உருகி தியானம் செய்வதுதான், காலத்தை வெல்லுகின்ற முறையாகும். யாரை உருகி தியானம் செய்வது? யார் மீது அன்பு செலுத்துவது? என்பதை நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். ஞானிகளை அறிமுகம் செய்கிறோம். ஞானிகள் திருவடியைப் பற்றச் சொல்லியிருக்கிறோம். தினந்தினமும் ஆசானிடம் கேட்கச் சொல்லியிருக்கிறோம். தெளிவான அறிவை பெற்றுக் கொள்ளச் சொல்லியிருக்கிறோம்.
நாங்கள் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு வாசி வசப்பட்டு பதினாறு வருடமாச்சு. பொல்லாத காம தேகம் வீழ்ந்து விட்டது. அதைத்தான் ஆசான் பட்டினத்தார் சொன்னார்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21.
நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு - நாட்டம் என்பது விரும்புதல். நாட்டம் என்றே யிரு - ஒரே சிந்தனையாக இரு.
இனி நான் பிறக்க விரும்பவில்லை, நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று இல்லறத்தார்கள் ஒரே சிந்தனையாக ஆசானை கேட்கவேண்டும். இனி நான் பிறக்க விரும்பவில்லை ஐயா! அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டும்! என்று இல்லறத்திலிருக்கும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ கேட்கவேண்டும்.
இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அந்த காலத்தில், கயிறு பிடித்து இழுத்து ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது. இப்படிப்பட்டதுதான் நமது வாழ்க்கை. இதைத்தான் ஆசான் பட்டினத்தார் தனது மற்றொரு பாடலிலும் சொல்வார்.
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
- மகான் பட்டினத்தார் பாடல் - நெஞ்சொடு புலம்பல் - கவி எண் 17
நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே யெண்ணி இருப்பார்கள்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21.
ஞானியர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், மகான் திருமூலதேவர் அருளிய பாடல்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஞானிகள் பாடல்களில் உள்ளதை நிறைய சொல்லியிருக்கிறோம். காரணம் இந்த பாடல்கள் உங்கள் செவியில் விழ வேண்டும்.
உங்களுடைய ஆன்மா தட்டி எழுப்பப்பட வேண்டும், நீங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும். ஞானிகளின் பாடல்களுடைய இயல்பு என்னவென்றால், ஆன்மாவை குத்தி எழுப்பும். தட்டி எழுப்புவதல்ல! அடித்து எழுப்பக் கூடிய வார்த்தையை நான் பேசியிருக்கிறேன்.
அன்பர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மோட்சலாபமே! அடையக்கூடிய லட்சியம். காலம் நெருங்கிவிட்டது. இனி தாமதிக்க முடியாது.
ஆசான் இராமலிங்க சுவாமிகளிடம், அன்பர்கள் அனைவரும், “நீங்கள் இல்லாவிட்டால், நாங்கள் எப்படி அழைப்போம், எங்களை விட்டுப் போகிறீரே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றார். அதற்கு ஆசான் இராமலிங்க சுவாமிகள், “நீ எந்த நேரத்தில் நினைத்தாலும் நான் வருவேன்” என்றார்.
இதைத்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- திருஅருட்பா ஆறாம் திருமுறை - வாய்ப்பறை யார்த்தல் - கவி எண் 1530.
சத்தியம் செய்கின்றேன், சத்தியம் செய்யும் நோக்கம் என்னவென்றால், நீங்களெல்லாம் முன்னேறுங்கள், நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்! என்பார்.
தினந்தினம் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் சிறிது நேரம் படிக்க வேண்டும். அதே சிந்தனையாக இருக்கணும். நாமஜெபம் செய்யணும். அன்பர்கள், ஒரு பத்து நிமிடம், ஆன்மீகவாதிகளோடு பேசணும். வீண் வார்த்தை பேசுபவர்களிடம் பேசக்கூடாது.
சுத்த ஆன்மீகவாதிகளான, ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குழுவாக அமரவேண்டும். படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ் படிக்க வேண்டும். மலேசிய அன்பர்கள், தங்கள் பிள்ளைகளை மலேசியாவில் தமிழில் படிக்க வைக்க வேண்டும். என்ன காரணம்? தமிழ் படித்தவன்தான் கடவுள் ஆக முடியும். தமிழில்தான் இந்த ரகசியம் இருக்கிறது. வேறு எங்கும் இந்த இரகசியம் கிடையாது.
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
- மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 22.
ஒரு பதம் தன்னைத் தூக்கி, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரகசியம் தமிழில்தான் உள்ளது. அதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் தமிழ் படிக்க வேண்டும்.
திருவாசகத்தை படிக்கத் தெரிய வேண்டும். நாம், பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தராவிட்டால், அவர்கள் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் படிக்க முடியாது. இது நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக கருத வேண்டும்.
நம் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் தன் நிலை உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அப்படி பெற்றால்தான், தனது இருபத்தியொரு தலைமுறையை ஞானியாக்குவார்.
ஒருவர் ஞானியானால், தனது தாய் வழி இருபத்து ஒன்று, தந்தை வழி இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார். ஆகவே தமிழ் படிக்க, நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ் படித்தவன் யாரும் கெட்டுவிட மாட்டான். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் மலேசியாவில், மலேய மொழியும், ஆங்கிலமும் படிக்கலாம், தமிழும் படிக்கலாம். இதற்கு ஒன்றும் தடையில்லை. நம் பிள்ளைகள் தமிழ்மொழி படித்தால், வேலைவாய்ப்பு கிடைக்குமா என்று நினைக்காதே! ஆசான் ஆசியால், நிச்சயம் கிடைக்கும்.
தமிழ் படித்தால்தான், திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம் போன்ற ஞானநூல்களை படிக்க முடியும். தமிழ் படித்தவனுக்குத்தான் ஞானம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே ஞானத்தை அறிந்து கொள்வதற்கான, ரகசியமெல்லாம் தமிழ் மொழியில்தான் இருக்கிறது.
தமிழ் நமக்கு தாய் மொழி, ஞான மொழி. தமிழ் மொழிதான், ஞானத்திற்கு வழிவகுத்து கொடுத்தது. ஆகவே தமிழை படிக்க வேண்டும். நம் தமிழகத்தில் கூட எல்லோரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இதை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்று நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் உண்மை தெரியும். திருக்குறளை படிக்க சொன்னால் படிக்க மாட்டேன் என்கிறானே! திருஅருட்பாவை படிக்கச் சொன்னால் படிக்க தெரியவில்லை, திருவாசகத்தை படிக்கச் சொன்னால் தடுமாறுகின்றானே! அப்போது “ஐயோ! நம் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்க முடியாத தடுமாற்றம் வந்துவிட்டதே என்று வருந்துவார்கள்.
பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. இது அவரவர்கள் செய்த வினைப்பயன். அதற்கு நாம் பொறுப்பல்ல! நாம் சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்கிறோம். அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு யாம் என்செய்வோம்? அவனவன் வினைப்பயனுக்கேற்றவாறு ஆங்கிலப்பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஆங்கிலப்பள்ளியில் படித்தால்தான் உயர்ந்த அறிவு வருமென்று நினைக்காதே. நீ எவ்வளவு பாடுபட்டாலும், எத்தனை ஆங்கில பள்ளியில் படித்திருந்தாலும் சரி. தமிழ் மொழி படிக்காதவனுக்கு ஞானமில்லை.
தமிழ் மொழியில்தான், ஞானத்திற்கான இரகசியம் இருக்கிறது. இந்த ரகசியத்தை ஆசான் கணபதிதாசர் சொல்வார்,
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
- ஆசான் கணபதிதாசர்
இதையே ஆசான் திருமூலர் சொல்வார்,
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
- திருமந்திரம் - பிராணாயாமம் - கவி எண் 575
தமிழில்தான் இந்த ஞான இரகசியம் இருக்கிறது. அதை தமிழில்தான் படிக்க வேண்டும். நீ எப்படிதான் மொழி பெயர்த்தாலும், முடியாது. தன்னுடைய மகனையோ, மகளையோ கடவுளாக்கினால், அவர்கள் தன்னுடைய தாய் தந்தை பாவத்தையும் பொடியாக்குவார்கள். அப்படி செய்யாமல், அவர்களும் நம்மைப் போன்று அல்லற்பட்டு சாக நினைக்கின்றாயா? எதை நீ நினைக்கின்றாய். இதை உங்களால் போகப்போக உணர்ந்து கொள்ள முடியும். இதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் சொல்கிறோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
(உள்ளே போகின்ற காற்று வெளியே வராது.) அடுத்து,
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
ஆக இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆசான்தான் புருவ மத்தியில் ஒடுங்கி நரைதிரையை மாற்ற வேண்டும்.
இப்ப எனக்கு நரை திரை இருக்கிறது. என்னை புகைப்படம் (போட்டோ) பிடிக்கின்றீர்கள். இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அடேயப்பா! என்னய்யா! இது.
உலக நடையில், காய்தான் பழுக்கும். ஆனால் பழம் காயாகின்றது. இது எப்படி? இது எந்த மொழியில் வந்தது? இந்த இரகசியம் எந்த மொழியில் இருக்கின்றது.
ஒரு இளம் பெண் முதுமையடைந்து கிழவியாவாள். இதுதான் உலக இயல்பு. ஆனால் கிழவி குமரியாக முடியாது. இப்ப நான் முதுமையாக தெரிகிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நரை திரை மாறி மீண்டும் இளமை வரும். இதைப்பற்றி எந்த மொழியில் இருக்கிறது? தமிழ் மொழியில் மட்டும்தான் இருக்கின்றது.
அதற்காக நான் மற்ற மொழிகளை புறக்கணிக்க விரும்பவில்லை. தமிழ் மொழி வேண்டும், ஆங்கிலம் வேண்டும், அந்தந்த நாட்டு தாய்மொழியும் வேண்டும். ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மூன்று அல்லது நான்கு மொழி தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.
தமிழ் தலை மொழியாக, உண்மை மொழியாக, ஞானத்திற்கு வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
உரோமம் - தலை முடி. இப்ப தலைமுடி வெளுத்திருக்கும், பின்பு கறுக்கும். புறப்பட்டுப் போகான் புரிசடையோனே - இந்த ரகசியத்தை தெரிந்திருக்க வேண்டுமென்றால் உன் பிள்ளை தமிழ் கற்றிருக்க வேண்டும். மலேசியாவில் உள்ள உங்கள் பிள்ளைகள், தமிழ்மொழி, மலேயமொழி, ஆங்கிலமொழி தெரிந்திருக்க வேண்டும். அப்ப பல மொழிகளிலும் அவனை வல்லவனாக உருவாக்க வேண்டும்.
பிள்ளைகள் ஆண்மகனாக இருந்தாலும், பெண்மகளாக இருந்தாலும் சரி, அகத்தீசன் நாமத்தை சொல்ல வைக்க வேண்டும். பிள்ளைகளை பார்த்து, ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா என்று சொல்ல சொல்லி கேட்க வேண்டும். இப்படி பிள்ளைகள் ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா! என்று சொல்லும்போது ஆசான் அகத்தீசர் அவர்களை பார்க்கிறார்.
ஆசான் அகத்தீசரின் பார்வை, ஆன்மாவை தட்டி எழுப்பும். ஒருநாள் சொன்னால், பலநாள் சொன்னால், தொடர்ந்து சொன்னால் ஆன்மாவை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல், அவன் எல்லா மொழியிலும் வல்லவனாவான்.
நாங்கள் ஞானத்தைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை. தமிழ் மொழியை நாங்கள் படித்ததாலும், ஆசான் திருவடியை பற்றியதாலும் எங்களுக்கு இந்த உண்மை தெரிந்தது.
ஆக, நான் சொன்ன இந்த கருத்துக்களை கேட்பவருக்கெல்லாம், தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமையும், வாய்ப்பும் கிடைக்கும். தலைவனை அறிகின்றவன்தான் தன்னை அறிவான். தன்னை அறிகின்றவன் தலைவனை அறிவான். இதுதான் நமது இலட்சியம்.
தினந்தினம் நாமஜெபம் செய்தால், சிறப்பறிவு உண்டாகும். அதன்மூலம் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். இந்த நோக்கத்தை அறிவதற்காகத்தான், நாம் வந்திருக்கிறோம்.
பிறந்தவர்க்கு மோக்ஷகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வாலுவாருண்டு
வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
- மகான் அகத்தியர் - துறையறி விளக்கம் - கவி எண் 89
பிறந்தவரெல்லாம் மோட்சகதியை தேட வேண்டும் என்பார். இதை மறந்துவிட்டால், மறலி வந்துவிடும் என்பார். அப்ப, அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என்பார். ஆறுமுகப் பெருமானையோ, அகத்திய பெருமானையோ நினைக்கின்ற மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
பிறந்தவர் மோட்சகதியை தேட வேண்டும். மோட்சகதியை தேட விரும்புகின்றவன், மரணமிலா பெருவாழ்வு பெற விரும்புகிறவன், நரகத்திலிருந்து விடுபட விரும்புகின்றவன், எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சத்தை விரும்புகின்றவன், ஆசான் ஞானபண்டிதனையும், அகத்தீசனையும் பூஜை செய்து இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.
நாம் வேண்டினால், பிறவாமையை வேண்ட வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96.
பாவம் என்பதே உடம்புதானே? புண்ணியம் பெருகணும் என்றால் உயிர் ஆக்கம் பெறணும். உயிருக்கு ஆக்கமும், உடலுக்கு ஆக்கமும் வந்தால் பாவ புண்ணியம் சமமாகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை, நாடி இனிய சொலின் என்றார்.
நாங்கள் உங்களுடைய பொருளாதாரத்தில் லட்சியம் கொண்டிருந்தால், உங்களை அனுசரித்து பேசியிருப்போம். உங்களை மூடத்தனத்தில் மூழ்க செய்வோம்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசுவதை நீங்கள் கவனிக்க வேண்டும். தலைவன் எங்களுக்கு பொருளாதாரத்தை அள்ளிஅள்ளி கொடுக்கிறான். ஆக, நாங்கள் பொருள் சேர்க்கும்போது நியாயம் இருக்க வேண்டுமென்று சொல்வோம். நியாயம் இருந்தால்தான், அவன் வாழ முடியும். இல்லையென்றால் நாளுக்குநாள் வினை சூழ்ந்து கொள்ளும். இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதுதான் பாதை. இதுதான் உண்மையான பாதை. இது இப்படித்தான் இருக்கிறது. பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதை சொல்ல வேண்டுமென்பது எங்களது கடமை. நீங்கள் உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் முன்னேற வேண்டும், உலக மக்களும் முன்னேற வேண்டும். உலகமெல்லாம் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும். உலக மக்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும்.
எப்போது பார்த்தாலும், நோயும், பிணியும், வறுமையும் வாட்டி வதைத்து அல்லற்படுகின்ற மக்களுக்கு நான் பேசிய கருத்துக்கள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
நான் பக்தி நெறியைப்பற்றி பேசியிருக்கிறேன், யோகத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். அடையக்கூடிய லட்சியத்தைப்பற்றி பேசியிருக்கிறேன். நீங்களெல்லாம் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட நாடாவை, பலமுறை கேட்டு தெளிவடைய வேண்டும்.
மகான் பட்டினத்தார் பாடல், ஆசான் கணபதிதாசர் பாடல், மகான் தாயுமான சுவாமிகள் பாடல், ஆசான் அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி பேசியுள்ளோம். திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்தும் பேசியிருக்கிறோம். இதெல்லாம் பதிவாகியிருக்கிறது.
இந்த பதிவு நாடாவை கேட்பவர்களெல்லாம் புண்ணியம் பெறுவார்கள், கேட்பவர்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள். இது நேரம் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி வணங்கி முடிக்கிறேன். வணக்கம்.
புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்
உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்
அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்
ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்
உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்
அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்
No comments:
Post a Comment