Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Aug 2012



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன ஆவணி (ஆகஸ்டு - 2012)                                                      விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு …..
2. மகான் கருவூர் தேவர் ஆசி நூல் ….
3. இல்லறத்தாருக்கு ஓர் உபதேசம் - குருநாதர் அருளுரை….
4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர்….

மகான் கருவூரார் ஆசிநூல்:-

      ஓங்குமே குருகடாட்சம் அருள் பலமும்
உயர்ஞானம் சித்திக்கும் அவரவர்க்கும்
இங்கணமே அவரவர் வினை அகல
இல்லம் நோக்கி ஆசானே அனுப்பும் கருவி

இது ஏதுவான பிரம்மவேளை எழுந்து
இல்லம் பூசையில் நூல் பத்தியை
ஆதரவாய் உத்திர திசை நோக்கி
அமர்ந்துமே ஆசானை எண்ணி வாசிக்க

வாசிக்க வாசிக்க ஆசானவரின்
வார்த்தைகள் ஞான உபதேசங்கள்
பூஜிக்க பூஜிக்க கிட்டும் பலனை
பூவுலகில் சேர்க்குமே உலக மக்களுக்கு

- மகான் கருவூரார் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
02.08.1998 அன்று அருளிய
அருளுரை

இல்லறத்தாருக்கு ஓர் உபதேசம்

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே,
உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் ஆன்மீகம் பேசி வந்திருக்கிறோம். ஆன்மீகம் என்பது ஆரம்ப காலத்திலே உபதேசம் என்பார்கள். ஆசான் சுப்ரமணியர்தான் ஆன்மீகத்திற்கு ஆரம்பகர்த்தா. ஆசான் சுப்ரமணியர்தான் இந்த ஞான இரகசியத்தை முதன்முதலில் அறிந்தவர்.

ஆசான் சுப்ரமணியர் ஒரு தொண்டனைப் பார்த்ததும், அவன் பல பிறவிகளில் என்ன செய்திருக்கின்றான்? நன்மை செய்திருக்கின்றானா? என்று ஆராய்ந்து பார்த்து அவனது தன்மையை உணர்ந்து கொள்வார். ஆரம்பத்தில் ரோமரிஷிதான் ஆசான் சுப்ரமணியருக்கு ஆதரவு காட்டியிருக்கிறார். என்ன இப்படி பெருமைக்குரிய தத்துவத்தை சொல்கிறார்? ஆகவே இவர் ஞானம் அடைய துணையிருக்க வேண்டுமென ரோமரிஷி ஆசான் சுப்ரமணியருக்கு துணையிருந்திருக்கிறார். ஒரு ஜென்மத்தில் அவருக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார். ரோமரிஷியின் உதவிதான் ஆரம்பத்தில் சுப்ரமணியருக்கு இருந்திருக்கிறது.

முன்ஜென்மத்தில் அவர் நல்லவராக இருந்து, ஆசான் சுப்ரமணியர் தவத்திற்கு உதவி செய்திருக்கிறார். பின்பு அடுத்த ஜென்மத்தில் ரோமரிஷி சித்தி பெற்றிருக்கிறார்.

ஆசான் ஞானபண்டிதர், தான் அறிந்த உண்மையை நேருக்கு நேராக குறிப்பிட்டவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். இப்படி பலபேருக்கு வந்ததுதான் இந்த துறை. பிறகு அதை ஒரு முறைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விஷயத்திற்கு இப்படி கவிகள் அமைக்க வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் பிறகு தத்துவத்தையும் பேசியிருக்கிறார்கள்.

ஆன்மீகம் என்பது ஒன்றே ஒன்றுதான். அது மனிதாபிமானம், ஜீவதயவு அல்லது ஜீவகாருண்யம். அப்ப ஜீவகாருண்யம்தான் ஆன்மீகம். ஜீவகாருண்யம் என்பது உயிர்கள் பால் காட்டும் கருணை. தன் ஆன்மாவை வசப்படுத்த வேண்டுமென்றார் ஆசான் சுப்ரமணியர்.

ஆசான் சுப்ரமணியர் பல ஜென்மங்களில் புண்ணியம் செய்த ஒருவருக்கு ஜீவகாருண்யத்தை போதிப்பார், ஜீவதயவு வேண்டுமென்பார், எல்லா உயிரினங்களையும் தம் உயிர்போல நேசிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

ஆக ஆன்மீகம் என்பதே ஜீவதயவுதான் என்று ஆசான் சுப்ரமணியர் போதித்தார். அந்த ஜீவதயவு இருந்தாலே பல ஆன்மாக்கள் நம்மை வாழ்த்தும் என்றார். இதை திருவள்ளுவர் சொல்வார்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 260.

கொல்லாமலும், புலால் (மாமிசம்) உண்ணாமலும் இருந்தால் எல்லா உயிர்களும் கைகூப்பி தொழுமென்றார். இப்படிப்பட்ட கொள்கையை ஒருவன் கடைப்பிடித்திருந்தால் அவன் நிச்சயம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்திருப்பான். ஒரு உயிரை கொல்லக்கூடாது என்று நினைத்தால் நிச்சயம் அவன் அந்த உயிருக்கு பாதுகாவலனாக இருந்திருக்க வேண்டும்.

சிலர், பிற உயிர்களை கொல்ல மாட்டார்கள், கடையில் விற்கிறான் என்பதால் புலாலை வாங்கி உண்பார்கள். இதனால்தான் கொல்லான் புலாலை மறுத்தானை என்றார் ஆசான் திருவள்ளுவர். ஆக உயிரை கொல்லாமலும், புலாலை உண்ணாமலும் ஜீவதயவோடு வாழவேண்டுமென்று சொன்னார்.


தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 256.

சிலர் நாங்கள் கோழி அறுக்கவில்லை, ஆடு வெட்டவில்லை என்பார்கள். ஆனால் புலாலை விற்பதால் நாங்கள் வாங்குகிறோம் என்பார்கள். இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள். இதை வள்ளுவர் பார்த்தார். நீ வாங்குவதால்தானே அவன் கொலை செய்து புலாலை விற்கிறான். தினற்பொருட்டால் - சாப்பிடுவதற்காக. இப்படி இருக்கும்போது நீ வாங்குவதால்தான் கொலை செய்கிறான். அதற்கு காரணம் நீதான்.

கொல்லான் - உயிர்களை கொலை செய்யமாட்டான். புலால் மறுத்தானைக் கைகூப்பி எல்லாஉயிரும் தொழுமென்றார். எதற்கையா கைகூப்பி எல்லா உயிரும் தொழுமென்று சொன்னார். இந்த கொள்கையுடையவன் நிச்சயமாக ஜீவதயவுள்ளவனாக இருப்பான். ஆகவே ஜீவதயவு இருப்பதனால் எல்லா உயிரும் போற்றுமென்றார். எல்லா உயிர்களும் போற்றுகின்ற அளவிற்கு இவனுடைய செயல்பாடுகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு ஈடு இணை எதுவுமில்லை.

நாளுக்குநாள் பசியாற்றுகிறோம். நான் இன்று முதல் புலால் உணவை உண்ண மாட்டேன். ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கிறான். நற்காரியம் செய்தால் புண்ணியவான் நீடு வாழவேண்டுமென்று சொல்லுவான். தண்ணீர் கொடுக்க போகுமிடத்தில் புண்ணியவான் இப்படி செய்கிறார்கள், சாப்பாடும் தருகிறார்கள், அவன் நீடு வாழட்டும் என்று சொல்லி அவனை வாழ்த்துவார்கள்.

உயிர்களை கொல்ல மாட்டேன் என்பது ஜீவதயவு. ஜீவதயவு உள்ளவர்கள்தான் இந்த கொள்கையை கடைப்பிடிக்க முடியும்.

ஆகவே எல்லா உயிர்களும் அவனை போற்றுகின்றன. எல்லா உயிரும் போற்றுவதால் இந்த ஆன்மாவுக்கு ஆக்கம் கிடைக்கும். இந்த ஆன்மாவுக்கு ஆக்கம் வரும்போது இந்த ஆன்மாவுக்கு ஒரு வல்லமை அல்லது ஆற்றல் உண்டாகிறது.

இப்படி ஒருவனுடைய ஆன்மா ஆக்கம் பெறுவதனாலே ஞானிகளெல்லாம் என்ன செய்வார்கள் என்றால், இவனுடைய வரவுசெலவை பார்ப்பார்கள். இவனுடைய வரவு செலவை பார்க்கும்போது இவன் ஜீவதயவோடு நடந்திருக்கிறான், இவனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று ஞானிகள் நினைப்பார்கள்.

ஆசான் சுப்ரமணியர்தான் ஞானத்துறைக்கு தலைவர். அவர் இவனுடைய வரவுசெலவை பார்ப்பார். எனவே ஆசான் சுப்ரமணியரையோ, ஆசான் அகத்தீசரையோ, ஆசான் அருணகிரிநாதரையோ கூப்பிட்டு ஐயா எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமையா, நான் ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்க வேண்டும். என்னை அறியாமலே நான் ஏதோ தவறு செய்வேனோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது. நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டுமென்று ஆசான் அகத்தீசனையோ நந்தீசனையோ அல்லது ஆசான் சுப்ரமணியரையோ கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து கேட்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து நம்மால் கேட்க முடிகிறதா? எத்தனை பேர் தினமும் இப்படி கேட்கிறார்கள். நாம் தினமும் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறோம். எத்தனை பேரையா தினமும் ஆசான் அகத்தீசனை வணங்கி, ஜென்மத்தை கடைத்தேற்ற நினைக்கிறேன் என்று ஆசானிடம் கேட்கிறார்கள்.

கடன்சுமை இருக்கிறது. மனம் போராட்டத்தில் இருக்கிறது. இந்த புலால் உண்ணும் பழக்கத்தை விட முடியவில்லை, மனைவிக்கு நோய் இருக்கிறது, எனக்கு மன அமைதியில்லை, பிள்ளைகளுக்கு கல்வியில்லை. ஏதாவது பிரச்சனையில் சிக்கி அகப்பட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பிரச்சனைகளையும் ஆசானிடம் சொல்ல வேண்டும். மேலும் இவ்வாறு ஆசான் சுப்ரமணியரிடமும் அகத்தீசரிடமும் கேட்க வேண்டும். எல்லோரும் ஒன்றுதான்.

மனைவிக்கு நோயிருக்கிறது, பிள்ளைகளுக்கு கல்வியில்லை, வயதுக்கு வந்த இரண்டு பெண் திருமணத்திற்கு இருக்கிறது. பையனுக்கு திருமணம் செய்தாக வேண்டும். பெண்ணுக்கு திருமணம் செய்யாமல் பையனுக்கு எப்படி திருமணம் செய்வது? பையனுக்கு வயது முப்பது ஆகிறது. பெண்ணுக்கு இருபத்தைந்து வயதாகிவிட்டது.

முதல் பெண்ணுக்கு திருமணம் செய்தால்தானே இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்யலாம். பிறகு பையனுக்கு திருமணம் செய்ய வேண்டும், போராடிக் கொண்டே இருப்பான்.
பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டுமைய்யா, நியாயம்தான். பிறகு பையனுக்கு திருமணம் செய்ய வேண்டுமைய்யா அதுவும் நியாயம்தான். இப்ப என்ன செய்கிறான் இல்லறத்தான். இப்படி ஒவ்வொருநாளும் இவனுடைய முழுகவனம் செலுத்தி தன் குடும்பத்தில் பிரச்சனையில்லாமல் தன் கடமையை செய்ய நினைக்கின்றான். இதுவும் நியாயம்தான்.

பெண்ணுக்கு திருமணம் செய்வது, பிள்ளைகள் படிப்பு, பையனுக்கு உத்தியோகம் இதெல்லாம் நியாயம்தான்.
ஆனால் இதற்கு முன்னேயும் பலர் தமது கடமையை செய்தவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தாய்தந்தையாக இருந்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்தார்கள், கடமையை செம்மையாக செய்தார்கள். சிலர் இறந்து போகிறார்கள்.

இறக்கும் தறுவாயில் என்னய்யா உனக்கு குறை? என்று கேட்டான். எனக்கு ஒன்றும் குறையில்லை ஐயா. எனக்கு நான்கு பையன், ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். நான்கு பேருக்கும் திருமணம் செய்துவிட்டேன். ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். இப்ப எனக்கு எந்த குறையுமில்லை. நான் அமைதியாக சாகிறேன் என்பான். சரி அமைதியாக இருக்கிறேன், குறையில்லை என்றான்.

இன்னொரு வயதானவனிடம், ஐயா உனக்கு என்ன குறை என்று கேட்டால் ஒரு பெண்ணுக்கு கூட திருமணம் ஆகாமல் இருக்கையா. நான் என்ன செய்யட்டும். நானும் என்னென்னமோ முயற்சித்துப் பார்க்கிறேன். பெண்கள் வயதுக்கு வந்து பத்து வருடம், ஏழு வருடம், எட்டு வருடம் ஆச்சு. வயதிற்கு வந்த எந்த பெண்களுக்கும் திருமணம் செய்ய முடியவில்லை. பையனுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஒன்றும் கைகூடவில்லை என்கிறான்.

சரி இப்ப என்ன செய்யபோகிறாய்? என்றான். என்ன நினைக்கிறது நான் என்ன செய்ய முடியும்? கடவுள் செயல் என்றான். அப்ப அவன் தன்னுடைய முயற்சியெல்லாம் செய்து பார்த்துவிட்டு, பிறகு ஒரு முடிவு எடுக்கிறான். வேறு வழியில்லை இனி கடவுள் செயல்தான் என்ன செய்வது என்கிறான். இந்த அறிவு ஆரம்பத்திலேயே அவனுக்கு வராது.

இரண்டு பெண் இருக்கு. ஒரு பெண் வயதுக்கு வந்தபிறகு, எனது பெண்ணுக்கு திருமணம் ஆகணும். நீங்கள்தான் அருள் செய்யணும் என்று ஆசான் சுப்ரமணியரிடம் கேட்டால் அருள் செய்வார்கள். இப்படியில்லாமல் கடைசிவரை இவனது முயற்சியை நம்பி, எல்லா முயற்சியும் எடுத்தாச்சு, கடைசியில் முடியாதபோது இனி கடவுள் செயல் என்கிறான்.

இதற்கு முன்னே கோடான கோடி குடும்பஸ்தர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். இவன் கடமையை செய்ய முடியவில்லை என்று தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் இவனுக்கும், இவன் வாழும் இந்த உலகத்திற்கும் என்ன நன்மை? இவன் தனக்கென்று என்ன தேடிக்கொண்டான்? இவன் தன்னுடைய குடும்ப கடமைகளை முடித்து தனக்கு அமைதி தேடிக்கொண்டான் என்பது ஒருவகையில் பாராட்ட வேண்டியதுதான்.

என் கடமையை முடித்து விட்டேன் என்று எண்ணுவது புண்ணியம்தான். ஆனால் இவனுக்கென்று இவன் என்ன தேடிக்கொண்டான். இவனுக்கென்று ஒன்றும் தேடிக்கொள்ளவில்லை. அமைதியாக சாகிறேன் என்று சொல்கிறானே தவிர, உனக்கென்று என்ன தேடிக்கொண்டாய்? என்பார் ஆசான் சுப்ரமணியர்.

நீ மனிதனாக பிறந்தாய், உனக்கு ஆறறிவு இருக்கிறது. ஆறறிவு உள்ள நீ இவ்வளவு கடமைகளை செய்தாய். ஆனால் உன்னை நீ காப்பாற்றிக் கொண்டாயா? என்றால் இல்லை. அப்படியென்றால் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யக்கூடாதென்று சொல்ல மாட்டேன். உனக்கு என்ன நீ தேடிக்கொண்டாய். உனக்கென்று ஒன்றும் தேடிக்கொள்ளவில்லை, நீ சராசரி மனிதன் போலத்தானே சாகிறாய். உனக்கு கடமையை செய்தேன் என்ற மன நிறைவை தவிர வேறொன்றுமில்லை. சாவதை நீ தடுத்தாயா? சாவதை தடுக்கவில்லை.

ஆனால் ஞானிகளிடம் உபதேசம் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? உலக நடையில் இருப்பார்கள், பிள்ளைகளுக்கு திருமணம் செய்வார்கள். எல்லா வேலையும் பார்ப்பார்கள். கொள்வினை, கொடுப்பினை எல்லாம் செய்வான். ஆனால் தன்னையும் காப்பாற்றிக் கொள்வான். எல்லாம் கேட்பான், பிள்ளைகளுக்கு திருமணம் என்பான், வீடு கட்டிக் கொள்வான், சொந்தம் பந்தம் என்பான், விருந்தை உபசரிப்பான், அண்ணன் தம்பி மாமன் மச்சினன் எல்லோருடனும் இருப்பான், கடைசியில் தன்னையும் காப்பாற்றிக் கொள்வான்.

ஆறறிவு உள்ள மனிதனாக பிறந்தவன், தேடிக்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. இருக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி பயன்படுத்துவது? மனைவி மக்களோடு இருக்கிறான், விருந்தை உபசரிக்கிறான். அன்னதானம் செய்கிறான். நல்ல சிறந்த முயற்சியுள்ளவனாக இருக்கிறான். நல்லவனாக வாழ்கிறான். ஆனால் வல்லவனாகவும் வாழ வேண்டும்.

வல்லவன் எப்படி என்று கேட்டான். எமனை வெல்லும் வல்லமையிருக்க வேண்டும். எமனை வெல்லும் வல்லமை இருந்தால், அவனை வல்லவன் என்று சொல்லுவான். மற்ற கடமைகளையெல்லாம் செம்மையாக செய்தாலும், அவர் நல்லபடியாக பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நல்லபடியாக செய்துவிட்டார். அவர் ஆன்மா சாந்தமானது. அவ்வளவுதானே செய்தார். அவர் நல்லவர்தானே. அந்த குடும்பத்திற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்தாரே தவிர வல்லவனா அவர்?

வல்லவன் யார்? இத்தனை காரியங்களையும் செய்து, தனது கடமைகளையும் செம்மையாக செய்து, ஆன்ம ஜெயம் பெறவேண்டும். அவனே வல்லவன்.
அப்ப ஆன்ம ஜெயம் எது? என்று கேட்டால், அதற்கு தலைவன் ஆசான் ஞானபண்டிதன் சொல்கிறார், உலகத்தில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட புருவமத்தி, சுழிமுனைக்கதவு உண்டு. சுழிமுனைக்கதவில் வாசியை செலுத்தினால் ஆன்ம ஜெயம். அப்ப இவன் அதை செய்ய வேண்டும்.

இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் செலுத்தி விட்டால் அதுவே ஆயிரம்கோடி பிரம்ம பட்டம் என்றான். இப்படி வாசிவசப்பட்டு எவன் பிரம்மபட்டம் பெற்றானோ அவன்தான் வல்லவன். நல்லவனாக பலர் வாழலாம், ஆனால் வல்லவனாக வாழவேண்டும்.

எது வல்லமை? எமனை வெல்லுவதுதான் வல்லமை. ஆசான் சுப்ரமணியர் வாசிவசப்பட்டவர், ஆன்ம ஜெயம் பெற்றவர், ஆன்ம லாபம் அடைந்தவர். ஆரம்ப காலத்திலேயே தலைவன் ஆசான் சுப்ரமணியரால் எமனை வெல்லுவதற்குரிய வல்லமையைப் பற்றி உபதேசிக்கப்பட்டது. அப்ப அவர் என்ன செய்தார்? ஜீவதயவுதான் முதன் முதலில் மேற்கொள்ள வேண்டிய கொள்கை என்று சொன்னார்.

ஜீவதயவு என்பது உயிர்வதை செய்யாமலும், புலால் உண்ணாமலும், பசியாற்றுவித்தல், பிறரிடம் கடுமையாக நடந்து கொள்ளாதிருத்தல் என்று ஆசான் சுப்ரமணியர் சொன்னார். இவற்றையெல்லாம் ஜீவதயவோடு கடைப்பிடித்து தேறியதும், வாசி நடத்திக் கொடுப்பார்கள்.

ஆசான் வாசி நடத்திக் கொடுத்தால்தான் கபம் அறும். வாசி நடத்திக் கொடுத்தால் உடம்பில் உள்ள நச்சுத்தன்மை அற்றுப்போகும். இதை "களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி” என்பார் ஆசான் திருமூலர்.
அப்ப வாசிவசப்பட்டால்தான் களிம்பற்று போகும். இதைத் தவிர, பட்டினி கிடப்பதாலோ, புலால் உணவு மறுப்பதாலோ, சைவஉணவு உண்பதாலோ உடம்பில் உள்ள களிம்பு அற்றுப்போகாது. அப்ப களிம்பு அற்றுப் போவதற்கென்று ஒன்று உண்டு. அது வாசிவசப்பட வேண்டும்.

ஆன்மஜெயம் பெற்றவனுக்குத்தான் களிம்பு அற்றுப்போகும். அப்ப ஞானிகளை தியானம் செய்கிறான். தினசரி பூஜையில் அடியேனுக்கு வாசி நடத்திக் கொடுக்க வேண்டும், அடியேனுக்கு வாசி சித்திக்கணும் என்று கேட்கிறான். இப்படி கேட்டு வரும்போதுதான், ஞானிகள் மனமிரங்கி அருள்செய்வார்கள்.

அப்ப தலைவன் என்ன செய்கிறான்? “விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு” என்பார் ஆசான் திருமூலர். தலைவன் ஆயிரத்தெட்டு மாற்று ஒளி உடம்பை கொண்டவர், உன்னதமான மேல்நிலையில் உள்ளவர். இவனுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசானிடம் இவன் எவ்வளவு இடையூறு இருந்தாலும் கேட்கிறான்.

ஒரு பக்கம் வறுமை, போராட்டம், பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை, மகன் பிரச்சனை, மகள் பிரச்சனை, மருமகன் பிரச்சனை இப்படி எல்லா பிரச்சனைகளும் இருந்தாலும், இவன் ஓரிடத்தில் அமர்ந்து பத்து நிமிடம் தியானம் செய்வான். தியானம் செய்து அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் மனமாசு இல்லாது வாழ வேண்டும். உன் திருவடியைப் பற்றுவதற்கு வாய்ப்பு தர வேண்டுமென்று கேட்கிறான்.

என்னடா! இவ்வளவு பெரிய குடும்பஸ்தன் இத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் பத்து நிமிடம் தியானம் செய்கிறான். எத்தனை பேர் இவ்வாறு தியானம் செய்கிறோம்? எவ்வளவு பிரச்சனைகள்? கடன்சுமை, வாடகை வீட்டில் பிரச்சனை, மகளுக்கு திருமணம் ஆகவில்லை. மகனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆக இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசானை பூஜை செய்கிறவன், இப்பிரச்சனைகளையெல்லாம் பொழுது போக்காக நினைப்பான்.



அவன் எவ்வளவு பெரிய அறிவாளி? சொந்த வீடில்லை, பரவாயில்லை.
பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லையா? சரி ஆசான் திருவருள் துணையிருக்கிறது. நாம் கவலைப்பட்டால் என்ன ஆகப்போகிறது? முன்னே கவலைப்பட்டவன் நிலைமை என்ன? இப்ப இனிமேல் கவலைப்பட போகிறவன் நிலை என்ன? முன்னே கவலைப்பட்டவனாலும் முடியாது. இனிமேல் கவலைப்பட போகின்றவனாலும் முடியாது. அது அவனுடைய வினைப்பயன்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? பெண் குழந்தை பிறக்கும் போதே ஆசானிடம் சொல்லிவிட வேண்டும். பெண் குழந்தை பிறந்திருக்கிறது, நீர்தான் காப்பாற்ற வேண்டும். அதற்கு நீடிய ஆயுள் இருக்க வேண்டும். பிள்ளைக்கு தடையில்லாத திருமணம் நடக்க வேண்டும். அவனுக்கும் (மாப்பிள்ளைக்கும்) நீடிய ஆயுள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிற்கு வந்துவிடுவாள். அவள் இரண்டு மூன்று பிள்ளைகளோடு வீட்டிற்கு வந்து விட்டால் மேலும் பிரச்சனை. ஆக இவையெல்லாம் மனஉளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். இதிலெல்லாம் முடிவாக யாரும் வெற்றிகண்டதில்லை. எந்த இல்லறத்தானும் நான் நிம்மதியாக இருக்கிறேனென்று சொல்லமுடியாது.

ஆனால் ஒருவன் நிம்மதியாக இருப்பான். அவனைக் கேட்டால், "இதெல்லாம் உலக நடை நீ ஏன் போட்டு ரொம்ப ஒலட்டிக்கிற? நம் வினைக்கு வந்தது பிள்ளைகள். அது வினைக்கு அது வந்திருக்கிறது. நாம் செய்ய வேண்டிய கடமையை செய்கிறோம், நடக்கிறது நடக்கட்டும். நாம் தினமும் பத்து நிமிடம் தியானம் செய்வோம்” என்பான்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஆயிரத்தெட்டு மாற்று ஒளி உடம்புடைய ஆசானை அது வேண்டும் இதுவேண்டுமென்று கேட்காமல் நீ என்னை சாரவேண்டும் என்ற ஒரே வார்த்தையை கேட்டான்.

நீ என்னை சார வேண்டும். என்னைச் சார்ந்து என்னை ஒளி உடம்பாக்க வேண்டுமென்று சொல்லிவிட்டான். அப்ப ஒளி உடம்பு ஆக்குவது என்பது சின்ன விஷயமா? பெரியவங்களை தினம் பூஜை செய்யசெய்யதான் சித்திக்கும். பத்து நிமிடம் ஞானிகளை பூஜை செய்ய சொல்வோம். அப்படி பத்து நிமிடம் பூஜை செய்வதற்குள்ளாகவே அவனை பல்வேறு பிரச்சனைகள் போட்டு வாட்டும். பல்வேறு மனஉளைச்சல்களாலே மனச்சுமைகள் தாங்க முடியாமல் இருக்கும்போது, அவன் அந்த நேரத்திலும் ஆசானை கூப்பிட்டு என்னை சாரவேண்டும், என்னை சாரவேண்டும், என்னை சாரவேண்டுமென்கிறான். நீ என்னோடு இரண்டற கலக்க வேண்டுமென்று கேட்கிறான்.

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே.
- திருமந்திரம் - சம்பிரதாயம் - கவி எண் 1781.

"தட்டொக்க மாற்றினன் தன்னையும் என்னையும்” என்றார். அப்ப ஆசானை வணங்க வணங்க வணங்க இந்த நிலைமையெல்லாம் மாறி இரண்டு பேரும் ஒன்றாகி விடுகிறார்கள்.

விண்ணின்று இழிந்து - விண் என்றால் மேல்நிலை. ஞானிகளெல்லாம் மேல்நிலையில் இருக்கிறார்கள். இவனோ பொல்லாத காமதேகத்தில் இருக்கிறான். ஆக அவன் மாறுகிறான். என்ன காரணம்? வினைக்கீடாய் என்று சொல்லிவிட்டார். இதை விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் என்றார். நல்வினை இருந்தால்தான் ஞானிகள் நம் உடம்பில் சார்வார்கள், இல்லையென்றால் சாரமாட்டார்கள்.

பெரியவர்களெல்லாம் மேல்நிலையில் இருப்பவர்கள். நம்முடன் சார்ந்து விடுவார்கள் என்றே நினைக்கக் கூடாது. மெய்யென்றால் உடம்பு. அவரவர் வினைக்கேற்ற மாதிரிதான் அவர்களை சார்வார்கள். நெருக்கம் மிகுதியாக வேண்டும். நெருக்கம் மிகுதி எப்ப வரும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கிடையிலும் ஆசான் அகத்தீசரையோ, நந்தீசரையோ, திருமூலதேவரையோ நாமஜெபம் செய்து நீயும் நானும் ஒன்றாக வேண்டுமென்று கேட்க வேண்டும்.

இதை இரண்டற கலத்தல் என்பார்கள். அப்ப இரண்டற கலத்தல் என்பது வினைக்கீடாய் மெய்கொண்டு என்பது. நம் நல்வினையை மிகுதியாக்கிக் கொள்ள வேண்டும். நல்வினையை எப்படி மிகுதியாக்கி கொள்வது? எப்படியென்றால் நல்வினை பெருக அன்னதானம் செய்ய வேண்டும். அப்ப எப்படி ஐயா அன்னதானம் செய்வது? நல்லது செய்யசெய்ய தலைவனுடைய ஆசி கிடைக்கும்.

அடியேன் தானதர்மம் செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு பொருள் அமைய வேண்டுமென்றான். பொல்லாத வறுமை இருக்கும்போது எப்படி ஐயா நான் தானம் தருமம் செய்வது என்றான்.

அதற்கு ஆசான், நீ செய்! நிச்சயமாக! நாளைக்கு மனைவிமக்களுக்கு வேண்டும், பிற்காலத்துக்கு வேண்டுமென்று நினைக்காதே. அப்படி நினைத்தால் சீதேவி விலகி, மூதேவி வந்துவிடுவாள். நாளைக்கு வேண்டுமென்று உன் சிந்தையில் இருக்கும். இன்றைக்கு இருப்பதை நாலுபேருக்கு செய்து விட்டு போ.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க என்றான். ஆசான் திருவள்ளுவர் பெரிய ஞானியல்லவா? அதனால்தான் அவர் சொன்னார்

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்று அது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 36.

பிறகு அறம் செய்யலாம் என்று நினைக்காதே! ஏனென்றால் வாழ்க்கை நிலையில்லாத வாழ்க்கை. "நிலையில்லாத வாழ்க்கையை பெற்றுள்ள போது நிலையான காரியங்களை செய்து கொள்” என்று சொல்லுவார்.

அற்கா இயல்பிற்று செல்வம் என்பார். இதெல்லாம் சொல்லி தானதர்மம் செய்ய சொல்ல வேண்டும். அப்ப தலைவனைக் கேட்டால், நாளை என்ற பேச்சை அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்பார். இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும். நாலு பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி செய்யசெய்ய வறுமையே வராது.

என்ன காரணமென்றால், தலைவன் கடல் போன்றவன், அமுது போன்றவன், கற்பகவிருட்சம் போன்றவன், அட்சய பாத்திரம், காமதேனு போன்றவன். பெரியவர்கள் அருள் இருப்பதாலே நாளை என்ற பேச்சுக்கே வழியில்லை, வறுமைக்கே வழியில்லை.

இன்றைக்கு இருக்கின்றதை கொண்டு நாளைக்கும் செய். பெரியவர்கள் அருள் இருப்பதாலே நாளைக்கு என்ன செய்வோம் என்ற ஏக்கம் தேவையில்லை, நீ செய். இப்படியெல்லாம் ஞானிகள் ஏன் சொல்கிறார்கள் என்றால், தர்மம் செய்யசெய்ய நிச்சயம் பொருள் கிடைக்கும். இப்படியில்லாவிட்டால் விண்ணின்று இழிந்து எப்படி வருவான்?

நாளைக்கு எப்படி செய்வோம்? என்று நினைத்து பலஹீனப்பட்டவர்கள் வெகுபேர் செத்து போய்விட்டானடா தம்பி! நாளை நமது பிள்ளைகளுக்கு வேண்டுமென்று நினைப்பான். இப்ப நீ செத்து போய்விட்டால் என்னய்யா செய்வாய்? இப்ப உன்னிடம் இரண்டு இலட்சம், நான்கு இலட்சம் இருக்கு. நீ பல்லைக் கடித்துக் கொண்டு காசு சேர்க்கிறாய். உன் நிலைமை என்ன என்று உனக்கே தெரியாது. நீ இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருக்கப் போகிறாய் என்றும் உனக்குத் தெரியாது.

நீ இப்படி பல்லைக் கடித்துக் கொண்டு காசு சேர்த்தால் மட்டும் என்ன ஆகிவிடும். ஆனால் ஞானிகளை வணங்குபவன் என்ன செய்வான்? அவன் விஷயம் தெரிந்தவன். அவன் இருக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வான். மகனுக்கு பதினெட்டு இருபது வயது ஆவதற்குள், அறப்பணிகளை செய்து கொள்வான். என்ன காரணம்? அவன் பெரியவனாகிவிட்டால் அவன் உன்னை பார்த்து கேட்பான். ஆமாம் நீங்கள் பெரிய தர்ம பிரபு! ஏனய்யா எங்களை பெத்த? நாங்க இருக்கிறோமில்ல. நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு தர்மம் செய்தால் எங்கள் நிலைமை என்ன என்று கேட்பான்.

ஆக இப்படி மகன் கேட்பதற்கு முன்பே, தர்மம் செய்துகொள்ள வேண்டும். பெண் பிள்ளை இருந்தால் இப்படி கேட்காது. ஏன்னா அது தெய்வீகமானது. பையன் கேட்டுவிடுவான். பெண்பிள்ளைகளில் சிலபேர் கேட்பார்கள். அப்படி கேட்பாங்களா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.

ஆக நீ பையன்கள் விழிப்படைவதற்கு முன்பே அல்லது கேள்வி கேட்பதற்கு முன்பே நீ அறப்பணி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீ ஆன்ம ஜெயம் பெற வேண்டும். உன்னை நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அன்னதானம் செய்வதுதான்.

உன்னிடம் இரண்டு அல்லது மூன்று இலட்சம் இருக்கும். அது உன் கருமாதிக்கு கூட ஆகுமல்லவா என்று நீ நினைக்கலாம். அப்படியெல்லாம் நினைத்து ஏமாந்து விடாதே என்று உனக்கு யாரையா சொல்லுவான். விஷயம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்று அது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 36.

நீ நலியும்போது நீ செய்த தர்மம் உனக்கு துணையாக இருக்குமென்று சொன்னவர் ஆசான் வள்ளுவபெருமான். நீ ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக இப்படி துணிச்சலாக சொல்கிறார். ஏமாந்து போகாதே நீ ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்றால் இந்த கொள்கையை கடைப்பிடித்துக் கொள். செல்வம் வரும்போதே அறப்பணிகளை செய்துகொள்.

என்ன காரணமென்றால், நீ எதை செய்ய வேண்டுமென்று திட்டம் போடுகின்றாயோ அதை செய்ய முடியாமல் அல்லது நடத்த முடியாமல் கடைசியில் நீ இறந்து போய்விடுவாய் என்பது உனக்கு தெரியாது. இது ஒரு உபதேசம் உனக்கு.

நிலையில்லாததை பெற்றிருக்கிறாய். நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறாய். நிலையான காரியத்தை செய்துகொள் என்பார் ஆசான் வள்ளுவபெருமான். அவர் ஞானி. அவர் சொன்னதுதான் உபதேசம். அப்ப நாங்கள் என்ன செய்வது? மனைவிமக்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இருக்கட்டுமய்யா. நான் ஒன்றும் குறை சொல்லவில்லை. நீ தர்மம் செய்வதால் செல்வம் பெருகுமே தவிர குறையாது. இப்படி சொன்னது யார்? ஆசான் திருமூலர்.

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.
- மகான் திருமூலர் - சிவபூசை - கவி எண் 1828.

இப்ப நம்மிடமுள்ள செல்வத்தை விட்டுவிட்டால் மீண்டும் பெற முடியுமோ என்ற ஏக்கம் வந்தால் அது அறியாமை என்று சொல்வார் ஆசான் திருமூலர். இது முற்றுப்பெற்ற முனிவர்கள் சொன்ன உபதேசம். இது அறியாமையை நீக்கும். முற்றுப்பெற்ற முனிவர்கள் மனைவிமக்களுக்கு செய்யக்கூடாது என்று சொல்வார்களா? நிச்சயம் மனைவி மக்களுக்கு செய்யலாம் என்பார்கள்.

நீ உன்னிடமுள்ள மூன்று இலட்சத்தை பெரிது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆசான் ஞானபண்டிதனோ, திருமூலதேவரோ, போகமகாரிஷியோ நினைத்தால் செல்வத்தை அள்ளிக் கொட்டிவிடுவார்கள். மூன்று இலட்சம் அவர்களுக்கு பெரியதா? மூன்று பைசா மாதிரி.

ஞானிகளின் ஆசியைப் பெற்றவன் ஏன்? ஒன்றை செய்து ஒன்பதை பெற மாட்டான்? ஒன்றை செய்து ஒன்பதை பெற வேண்டுமல்லவா. முதுபெரும் ஞானிகளின் உபதேசம் இது.
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
புரியும் என்பது இறந்த காலம். புரியா நிற்குமென்றால் தொடர்ந்து செய்யுமென்று அர்த்தம். ஆக அடிப்படை ஒரு மனிதன் கடவுளாக வேண்டும். இதற்கு உபதேசம் என்ன என்று கேட்டான். இருக்கும்போதே நல்ல காரியம் செய் என்றான்.

பொருள் மீது இருக்கும் பற்றை விட்டுவிடு. அப்படி சொல்லும்போது பொருளைப் பயன்படுத்தக் கூடாதென்று நினைக்கக் கூடாது. அப்படியல்ல. அவர்களெல்லாம் கோடீஸ்வரராக இருப்பார்கள். மன்னனாகவும் இருப்பார்கள். ஜனகர், கௌசிக மகரிஷி இவர்களெல்லாம் சக்கரவர்த்தி. அதிவீரராமபாண்டியன் மன்னன். இவர்களுக்கெல்லாம் செல்வம் குவியும். ஒன்று செய்தால் ஒன்பது கிடைக்கும். ஆக அப்படியே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
- திருக்குறள் - வினைத்தூய்மை - குறள் எண் 659.

அறம் செய்தால் ஒன்றுக்கு ஒன்பது கிடைக்கும். அப்படியே இல்லாவிட்டால் “இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை” பின்னால் நமக்கு துணையாக இருக்கும். செல்வம் பெருகுமே தவிர குறையாது.

மேலும் புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு என்பார் மகான் திருமூலர். இதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. பூவுண்டு நீருண்டு என்றால் பூமி வளமும், தேவையான நீர் வளமும் இருக்கும் என்று அர்த்தம். அடுத்து பூநீர் உண்டு என்று அர்த்தம். இது மிகப்பெரிய அர்த்தம் உடையது. பூநீர் என்பது முப்பு என்று அர்த்தம். இதெல்லாம் பரிபாஷையாகும்.
அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் என்றார். ஆக புண்ணியம் செய்கின்ற மக்களுக்கு செல்வம் பெருகத்தான் செய்யும். தலைவனுடைய ஆசியையும் பெறுகிறான். ஏனய்யா புண்ணியம் செய்கிறாய்? என்று கேட்டான். அடியேன் ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமல்லவா? அதற்கு புண்ணியம் செய்கிறேன் என்றான்.

ஓஹோ! ஜென்மத்தை கடைத்தேற்றுவதற்கு புண்ணியம் செய்ய வேண்டுமா என்றான். ஆமாம், புண்ணியம் செய்ய வேண்டும். ஆன்ம ஜெயம் பெறுவதற்கு புண்ணியம் வேண்டும்.

ஆன்மஜெயம் பெற வேண்டுமென்பதற்காக புண்ணியம் செய்கிறான். ஆன்மா என்றால் மூச்சுக்காற்று மூச்சுக்காற்றை வசப்படுத்துவதற்காக நான் புண்ணியம் செய்கிறேன் என்றான். அவர்கள் ஏன் புண்ணியம் செய்கிறார்கள் என்றால், செல்வநிலை பெருகுவதற்காக புண்ணியம் செய்கிறான். நீ எதற்கு புண்ணியம் செய்கிறாய்? நீ உபதேசம் பெற்றவன். நீ ஏன் புண்ணியம் செய்கிறாய்? அடியேன் ஆன்மஜெயம் பெறவேண்டும். ஆசான் என்னுடன் கலக்க வேண்டும். அதற்காக புண்ணியம் செய்கிறேன் என்றான்.
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு என்பார். மேல்நிலையில் இருக்கக்கூடிய தலைவன் என்னை சாரவேண்டும். என்னுடம்போடு கலக்க வேண்டும்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
- திருமந்திரம் - சமாதிக்கிரியை - கவிஎண் 1913.

தலைவன் என்னோடு சார வேண்டும் என்பதற்காக புண்ணியம் செய்கிறேன், பூஜை செய்தேன், சிறப்பறிவு வந்தது. உலகம் அநித்தியமானது என்ற சிறப்பறிவு வந்தது. இதை,

காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்து போகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகை நாதர் பொற்பதம் அழியாதென்று
வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.
- மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 3.

ஆக உலகம் அநித்தியமானது என்று அறியக்கூடிய அறிவுதான் சிறப்பறிவு. உலகமக்களோடு இருந்து கொண்டிருக்கிறான். இவ்வுலகம் அழியும். இதற்கு முன்னே இருந்த பிள்ளைகளும் அழிந்துவிட்டன. இனிமேல் உள்ள பிள்ளைகளும் அழியும். நாமும் அழிவோம். எல்லாமும் அழியும். நம்மால் கட்டப்பட்ட வீடும் அழியும். எனவே நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி நினைப்பதுதான் சிறப்பறிவு. இந்த எண்ணம் வருவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆக இப்படிப்பட்ட சிறப்பறிவை பெறுகிறான்.
சிறப்பறிவு எது?
நிலையில்லாததை நிலையில்லாதது என்று நினைக்க வேண்டும். இதுதான் சிறப்பறிவு. ஞானிகளை பூஜை செய்தால் சிறப்பறிவு வரும்.
நிலையில்லாததை நிலையில்லை என்று நினைப்பவன்தான் சிறப்பறிவு உள்ளவன், அவன்தான் வல்லவன்.
நிலையில்லாததை நிலையென்று நினைப்பவன் வல்லவன் அல்ல. அவன் நல்லவனாய் இருக்கலாம். அது புல்லறிவு ஆகுமென்பார் ஆசான் திருவள்ளுவர்.

நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 331.

ஆக நிலையில்லாத ஒன்றை நிலையான தென்று கருதுபவன் புல்லறிவாளன், என்று நல்லறிவுள்ள ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதுதான் உபதேசம். நிலையில்லாத ஒன்றை நிலையென்று நினைப்பவன் புல்லறிவாளன் என்பார்.

ஏனய்யா! ஒரு சக்கரவர்த்தியைப் பார்த்து புல்லறிவாளன் என்று சொல்கிறாய்? நான் அப்படிதான் சொல்வேன். ஆறறிவு உள்ளவனுக்கு என்ன யோக்கிதை? ஆறறிவு உள்ளவன் எப்படி இருக்க வேண்டும்? உங்களை புல்லறிவாளன் என்று சொல்கிறேன் என்பார் ஆசான் திருவள்ளுவர்.
என்னய்யா? பெரிய கவிஞன், பேச்சாளன், எழுத்தாளன் இப்படிப்பட்ட அவனைப் பார்த்து புல்லறிவாளன் என்கிறாய். இங்கு புல்லறிவு என்பது சிற்றறிவு. அவன் நிலையில்லாததை நிலையென்று எண்ணுகிறான். அதனால் அப்படி சொல்கிறேன் என்பார்.
ஆக இதுதான் அடிப்படை உபதேசம். நிலையில்லாததை நிலையில்லை என்று எண்ணுகின்ற அறிவு இருந்தால்தான், ஆன்மீகவாதிகள் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

சரி! தலைவன் திருவடியை பற்றுகின்றோம். நான் ஆன்மீகவாதியாக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு சாத்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாத்திரம் என்பது உடம்பு. உடம்பைதான் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடம்பை பாதுகாத்துக் கொள்ள கற்றுக் கொண்டவன் கண்டிப்பாக உயிரையும் பாதுகாத்துக் கொள்வான். இதுதான் மர்மம். அப்ப உடம்புக்கு நோய் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

உடம்புக்கு நோய் வராமல் காப்பாற்றிக் கொள்ள கற்றுக்கொண்டவன் உயிரை காப்பாற்றிக் கொள்வான் என்பார். இந்த சங்கத்தினுடைய கொள்கையே உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
உடம்பை காப்பாற்றிக் கொள்ள கற்றுக்கொண்டவன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
- திருமந்திரம் - சரீர சித்தி உபாயம் - கவி எண் 725.

ஓம்புதல் - போற்றுதல், பாதுகாத்தல் என்று அர்த்தம். ஆக இப்படியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஆசான் திருமூலர் சொல்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
- திருமந்திரம் - சிவபூசை - கவி எண் 1823.

ஆக முதலில் உடம்பை காப்பாற்றிக் கொள்கிறான். அடுத்து தனக்கு எதிரியாகிய கபத்தை அறுத்து விடுகிறான்.

வாய்க்க வாய்க்க வழலையும் அற்றது
சாய்க்க சாய்க்க சரிந்தது கோழையும்.....

அந்திம காலத்தில் உடம்பில் கபம் கட்டும். ஆனால் யோகிகள் மட்டும் அதை அறுத்தே விடுவார்கள். எனவே அவர்கள், உடம்பை காப்பாற்ற கற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள். அந்திம காலத்தில்தானே கபம் கட்டும். அந்திம காலத்தில் கபத்தை கட்டவிடாமல், அதை இப்பவே அறுத்துவிட்டால்? யோகிகள் கபத்தை இளமையிலேயே அறுத்து விடுவார்கள். அது யோகத்தினுடைய முறையாகும்.

உடம்பைப் பற்றி அறிய அறிய எது எதிரி? என்று அறியலாம். அந்திம காலத்தில் கபம் கட்டும் என்பான். எங்கே கட்டும்? இவன்தான் முதலிலேயே உடைத்தெறிந்துவிட்டான். அப்ப உடம்பில் இப்படிப்பட்ட பலஹீனங்கள் இருக்கிறது.
உடம்பை காப்பாற்றணும். எந்த உடம்பை காப்பாற்ற வேண்டும். தூல தேகத்தை காப்பாற்றுவதா? சூட்சும தேகத்தை காப்பாற்றுவதா என்றான்.

நாம் காணுகின்ற உடம்பு தூலதேகம். தூலம் என்றால் பார்க்கக்கூடியது காணக்கூடியது என்று அர்த்தம். சூட்சுமதேகம் என்றால் அறிவுக்கு புலப்படக்கூடிய தேகம். அடுத்து காரணதேகம் என்பது கத்தி குறுக்கே ஓடும். ஆனால் உடம்பு அறுபடாது. அது நிற்க முடியாத ஜோதி உடம்பு.

ஞானிகள் காரண உடம்பை பெற்றவர்கள். எனவே அவர்களை காரண குரு என்று சொல்லுவார்கள். காரண தேகம் பெறுவதற்காகத்தான் இந்த தூல உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பெறுவதற்கு புலால் உணவை மறுக்க வேண்டும். சுத்த சைவ உணவை அளவோடு உண்ண வேண்டுமென்பார்கள் ஞானிகள்.

நாம் அரைக்கீரையை சமைப்பதற்காக கிள்ளுவோம். அது மீண்டும் மறுநாள் முளைத்துவிடும். மரத்தில் ஒரு கிளையை வெட்டுவோம். மறுபடியும் வளர்ந்துவிடும். இவையெல்லாம் நகமும் முடியும் போன்றது. நகத்தை முடியை வெட்டினால் உயிருக்கு ஆபத்தில்லை. அதுபோல அரைக்கீரையும் முளைக்கீரையும் கிள்ளினால், மரக்கிளையை வெட்டினால் இவையெல்லாம் வளர்ந்துவிடும். ஆனால் ஆட்டையோ அதன் காலையோ வெட்டினால், வெட்டினதுதான்.

எனவே சைவ உணவை மேற்கொண்டு வந்தால் அது ஆன்மாவுக்கு ஆக்கம் தரும். தினம்தினம் தியானம் செய்ய வேண்டும். எதற்கு தியானம் செய்ய வேண்டும். தியானத்தின் நோக்கமே இனி பிறக்கக்கூடாதென்பதுதான். சிலபேர் எனக்கு பிறவியேயில்லை என்பார்கள். அவர்களுக்கு பிறவி உண்டா இல்லையா என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். உடம்பை காப்பாற்றிக் கொண்டவனால்தான் பிறவியை ஒழிக்க முடியும். உடம்பில் உள்ள தேகமாசை நீக்குவது சின்ன விஷயமல்ல. ஞானிகளின் ஆசியில்லாமல் முடியாது.

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
- ஔவைக்குறள் - அதிகாரம் 2 – உடம்பின் பயன்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
- திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 352.

மேலும் இருள்சேர் இருவினை சேராது என்பார் ஆசான் திருவள்ளுவர். ஆக ஞானிகள் இந்த உடம்பை இருளானது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த உடம்பு பல்வேறு உயிர்களைக் கொன்று அவைகளின் மாமிசத்தை சாப்பிட்ட உடம்பு. அவ்வாறு உண்டவனை நரகம் பற்றிக் கொண்டு விடாது என்றார்.

நான் இன்று முதல் புலாலை உண்ண மாட்டேன். ஏன் என்றார். நீ அடைந்த பேரின்பத்தை நான் அடைவதற்காக புலால் உணவை இன்று முதல் மறுக்கிறேன். ஆனால் என் சிந்தையில் புலால் உணவை உண்ணும் நாட்டம் இருக்கிறது. அது என் வினைப்பயன். சுவையை நாடுகிறேன். அந்த நாட்டத்திலிருந்து விடுபட வேண்டும். அந்த நாட்டத்திலிருந்து விடுபடுவதற்காக புலால் உணவை மறுக்கிறேன்.

இப்படியெல்லாம் ஞானிகளை தினமும் கேட்டு ஆசிபெற வேண்டும். ஞானிகளை தினமும் பூஜை செய்ய வேண்டும். தலைவனை தினமும் பூஜை செய்யசெய்ய அவர்கள் தானத்தையும் தியானத்தையும் பற்றி சொல்வார்கள். மகான் இராமலிங்க சுவாமிகள் அன்னதானத்தைப் பற்றி சொல்லியுள்ளார். மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

இப்ப உங்களுக்கு ஒரு நல்ல உபாயம் சொல்கிறேன். அன்னதானம் செய்ய வேண்டாம். பூஜை செய்ய வேண்டாம். நீ கடவுளாகலாம். எப்படி ஐயா? பூஜை செய்யாமலும் அன்னதானம் செய்யாமலும் கடவுளாகலாம். முன்பு பூஜையும் செய்ய சொன்னீங்க, அன்னதானமும் செய்ய சொன்னீங்க. இப்ப ஏனய்யா எங்களை மட்டும் பூஜையும் வேண்டாம், அன்னதானமும் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள். கடவுளாகலாம் என்கிறீர்கள்.

வேறு ஒன்றும் வேண்டாம். ஓங்காரக்குடிலில் நடக்கும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தால் போதும். ஞானிகள், தானே வந்து விடுவார்கள். ஓங்காரக்குடில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு தொண்டு செய்தாலே போதும். இதை தொண்டு செய்தால் கண்டு கொள்ளும் சித்தனைத்தும் என்பார்கள்.

நிலையில்லாததை நிலையென்று நினைப்பவன் புல்லறிவாளன். இதை ஆசான் திருவள்ளுவர் என்ற நல்லவர் சொல்லியிருக்கிறார். இதான் உபதேசம். இதைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை காப்பாற்றிக் கொண்டோம். நீங்கள் என்னமோ என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் ஆன்ம ஜெயம் பெற்றவர்கள். ஆன்மாவை இலயப்படுத்தியவர்கள். ஆன்மலயம் பெற்றவன் நான். வாசிவசப்பட்டாலும் எங்கள் காரியத்தை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இங்கே இருக்கிற தொண்டர்கள் தொண்டு செய்கிறார்கள். ஆசான் ஞானபண்டிதன் ஆசியிருக்கு. ஆசான் அகத்தீசன் ஆசியிருக்கு. தொடர்ந்து தொண்டு செய்து வருகிறார்கள். எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொண்டோம். அதில் நாங்கள் வல்லவர்கள். சமுதாயத்தில் நல்லவர்களாகவும் இருக்கிறோம்.

எங்களுக்கு வருகின்ற பொருளாதாரத்தையெல்லாம் நாட்டு மக்களுக்கு வீசி எறிகிறோம். உலக மக்கள் நல்லவன் புண்ணியவான் என்று சொல்கிறார்கள். நல்லவனாகவும் இருக்கிறோம் வல்லவனாகவும் இருக்கிறோம். இப்ப எதற்கையா வந்திருக்கிறீர்கள் என்றான். ஆன்ம ஜெயம் பெற வேண்டும். ஆன்ம ஜெயம் என்பது மரணமில்லா பெருவாழ்வு. ஆக ஆன்மஜெயத்தை பெறுவதற்காகத்தான் உபதேசிக்கிறோம். இதை ஆசான் கணபதிதாசர் சொல்வார்

காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்து போகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகைநாதர் பொற்பதம் அழியா தென்று
வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.
- மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 3.

நிலையில்லாததை நிலையில்லாதது என்று அறிவது பேரறிவு.
நிலையில்லாததை நிலையென்று அறிவது புல்லறிவு.



புல்லறிவு என்றால் சிற்றறிவு என்று அர்த்தம். புன்மை - சிறுமை. சிறுமையான அறிவு என்று அர்த்தம். ஒரு மனிதன் தேறுவதற்குரிய முறையை நாங்கள் சொல்லிக்கொண்டு வருகிறோம். நாங்கள் அந்த முறையை கற்றுக்கொண்டோம். நீங்களும் அறிந்து கொள்வதற்குதான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

உலக மக்களோடு இருக்கிறோம், இருப்போம். தாய்தந்தையோடு இருக்கலாம். அண்ணன் தம்பியோடு இருக்கலாம். உலக நடையிலிருந்து எல்லோரிடமும் அன்பாக பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மீன் பிடிப்பவன் தூண்டில் போடும்போது அதில் உள்ள மிதப்பிலேயே கண் வைத்திருப்பான். நாங்களும் இலட்சியத்தை அடையும் வரையில் உலகமக்களோடு இருந்து கொண்டிருப்போம்.
இதுபோன்ற உண்மைகளை சொல்ல வேண்டும். அப்படி சொன்னால்தான் அது உபதேசமாக இருக்கும். இல்லையென்றால் அது உபதேசமாக இருக்க முடியாது.

ஞானிகள் மனமிரங்கி அருள் செய்ய வேண்டும். மேலான இடத்திலிருந்து இறங்க வேண்டும். விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொள்ள வேண்டுமென்பார். ஞானிகள் எப்போது அருள் செய்வார்கள்? ஞானிகள் நம்மோடு சார வேண்டும்.

ஐயா! இப்படிப்பட்ட விஷயத்தை இப்போதுதான் எனது காதால் கேட்கிறேன். ஆனால் என்னால் இதை கடைப்பிடிக்க முடியவில்லை. அப்படி முடியவில்லை என்றால் அது உன் வினைப்பயன் என்போம். நாங்கள் முற்றுப்பெற்றவன். நீ ஏதோ லேசாக நினைத்துவிடாதே! முற்றுப்பெற்றவன் பேசிக் கொண்டிருக்கிறேன். முற்றுப்பெற்றவன் சொல்கிறேன். நிலையில்லாததை நிலையில்லையென்று நீ நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்துக்களை உலக மக்களிடம் சொல்லலாமா? சொல்லக்கூடாது. நீ உன் மனதில் வைத்துக் கொள். மனதில் வைத்துக் கொண்டே கடமையை செய்து கொண்டு வா. ஆக இப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். நிலையில்லாத உலகத்தில் நீ இருந்து கொண்டிருக்கிறாய். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்.

நல்ல மனைவி உனக்கு கிடைத்திருக்கிறாள். நாலு பேரை கூப்பிட்டு வருகிறேன் சாப்பாடு போடு என்றால், கூப்பிட்டு வாயா! நான் தடையில்லாமல் சாப்பாடு போடுகிறேன் என்பாள். இப்படி சொல்பவள் நல்ல மனைவி. அவளால் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இன்னும் சிலரிடம் என்னை நோக்கி சில விருந்தினர்கள் வருகிறார்கள். என் பழைய காலத்து நட்பு. அவர்களுக்கு நீ சாப்பாடு போட வேண்டும். நமக்குள் ஏதேனும் கோபம் இருந்தாலும் என்னை நோக்கி வருபவன் மனம் மகிழும்படியாக உபசரித்து உணவளிக்க வேண்டும். இப்படி செய்தால் அவன் என்னை வாழ்த்துவான். அந்த வாழ்த்து உனக்கும் துணையாக இருக்கும். ஏனென்றால் நல்ல விருந்தினர்களாக இருப்பவர்கள்தான் சான்றோர்கள்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
- திருக்குறள் - விருந்தோம்பல் - குறள் எண் 86.

இப்படி விருந்தினர்கள் மனம் மகிழும்படி உபசரித்து நடப்பவள் நல்ல மனைவி. அதை விடுத்து என்னய்யா! வடித்துவடித்து போட்டுக்கிட்டு இருக்கேன். யார் யாரோ வந்து சாப்பிட்டு போவாங்க. அவங்களுக்கெல்லாம் வடித்து போடணுமா? இப்படி சொன்னால் அவள் நல்ல மனைவியா? ஐயோ! இது பாவமான செயல். இப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். நம் சங்கத்தை சார்ந்தவர்கள் கண்டிப்பாக சொல்ல மாட்டார்கள். வரட்டும் ஐயா! இருப்பதை ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடலாமென்று சொல்வார்கள். அப்படி விருந்தை போற்றுபவர்களுக்கு வறுமை வருமோ? வராது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?
- திருக்குறள் - விருந்தோம்பல் - குறள் எண் 85.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
- திருக்குறள் - விருந்தோம்பல் - குறள் எண் 83.

வருவிருந்து வைகலும் ஓம்புவான். ஓம்புதல் - போற்றுதல். வைகலும் - தினந்தினமும். தினந்தினம் விருந்தை போற்றுபவனுக்கு வறுமை வருமோ? பருவந்து பாழ்படுதல் இன்று என்றார். வறுமை வரவே வராது. விருந்தை போற்ற வேண்டும். அதற்கு தடை சொல்லாத மனைவி நல்ல மனைவிதான்.

அம்மா! நான் ஒரு பத்து நிமிடம் தியானம் செய்ய போகிறேன். பிள்ளைகளை கொஞ்சம் அமைதிப்படுத்து என்பான். அப்படியே செய்கிறேன் ஐயா என்பாள். நீங்கள் கடவுளை அடையும் பொழுது எங்களுக்கும் அதில் நன்மை இருக்கிறது. ஏனென்றால் நீர் எனது கணவன். நீர் ஆசான் தயவை பெற்றும் மகான் புஜண்டமகரிஷி, மகான் போகமகாரிஷி, மகான் காசிபமகரிஷி இவர்களின் ஆசியை பெறுகின்ற உங்களால் எங்களுக்கும் நன்மை நடக்கும். ஆகவே இப்போதே தியானம் செய்யுங்கள். உங்களுக்கு துணை செய்கிறேன் என்று சொன்னால் அவள் நல்ல மனைவிதான்.

சரி! இன்றைக்கு நாலு பக்கா அரிசியில் இட்லி சுடு. இட்லி செய்தால் இங்கே கொடுத்தால் பிரச்சனை வரும். ஏழைஎளிய மக்களுக்கு வெளியே சென்று போடுவோம். எல்லாவற்றையும் பொட்டலமாக கட்டு. அப்படியே செய்தாள். கணவன் மனைவியும் வெளியே சென்று ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்கள். இப்படி செய்பவள் நல்ல மனைவி.

நாளைக்கு பிள்ளை குட்டி இருக்கே என்றால், இந்த புண்ணியமே போதும். நீ சேகரிக்கும் நகை மற்ற பொருட்களெல்லாம் கண்டிப்பாக தடைபட்டு போனாலும் போகலாம். ஆனால் இந்த புண்ணியம் பிள்ளைகளுக்கு நல்லபடி திருமணம் செய்ய உதவியாக இருக்கும்.

ஆகவே நான் மேற்கொள்ளும் அறப்பணிக்கு தொண்டு செய்ய வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். நீதான் இந்த இட்லியை தயாரிக்க வேண்டும். நீதான் சட்னி தயாரிக்க வேண்டும். அதை நன்கு சுவையாக இருக்கிறதா என சாப்பிட்டு பார்க்க வேண்டும். பிறகு நீயும் நானும்தான் ஏழைகளுக்கு கொடுக்க போகிறோம். இதெல்லாம் எதற்கு? பிள்ளைகளுக்கு நல்லபடி திருமணம் ஆக வேண்டுமென்பதற்காகத்தான் உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஆக அந்த அம்மா காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு நல்லபடியாக இட்லி சுட்டு பக்குவமாக வைத்திருக்கிறது. இவர்கள் குடும்பத்தில் உள்ள நாலு பேர் ஒன்று சேருகிறார்கள். குடும்பத்தோடு சென்று பத்து ஏழைகளுக்கு கொடுக்கிறான். இதனால் புண்ணியம் பெருகுகிறது.

ஆகவே புண்ணியம் பெருகுகிறது, அது திருமண தடையை நீக்குகிறது. புண்ணியம் பெருகுகிறது, வறுமை உடைகிறது. புண்ணியம் பெருகுகிறது, நல்ல பண்புள்ள வரன் கிடைக்கிறது. ஆக புண்ணியம் செய்யசெய்ய பிள்ளைகளுக்கு நல்ல பாதுகாப்பு வருமென்ற நினைப்பு வந்தால் சிறப்பறிவு வந்தது என்று அர்த்தம். அப்படிப்பட்ட நினைவு வருவதற்கு நாங்கள் உபதேசிக்க வேண்டும்.

இப்ப உனக்கு பிள்ளைகள் இருக்கு. அதுக்கு என்ன செய்ய போகிறாய்? அந்த பிள்ளைக்கு பதினைந்து பவுன், இந்த பிள்ளைக்கு பதினைந்து பவுன் வைத்திருக்கிறேன் என்றான். அவனைப் பார்த்து ஆசான் திருவள்ளுவர் இவன் புல்லறிவாளன் என்றார். மற்றவர்களெல்லாம் அப்படி இருக்கலாம். ஆனால் என்னை ஏன் புல்லறிவாளன் என்றார். நீ திருக்குறள் படித்திருக்கிறாய். திருமந்திரம் படித்திருக்கிறாய். உன்னைப் பார்த்துதான் புல்லறிவாளன் என்று ஆசான் திருவள்ளுவர் சொன்னார். பொருள் சேர்க்கக் கூடாதென்று ஆசான் திருவள்ளுவர் சொல்ல மாட்டார். பொருள் சேர்க்கும்போதே புண்ணியத்தையும் சேகரித்துக் கொள் என்பார்.

இந்த புண்ணியம்தான் உன் மகனுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும். இந்த புண்ணியம்தான் கடன்சுமையிலிருந்து நீ விடுபடுவதற்கு காரணமாய் இருக்கும். இந்த புண்ணியம்தான் சிறப்பறிவு தருவதற்கு காரணமாக இருக்குமென்று அல்லவா நினைக்க வேண்டும். ஆக புண்ணியம் செய்த மக்களுக்கு நிச்சயம் தடையிருக்காது.

புண்ணியம் செய்கிறவன் பிள்ளைகளுக்கு திருமணமாகாமல் இருக்குமோ? விட்டுவிடுவாரா ஆசான்? புண்ணியமும் செய்கிறான், பூஜையும் செய்கிறான். யாரை நோக்கி பூஜை செய்கிறான். செத்தவனையா பூஜை செய்கிறான். நம் அன்பர்கள் செத்தவனை கைகூப்ப மாட்டார்கள். நம் தொண்டர்கள் கைகூப்பினால் அவர்கள் முதுபெரும் ஞானியாக இருப்பார்கள். இதுதான் உபதேசம். ஞானிகள்

நம்மைக் காப்பாற்றக் கூடியவர்கள். ஆன்மஜெயம் பெற்று வெற்றி பெற்றவர்கள். ஆயிரத்தெட்டு மாற்று ஒளி உடம்பை பெற்றவர்கள். நீ இப்படிப்பட்டவர்களை பூஜை செய்து ஆசி பெற்றுக்கொள் என்பதுதான் உபதேசம்.

இப்படிப்பட்ட தலைவனை அறிமுகப்படுத்துவது உபதேசம். இப்படி பேசுவதும் உபதேசம். ஆகவே இப்படியெல்லாம் சொல்லி ஆசானை சுட்டிக்காட்டுகிறோம். ஆக புண்ணியம் செய்தால் எதுவும் தடைபடாது. புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு என்பார். ஆக இப்படிப்பட்ட புண்ணியங்கள் செய்வதற்கு துணையிருந்தால் அவள் நல்ல மனைவிதான்.

இப்படி துணையில்லாமல், நிலையில்லாததை நிலையென்று நம்பி அதனால் கணவனை புண்படுத்தி பேசுபவள் நல்ல மனைவியாக இருக்க முடியாது. ஏதோ இருக்கலாம். அது எனக்கு தெரியாது. குடும்பத் தலைவன் மேற்கொள்கின்ற அறப்பணிகளுக்கு துணையாக இருக்கின்ற மனைவி ஒருவனுக்கு அமைந்தால் அவள் தெய்வம்தான்.

கணவன் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு துணையாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் நிச்சயம் அவள் வெற்றி பெறுவாள். ஆக இப்படிப்பட்ட துணையில்லை என்றால் அவன் என்ன செய்ய வேண்டும்? தன்னுடைய வினையென்று நினைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்? அதற்காக மனைவியை கொடுமை செய்ய முடியுமா? மனைவியும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கிறாள். சராசரி பெண்களுடைய அறிவுதான் இருக்கும்.

நீ எதற்கும் கவலைப்படாதே ஐயா! நீ அறப்பணிகளை செய். நான் துணையாக இருக்கிறேன். இப்படி சொல்வதற்கு எங்களின் உபதேசத்தை கேட்டிருக்க வேண்டும். எங்களின் உபதேசத்தை கேட்டிருந்தால் நிச்சயமாக அவள் வினையாக உனக்கு இருக்க மாட்டாள், நிச்சயம் துணையாக இருப்பாள். அவளும் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள விரும்புவாள்.

தக்க கணவன் கிடைத்து விட்டான். பொருள் வெறி அற்றவன். பொருள் வெறி இல்லாதவன் நமக்கு துணையாக இருக்கிறான். நல்ல தர்ம காரியம் செய்கிறான். நாம் அவனுக்கு துணையாக இருந்து தர்மத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பாள். இப்படி இருப்பவளே நல்ல மனைவியென்று சொல்வார்கள்.

கணவன் தன்னுடைய மனைவி ஆடம்பர வாழ்வை விரும்புகிறாளா? என்று பரிசோதனை செய்கிறான். பத்து பன்னிரெண்டு தரமான சேலை இருக்கும்போதே, மீண்டும் சேலை கேட்கிறாளா? அப்படி கேட்கவில்லையென்றால் அவள் நல்ல காரியம் செய்வாள் என்பது நிச்சயம்.
அவன் மனைவியை பரிசோதனை செய்து பார்க்கிறான். இந்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை சேலை எடுக்கலாம்? நீ சொல்லு என்றான். இன்னும் எனக்கு

நாலு சேலை வேண்டுமென்றாள் மனைவி. சரி அவளை புரிந்து கொண்டான் கணவன். பத்து பன்னிரெண்டு சேலை இருக்கும்போதே இவள் மேலும் நாலு சேலை கேட்கிறாள். இவள் ஆடம்பர பிரியையாக இருக்கிறாள். சரி இது நாம் செய்த பாவமென்றான்.

அடுத்ததாக எனக்கு அது வேண்டும், இது வேண்டும், நகை வேண்டுமென்று கேட்டால் இவள் தர்மம் செய்வதற்கு ஒத்து வர மாட்டாள். சரியென்று வாங்கி கொடுத்துவிட்டு, பேசாமல் வாய்மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்போது இவள் நகைமீது வெறி கொண்டவள். உடைகளை அதிகமாக சேகரித்து வைத்துக் கொள்பவள். இப்படி இருந்தால் என்னாகும்? மனைவி எப்படியிருப்பாளென்று பரிசோதித்து பார்க்க வேண்டும்.

நல்ல மனைவியென்றால் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் இருந்தால், நூறு அல்லது நூற்றி இருபத்தைந்து கிராம் பருப்பு போட்டு குடும்பத்திற்கு தேவையான அளவு குழம்பு வைக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு அதிக பருப்பு போட்டு குழம்பு வைத்து குப்பையில் ஊற்றினால் நாம் செய்த வினைப்பயன் என்று புரிந்து கொள்ள வேண்டும். என்னய்யா உபதேசம்? இப்படி குடும்பத்தைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், இதுவும் உபதேசம்தான்.

என்ன குழம்பு? எவ்வளவு பருப்பு இன்னைக்கு போட்டிருக்கிறாய் என்று கேட்பான். இரண்டு குழந்தைகள் கணவன் மனைவியிருந்தால் கிட்டத்தட்ட ஆறு கரண்டி குழம்பு தேவையாகும். அதற்கு நூறு அல்லது நூற்றி இருபது கிராம் பருப்புதான் ஆகும். விருந்தினர் வந்தால் அதற்கேற்றவாறு சேர்த்துக் கொள்ளலாம்.

எனவே இப்படியெல்லாம் இருக்க வேண்டும். உணவுப் பொருளை தயாரித்து குப்பையில் போடுகின்ற மனைவி வந்தால் என்னாகும். அதை விட வேறு பாவம் இருக்க முடியுமா? நாங்களெல்லாம் குழம்பு பாத்திரத்தை திறந்து பார்த்தோம். அந்த பெண்ணுடைய தன்மை என்ன? அப்ப உணவு பொருளை வீணாக்கக் கூடியவள் உற்ற மனைவியாக இருக்க முடியாது.

விருந்தினர்கள் வந்தால் பருப்பு சேர்த்து போட வேண்டும், காய் சேர்த்து போட வேண்டும். சமைத்த பொருளை குப்பையில் போடுகின்றவர்கள் கடவுளை அடைய முடியாது. அது இயற்கை அன்னைக்கு செய்கின்ற துரோகமாகும்.

இதையெல்லாம் நாங்கள் சொல்வோம். அதற்காக அதையே சொல்லிக் கொண்டு இருக்க மாட்டோம். போ! உன் தலையெழுத்து என்போம். ஆகவே சமைத்த உணவெல்லாம் பார்க்க வேண்டும்.

ஏனய்யா குழம்பு எவ்வளவு வைக்கிறாள் என்று நீ பார்த்தாயா? அதை நான் எப்படி பார்ப்பேன் என்றான். நீ அறப்பணி, தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

இப்ப வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அளவிற்கு சமைக்காமல் அதிகமாக சமைத்து குப்பைக்கு போகிறது என்பதை நீ பார்க்க வேண்டாமா? அரை லிட்டர் பால் வாங்கினால் போதும். அதிகமாக வாங்கி வீணாக போகிறது என்பதை நீ கவனிக்க வேண்டாமா? தேவைக்கு அதிகமாக சமைத்து யாருக்கும் தராமல் குப்பைக்கு போவதை நீ கவனிக்கவில்லையென்றால் உன்னால் நிச்சயம் அறப்பணி செய்ய முடியாது.

நீ மனைவி சமைக்கின்ற உணவை பார். மிச்சப்பட்டால் ஏம்மா, இவ்வளவு சாதம் மீதம் இருக்கிறது? நீ இதை என்ன செய்ய போகிறாய்? என்று கேட்கலாமல்லவா? இப்படி கேட்பதுதான் தர்மம். இப்படி கேட்பவன் விசயம் தெரிந்தவன் என்று அர்த்தம். இப்படியெல்லாம் ஒரு இல்லறத்தான் உணவு பாத்திரத்தை திறந்து பார்த்து கவனிக்க வேண்டும். இதுதான் தர்மம். இப்படி சொல்வதே தர்மம். இதுதான் உபதேசம்.

சாதம் அரைப்படி சமைத்திருக்கிறாளா? முக்கால் படி சமைத்திருக்கிறாளா? ஒரு படி போட்டு சமைத்திருக்கிறாளா? சமைத்த உணவு எவ்வளவு மீதம் இருக்கிறது? மீதமான உணவை ஏழைகளுக்கு கொடுக்கிறாளா? அல்லது வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்கிறாளா? அந்த மீத உணவை கொடுப்பதற்கு மனது வருகிறதா? அல்லது வீணாக்கி குப்பையில் போடுகிறாளா? அதை நீ தெரிந்து கொள். இதைக் கூட கவனிக்கா விட்டால் நீ இல்லறத்தானா?

தனது குடும்ப தேவைக்கு மேல் சோறாக்குதல், தேவைக்கு மேல் குழம்பு வைத்தல், அதை வீணாக்கி குப்பையில் போடுதல் என்று இருந்தால் அது நீ செய்த பாவமாகும். நீ பெரிய புண்ணியவான் என்று நினைத்துவிடாதே! உன்னிடம் செல்வம் இருக்கிறது. அதனால் நீ சமாளித்துக் கொள்கிறாய். செல்வம் பெருகியிருந்தாலும் உணவுப் பொருளை வீணாக்கக்கூடிய மனைவியாக இருந்தால், அது தர்மத்திற்கு புறம்பானது, அறக்கேடாகும். இப்போது சொல்வதெல்லாம் மனைவிக்கு உபதேசம்.

சமைத்த உணவு மீதமிருந்தால், அதை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்ற உணர்வு மனைவிக்கு இருக்குமேயானால் அவன் புண்ணியம் செய்திருக்கிறான் என்று அர்த்தம். மனைவியின் துணை கொண்டு நிச்சயமாக ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான். ஆக கணவன், மனைவி சமைத்த உணவு, குழம்பு இவையெல்லாம் மீதியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதையெல்லாம் பார்க்க மாட்டேன் என்றால், போடா! என்று நாங்கள் சொல்லிவிட்டு போயிடுவோம்.

ஆக மனைவி ஆடைபிரியர் அல்ல, நகைபிரியர் அல்ல. சமைத்த உணவை ஏழைகளுக்கும் வேலைசெய்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தாலே அவள் கடவுள் தன்மையுள்ளவள் என்று அர்த்தம்.

பெண்கள் தினம் காலையில் குளிக்க வேண்டும். தினம்தினம் துணி துவைத்து மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் குடும்பத்திற்கு அவசியம். இது சிறப்பறிவு என்றான். என்னதான் செல்வம் நிறைய இருந்தாலும், அதை அளந்துதான் செலவு செய்யணும்.
ஒரு வீடு சுகாதாரமாக இருக்க வேண்டும். கழிவறையை சுத்தமாக வைத்திருக்கிறாள். வீடு தூய்மையாக இருக்கிறது. ஈ மொய்க்கவில்லை. பாத்திரம் தூய்மையாக இருக்கிறது. துணிமணியெல்லாம் துவைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆக இப்படிப்பட்ட வீட்டில் ஒரு கலை இருக்கும். இதெல்லாம் ஒரு நல்ல மனைவியின் செயல்பாடு.

சமைத்த உணவை வீணாக்காது வேலை செய்கிறவர்களுக்கும், பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுக்கிறாள். அவள் நல்ல மனைவி. அளந்து சிக்கன வாழ்வை கடைப்பிடிப்பவள் நிச்சயமாக நல்ல காரியம் செய்வாள்.

ஆக ஒரு நல்ல மனைவியின் செயல்பாடுகளெல்லாம் இப்படித்தான் இருக்கும். அடிப்படையே அவள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இப்படி எல்லா விஷயத்திலும் ஒரு இல்லறத்தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆக ஒரு இல்லறத்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால், அவனுடைய செயல்பாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும். செயல்பாடுகள் நல்லபடியாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உணவுப் பொருள் திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சில குடும்பத்தில் உணவுப் பொருளில் பாச்சையும், பல்லியும் விழுந்து கிடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் கவனக்குறைவினால் வருவது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வரும் அது வேறு.

ஆக குழம்பு பாத்திரம் திறந்திருக்கிறதா மூடியிருக்கிறதா என்று கவனிக்காத கணவன் என்ன கணவன்? இந்த அரிசி தாங்குமா? தாங்காதா? சரி தாங்காதென்றால் இராத்திரிக்கு சோறு மீதம் வைத்துக் கொள்ளாதே. தண்ணீர் ஊற்றி வைத்து விடு. மறுநாள் சோறு வீணாகாமல் ஏழைகளுக்குப் கொடு. ஜென்மத்தைக் கடைத்தேற்றுபவர்களுக்கு இது அவசியம். அரிசி சரியில்லை அதனால் சோறு சீக்கிரம் வீணாகி போகிறதென்றால் அதற்கேற்றார்போல் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி வர வேண்டும். அவ்வளவு கவனம் செலுத்தாதவனுக்கு கடவுள் எப்படி அருள் செய்வார்? இப்படி நான் பேசுவது உபதேசம். ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்பினால் இதெல்லாம் செய்து கொள்ளணும்.

ஆக ஒவ்வொரு வகையிலும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். சரி இப்படியெல்லாம் இருக்கு நிலைமை. நாம் இருக்கின்ற இந்த சமுதாயம் ஆடம்பரத்தை விரும்புகின்றது. அக்கம் பக்கம் இருப்பவர்களை பார்த்து, அவங்க வீடு கட்டுகிறார்கள், இவங்க கார் வாங்குகிறார்கள், அவர்கள் அங்கே போகிறார்கள், இங்கே போகிறார்கள். ஒன்றுமில்லை யார் எங்கே போனாலும் நாம் சுடுகாட்டுக்கு போகாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி கார் வாங்குகிறான், வீடு கட்டுகிறான், போகிறான், வருகிறான், கடைசியில் சுடுகாட்டுக்குப் போகாதவன்தானடா பெரிய மனிதன். அவன்தானடா வல்லவன். இப்படி கார் வாங்குவதோ, பங்களா வாங்குவதோ அல்லது நகை வாங்குவதோ இந்த கதையெல்லாம் குப்பைடா என்றான். இது குப்பை என்று அறிகின்ற அறிவுதான் சிறப்பறிவு.

இந்த உலகத்தில் பல்வேறு வகையான ஆடம்பர வாழ்வு, ஆடம்பர செயல்பாடுகள் எல்லாம் குப்பை என்று நினைக்கின்ற அறிவு உனக்கு என்று வந்ததோ அன்றே நீ கடவுளாவாய் என்றான். இதைக் கண்டு மயங்காதே! ஆக அதிலேயே இரு மயங்குதல் - புல்லறிவு, மயங்காதிருத்தல் - நல்லறிவு என்றான். சொன்னவன் வள்ளுவன். இது உபதேசம். ஆக ஞானிகளை நாம் பூஜை செய்யும்போது தலைவன் நம்மை சார வேண்டுமென்று கேட்க வேண்டும்.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு என்றான். அங்கே இதே சமயத்தில்,

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை

எம்மிறை என்றால் தலைவன்.
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே - தலைவனை நெருங்க முடியவில்லை பாவிகள் என்றான். தலைவனை நெருங்குபவர்கள் பாவியாக இருக்க முடியாது. அவன் புண்ணியவான். போதந்தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். ஞானிகளெல்லாம் புண்ணியவான்கள். சும்மா ஏதோ என்று நினைத்து விடாதே!

சமைக்க அரிசி எடுக்கும் போது கீழே சிந்தக் கூடாது. வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு சுகாதாரமாக இருக்க வேண்டும். கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இராத்திரி சாம்பார் மீதம் இருந்தால் அதை சூடு பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் குடிலில் சமைக்கக் கூடிய உணவு சிறப்பாக இருக்க வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை கேட்கிறோம். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்கிறோம். விடுவாரா ஆசான் அகத்தீசர்? என்னடா இது! நல்ல வேண்டுகோள் என்பார்.

ஏனய்யா உணவு கெட்டுப் போகக் கூடாது. சில இடங்களில் காலையில் சாம்பார் வைத்தால் மதியானம் ஊசி போகிறது. அவர்கள் தலைவன் ஆசி பெறவில்லை அதனால் வீணாகிறது.

தலைவன் ஆசி பெற்ற நல்ல மகளாக இருந்தால், நான் சமைக்கும்போது உணவு சுவையாக இருக்க வேண்டும். இது கெட்டுப்போகாது இருக்க வேண்டும். அதில் நச்சுத்தன்மை ஏதும் கலந்து விடக்கூடாதென்று ஆசானை குடும்பத்தலைவி கேட்க வேண்டும்.

சமைக்கும் போதே நான் சமைக்கக்கூடிய உணவு, எனக்கும் எனது கணவனுக்கும், எனது பிள்ளைகளுக்கும் சுவையாக அமைய வேண்டும், விருந்தினர்கள் எங்களை தேடி வரவேண்டும். இன்று ஒருவருக்கு அதிகமாக சமைத்திருக்கிறேன் அதை யாரேனும் வந்து சாப்பிட வேண்டுமென்று வணங்கி ஆசானிடம் கேட்க வேண்டும். சமைக்கக் கூடிய சாப்பாடு, சாம்பார் சுவையாக இருக்க அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு குடும்ப தலைவி ஞானிகளிடம் கேட்க வேண்டும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 44.

பாத்தூண் - பகுத்துண்ணுதல். இன்றைக்கு யாராவது வருவார்களா? பாத்து என்றால் பகுத்து என்று அர்த்தம்.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.
- திருமந்திரம் - தானச் சிறப்பு - கவி எண் 250.

பார்த்திருந்து - பகுத்துண்டு. நாங்கள் குடிலில் சமைக்கின்ற உணவு சுவையாக இருக்க வேண்டுமென்றும், மக்கள் விரும்பி சாப்பிட வேண்டுமென்றும் ஆசான் அகத்தீசரை வணங்கி கேட்கிறோம். இப்படியெல்லாம் உணவு சுவையாக இருக்க வேண்டுமென்று கேட்டு, தானதர்மம் செய்து வருகிறோம்.

ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டுமென்று குடும்பத் தலைவனும், குடும்பத் தலைவியும் ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். பொறுப்புள்ள குடும்பத்தார்கள் மீதமான உணவை, அக்கம்பக்கத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பார்கள். அவர்கள் வாங்கிப் போவார்கள்.

வீட்டில் முறுக்கோ, அதிரசமோ, வடையோ போன்ற பதார்த்தங்கள் தயாரித்தால், அக்கம்பக்கத்தில் உள்ள ஏழை எளியவர்களின் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமையை செம்மையாக செய்வதுதான், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வழி.
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு - நல்ல காரியம், நல்வினையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். நாட்களை வீணாக்கக் கூடாது. நாட்களை வீணாக்குபவன் இந்த துறைக்கு நிச்சயம் வரமுடியாது. நல்வினையை பெருக்கிக் கொண்டால்தான், ஞானிகள் ஆசி கிடைக்கும், ஞானிகள் நம்மை சார்வார்கள். அப்படி சார்ந்தால்,

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து என்கிறார் ஆசான் திருமூலர். ஆக புண்ணியவான்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். நல்வினையை பெருக்கிக் கொண்டவர்கள், கிடைத்த இல்லறத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் புண்ணியவான்கள்.

சிலருக்கு விருந்தினரை உபசரிக்காத மனைவி இருப்பாள். நிறைய ஆடை ஆபரணங்கள் கேட்பாள். அதே சமயம் தேவையில்லாத ஆடைகளை வாங்கி பெட்டியில் அடுக்கி வைத்திருப்பாள். இப்படிப்பட்ட மனைவி அமைந்தால் அதற்காக அவளை விட்டுவிட முடியுமா? என்ன செய்வது? ஆசானை கேட்க வேண்டும். அதற்கு ஆசான் நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் அவளை மாற்றுகிறேன் என்பார்.

ஐயனே நீர் எதையும் செய்யக்கூடிய வல்லமை உள்ளவர். ஆணைப் பெண்ணாக்குவாய், பெண்ணை ஆணாக்குவாய். ஆசான் அருணகிரிநாதரோ அல்லது ஆசான் திருமூலதேவரோ ஆணைப் பெண்ணாக்குவார்கள், பெண்ணை ஆணாக்குவார்கள். அவர்களிடம் அடியேனுக்கு இப்படி குணக்கேடுகளுள்ள மனைவி அமைந்து விட்டால், இவளை வைத்துதான் அறப்பணிகள் செய்ய வேண்டும். விருந்தை உபசரிக்க வேண்டும். என்னுடைய இல்லறத்தை செம்மையாக நடத்த வேண்டும். எனக்கு நீங்கள்தான் அருள்செய்ய வேண்டுமென்று கேட்டான்.

அதற்கு ஆசான் நீ ஒன்றும் கவலைப்படாதே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பார்கள். அவர்கள் எல்லா துன்பத்தையும் உடைத்தெறியும் வல்லமை உடையவர்கள். அவர்கள் எதையும் செய்வார்கள், எதையும் செய்வார்கள், எப்படியும் செய்வார்கள். அவர்களெல்லாம் பெரிய வல்லவர்களல்லவா! ஆக எப்படியிருந்தாலும் நம்மை மாற்றி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புண்ணியவான்களெல்லாம் இருக்கக் கூடிய வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள். தங்களைச் சார்ந்தோர்களையும் உயர்த்துவார்கள்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 46.

என்பார் ஆசான் திருவள்ளுவர். மேலும்,

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 48.



ஆற்றின் ஒழுக்கி - மற்றவர்களையும் நன்னெறிப்படுத்துதல். மற்றவர்களை நன்னெறிப்படுத்துபவன் எவ்வளவு கெடியான வாழ்க்கை வாழக்கூடியவன், நல்லறிவுள்ளவன், வல்லவன் அவன். வல்லவன்தான் இப்படி செய்வான்.

தன்னையும் காப்பாற்றிக் கொள்வான். மனைவியையும் புரிந்து கொள்வான். மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்வான். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வான். பிள்ளைகளையும் காப்பாற்றுவான். விருந்தை உபசரிப்பான். தன் அண்ணன் தம்பிகளுக்கு துணையாக இருப்பான். சிறந்த முயற்சி உள்ளவனாக இருப்பான். பேராசைக்காரனாக அல்லது பொய்யனாக இருக்க மாட்டான். ஆக இவர்கள்தான் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, பிறரையும் காப்பாற்றுவார்கள்

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை - அறத்தைப் பற்றி நன்கு அறிந்தவன். அவன் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி என்ன நினைப்பான்? இவர்களெல்லாம் கடவுளின் பிள்ளைகள். இவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம். இப்படி நினைக்கும் அவன் எவ்வளவு பெரிய அறிவாளி.

மனைவியும் கடவுளின் பிள்ளை. பிள்ளைகளும் கடவுளின் பிள்ளை. தாய் தந்தை, அண்ணன், மாமன் மாமி இவ்வளவு பேர்களும் கடவுளின் பிள்ளைகள். இவர்களை நிறைவுபடுத்த வேண்டுமென்று எண்ணி செயல்படுவான். இவனே அறிவுள்ளவனாவான். ஆற்றின் ஒழுக்கி - ஆற்றுதல், செயல்படுதல். அறன் இழுக்கா இல்வாழ்க்கை - அறத்திலிருந்து வழுவாத இல்வாழ்க்கை.

நோற்பாரின் நோன்மை உடைத்து - தவசியை விட மேலானவன். இவன் விசயம் தெரிந்தவன். அங்கே அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்; காற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ஆனால் இவன் அப்படியல்ல. வாழ்க்கையைப் புரிந்து கொண்டவன். இதைத்தான் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் என்று ஆசான் திருவள்ளுவர் சொன்னார்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். இது சின்ன விசயமல்ல. இது மிகப்பெரிய வார்த்தை , சொன்னவர் ஆசான் திருவள்ளுவர், அவர் வல்லவர். இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். மற்றொரு இடத்தில் அறத்தின்

இயல்பு என்பார். உடம்பின் இயல்பை அறிந்து கொண்டவர்கள் ஞானிகள். இது உபதேசம் பெற்ற ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். அப்ப உடம்பை என்ன செய்கிறான்? உடம்பை பயன்படுத்துகிறான். எதற்கையா உடம்பை பயன்படுத்த வேண்டும்? இந்த உடம்புதான் ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். ஜென்மத்தை கடைத்தேற்றுவதற்கு இந்த உடம்பு ஒரு வாகனம். இந்த உடம்பே ஒரு நந்தி. இந்த உடம்பு துணையில்லாமல் கடவுளை அடைய முடியாதென்பது ஆசான் திருவள்ளுவர் கருத்து மட்டுமல்ல, ஞானிகளின் கருத்தும் ஆகும்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 47.

ஆக அந்த இல்லறத்தான் தவசியை விட மேலானவன். நோற்பாரின் நோன்மை உடைத்து - வலிமை உடைத்து என்பார். ஆக தவசியைவிட மேலானவன் என்பார். இவன் இல்வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்டவன். இல்லறத்தை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகிறான்.

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை - மனைவி துணையில்லாமல் விருந்தை உபசரிக்க முடியுமா? மனைவியில்லாமல் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய முடியுமா? ஆக மனைவியின் துணையிருக்க வேண்டும். மனைவியின் துணையில்லாமல் எந்த காரியமும் செய்ய முடியாது. அறப்பணி செய்வதற்கும் மனைவியின் துணை வேண்டும். அவளை தெய்வமாக போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அறியாமை இருந்தால் ஆசானின் திருவடியை நம்பி ஆசானிடம் சொல்லி அணு அணுவாக சரிப்படுத்த வேண்டும், பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஞானிகளெல்லாம் ஆணைப் பெண்ணாக்குவார்கள், பெண்ணை ஆணாக்குவார்கள். ஆக ஆசான் ஆசியில் செல்வம் பெருகுது, தடையில்லாத வாழ்க்கை ஆசான் கொடுத்திருக்கிறார். நல்ல காரியங்கள் செய்வதற்கு முரண்படும் மனைவியை சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆக மனைவியின் துணையில்லாமல் எந்த காரியத்தையும் செயல்படுத்த முடியாது.

காலையில் நமக்கு விருப்பமான உணவை தயாரித்து கொடுக்கிறாள். அது இட்லியாகவோ, உப்புமாவாகவோ இருக்கலாம். ஏதோ செய்கிறாள். ஆக காலை உணவுக்கு உத்திரவாதம் செய்து விட்டாள். அவள் காலை உணவு தராவிட்டால் இவன் என்ன செய்ய வேண்டும்? இவன் ஓட்டலில் சாப்பிட முடியுமா?

தவசிக்கு வாழ்க்கை முறை வேறு. சிலபேர் பிறவியிலேயே துறவியாக இருப்பார்கள். அது நான்காவது ஜென்மம். நான்காவது படிக்கட்டு. அவர்கள் நினைத்ததெல்லாம் கைகூடும். அவர்களுக்கு ஆகாதது ஒன்றுமில்லை.

ஆனால் இல்லறத்தானுக்கு உணவுக்கு உத்தரவாதம் மனைவிதான். மனைவி உணவு தயாரித்து தரவேண்டும். கணவனுக்கு விருப்பமான உணவாக தயாரித்து தர வேண்டும். கணவன் உணவுக்கு ஏங்க கூடாது. கணவன் பசியோடு இருக்கக் கூடாது. இப்படி இருந்தால்தான் கணவன் செயல்பட முடியும்.
ஏதோ கடமைக்கு சாப்பிட்ட மாதிரி உணவு இருக்கக்கூடாது. ஆக உணவு நல்ல சுவையாக இருந்தால்தான் நன்றாக செயல்பட முடியும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முடியும். மற்றவர்களை உயர்த்துவதற்கும் பயன்படும். அதற்கு இவன் உடம்பு திடமாக இருக்க வேண்டுமல்லவா?

ஆக இப்படியெல்லாம் நல்லபடி இருப்பதற்கு மனைவியின் துணை வேண்டும். ஆக அறநெறியிலிருந்து புறநெறியில் போய் என்ன செய்வாய் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஆசான் திருவள்ளுவர் உடலையும் உயிரையும் இயற்கையையும் அறிந்து வெற்றி கண்டவர்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 46.

அறத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறந்த முயற்சி உள்ளவனாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத சிறப்பறிவு உள்ளவனால்தான் இதை செய்ய முடியும். இதை அறத்தாற்றின் இல்வாழ்க்கை என்பார்.

பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத பேரறிவு இருந்தால் அவன் கடவுளை அடைவான். நாளைக்கு என்ன செய்வது? என்று கேட்பவனை பார்த்து சொல்வார் ஆசான் திருவள்ளுவர்.

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்று இலகுவாக சொல்வார். நாளை நாளை யென்று பேச்சே இல்லையடா உனக்கு. அறத்தைப்பற்றி அறிந்தவனுக்கு நாளை என்ற ஒன்று என்ன இருக்கு? இன்று என்ன செய்தோம்? போடா போ! தாய் தந்தை மீது அன்பு காட்டினோம். மாமன்மாமி பிள்ளைகளுக்கு செய்தோம். அவர்களெல்லாம் கடவுளால் படைக்கப்பட்ட பிள்ளைகள். தாய் தந்தை மட்டும் என்ன? அவர்களையும் உனக்கு கடவுள்தான் கொடுத்திருக்கிறார்.
நமக்கு துன்பம் வந்தால், துணையாக இருப்பவர்கள் மனைவி மக்கள், அண்ணன் தம்பி, மாமன் மச்சினன் இவர்களை விட்டுவிட்டு வெளியே போய்

எல்லோருக்கும் நல்லது செய்வான். இன்னும் சில பேர் என்ன செய்வார்கள்? வீட்டில் பிள்ளைகள் சோறில்லாமல் இருக்கும். மனைவிக்கு உடுத்த துணி இருக்காது. அவள் தடுமாறுவாள். இவன் ஒரு நாலைந்து பேருடன் உட்கார்ந்துகொண்டு கவுரவத்திற்காக தண்ணி போட்டுக் கொண்டிருப்பான். அதெல்லாம் நடக்கிறது.

ஆக நம்மைச் சார்ந்தவர்கள் மற்றும் நமது குடும்ப உறுப்பினர்கள்தான் நமக்கு துன்பம் வந்தால் துணையாக இருப்பார்கள். இவர்களைதான் முதலில் கவனிக்க வேண்டும். இவர்களை முதலில் கவனிப்பதே அறம் என்றார்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெரும்செல்வம் உற்றக் கடை.
- திருக்குறள் - பேதைமை - குறள் எண் 837.

ஐயா வள்ளுவபெருமானே இன்னும் கொஞ்சம் கவனமாக சொல்லய்யா! பேதை என்று சொன்னீர்கள். பெருஞ்செல்வம் என்று சொன்னீர்கள். சிறுசெல்வம் என்று சொல்லவில்லை. பெருஞ்செல்வம் உற்றக் கடை என்றீர்கள். கடை என்றால் இடம்.

அப்ப சம்பந்தமில்லாதவன், தேவையில்லாதவனெல்லாம் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு கோழியை முழுசாக வேகவைத்து தண்ணி போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டான்.
இவனுடைய மனைவி வீட்டில் தடுமாறிக் கொண்டிருப்பாள். இவர் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு ஜல்சா பண்ணிக் கொண்டிருப்பார்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் - சம்மந்தமில்லாதவன், பகைவன் சாப்பிடுவான். தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை என்றார். பேதை செல்வம் உற்றக் கடை என்று சொல்லவில்லை, பெருஞ்செல்வம் உற்றக் கடை என்றார். அறியாதவனுக்கு பொருள் சேர்ந்தால் இப்படித்தான் செய்வான். இது உபதேசம், சொன்னவர் ஆசான் வள்ளுவ பெருமான்.

அப்ப என்ன செய்ய வேண்டும்? ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புபவன், முதலில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும். உன்னிடம் உள்ள பொருள், உங்கள் அப்பன் வீட்டு சொத்தல்ல, கடவுள் கொடுத்தது. நீ புண்ணியம் செய்திருக்கிறாய். அண்ணன் தம்பி, மாமன் மச்சினன், மனைவி, பிள்ளைகள் இவர்களெல்லாம் உன்னோடு இருக்கிறார்கள். இவர்கள் யாரும் உன்னோடு முரண்படவில்லை. இவர்களெல்லாம் முரண்பட்டால்தானே பாவியாகணும்.

முரண்படாத பிள்ளைகள், முரண்படாத மனைவி, முரண்படாத தாய்தந்தை, முரண்படாத சுற்றத்தார்கள், முரண்படாத அண்ணன் தம்பி, முரண்படாத தொண்டர்கள், முரண்படாத நண்பர்கள் இப்படி ஒருவனுக்கு அமைவது கடவுள் கொடுத்த பாக்கியம். ஆகவே இவர்களுக்கு பாதுகாவலனாக இருப்பதே ஒரு சிறந்த அறம் என்பார் ஆசான் திருவள்ளுவர்.

தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். தானறிந்த உண்மையை சொல்லவில்லையென்றால் அதுவும் பாவம். வாசியைப் பற்றி சொல்லலாமா? வாசியைப் பற்றி சொல்பவன் தோசி என்றார் ஆசான். அவன் உருப்பட மாட்டான். முதலில் அவனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். பக்குவம் இருந்தால் ஆசான் தானே வருவார். நீ என்ன அவனுக்கு சொல்வது? அவனுக்கு பக்குவம் வந்தவுடன், அறிவு வந்தவுடன், ஆசானே வாசியைப் பற்றி சொல்வார்.
அப்ப வாசியைப் பற்றி அறிவது மட்டும் பெரிய அறிவில்லை . வாசி வசப்பட வேண்டுமென்றால் ஆசான் ஆசியிருக்க வேண்டும். புண்ணியவானாக இருக்க வேண்டும்.
ஆக திருக்குறளில் 133 அதிகாரமும் புண்ணியவான் ஆவது எப்படி என்றுதான் இருக்கிறது. அதில் வாசியெல்லாம் சொல்லவில்லை. ஏனய்யா வாசியைப் பற்றி சொல்லவில்லை?

திருக்குறளை பின்பற்றுகிறவனுக்கு நிச்சயம் வாசி தானே வசப்படும். அவனுக்கு தலைவனே இரங்கி விடுவான். என்னுடைய நூலை தொட்டு, என்னுடைய கருத்தை பின்பற்றினால் அவனுக்கு ஆசி கிடைக்கும், வாசி வசப்படும். அதனால் வாசியைப் பற்றி ஆசான் திருவள்ளுவர் சொல்லவில்லை.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் சொல்லியிருக்கிறேன். முப்பாலில் நாற்பால் உண்டு. அதில் வீடுபேறு இருக்கிறது.

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 368.

ஆக திருக்குறளில் சொன்னது முப்பால்தான். அதில் நாற்பால் இருக்கு. ஒருவன் எப்படியிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் மயங்க மாட்டார் ஆசான் திருவள்ளுவர்.
ஆசான் திருவள்ளுவபெருமான் பொருளாதாரத்தைக் கண்டு மயங்க மாட்டார். தன்னை நாட்டுக்கு அர்ப்பணம் செய்வார். தியாகசிந்தை உள்ளவர்தான் ஆசான் திருவள்ளுவ பெருமான். அந்த குணம் உனக்கு வந்ததா?

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் என்பார். இந்த கொள்கையை உன்னால் கடைப்பிடிக்க முடியுமா? அதை கடைப்பிடிக்க வல்லமை இருந்தால் நிச்சயம் தேறிக்கொள்வாய் என்பார்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 361.

இப்ப ஆசையை உண்டு பண்ணும் என்பதால் குடும்பத்தை விட்டு போவதா? ஆக அதில் உள்ள மர்மம் உனக்கு தெரியாதல்லவா? இப்படியெல்லாம் ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருப்பதன் நோக்கம் என்னவென்றால், முப்பாலில் நாற்பால் உண்டு, அதை அறிந்து கொள்ள வேண்டும். ஆசான் திருவள்ளுவர் வல்லவர். நாற்பால் என்றால் வீடுபேறு உண்டு என்று பொருள்.

உலக நடையை அறிந்து செய்யவேண்டிய கடமையை செய்து விருந்தை உபசரித்து ஆசானை வணங்கி ஆசிபெற வேண்டுமென்பதற்காக பெரியவர்கள் கருத்தை சொல்வார்கள்.
ஆசானை தினமும் வணங்குபவனுக்கு எல்லாமே கைகூடும், தடை வராது. இதை நான் சொல்லவில்லை. ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு என்று ஆசான் திருமூலர் சொல்லியிருக்கிறார். செல்வம் பெருகத்தான் செய்யும். தினமும் ஞானிகளை உருகி தியானம் செய்பவனுக்கு செல்வம் பெருகத்தான் செய்யும். தீவினையிருந்தால் பூஜை செய்ய முடியாது. தீவினை மிகுதி ஆக ஆக அறிவு வேலை செய்யாது. எப்படி ஐயா! தீவினை மிகுதி ஆகும் என்று கேட்டான். நீ முன் ஜென்மத்தில் செய்த நல்வினையால், உனக்கு செல்வம் வந்ததல்லவா? முன் ஜென்மத்தில் செய்த நல்வினையால், செல்வம் வரும்போதே நீ என்ன செய்ய வேண்டும்? நீ முன் செய்த நல்வினையின் காரணமாக செல்வம் உனக்கு வந்ததையா! நீ என்ன செய்திருக்க வேண்டும்? நற்காரியம் செய்து கொள்ள வேண்டுமல்லவா? ஆனால் நற்காரியம் செய்து கொள்ள அறிவு உனக்கு வரவில்லை அல்லவா. அந்த செல்வத்தை கண்டு மயங்கினாய் அல்லவா. இப்படி மயங்குவதே தீவினைக்கு காரணமடா என்றான்.

சிறப்பறிவு உள்ளவன் என்னடா செய்வான்? செல்வம் வந்தது, இதை அர்ப்பணம் செய்ய வேண்டும். அவன் துடிப்பாக இருப்பான், துடிப்பாக இருந்து அறப்பணி செய்து கொண்டிருப்பான். ஆனால் நீ என்ன செய்தாய்? பொருளை சேர்த்து வைத்தாய். உன்னை புல்லறிவாளன் என்று சொல்லாமல், நல்லறிவாளன் என்றா சொல்வான் ஆசான்.

நற்காரியம் செய்துகொள்ள துடிப்பவனாக இருக்க வேண்டும். அப்ப என்ன செய்ய வேண்டும்? அர்ப்பணிப்பதா? ஆசான் உன்னை கைவிட மாட்டானடா. நீ புரிந்து கொள்ளாமல் பேசாதே. ஆசான் கைவிட மாட்டான். உனக்கு செல்வம் சேர்ந்தால் கைவிட மாட்டான். நிச்சயம் உனக்கு அருள் செய்வான்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
- திருக்குறள் - வினைத்தூய்மை - குறள் எண் 659.

செய்தது வீண் போகாது. நல்லது நடந்தே தீரும். அப்ப வந்த செல்வம் கைவிட்டு போனது என்றால், இது கைவிட்டு போகலாம், அருள்பலம் வந்ததல்லவா! அருள்பலம் நிச்சயம் கைகொடுக்குமல்லவா? ஆக எதற்கு இதையெல்லாம் ஆசான் சொல்கிறார் என்றால், ஆசான் திருவள்ளுவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நற்காரியம் செய்து கொள் என்று சொல்லுவார். இதுதான் ஆசான் திருவள்ளுவருடைய கருத்து.

நற்காரியம் எதற்கு செய்வது? ஆன்ம ஜெயம் பெறவேண்டுமல்லவா? ஆன்ம ஜெயம் பெறுவதற்காகத்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆன்மஜெயம் பெற வேண்டும். ஆன்மஜெயம், ஆன்மலயம் எல்லாம் ஒன்றுதான். ஜெயமென்றால் வெற்றி. எப்ப வெற்றி? ஒன்பது வாசல் வழியாக ஓடுகின்ற இந்தக் காற்றை, பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் செலுத்தும் வல்லமையிருந்தால் அது ஆன்ம ஜெயம் அல்லது ஆன்ம லயம் என்பார்.

இலயப்படுத்துதல் என்றால் ஐக்கியம் செய்தல். ஆன்மாவை இலயப்படுத்துதல் அல்லது ஜெயமாக்கிக் கொள்ளுதலாகும். இப்படி உள்ளவன்தான் வல்லவனாக இருக்க முடியும், நல்லவனாக இருக்க முடியும். ஆக எல்லா உயிரும் போற்றும்படி வாழ, என்ன செய்ய வேண்டும்?

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 260.

கொல்லான் புலாலை மறுத்தானை என்பார். இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். உடற்கூற்றை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.
உடற்கூறு பற்றி எனக்கு என்னய்யா தெரியும்? எனக்கு ஏதய்யா அந்த அறிவு?

நீ வணங்கக் கூடியவர்கள் உடற்கூறை அறிந்து, உயிரையும் உடம்பையும் ஒன்று சேர்த்தவர்கள். இது உனக்கு புரியாது. நாம் என்ன சிறுதெய்வ வழிபாட்டிலா ஈடுபட்டிருக்கிறோம். நாம் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடவில்லை. நீ வணங்கக் கூடிய தலைவன் உடம்பையும் உயிரையும் அறிந்து, ஆன்மஜெயம் பெற்றவன்.
முதுபெரும் தலைவன் ஆசான் திருவள்ளுவரையோ, ஆசான் அருணகிரிநாதரையோ, ஆசான் திருமூலதேவரையோ பூஜை செய்கிறோம். பூஜை செய்வதால் என்ன ஆகும். உடம்பை பற்றி அறியலாம், உயிரைப் பற்றி அறியலாம். எல்லாவற்றையும் அறியலாம்.
உடற்கூற்றை அறிந்து உயிரை சேர்க்கக் கற்றுக் கொண்டவனை கேட்கிறாய், தலைவனை கேட்கிறாய். கேட்கிற முறையோடு கேட்டால் அருள் செய்வார்கள்.
அடியேன் உயிரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டால், அவன் நிச்சயம் தேறிக்கொள்வான். உயிரைப்பற்றி அறிந்து கொள்ள நினைத்தால்,

அவன் உடம்பைப் பற்றி அறிந்து கொள்வான். ஞானிகள் அத்தனை பேரும் நிலையான வாழ்வை பெற்றவர்கள்.
நீங்கள் நிலையான வாழ்க்கையை பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் நிலையான வாழ்க்கையை பெற்றிருப்பதால் அடியேன் உடம்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்கிறேன்.

நாங்கள் உடம்பையும் உயிரையும் சேர்க்கக் கற்றுக் கொண்டோம். உடம்பையும் உயிரையும் சேர்க்க கற்றுக் கொள்வது என்பது சின்ன அறிவல்ல. உடம்பைப் பற்றி அறிந்தவன் தான் உடம்பையும் உயிரையும் சேர்க்க கற்றுக் கொள்வான். |

இப்ப எத்தனை மணி நேரம் நான் பேசுவது? எத்தனை மணி நேரம் மனதில் இருக்கும்? அதுதான் முக்கியம். நான் பேசுகிற கருத்து எத்தனை மணி நேரத்திற்கு உங்கள் இதயத்தில் இருக்கும்? இது எத்தனை மணி நேரம் மனதில் தங்கியிருக்கும்? இது எங்களுக்கல்லவா தெரியும்? புண்ணியத்தை செய்து கொண்டாலன்றி, நான் பேசிய கருத்துக்கள் உங்கள் மனதில் தங்காது. நாளைக்கு உங்களால் பத்து நிமிடம் தியானம் செய்ய முடியுமா?

ஆசானிடம் என்ன கேட்க வேண்டும். அடியேன் ஆன்ம ஜெயம் பெற வேண்டும், அடியேன் ஆன்ம இலயம் பெற வேண்டும், அடியேன் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும், நீயே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டுமல்லவா. இப்படி கேட்பதற்கு நாளைக்கு உனக்கு வாய்ப்பு தரவேண்டுமல்லவா?

காலை எழும்போதே, ஆசான் அகத்தீசன் நாமத்தை சொல்லி எழுவதற்கு உனக்கு முடியுமா? நாளைக்கு நீ செய்து பாரேன். நல்வினையிருந்தால் நீ செய்யலாம். நாளைக்கே பரிசோதனை செய்ய வேண்டும். நாளை காலை எழும்போதே ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீஸ்வரா, ஓம் அகத்தீசா என்று சொல்ல முடிகிறதா? அப்படி சொன்னால் நிச்சயம் கடவுளை அடைவாய் என்பது எங்களுக்கு தெரியும்.

ஏ! உலக மக்களே, உலக ஆன்மீகவாதிகளே காலை எழும்போதே ஆசான் சரவண பவ என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம். கேட்டுப் பாரேன்! உனக்கு அந்த ஆற்றலிருந்தால் புண்ணியவானாக இருந்தால், நாளைக்கு பரிசோதனை செய்து பார். உனக்கு நினைவு வருமா? ஐயோ! வராதே பாவம்.

என்ன பாவம் செய்தேன் ஐயா? ஏன் காலையில் எழும்போதே பல்வேறு பிரச்சனைகள் வாட்டி வதைப்பதற்கு என்ன நியாயம்? ஏன் உன் நாமத்தை என்னால் சொல்ல முடியவில்லை? நீ பாவியல்ல, நான்தான் மிகப்பெரிய பாவி. காலை எழும்போதே ஓம் சரவண பவ என்று சொல்வதற்கு ஏன் எனக்கு அந்த அறிவு தரவில்லை? ஏனய்யா எனக்கு அந்த வாய்ப்பு தரவில்லை. சரி அதுதான் போகட்டும். எழும்போதே பல்வேறு பிரச்சனைகள் தந்து என்னை ஏன் வாட்டி வதைக்கிறாய்?

எனக்கு தூங்கும் போது மட்டும், மன அமைதியை தந்திருக்கிறாய். காலையில் எழும்போது உன் நாமத்தை சொல்ல நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்ன பாவம் செய்தேன்? நான் பாவியா அல்லது நீ பாவியா? என்றான்.

நான் பாவியில்லை. நீதான் பாவி என்பார் ஆசான் சுப்ரமணியர். நீ புண்ணியம் செய்திருந்தால் நல்வினையை உனக்கு ஊட்டியிருப்பேன். நீ பொருளாதாரத்தைக் கண்டு மயங்கினாய். உலகத்தை சதம் என்று நினைக்கிறாய். உனக்கு எப்படி என் நினைவு வரும்?
ஆக என் நினைவு வருவதற்கே நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் உனக்கு என் நினைவு வராது. காலையில் சிந்தித்துப் பார்.

உலக ஆன்மீகவாதிகளுக்கு அறைகூவல் தருகிறோம். காலையில் எழும்போதே ஓம் சரவண பவ என்றோ, ஓம் அகத்தீசா என்றோ நாமத்தை சொல்ல முடியுமா? சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் நீ நிச்சயம் தேறிவிடுவாய்? நாளைக்கே பரிசோதனை செய்யலாம். புண்ணியவானாக இருந்தால் நிச்சயம் உனக்கு நினைவு வரும்.
தலைவனை தானே பூஜை செய்கிறோம். அப்புறம் ஏன் காலையில் எழுந்தவுடன் ஆசான் நாமத்தை சொல்ல நினைவு வரவில்லை. இதுவே பெரிய பிரச்சனை.

சரி! அது போகட்டும். நினைப்பு வரவில்லை . உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஓம் அகத்தீசா, ஓம் அகத்தீசா என்று சொல்ல முடிந்ததா? அதுவும் இல்லை. அவசரம் அவசரமாக ஓட வேண்டியிருக்கிறது வேலைக்கு.
காலையில் வேலைக்கு போகும்போது, ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர்தேவாய நம, ஓம் அருணகிரிதேவாய நம என்று சொல்லவும் நினைவு வரவில்லை. சரி போகட்டுமையா, பூஜை செய்ய முடியவில்லை .

வேலைக்கு போகும்போது இப்ப இந்த பஸ் போயிடுச்சா, அந்த பஸ் வருமா என்றுதான் நினைப்பு வரும். போனா போகிறது. இப்ப என்ன நட்டம். என்ன இப்ப முழுகிட போகுது, நடப்பது நடக்கட்டும், இப்படி எண்ண வேண்டும். இது உபதேசம். அதற்காக நாம் போகாமல் இருக்கக் கூடாது. பஸ் எட்டரை மணிக்கென்றால் எட்டே காலுக்கெல்லாம் போயிட வேண்டும்.
அதற்காக நடப்பது நடக்கட்டும் என்றால், குடும்பஸ்தனா அவன்? ஆக அதையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். போகும்போது அகத்தீசா, அகத்தீசா

என்று சொன்னாயா? அதுவும் இல்லை. சரி அந்த வாய்ப்பில்லை. அதெல்லாம் போகட்டும். காலையில் ஆசானை நினைக்க முடியவில்லை. போகும்போதும் நினைவுக்கு வரவில்லை. பல்வேறு நினைவுகள், பஸ் போயிடிச்சா? எப்ப வரும்? என்று சிந்திப்பதை தள்ளு.

சரி ஒருத்தனுக்காவது சோறு போட்டாயா? இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்கே? இன்றைய பொழுது யாருக்காவது சோறு போட்டாயா? அதுவும் இல்லை. போச்சு அதுவும் உருப்படவில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும்வரை ஏதாவதொரு உருப்படியான காரியத்தை செய்தாயா? அவன் உருப்படாத பயல்! ஒரு காரியமும் செய்ய மாட்டான்.

ஆக இப்படியெல்லாம் ஞானிகள் நாமத்தை சொல்ல வேண்டும் என்பது உபதேசம். ஞானிகளெல்லாம் அப்படித்தான் சொல்வார்கள். எனவே இதைப்பற்றி அறிந்தவர்கள், உலக மக்களுக்கு சொன்னாலன்றி அவர்களுக்கு எதுவும் புரியாது.
ஆக ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு இப்படி பேசுவது சற்று கசப்பாக இருக்கும். அப்படி கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை . நீங்களெல்லாம் தெளிவடைய வேண்டும்.

நிலையில்லாத உலகத்தை பெற்றிருக்கிறோம். ஏனென்றால் உலகம் நிலையானதல்ல. நிலையில்லாத உலகத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்மஜெயம் பெற வேண்டும். ஆன்ம இலயம் பெற வேண்டும். ஆன்ம ஐக்கியம் பெற வேண்டும். இலயம் என்பது ஐக்கியப்படுதல். ஆக இப்படியெல்லாம் ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே அன்பர்கள் தினமும் காலையில் எழும்போதே ஞானிகள் நாமத்தை சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பு புண்ணியவான்களுக்குத்தான் கிடைக்கும். நீ கர்ணம் போட்டாலும் முடியாது. நீ சும்மா ஏதோ இலேசு என்று நினைத்து விடாதே. காலையில் எழும்போதே அகத்தீசா என்று சொல்லுகின்ற வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அவன் கடவுளை அடையப்போகிறான் என்று அர்த்தம். இந்த வாய்ப்பை பெற்றால் அது அளவில்லாத பெருமைக்குரியது.

யாருக்கு கிடைக்கும் அந்த பாக்கியம். இதுதான் பிரச்சனை. காலையில் எழும்போதே அகத்தீசர் நாமத்தை சொல்ல வேண்டும். இன்று நடக்கக் கூடிய நிகழ்ச்சி நல்லபடியாக அமைய வேண்டும். நான் நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும். புண்ணியத்தை செய்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை. காலையில் உன்னை நினைக்கவே முடியவில்லை. இப்படி ஒரு பலகீனமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய். அதான் போகட்டும். பத்து நிமிடம் தியானம் செய்ய வாய்ப்பு கொடுத்தாயா என்றால் அதுவும் இல்லை. என் கடமையை செய்ய முடியாமல் இருக்கிறேன். ஆக இதையெல்லாம் கேட்டுப் பெற வேண்டும்.

ஆக ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும், முடியவில்லை. மனிதனாக பிறந்தால் மோட்சகதி அடைய வேண்டும். மற்றவையெல்லாம் எதற்கும் பயன்படாது. மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் கவி எண் 89ல்

பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ
வருமுன்னே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனை செய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
- மகான் அகத்தியர் - துறையறி விளக்கம் - கவி எண் 89.

இதெல்லாம் எப்படி ஐயா எங்களுக்கு வரும்? எங்களுக்கு இதைப்பற்றி என்னய்யா தெரியும்? நாங்கள் பிறந்தோம், மனைவி மக்களோடு இருந்தோம், மோட்சகதியென்றால் என்னய்யா என்றான்.
மோட்சகதியென்றால் சாவதா? இல்லை. சாவதுதான் எல்லாம் சாகிறானே, பின் என்னய்யா என்றான்.

பின்கலையும் முன்கலையும் சேரவேணும் என்றான். இடகலையும், பின்கலையும் புருவமத்தியில் சேரவேண்டும். மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ - இதை மறந்து விட்டால் எமன் வந்து சூழ்ந்து கொள்வானே. வாசி வசப்பட்டவன் ஆன்மஜெயம் அல்லது ஆன்மஇலயம் பெற்றவன், இடகலையும் பின்கலையும் சேர்த்தவனிடம் எமன் கிட்டே வரமாட்டான். எமன் யாரென்று கேட்டான்? கபம்தானே ஐயா எமன். கபத்தை அறுத்தேவிடுவான். மறந்தவர்க்கு மறலி - மறலி என்றால் எமன். மறலி வந்தால் வலுயாருண்டோ , அவனை வெல்ல முடியுமா? வருமுன்னே வலுகட்டிக் கொள்ள வேண்டும். எமன் வருவதற்கு முன்னே தடைபடுத்திக் கொள்ள வேண்டும்.

அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என்றார். அப்பப்பா! எவ்வளவு கருணை இருக்க வேண்டும். துறையறி விளக்கத்தில் இந்த பாடல் இருக்கிறது. எவ்வளவு கருணை இருக்க வேண்டும் இந்த பாடலை சொல்வதற்கு. அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி. ஓம் சரவண பவ என்றால் அறந்தழைக்கிறது என்று அர்த்தம். ஓம் சரவண பவ என்றால் அறம் தழைக்கப் போகிறது.

அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
அறந்தழைக்கும் - ஆசான் நாமத்தை சொன்னால் அறந்தழைக்கும் என்று சொன்னார். என்னய்யா அறந்தழைக்கும்? பணம் கொட்டுமா? நல்ல சிந்தனை வந்ததையா நல்ல சிந்தனை வந்தது. அறம் தழைக்கப் போகிறது. அறியாமை நீங்கியது, அறம் தழைக்கிறது. பேராசை ஒழிந்தது, அறம் தழைக்கிறது. தேவையில்லாமல் சிந்தனை செய்வதில்லை. தேவையில்லாத சிந்தனையில்லை, அறம் தழைக்கிறது. வறுமை தீர்ந்தது. வறுமை என்பது அறியாமை.
புல்லறிவு இருந்தால் அறம் தழைக்குமா? நல்லறிவு வந்தது அறம் தழைத்தது. நல்லறிவு வந்ததால் நல்ல சிந்தனை வந்தது. அதனால் நல்ல செயல்பாடுகள் வந்தது.

அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.

ஆகவே இப்படியெல்லாம் பெரியவங்க நாமத்தை, அகத்தீசர் நாமத்தை சொன்னால் அறம் தழைக்கும். அறம் தழைப்பதே நல்ல சிந்தனை வந்தது. அறம் தழைப்பதே வறுமை நீங்கியது. அறம் தழைப்பதே மனைவி சொன்னதை கேட்கிறாள். அறம் தழைப்பதே பிள்ளைகள் சொன்னபடி கேட்டு நல்லபடி நடந்து கொள்கிறார்கள். அறம் தழைப்பதே நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். அறம் தழைப்பது நல்ல ஆசான் கிடைத்தான். அறம் தழைப்பதே எடுத்துக் கொண்ட இலட்சியத்தை முடிக்கிறான். இப்படியெல்லாம் நடப்பதே அறம் தழைப்பது என்றான்.

அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்

ஆக அறம் தழைப்பதற்கு யார் ஆசியிருக்க வேண்டும். தலைவன் ஆசியிருக்க வேண்டும். ஆசான் நந்தீசர் ஆசியிருக்க வேண்டும். ஆசான் திருமூலதேவர் ஆசியிருக்க வேண்டும். ஆசான் ஞானபண்டிதன் ஆசியிருக்க வேண்டும். மனிதவர்க்கம் முன்னேறுவதற்கு ஒன்றே ஒன்று, தியானம் செய்ய வேண்டும். முடிந்தளவிற்கு பொருளாதாரத்தில் நாட்டம் கொள்ளாதிருக்க வேண்டும். அதற்காக பொருளாதாரத்தை வைத்துக் கொள்ளக்கூடாது என்பது அல்ல.
பொருள் இழப்பதற்குரியது. பொருள் இழப்பதற்குரியதே அன்றி இருப்பதற்கு உரியதல்ல. என்ன காரணம்?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
- திருக்குறள் - ஈகை - குறள் எண் 226.

ஏழைகள் வயிறுதானடா வங்கி என்று சொன்னவர் நமது ஆசான் திருவள்ளுவபெருமான். நீ சேமிப்பதெல்லாம் சேமிப்பல்ல. நீ சேமித்த பொருளெல்லாம் உனக்கும் பயன்படாது, உன் குடும்பத்திற்கும் பயன்படாது போகலாம். ஏழைகளின் வயிறே வங்கி என்று நினைக்க வேண்டும். சொன்னவர் வள்ளுவபெருமான் வல்லவர். இதுதான் உபதேசம்.

முப்பாலில் நாற்பால் இருக்கிறது. பெரியவங்க அப்படிதான் சொல்லியிருப்பார்கள். அவர்கள் பேச்சு சற்று கடுமையாகத்தான் இருக்கும். ஜென்மத்தைக் கடைத்தேற்ற இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் சிலர் இதெல்லாம் எதுக்கைய்யா? இந்த காலத்தில் பத்தாம்பசலி கொள்கை என்று சொல்கிறான். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். பத்தாம்பசலி கொள்கையா இது. ஆசான் திருவள்ளுவபெருமான் சொன்னது பத்தாம் பசலி கொள்கையாக இருக்க முடியுமா? இருக்க முடியாது.

ஆக தினமும் நூல் படிக்க வேண்டும். திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளை படிக்கும்போது, ஆசான் திருவள்ளுவ பெருமானை வணங்கி இதிலிருக்கும் நுட்பத்தை அடியேன் அறிந்துகொள்ள வேண்டுமென கேட்க வேண்டும்.

ஆக நுட்பத்தை அறிந்து கொண்டால் போதுமா? அது ஒன்றும் பெரியதல்ல. நடைமுறைப்படுத்த வேண்டுமல்லவா. திருக்குறளை படி. திருக்குறளை படிப்பதற்கு அறிவு வேண்டும். படித்து நடப்பதற்கு அருள் வேண்டும். இதெல்லாம் சின்ன விஷயமல்ல. திருக்குறளில் உள்ள நுட்பத்தை எளிதாக அறிய முடியாது.

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 48.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 47.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 46.

இதெல்லாம் சின்ன விஷயமென்று நினைத்து விடாதே. ஆசான் திருவள்ளுவபெருமான் மிகப் பெரிய மனிதர். அவர் சொல்லிய குறளில் அவ்வளவு நுட்பம் இருக்கும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
- திருக்குறள் - நீத்தார் பெருமை - குறள் எண் 22.

ஆக அவ்வளவு பெரிய அறிவுள்ளவன்தான் துறவு மேற்கொள்ள வேண்டும். ஆக பெரியவங்க கடமைகளை செய்ய வேண்டுமென்று சொல்லுவார்கள். நாம் நித்திய கடமைகளை செம்மையாக செய்ய வேண்டும்.

குடும்ப தலைவன் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறாயா? அப்படியென்றால் ஐந்து மணிக்கு எழுந்தாயா? நீ ஏழு மணிக்கு எழுந்து என்ன செய்ய போகிறாய்? சரிய்யா! ஒன்றும் குற்றமில்லை. குடும்பத் தலைவன் ஐந்து மணிக்கு எழுந்து பழகணும். ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பத்து நிமிடம் நாமத்தை சொல்லிவிட்டு அப்புறமா தூங்கிக்கலாம்.

கடுமையாக உழைப்பு இருந்ததென்றால், ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுந்திருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுந்து நித்திய கடமைகளை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்யவேண்டும். ஆக ஜென்மத்தை கடைத்தேற்றுபவனுக்கு இதெல்லாம் அவசியம். இரவில் கடுமையாக உழைப்பு இருக்கலாம். அது சந்தர்ப்ப சூழ்நிலை. அதற்கேற்றவாறு சூழ்நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

எனவே காலையில் எழுந்திருக்க வேண்டும், கடமையை முடிக்க வேண்டும். உடம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் மலச்சிக்கல் வந்தது? இதற்கு என்ன காரணம்? இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிக ஓய்வு காரணமா? அல்லது அதிக நேரம் இரவில் தூக்கம் விழித்தோமா? மலச்சிக்கல் ஏன் வந்தது? என்ன காரணம்? அதற்கென்ன உபாயம். இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் ஆராய்ந்து நீ உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த உடம்புதான் மோட்ச லாபம் பெறுவதற்கு வாகனம். அதை கவனிக்காமல் விட்டுவிட்டு என்ன செய்ய போகிறாய். உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு அடிப்படை காரணம் என்ன? ஏன் கண்ணெரிச்சல் இருக்கிறது? அதற்கென்ன உபாயம்? இதெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள தெரிந்தவன், நிச்சயம் உயிரை காப்பாற்றிக் கொள்வான். ஆக ஒவ்வொரு நாளையும் வீண் செய்யாமல், கடமையை செம்மையாக செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். நான் பேசிய கருத்துக்கள் பலவகையாக இருந்தாலும், மையக்கருத்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வதற்கு சொல்லியிருக்கிறேன்.

ஆகவே இந்தக் கருத்துக்களெல்லாம், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறோம். கருத்துக்களை கேட்பதாலேயோ, நூல்களை படிப்பதாலேயோ ஒருவன் தேறமுடியாது. தினம்தினம் தியானம் செய்தால்தான் அறிவு வேலை செய்யும். இல்லாவிட்டால் அறிவு வேலை செய்யாதென்று சொல்லி, இது நேரம் வரையிலும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி பணிந்து முடிக்கிறேன் வணக்கம்.




திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

16. சனி நீராடு

நாம் வசிக்கும் தமிழகம் இயற்கை அமைப்பால் பல பருவங்களை உடையது. மழைக்காலம், வெயில்காலம், காற்று காலம், பனி காலம் என பருவங்கள் மாறிமாறி வரும். இப்படி பருவங்கள் மாறிமாறி வருவதால் அங்கு வாழும் மக்களிற்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதைச் சமன் செய்வதற்காக பல உபாயங்களை மகான் ஔவையார் போன்ற ஞானிகள் மக்களுக்கு உபதேசிப்பார்கள்.

அவ்விதம் இங்கே சனி நீராடு என்கிறார். நமது தேகம் வெயில்காலத்தில் அதிக உஷ்ணமாகும். அதைக் குறைக்க எண்ணெய் குளியல் வேண்டும். காற்று காலத்தில் தோலின் மேற்புறம் வறண்டு எண்ணெய் பசை இல்லாமல் போய்விடும். அதை சரிசெய்வதற்காகவும், பனி காலத்தில், மேல் தோல் எண்ணெய் பசை குறைந்தால் வெடிப்புகள் உருவாகி தேகம் பாதிக்கும். எனவே அதை சரிசெய்ய எண்ணெய் குளியல் செய்யச் சொல்வார்கள்.

மழைக்காலத்தில் அதிகமான ஈரப்பதத்தினால் உடல் நனைந்து ஈரமாகி உடல் நீர் வாங்கி ஜலதோஷம் போன்ற தேவையற்ற பல நோய்கள் வரும். அதைத் தவிர்ப்பதற்காக உடம்பிற்கு எண்ணெய் குளியல் வேண்டும் என்பார்கள். ஆகவே நமது வாழ்க்கையே இயற்கையின் செயல்பாட்டில் உள்ளடங்கியுள்ளது.

இப்படி நமது வாழ்வியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மகான் ஔவையார் சனி நீராடு என்றார். இது உலகமக்களுக்கான உபதேசமாகவும் அறிவுரையாகவும் கொள்ளலாம்.

மகான் ஒளவையார் போன்ற ஞானிகள் ஒரே வார்த்தையில் பல பொருள்களை திணித்து வைத்து சொல்வதில் வல்லவர்கள். ஒரே வாக்கியம் பல கருத்துகளை உடையதாக இருக்கும். இந்த சனி நீராடு என்பது உலக மக்களுக்கு உபதேசமாகவும் கொள்ளலாம். அதே சமயம் இது யோகிகளுக்கு வேறொரு விதமான பொருளில் கொள்ளப்படும்.

யோகிகள் வாழ்வானது இயல்பான இல்லறத்தான் வாழ்வினின்று மாறுபட்டதாகும். அவர்கள் பிராணாயாமம் என்னும் சுவாசப் பயிற்சியினை செய்யும் ஆற்றல் பெற்று அதை செய்பவர்கள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிந்து அதை வசப்படுத்தி அதன் இயக்கத்தை இடைவிடாது கவனித்து அதை சீராக்கி அதன் மூலம் அழியக்கூடிய இந்த உடம்பினை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளும் சூட்சுமத்தை, இரகசியத்தை, வல்லமையை ஞானத்தலைவன் மகான் சுப்ரமண்யர் ஆசான் ஞானபண்டிதன் அருளால் கைவரப்பெற்றவர்கள் ஆவார்கள்.

யோகிகள் வாசிப்பழக்கம் உடையவர்கள். அவர்கள் அழியாத நிலையை அடையக் கூடியவர்கள் என்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம். ஒரு சிலவற்றை கூறுகிறேன்.
மகான் கொங்கணர் தனது வாலைக் கும்மியில்

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
- மகான் கொங்கணமகரிஷி - வாலைக்கும்மி - கவி எண் 27.

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப்பெண்ணே.
- மகான் கொங்கணமகரிஷி - வாலைக்கும்மி - கவி எண் 42.

என்றார்.
ஈறாறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
- திருமந்திரம் - கலை நிலை - கவி எண் 722.

என்கிறார் மகான் திருமூலர்.

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ.
- மகான் அழுகணிச்சித்தர் - கவி எண் 6.

இப்படி பல மகான்கள் சுவாசத்தின் இயல்பையும் அதை எப்படி வசப்படுத்துவது, அதை எப்படி செயலாற்றுவது என்பதை தெளிவாக சொல்லியுள்ளார்கள். ஆயினும் இவையனைத்தும் தலைவன் ஆசியில்லாமல் முடியாது.
யோகி என்ற ஒருவருக்கு அவரது சுவாசமானது கீழ்க்கண்ட விதியில் இயங்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 8 மணிவரை சூரிய கலையும், 8 முதல் 10 மணி வரை சந்திரகலையும், 10-12 வரை சூரியகலையும், 12-2 வரை சந்திரகலையும், 2-4 வரை சூரியகலையும், 4-6 வரை சந்திரகலையும் இயங்கும். பகல் முடிந்து இரவு 6-8 சூரியக்கலையும், 8-10 சந்திரகலையும், 10-12 சூரியகலையும், 12-2 சந்திரகலையும், 2-4 சூரியகலையும், 4-6 சந்திரகலையும் இயங்கும்.

தொடர்ந்து இந்தவிதம் மாறும் சுவாசமானது வழக்கம் போல ஞாயிறு முடிந்து திங்கள் காலை 6-8 மணிக்கு வழக்கம்போல சந்திர கலையிலிருந்து சூரியகலைக்கு மாறும். இது அனைவருக்கும் இயல்பு.

ஆனால் எப்போதும் சுவாசத்தினை கவனித்து வரும் யோகிகளுக்கு ஆசான் அருளால் இந்த சுவாச இயக்கமானது திங்கள் காலை 6-8 மணிக்கு சூரியகலை இயங்காது. தலைவன் வகுத்ததிற்கிணங்க சந்திரகலைக்கு மாறிவிடும். இல்லறத்தான் இந்த மாற்றத்தை கவனிக்க மாட்டான். இப்படி மாறும் சுவாசத்தினை இயற்கையின் போக்கில் விடாமல்,
ஞாயிறு           காலை 6-8 மணி – சூரியகலை
திங்கள்            காலை 6-8 மணி – சந்திரகலை
செவ்வாய்         காலை 6-8 மணி – சூரியகலை
புதன்              காலை 6-8 மணி – சந்திரகலை
வியாழன்          வளர்பிறையானால்
காலை 6-8 மணி – சூரியகலை
தேய்பிறையானால்
காலை 6-8 மணி – சந்திரகலை
வெள்ளி           காலை 6-8 மணி – சந்திரகலை
சனி               காலை 6-8 மணி - சூரியகலையும்

இயக்குவார்கள். அமாவாசை தினத்தன்று அது எந்த கிழமையாக இருந்தாலும் அன்று காலை சூரியக்கலைதான் இயங்கும். பௌர்ணமி தினத்தன்று காலை சந்திரகலைதான் இயங்கும். ஆனால் இல்லறத்தானுக்கு இயற்கையாக அமாவாசையன்று காலை 6-8 மணிக்கு சந்திரகலைதான் இயங்கும். பௌர்ணமியன்று சூரிய கலைதான் இயங்கும். இது இல்லறத்தானுக்குரிய இயற்கை நியதியாகும்.

அமாவாசையன்று இயற்கையாகவே சந்திரன் பூமியின் நிழலில் மறைவதால் வளி மண்டலத்தில் ஒருவித இறுக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக நமது சுவாசத்திலும் இறுக்கம் ஏற்பட்டு ஒருவித இனம்புரியாத மூச்சுத்திணறல் ஏற்படும். இது சாதாரணமாக யாருக்கும் வெளிப்படையாக தெரியாது. ஆனால் யோகிகள் சுவாசத்தினை கவனிப்பதால் அவர்களால் இதை உணரமுடியும்.

இப்படி தலைவனால் யோகிகளுக்கு வகுத்து கொடுக்கப்பட்ட கலை மாற்றங்களை யோகி சதாசர்வ காலமும் கவனித்து கொண்டேயிருந்து அந்தந்த காலக்கட்டங்களில் ஆசான் அருளால் மாறுகிறதா என கவனிப்பார். அப்படி மாறாவிடில் ஆசானால் உணர்த்தப்பட்ட வழிமுறைகளினால் அந்த சுவாசத்தை மாற்றி அதன் போக்கை மாற்றி சாதகமான வழியில் திருப்பி செலுத்தி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு பயிற்சி செய்வார்.

இப்படி யோகிகளுக்கு பகலில் ஆறு முறையும் இரவில் ஆறு முறையும் மாறுகின்ற சுவாசத்தை ரேசித்து, பூரித்து, ஸ்தம்பித்தால் இந்த உடம்பை அழியாமல் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து அதன்படி தமது உடம்பைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் யோகிகள்.

இதையே மகான் திருமூலர் தமது திருமந்திரத்தில் ஈராறு கால் கொண்டு, அதாவது 2X6 = 12 கால் கொண்டு (கால் என்றால் காற்று, கலை என்று பொருள்படும்.) அதாவது 12 முறை மாறுகின்ற சுவாசத்தை 12 கலைகள் 12 கால் என்கிறார். இப்படி மாறுகின்ற சுவாசத்தை வசியப்படுத்தி அழிகின்ற இத்தேகத்தை அழியாமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள் யோகிகள்.
இப்படி யோகிகள் யோகப்பயிற்சி செய்யும் காலத்து அவர்களது உடம்பில் ஏற்படும் உள் உஷ்ணம் அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அவ்வப்போது ஆசான் ஞானபண்டிதனாகிய முருகபெருமான், மகான் அகத்தியர் இன்னும் பலபல ஞானிகளின் அறிவுரைகளின்படி உணவு முறைகளும், மருத்துவ முறைகளும் அறிவுறுத்தப்படும். அவற்றில் ஒன்றுதான் தைலக்குளியல் எனப்படும் எண்ணெய் நீராடல்.

யோகிகளின் உடல் வெப்பத்திற்கேற்ப கண்ணாடித்தைலம், பொன்னாங்கண்ணி தைலம், கரிசாலை எனப்படும் கரிசலாங்கண்ணி தைலம் தன்வந்திரி தைலம் போன்ற பல தைலங்களை பயன்படுத்தி உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவார்கள்.

எனவே இதன் மூலம் மகான் ஔவையார் பெறுதற்கரிய இம்மானுட தேகத்தினை அழியாமல் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு உடற்பாதுகாப்பு முறைகளில் ஒன்றான தைலக்குளியலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment