர் முற்றியவுடன் எப்போது அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில் நெல்மணிகளெல்லாம் வயலிலேயே கொட்டி விடும்.

இப்படி எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி செய்யாமல் காலம் மாற்றி பயிர் செய்தால் அந்த பயிரை எவ்வளவுதான் பாதுகாப்பாக வளர்த்தாலும் இயற்கையின் மாற்றங்களால் சூழ்நிலை தாங்காமல் வளர்ச்சி குன்றி மகசூல் குறைந்து நோய்களுக்கு ஆட்பட்டு இறுதியில் பாடுபட்ட உழைப்பும் வீணாகிவிடும்.
இது சாதாரண சமுதாய வழக்கில் கூறப்படுவதாகும். இந்த கருத்தே மகான் ஒளவையார் ஞானம் மேற்கொள்ள விரும்புகின்றவர்களுக்காகவும் கூறியிருப்பதால் இந்த கருத்தின் உட்பொருள் வேறுவகையாக கொள்ளப்படும்.

இங்கு பருவம் எனப்படுவது மனிதனின் இளமையை குறிக்கும். அது இளமை பருவம் என பொருள்படும். இன்றிருந்த மனிதன் நாளையில்லை என கூறுவர் முன்னோர். ஆதலால் நாம் உயிருடன் உள்ள போதே தக்க பருவம் உள்ள போதே செய்ய வேண்டிய சாதனங்களை அதற்குண்டான பயிற்சிகளையும் மேற்கொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டு நாம் பெற்ற ஜென்மத்தின் பயனை அடைய வேண்டும் என்பதேயாம்.

பருவம் தவறினால் பயிர்கள் வீணாவது போல நம்முடைய பருவத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் போனாலும், நாம் எடுத்த ஜென்மம் வீணாகி போய்விடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மனித வாழ்வில் பொருள் நிலையாமை, இளமை நிலையாமை, உடம்பின் நிலையாமை உண்டு என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதை அறியவும் அதற்குரிய பக்குவமும், தக்க ஆசான் உபதேசம் இல்லாமல் உணர முடியாது.

இதை உணர்த்தக்கூடியவர்கள் ஞானிகளே. அதை முதலில் உணர்ந்தவர் மகான் சுப்ரமணிய தேவரெனும் முருகப்பெருமானும் அவர் பின் மகான் அகத்திய பெருமானும் அவர்பின் வழிவழியாக மகான் நந்தீசரும், மகான் திருமூலதேவரும், மகான் மாணிக்கவாசகரும், மகான் அருணகிரிநாதர் என்று நவகோடி சித்தரிஷி கணங்களும் உணர்ந்து காலம் உள்ள போதே பருவத்தே பயிர் செய்து (தக்க காலத்தில் செய்ய வேண்டியவைகளை செய்து) தாம் பெற வேண்டியவற்றை பெற்று பிறவா நிலையை அடைந்தனர். இப்படிப்பட்ட நிலையாமையை உணர்ந்து தக்க காலத்தில் ஞானமடைந்த முதுபெரும் ஞானிகளின் திருவடியைப் பற்றி தாங்கள் பெற்ற அந்த பேரின்ப வாழ்வை நானும் பெற வேண்டும். அதற்கு தாங்கள் எம்மைச் சார்ந்து அருள் செய்ய வேண்டும்.

தங்கள் திருவருள் துணையில்லாமல் இவற்றை நான் அறியவோ, கடைப்பிடிக்கவோ என்னால் ஆகாது. எனது உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தும் தங்கள் திருவடிக்கே சமர்ப்பிக்கிறேன். எம்மை ஏற்று அருள் செய்யுங்கள் என்று மனமுருகி உண்மையுடன் இடைவிடாது பூஜை செய்தால் நிலையாமை குறித்தும் தவம் மேற்கொள்ளக்கூடிய காலம் குறித்தும் வேண்டுபவர்க்கு தக்க சமயத்தில் ஞானிகள் ஆசியால் உணர்த்தப்படும்.
இப்படிக் கேட்டு கேட்டு பெறக்கூடிய இவ்வித வேண்டுகோளை இளமையுள்ள போதே கேட்டால்தான் ஞானிகள் அருள் செய்யுங் காலத்து நமது தேகம் அத்தவத்தினை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். பலர் இளமையில், இளமையின் வேகத்திற்கு ஆட்பட்டு கட்டிக்காப்பாற்ற வேண்டிய ஞானத்தின் ஆதாரமாக உள்ள இத்தேகத்தை பல தீயவழிகளில் சென்று பாழ்படுத்தி விடுகிறார்கள். பலர் இளமையில் பொருள் நாட்டம் கொண்டு பொருளின் பின்னே அலைந்து உடல் தளர்ந்து உதவாத நிலையில் கோயில் கோயிலாக சென்று தமது பக்தியை வெளிப்படுத்துவார்கள்.

சிலரோ இதெல்லாம் இளமையில் எதற்கு? நன்கு சுகமாக வாழ்வோம், கடைக்காலத்தில் ஒரு ஐம்பது வயதிற்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என சும்மா இருந்துவிட்டு இறுதியில் முயற்சி செய்து, முயற்சி கைகூடாமல் வருந்துவார்கள். இளமை உள்ள போதே ஞானிகள் ஆசியைப் பெற்றால்தான் தவம் மேற்கொள்ள முடியும்.

ஏனெனில் தவத்தின் ஆதாரமான இத்தேகத்தில் தான் இதுவும் இளமையில்தான் குண்டலினி சக்தி எனப்படும் சக்தியும், அதற்கு ஆதாரமாய் உள்ள மூலக்கனலும் பிரகாசமாக தோன்றும். அப்படி தோன்றும் மூலக்கனலை தாங்கும் ஆற்றலும், இளமையில்தான் நமக்கு அதிகமாக இருக்கும்.

ஒருவர் ஞானிகள் பெற்ற மரணமில்லா பெருவாழ்வை பெற வேண்டுமானால் அந்நிலையை அடைந்த மகான்களை ஞானிகளை மனமுருக திருவடி பற்றி பூஜிக்க வேண்டும்.

அப்படி பூஜிக்க பூஜிக்க அவர்களுக்கு ஞானத்தின் அடிப்படை சுக்கிலம்தான் என்பதை உணர்வார்கள். அப்படிப்பட்ட சுக்கிலம் நமது தேக அமைப்பின்படி இளமையில் தான் அதிகமான அளவில் தேகத்தின்கண் உற்பத்தியாகும். அப்படி உற்பத்தியாகின்ற சுக்கிலமே நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும்.

காமதேகமான மனித தேகத்தில் உற்பத்தியாகும் சுக்கிலமானது சத்தும் அசத்துமுள்ளதாக இருக்கும். சாத்தும் அசத்துமாக உள்ள சுக்கிலத்தை ஞானபண்டிதனின் திருவருளால் ஞானிகள் உதவியால் யோகக்கனலாம் மூலக்கனலைக் கொண்டும், ஞானிகளின் திருவருளாலும் சுட்டெரித்தால் அதிலுள்ள அசத்துகள் நீங்கி சத்துக்கள் மேலோங்கி தூய்மையானதாக மாறி காமதேகமான இத்தேகத்திலுள்ள களிம்புகளை நீக்கி ஞானதேகமாக மாற்றி இறுதியில் மரணமில்லா பெருவாழ்வைப் பெற்று தரக்கூடிய ஒளிதேகமாகவும் மாற்றித் தரும்.

இதற்கு இளமையில் ஊறும் சுக்கிலமே அடிப்படையாக அமைவதால் அந்த இளமை பருவமே தவத்திற்கு உகந்த பருவமாக கொள்ளப்படுவதால் அப்பருவத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இளமைப் பருவத்தில் தவமுயற்சியை ஆரம்பித்தால் மட்டும் பயன்படாது. ஏனெனில் இச்செயல்கள் அனைத்தும் முதுபெரும் தலைவன் ஆசான் முருகப்பெருமான் திருவருட் கடாட்சத்தாலும் குருமுனியாகிய அகத்தியப் பெருமானின் கருணையினாலும் பெறக்கூடியதே அன்றி தனிமனித முயற்சியால் ஆகாது.

மகான் திருமூலதேவர் ஞானத்தின் தன்மையையும், தேகத்தின் தன்மையையும் ஆசானின் கருணையையும் இவ்வுலக மக்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு திருமந்திரத்தில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 177.

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும்புகுந்தறி வார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 178.

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 179.

விரும்புவர் முன்னென்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குங்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத் தேனே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 180.

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 181.

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதுஞ்
சாலும் அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 182.

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டாற்
பருவூசிப்பையும் பறக்கின்ற வாறே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 183.

கண்ணதுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 184.

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 185.

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே
- திருமந்திரம் - இளமை நிலையாமை - கவி எண் 186.

களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப்பித்துக்
களிம்பு அணுகாத கதிரொளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 114.

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே .
- திருமந்திரம் - சம்பிரதாயம் - கவி எண் 1781.

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
- திருமந்திரம் - சம்பிரதாயம் - கவி எண் 1778.

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
- திருமந்திரம் - அறஞ்செயான் திறம் - கவி எண் 261.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
- திருமந்திரம் - கிரியை - கவி எண் 1452.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
- திருமந்திரம் - சரீர சித்தி உபாயம் - கவி எண் 725.

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
- ஔவைக்குறள் - உடம்பின் பயன் - குறள் எண் 1.

அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
- ஒளவைக்குறள் - உடம்பின் பயன் - குறள் எண் 10.

நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 334.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் - 335.

அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே.
- மகான் பட்டினத்தார் பாடல் - நெஞ்சொடு புலம்பல் - கவிஎண் 12.

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றா ரழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு.
- மகான் பட்டினத்தார் - திருக்குற்றாலம் - கவி எண் 26.

நாட்டம் என்றேயிரு சற்குருபாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றேயிரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடம்கவிழ்நீர்
ஓட்டம் என்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசம் இதே.
- மகான் பட்டினத்தார் - பொது - கவி எண் - 21.

விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால்
விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
சகலகலை ஞானமெல்லா மிதற்சொவ் வாது
முந்தா நாள் இருவருமே கூடிச் சேர்ந்த
மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.
- அகத்தியர் ஞானம்.

இவ்வாறாக பல ஞானிகள் இளமை உள்ளபோதே ஞானிகள் திருவடி பற்றி பூஜித்து பெறவேண்டியதை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என உறுதிக் கூறுகிறார். ஆயினும் நாம் அவற்றையெல்லாம் உணராது அலட்சியமாக இருந்துவிட்டு கடைசிகாலத்தில் முயற்சி செய்வது பருவத்தில் பயிர் செய்யாமல் பருவம் தவறி பயிர் செய்வதைப் போல வாழ்வை வீணாக்கி வருகிறோம். எனவே இளமை உள்ளபோதே ஆசான் திருவடியைப் பற்றி பூஜித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் மகான் ஒளவையார்.

ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை M எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
- அன்பன்
இரா.மாதவன், 98424 55661.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment