Monday, May 18, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI May 2013

MAY
17



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை விஜய வைகாசி (மே - 2013)  விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு...
2. ஓங்காரக்குடிலாசான் அருளிய ஆன்மீக உபதேசப் பேட்டி
3. அரவ மாட்டேல் (ஆத்திசூடி) - குருநாதர் அருளுரை தொடர்
4. பங்குனி உத்திர பெருவிழாவில் ஓங்காரக்குடிலாசான் அருளுரை

மகான் சட்டநாதர் ஆசிநூல்:-

யானுமே துறையூர் தவ எல்லை
ஞானவான் பிரணவக் குடிலை
வானவர் காக்கும் தடமதால்
வந்து பயன் வளம் பெறுவீர்என

பெறுவீரென பெருமைகள் கூறி
பேசி வருகின்ற ஞானத்திருவடி நூலை
குருவவர் வருவதாய் கருதி
குவலயத்தில் பயபக்திபட பெற்று

பெற்று வாசித்து பிரம்ம வேளை
பெருஞ்சக்தியான சித்தர் வழிபாடு
கற்றுத் தேறி பின்பற்றி வர
கட்டாயம் கடைத்தேறுவீர் உலக மக்கள் ஞானத்திருவடிக்கு ஆசி நூல் முற்றே.
- மகான் சட்டநாதர் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும் இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியது தான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
கருணை கொண்டு 09.06.2011 அன்று அருளிய
ஆன்மீக உபதேசப் பேட்டி
பேட்டி கண்டவர் - திரைப்பட இயக்குநர் திரு யார் கண்ணன் அவர்கள்

கண்ணன் : ஓம் அகத்தீசாய நம, ஐயா வணக்கம்.
குருநாதர் : சொல்லுங்க ஐயா!
கண்ணன் : குரு என்றால் யார்? குரு வழிபாடு என்றால் என்ன?
குருநாதர் : யாரொருவன் காமத்தை வென்றானோ, அவன் தான் குரு. காமம் என்பதற்கு காரணம் மும்மலக்குற்றம். மல ஜல சுக்கிலம் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்று சொல்வார்கள். ஆணவம், கன்மம், மாயை என்றால் புரியாது. ஆண்க ளுக்கு மல, ஜல, சுக்கிலம். பெண்களுக்கு மல, ஜல, சுரோணிதம். இந்த மூன்றுதான் மும்மலக்குற்றம்.

மும்மலக்குற்றம்தான் ஒரு மனிதனுக்கு மாயையை உண்டு பண்ணும். இதை ஜெயிக்க வேண்டும். அதை எப்படி ஞானிகள் செய்கிறார்களென்றால் உடம்பைப் பற்றி அறிவாங்க, உடம்பு முன்னே வந்ததா? உயிர் முன்னே வந்ததா? என்று கேட்பார்கள்.

உடம்பும், உயிரும் சேர்ந்துதான் வந்தது. எப்படி வந்தது என்று கேட்டான். ஒரு பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தான். அப்படி கூடும்போது சுக்கில சுரோணிதமாக மாறுவான்.

சுக்கில சுரோணிதமாக மாறும்போது பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இந்த கரு உற்பத்தியாகும். கரு உற்பத்தியானவுடன் இந்த உடம்பு என்ன செய்யும்? இந்த தேகம் அசுத்த தேகம், பத்து மாதம் தீட்டும் அசுத்தம், சுக்கிலமும் அசுத்தம். பெண்ணுடலின் சுரோணிதமும் அசுத்தம். இதன் காரணமாகத்தான் மாசு இருக்கும், மனமாய்கை இருக்கும்.

இந்த மாய்கையை வெல்வதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. எப்படி வெல்கிறார்கள் என்று கேட்டால், இடது பக்கம் வருகின்ற சந்திர கலையையும், வலது பக்கம் வருகின்ற சூரிய கலையையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தினால் உள்ளே உடம்பில் கனல் ஏறும். உள்ளே கனல் ஏற ஏற ஏற இந்த மும்மலக் குற்றங்களெல்லாம் விலகிப் போகும்.

மும்மலக் குற்றம் விலகினால் மனதில் தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவு உண்டானால், அவனுக்கு நரை திரை இருக்காது. அவர்கள் தான் ஐந்தொழிலையும் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில் செய்யும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அவர்களைத்தான் வணங்க வேண்டும்.

அவர்கள் யாரென்றால் திருஞான சம்பந்தன், திருமூலதேவன், காலாங்கிநாதர், போகமகாரிஷி, அருணகிரிநாதர், அகத்தீசர் , ஆசான் ஞானபண்டிதன். அவர்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

ஏன் மனிதன் சாக வேண்டும்? சாவதற்கு உடல் குற்றமா? உயிர் குற்றமா? உடல் குற்றமும், உயிர் குற்றமும் சேரும்போது மனமாசை உண்டுபண்ணும். மாய்கையை உண்டு பண்ணும். அப்போ மும்மலக் குற்றத்தை நீக்கினவன் எவனோ? அவன் தான் ஞானி. அப்படி மும்மலக்குற்றத்தை நீக்கிய முதல் தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான்.

ஆசான் சுப்ரமணியருடைய சீடர்தான் அகத்தீசர். அவர்தான் ஊர்ஊராக சென்று ஒன்பது கோடி மானுடர்களை ஞானியாக்கியவர். அவர்தான் உலகத்திற்கே தலைவர். அவருடைய ஆசியில்லாமல் ஒருவரும் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொன்னாலே அவன் குற்றமற்றவன். மும்மலக் குற்றம் அற்ற உடனேயே காமம் அற்றுப்போகும். காமம் அற்றவுடனேயே பசியற்றுப் போகும். பசியற்றவுடன் நரை திரை மூப்பு இருக்காது, பரிணாம வளர்ச்சி இருக்காது. பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் மும்மலக் குற்றமே. மும்மலக்குற்றமுள்ள தேகத்திற்கு பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் இந்த உடம்புக்குள்ளேயே சூட்சும தேகம் ஒன்று இருக்கிறது. அந்த தேகத்திற்கு நரை திரை மூப்பு கிடையாது. அவன் குரு.

அப்படிப்பட்ட குருநாதரை வணங்கனும். எப்படி வணங்கனும்? திருஞானசம்பந்தரை வணங்கினாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை வணங்கினாலும் சரி! ஆசான் பதஞ்சலி முனிவரை வணங்கினாலும் சரி! எல்லாமே ஒரே தன்மையுள்ளவர்கள் தான். இத்தனை பேரும் எப்படி முன்னேறினார்கள்? அத்தனை பேரும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொண்டார்கள். ஆன்மா இந்த உடம்பில் இருக்கும் போது, ஏன் மாசுபட்டதென்றால், உடல் மாசு காரணமாக உயிர் மாசு வந்தது.

உடல் மாசு என்றால் என்னவென்று கேட்டான்? மல, ஜல, சுக்கிலம்.
மல, ஜல, சுக்கிலம் எப்படி வந்தது? பசி.
பசிக்கு என்ன காரணமென்று கேட்டான்? மூச்சுக்காற்றின் இயக்கம்.

நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றே பசிக்குக் காரணம். பசிக்கு உணவு தந்தால் அது சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தாகிய மல, ஜலத்தை வெளியே தள்ளும். பிறகு 72000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். அப்படி முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் வேலை செய்யும்.

பிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களும் வேலை செய்யும். ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து இதெல்லாம் தத்துவங்கள்.
இந்த உடம்பு என்பது காமதேகம். இந்த காமதேகத்திற்கு காரணம் மும்மலக் குற்றம்தான். மும்மலக்குற்றத்தை ஆசான் துணை கொண்டு மூலக்கனலை எழுப்பினால், மும்மலக்குற்றம் அற்றுப்போகும். மும்மலக்குற்றம் அற்றுப்போகும்போது அவன் மரணமிலாப் பெருவாழ்வை பெறுவான். அப்படி பெற்றவன் தான் குரு.
இது போன்ற வாய்ப்பை பெற்றவர்கள் நவகோடி சித்தர்கள். அதில் ஆசான் அகத்தீசர்தான் முதன்மையானவர். இதற்கெல்லாம் தலைவன் ஆசான் ஞானபண்டிதன். உலகத்திற்கே தலைவன் முருகன்தான். ஆசான் ஞானபண்டிதன் ஆசியில்லாமல் முடியாது. முருகா என்று சொல்வதற்கே மூன்று கோடி தவம் செய்திருக்க வேண்டும்.

முருகா எனவோர்தர மோதடியார்
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே

என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர். முதற்தலைவன் சுப்ரமணியர். அவரை வணங்கினாலும் குருவின் ஆசியில்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது.

ஆக குரு என்று சொல்லப்பட்டவன் மும்மலக்குற்றம் அற்றவன். பொருள் பற்று அற்றவன், ஜாதி துவேசம் அற்றவன். உண்மைப் பொருள் தெரிந்தவன். எதையும் செய்வான். ஆணைப் பெண்ணாக்குவான். பெண்ணை ஆணாக்குவான். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் தான் குரு.

கண்ணன் : நீங்க சொல்வதெல்லாம் ரொம்ப சரி. ஆனால் இன்றைக்கு ஏதாவது ஒரு தொழில்துறையைச் சார்ந்து லௌகீகத்தில் மூழ்கி மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நட்பு அப்படியென்கிற வட்டத்திற்குள் இருக்கிற ஒரு மானிடனுக்கு அவனுடைய வேலையைப் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. அவங்களுக்கெல்லாம் சம்பாதிப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் சூழ்நிலை காரணமாக சுகபோகங்களில் இருந்து அவனால் மீளவே முடியவில்லை . அப்படிப்பட்டவன் 99 சதம் இந்த ஐம்புலன்களின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறான். அவனால் வெளியேற முடியவில்லை. ஒரு ஆன்மீக ஈடுபாட்டில் கொஞ்சநேரம் கூட வர முடியவில்லை. அவன் இவ்வளவு விசயத்தையும் புரிந்து கொண்டு ஈடுபடுவதற்கு எளிய வழி என்ன?

குருநாதர் : இவ்வளவு விசயத்தை படிக்க வேண்டிய அவசியமில்லை. தொண்ணூற்றாறு தத்துவங்கள் எங்களுக்குத் தெரியும். இந்த தத்துவங்கள் எல்லாம் ஒரு குப்பை.

தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்தவருண் மோன வள்ளலையே – நித்தமன்பு
பூணக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்
காணத் துடிக்குமிரு கண்.
- தாயுமானவர் பாடல்கள் - உடல் பொய்யுறவு - கவிஎண் 29.

என்று சொல்வார். இந்த தத்துவங்களெல்லாம் படிக்க வேண்டிய அவசியமில்லை.

இல்லறத்தான் என்னய்யா செய்வது? இல்லறத்தான்தானே? ஒன்றும் கவலைப்படாதே. நீ முதலில் என்ன செய்யனும்? உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும். சைவ உணவை மேற்கொண்டு வரும்போதும், போகும்போதும், அகத்தீசா அகத்தீசா என்று சொன்னால் ஆசான் உன்னை பார்க்கிறார். அகத்தீசா என்று சொன்னவுடனேயே அவருடைய சீடர்கள் ஒன்பது கோடி ஞானிகள் இருக்கிறார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் பார்க்கிறார்கள். உனக்கென்ன குறை? என்னுடைய தொழில் முன்னேற்றமடையனும். என் பிள்ளைகள் நல்லபடியாக இருக்கனும். நான் செய்கிற வியாபாரம் நல்லபடியாக நடக்கனும். இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும். இப்படி கேட்டால் ஒன்பது கோடி ஞானிகளும், மனிதன் எதை விரும்புகிறானோ அதை செய்து முடிப்பார்கள்.

இல்லறத்தான் தானே கவலைப்படாதே. உனக்கு பூஜை செய்ய வாய்ப்பு இல்லையென்றால் கூட தொழில் செய்யும் போதே அகத்தீசா அகத்தீசா என்று சொல். உன்மேல் பார்வை பட்டுக் கொண்டேயிருக்கும். அவர் பார்வை மட்டுமல்ல. ஒன்பது கோடி ஞானிகளும் உன்னைப் பார்க்கிறார்கள். அகத்தீசா என்று சொல்லும்போதே, பதஞ்சலி முனிவர், திருஞானசம்பந்தர் யாராக இருந்தாலும் சரி. திருமூலதேவர், புஜண்டமகரிஷி, காசிபமகரிஷி, புலத்தீசர், புண்ணாக்கீசர் இது போன்ற ஞானிகள் பார்க்கிறார்கள்.

இல்லறத்தான் என்ன விரும்புகிறான் ? இல்லறத்தான் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். தொழில் நன்றாக இருக்க வேண்டும். வறுமையில்லா வாழ்வு வேண்டும். நோயில்லா வாழ்வு வேண்டுமென கேட்கிறான். அதை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஞானம் வேண்டுமென்று கேட்கும் போது அடே ஞானம் கேட்கிற அளவுக்கு ஒருத்தன் இருக்கிறானா? இல்லறத்தானை பார்த்து கேள் ஞானத்தை. கேட்டுக் கொண்டே வா, இல்லறமும் சிறக்கனும். குடும்பமும் சிறக்கனும், ஞானமும் சிறக்கனும்.

இல்லறமும் சிறப்பாக இருக்கனும். குடும்பமும் நன்றாக இருக்கனும். ஞானத்தையும் பெற வேண்டும். இப்படி கேட்டுக் கொண்டே வர வேண்டும். இல்லறத்தான் கேட்டுக் கொண்டே வந்தால் இதுவும் நன்றாக இருக்கும். அதுவும் நன்றாக இருக்கும். ஆனால் யாரிடம் கேட்பதென்று இருக்கிறதல்லவா? கேட்க வேண்டியவர்களை கேட்கனும். ஆசான் அகத்தீசரை கேட்கனும். ஆசான் புஜண்டமகரிஷியை கேட்கனும். ஆசான் திருமூலதேவரை கேட்கனும். ஆசான் பதஞ்சலிமுனிவரை கேட்கனும். ஆசான் திருஞானசம்பந்தரை கேட்க வேண்டும். என்ன வேண்டுமென கேட்பார்? இல்லறமும் நன்றாக இருக்கனும். அடியேன் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று கேட்க வேண்டும்.

இப்படி கேட்டால் இல்லறமும் சிறக்கும். துறவறமும் சிறக்கும். ஆனால் இல்லறத்தில் இருந்து கொண்டே ஒருவன் ஞானியாகலாம். ஆனால் உயிர்க்கொலை செய்யக்கூடாது. புலால் உண்ணக்கூடாது. மாதம் ஒருவருக்காவது உணவு தந்தேயாக வேண்டும். மாதம் ஒருவருக்காவது உணவு தருவான்.

நேற்று முழுவதும் பசியோடு இருந்திருப்பான். இவன் உணவு கொடுத்தால், புண்ணியவான் நல்லாயிரு என்பான். அடே அவன் மலர்ந்த முகத்தை பார்க்கிறான். முதலில் ஒரு மாதத்திற்கு ஒருவருக்கு அன்னதானம் செய்வான். அவன் புண்ணியவான் என்று சொல்வான். மறுபடி இரண்டு பேருக்கு அன்னதானம் செய்வான். இப்படியே எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒரு பக்கம் புண்ணியபலம் பெருகும். ஓம் அகத்தீசாய நம என்றால் அருள்பலம் வரும். புண்ணியபலமும் அருள்பலமும் சேரும். வலது கை புண்ணியம். இடது கை தவம். ஆக இரண்டும் ஒன்று சேரும். வலது கை புண்ணியம், இடது கை தவம்.

தவம் என்றால் என்னவென்று கேட்டான்? மூச்சுக்காற்றை கட்டுவதா? இதெல்லாம் சும்மா வெட்டிவேலை. ஓம் அகத்தீசாய நம என்று சொன்னாலே அது தவம். ஒருவன் மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் அது தர்மம். ஆக தர்மம் வலது கை. தவம் இடது கை. இரண்டும் சேராவிட்டால் ஒன்றுமில்லை. ஆக ஒன்றை மட்டும் பிடிக்க முடியாது. ஒரு வேலை செய்யும்போது இரண்டு கையும் தேவைப்படும். ஆக தர்மம் என்று சொல்லப்பட்ட வலது கையும், தவம் என்று சொல்லப்பட்ட இடது கையும் ஒன்றுபட்டால்தான் அது விளங்கும்.

கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க.
- திருவாசகம் - சிவபுராணம் - வரி எண் 9.

யாரொருவன் ஞானிகளை வணங்குகிறானோ? அவனுள்ளே மகிழ்ச்சி உண்டாகும். அவனுடைய எல்லா துன்பங்களும் தீரும்.

தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 7.

ஞானிகள் தனக்கு ஒப்புமை இல்லாதவர்கள். உன்னால் இதை கடைப்பிடிக்க முடியாது. ஞானிகள் காமத்தை வென்றவன், பசியை வென்றவன், எல்லா பற்றுகளையும் துறந்தவன். சிலபேர் மனக்கவலை மாற்றுவதற்கு ஏதேதோ செய்வார்கள். அவன் முதலிலேயே சொல்லி விட்டான். இதெல்லாம் குப்பையடா, ஒன்றும் முடியாதடா. எவனொருவன் ஞானியோ? எவனொருவன் எதையும் செய்யும் வல்லமையுள்ளவனோ? அவனுடைய திருவடியை பற்றாமல், உனக்கு மனக்கவலை தீராதென்று சொன்னான். நான் சொல்லவில்லை ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

யாராக இருந்தாலும் சரி. முற்றுப்பெற்ற முனிவன் ஆசான் திருவள்ளுவர், முற்றுப்பெற்ற முனிவன் இராமலிங்க சுவாமிகள், முற்றுப்பெற்ற முனிவன் மாணிக்கவாசகர், முற்றுப்பெற்ற முனிவன் ஆசான் திருஞானசம்பந்தர், முற்றுப்பெற்ற முனிவன் திருநாவுக்கரசர், முற்றுப்பெற்ற முனிவன் ஆசான் பதஞ்சலி முனிவர் இதுபோன்ற ஞானிகளை வணங்காவிட்டால் மனக்கவலையை நீக்க முடியாது. ஆக இல்லறத்தானுக்கு இதுதான் உபாயம்.

கண்ணன் : இந்த புலால் உண்ணாமை, கொல்லாமை. இதெல்லாம் சைவத்தில் அடக்கம் என்று சொல்லியிருக்கிறது.
குருநாதர் : ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 251.

மனிதன் தன்னுடைய உடலை வளர்ப்பதற்காக எவ்வளவோ தாவர உணவுகளை கடவுள் படைத்திருக்கிறான். வகைவகையான கனிகள், வகைவகையான காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகளெல்லாம் படைத்திருக்கிறான். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு நீ ஒரு உயிரைக் கொன்று அந்த உடம்பை சாப்பிட்டால் எப்படிடா கடவுள் அருள் உனக்கு கிடைக்கும்? என்று கேட்கிறார் ஆசான் திருவள்ளுவர்.

எப்படி உனக்கு அருள் செய்வான்? ஆக புலால் உண்ணுகின்ற மக்களுக்கு அருள் கிடைப்பது தாமதம்தான்.
கண்ணன் : சைவத்தின் வேறு சிறப்பு என்ன?
குருநாதர் :
சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம் அகப்பேய்
சற்குரு பாதமடி.
- மகான் அகப்பேய்ச்சித்தர் - கவி எண் 55.

சற்குரு பாதம்தான் சைவம். அதே சமயத்தில் அசைவம் சாப்பிட்டுவிட்டு சற்குருவை வணங்கினால் அருள் செய்ய மாட்டாங்க. அருள் செய்வதற்கு ஒரே உபாயம், புலால் மறுத்தல், உயிர்க்கொலை தவிர்த்தால்தான் முடியும்.

சைவ உணவு வகைவகையாக செய்வதற்கு வாய்ப்பிருக்கு. ஆயிரக்கணக்கான வகையில் சைவ உணவு சாப்பிடலாம். பலவகையான கீரை வகைகள், பருப்பு வகைகள், முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு, பால், நெய் இவ்வளவும் இருக்கும்போது, இன்னொரு உயிரின் உடம்பை அறுத்து சாப்பிட ஞானிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சைவம்தான் அவன் கடைப்பிடிக்க வேண்டும். எண்ணத்தில் சைவம் இருக்கிறது. உணவில் சைவம். உணர்வில் சைவம். செய்கையில் சைவம். பார்வையில் சைவம். அட பார்வை எப்படி சைவம் என்றால், அருள் பார்வை. அப்படி பார்க்கும்போதே அருளோடு பார்க்க வேண்டும்.

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொ லினதே அறம்.
- திருக்குறள் - இனியவை கூறல் - கவி எண் 93.

இது பார்வையா இது? பார்வையா இது? என்பது போல் இருக்கக் கூடாது.

பார்க்கும் போதே கனிவாக பார்க்க வேண்டும். முகத்தான் அமர்ந்து - மலர்ந்த முகமும், இனிமையாகவும், அகம் மலர்ந்த உள்ளும் புறமும் தூய்மையான சொற்களே அறமென்று சொல்லிவிட்டான் ஆசான் திருவள்ளுவர்.

அகம் பொருந்திய இன்சொற்களே இனிய அறமென்று சொல்லிவிட்டான். இவ்வளவு இலகுவாக இருக்கிறதென்றால் இதுதானடா அறம்.

''வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா! சாப்பிட்டீங்களா!" என்று கேட்கும்போது அந்த மலர்ந்த முகமும் இனிமையாக பார்த்தலும், தூயமனதோடு பேசுதலும் இதுதானடா அறம் என்றார். என்னடா இவ்வளவு இலகுவாக இருக்கிறது அறம்? இதுதான் அறம்.

வரும்போதும் பார்க்கும் போதும் இனிமையாக பார்க்க வேண்டும். அன்பர்களிடத்துதானே பேசுகிறோம். வெளியில் பேசவில்லை. தன்னை நோக்கி வந்த விருந்தினர்களை அன்போடு பார்த்து மலர்ந்த முகமாகவும் இனிமையாக பேசனும். ஆனால் வஞ்சனை இருக்கக்கூடாது. அகத்தான் அமர்ந்து இனிது சொல் என்றார். தூயமனதோடு பேசுகின்ற தூயமனம். இனிமையான பார்வை. இனிமையாக பேசுவது. இதுவே அறமென்று சொன்னார் ஆசான் திருவள்ளுவர்.

கண்ணன் : அறமென்பதை நன்றாக தெளிவாக சொன்னீர்கள்.
குருநாதர் : அறமென்பதே எங்கெல்லாம் பிற உயிர்களுக்கு கருணை காட்டுகின்றானோ? பிற உயிர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமென்று நினைக்கிறானோ? அதுவே அறம். அறமென்பதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை. பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுவதே அறமாகும்.

கண்ணன் : அதில் அன்னதானம் மிகச் சிறந்ததா?
குருநாதர் : அன்னதானம் என்று சொல்லும்போது, அவன் பசியோடு இருப்பான். பசியாற்றக்கூடிய எண்ணம் எங்கிருக்கிறதோ? அது அறம். அந்த சிந்தனையே கடவுள் வாழுகின்ற இடம். பிறருக்கு பசியாற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே அங்கே கடவுள் இருக்கிறான். கடவுளை எங்கேயும் தேடிப்போக வேண்டியதில்லை. தூயமனம் உள்ளவனே கடவுள். உண்மைப் பொருளுணர்ந்தவன் எந்த அளவுக்கு பிறர் மகிழ நடந்து கொள்கின்றானோ? அதுவே அறம், அதுவே தவம், அதுவே ஞானம், அதுவே முக்தி.

கண்ணன் : பாரதியார் சொல்லும் போது எல்லா அறங்களையும் வரிசைப்படுத்திவிட்டு அன்னதானத்தில் ஆரம்பித்து ஆலயம் கட்டுவதை விட ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது பெரிது. புண்ணியம் கோடி அப்படி என்றார். அன்னசத்திரம் ஆயிரம் கட்டலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். எழுத்தறிவித்தல் தான் எல்லாவற்றையும் விட பெரிதா?

குருநாதர் : எழுத்து என்பது இரண்டு அர்த்தம் இருக்கு . அகாரம் உகாரம் இருக்கு. எழுத்தறிவித்தல் இறைவன் என்று சொல்லும்போது, இந்த கண்டஸ்தானத்திற்கு உகாரம் என்ற பொருளுண்டு. புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்றுக்கு அகாரம் என்ற பொருளுண்டு. எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சொல்லும்போது அதன் உண்மைப்பொருள் அகாரம் உகாரத்தைப் பற்றி அறிந்தவன் தான் இறைவன்.

இதுதான் ஏராளமான இடத்தில் பள்ளிக்கூடம் இருக்கே. அதன் இரகசியம் வேறு. அது எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சொல்லும்போதே அகாரம் உகாரத்தைப் பற்றி அறியனும். இது அகாரம், இது உகாரம். இது பெண், ஆண். இது சுழிமுனை என்று சொல்வார்கள். அகாரம் உகாரம் இரண்டையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்திவிட்டால் அவன் தான் கடவுள். அதுதான் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சொல்வான்.

இங்கிருக்கும் படிப்பெல்லாம் படிப்பில்லை. அது உலக நடைக்குத்தான் ஆகும். ஆனால் சாகாக்கல்வி என்ற ஒன்று இருக்கிறது. அது சாகாக்கல்வி என்பது எது என்று கேட்டான். இந்த மூச்சுக்காற்று போய் ஒடுங்கினால் அது திரும்பாது. அங்கேயே தங்கிவிடும். அதுதான் சாகாக்கல்வி.

அப்ப இன்னொரு சாகாக்கல்வி எது என்று கேட்டான்? ஆசான் அகத்தீசன்தான் பெரிய மகான். அவர்தான் நம்மைக் காப்பாற்றுவார். அவருடைய திருவடியை பூசிப்பதுதான் உண்மை என்று சொல்வது. அதைப்பற்றி சிந்திப்பதுதான் சாகாக்கல்வி. வேறு ஏதும் சாகாக்கல்வி என்று ஒன்றும் இல்லை.

முற்றுப்பெற்ற முனிவனின் திருவடியைப் பற்றுவதே சாகாக்கல்வி.
பசியாற்ற வேண்டும். பசியாற்ற வேண்டும் என்று நினைப்பது சாகாக்கல்வி. எவ்வுயிர்க்கும் இடையூறு செய்யமாட்டேன் என்று நினைப்பது சாகாக்கல்வி. விருந்தை உபசரிப்பேன் என்பது சாகாக்கல்வி.
பசித்த ஏழைக்கு பசியாற்றுவேன் என்பது சாகாக்கல்வி.
தினமும் உன் திருவடியை பூசிப்பேன் என்பது சாகாக்கல்வி.
சாகாக்கல்வி என்ற ஒன்று தனியாக இல்லை. தூயமனமே சாகாக்கல்வி. தூய்மையானவனின் திருவடியை பூசிப்பதே சாகாக்கல்வி.

அகத்தீசா அடியேன் பாவிதான். அடியேனை ஏற்றுக்கொள் என்று சொன்னால் அது சாகாக்கல்வி.
திருவடியை தினமும் பூசிக்க அருள் செய் என்று கேட்டால் அது சாகாக்கல்வி.
உன் திருவடியை தினம் பூசித்து ஆசி பெற எனக்கு அருள் செய் என்று கேட்டால் அது சாகாக்கல்வி. இதுதான் சாகாக்கல்வி.

கண்ணன் : என்னை மாதிரி ஆட்களாக இருக்கட்டும் அல்லது இளைஞர்களாக இருக்கட்டும். எல்லோருக்குமே இன்றைய சூழலில் இந்த ஆன்மீகத்திலெல்லாம் அவ்வளவு ஈடுபாடு வரமாட்டேன் என்கிறது. இராமலிங்க அடிகளார் என்றால் வயதானவர்களுக்கு மட்டும் என்று நினைக்கிறார்கள். திரு அருட்பா என்றால் இந்த சினிமா பாட்டை விட பெரிய பாட்டு ஏதாவது இருக்கிறதா? என்று அவர்களுக்கு ஞாபகம் இல்லை. அந்த மாதிரி இந்த சமூக சேவை அன்னதானம் நல்ல பணிகள் காரியங்கள் இதிலெல்லாம் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி கொண்டு வருவது எப்படி? அது சாத்தியமா? அது நடக்குமா?

குருநாதர் : இந்த தேகம் காமதேகம். இருபது வயதில் மனம் தத்தளிக்கும். இருபது இருபத்தைந்து வயது என்றாலே மனம் தத்தளிக்கும். அவன் இந்த துறைக்கு வர முடியாது. ஏன்னா காமதேகம்.

இந்த காமதேகத்திற்கு காரணம் என்னவென்று கேட்டான். தாய்தந்தை காமம்தான் இந்த உடம்பே! இந்த உடம்பிற்கு தாய்தந்தையர்கள் கூடுகிறார்கள். காமத்தால் கூடுகிறார்கள். இந்த தேகம் காமதேகம்.

இளம் வயதில் என்ன பேசினாலும் அவன் சிந்தை பூராவும் பெண்கள் பேரில்தான் இருக்கும். ஆனால் அவனுக்கும் வாய்ப்பிருக்கு. சொல்லி தரணும். ஆரம்பத்திலேயே தாய்தந்தையர் சொல்லித்தரணும். கோவிலுக்கு போ. சிவன் கோவிலுக்கு போ. அங்கே தட்சணாமூர்த்தியை வணங்கு . முருகப்பெருமானை வணங்கு என்று சொல்ல வேண்டும்.

பிள்ளைகளுக்கு ஐந்து ஆறு வயதிலேயே ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டும். பிள்ளைகளுக்கு பத்து பதினைந்து வயதிலேயே சொல்ல வேண்டும். பத்து வயதிலேயே சொல்லிக் கொடுத்துக் கொண்டே வரணும். கொஞ்சகொஞ்சமாக வந்தால்தான் அந்த மாதிரி ஆரம்பத்திலேயே ஆன்மீக குடும்பமாக இருந்தால் மட்டும் அந்த இளைஞர்கள் தேறுவாங்க.

அதேசமயத்தில் மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஞானம் என்று சொன்னால் கிலோ என்ன விலை என்று கேட்பான். அந்த பாரம்பரியம் இருக்கு. சைவ குடும்பத்தில் பிறக்கனும். அவங்க சொல்லி தருவாங்க. காலையில் சிவபெருமானை வணங்கு. சிவபூஜை செய் என்று சொல்வாங்க. அந்த மரபு இருக்கு. அந்த மரபில் வந்தவன் தான் அந்த இளைஞர்கள் மட்டும்தான் தெளிவடைய முடியும். அதுபோல மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறந்தவனுக்கு ஞானம் என்று சொன்னால் அது ஈனம் என்று போயிடுவான்.

சைவ குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். சிவபூஜையில் பற்றிருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். இது போன்ற குடும்பத்தில் பிறந்த இளைஞர்களுக்கு சொன்ன உடனே புரியும்.

இல்லையென்று சொன்னால் அவர்களது சிந்தனை முழுவதும் மயக்கும் மாயையில்தான் இருக்கும். இப்போது சில இளைஞர்கள் இருபது வயதிலேயே மது அருந்துகிறார்கள். மது, மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

ஆனால் மரபில் வந்தவர்கள் மட்டும் சாப்பிடமாட்டார்கள். எந்த மரபு? அந்த உயர்ந்த மரபிலிருந்து வந்த மக்கள் மட்டும் இது போன்ற புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல் இது போன்ற பழக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். மரபிருக்க வேண்டும். அந்த உயர்ந்த மரபில் பிறந்தவர்கள் மட்டும்தான் இளைஞர்கள் மட்டும்தான் தெளிவடையலாம்.


மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அது அவ்வளவு இலகுவல்ல. ஆகவே இளைஞர் சமுதாயத்தில் நூற்றுக்கு இருபத்தைந்து சதம் இன்னும் பண்புள்ள மக்கள் இருக்கிறார்கள். அந்த மரபில் வந்ததனால் மிச்சம் இருக்கலாம், இனிமேலும் மாறலாம்.

கண்ணன் : மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாமா? மற்ற இளைஞர்கள் சீரழிந்து போவதோ? இல்லை செயலில்லாமல் இருப்பதோ? அல்லது நாட்டைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதோ? தேசத்தைப் பற்றியோ ஆன்மீகத்தைப் பற்றியோ கவலைப்படாமல் இருப்பதோ? எதிர்கால சந்ததிக்கு அது ஒரு நல்ல விசயமில்லையே.

குருநாதர் : முன் செய்த நல்வினை இருந்தால் மட்டும் அவனுக்கு தெளிவான அறிவிருக்கும். முன் ஜென்மத்தில் பல உயிர்க்கொலை செய்தலும் புலால் உண்ணுதலும் பல கொடுமைகள் செய்திருந்தால் இந்த பிறப்பில் அவனை தெளிவுபடுத்த முடியாது. ஆனால் முன் சென்மத்தில் ஞானிகள் தொடர்பு இருந்தால் மட்டும்தான் அவர்கள் தெளிவடைய முடியும். மற்றவர்களெல்லாம் தெளிவடைய முடியாது.

கண்ணன் : நீங்கள் முன் ஜென்மம் என்று சொன்னதும். எனக்கு கர்மாவைப் பற்றி ஞாபகம் வருகிறது. அதாவது கர்மா என்று சொல்கிறோம். அதே போன்று நல்வினை தீவினை என்று சொல்கிறோம்.


குருநாதர் : கர்மா என்றால் செயல் என்று அர்த்தம். கர்மா என்றால் கர்மம் என்று அர்த்தம். கர்மம் என்றால் செயல் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை.

கண்ணன் : கர்மா என்றால் போனபிறவியில் செய்த எவை?
குருநாதர் : போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள்.
கண்ணன் : இந்த பிறவியில் அந்த கர்மா வந்து நம்மை தாக்குகிறதா? பாதிக்குதா? நல்லது செய்யுதா?
குருநாதர் : வரும். இந்த உடம்பும் உயிரும் செய்த குற்றங்கள். உயிரைச் சேரும். உடம்பும் உயிரும்தான் செய்தது. தனி உயிர் பாவம் செய்ய முடியாது. தனி உடம்பு பாவம் செய்ய முடியாது. தனி உடம்பு பிணம். தனி ஆன்மா என்பது சிற்றணு. ஒரு சிற்றணுதான் அது. உடம்பில் இருக்கும் போது உடம்பும் உயிரும் செய்யக்கூடிய பாவபுண்ணியங்கள் உயிரைச் சேரும். நல்வினை இருந்தால் அது பண்புள்ள குடும்பத்தில் பிறக்கச் செய்யும். தீவினை இருந்தால் பாவக்குடும்பத்தில் பிறக்கச் செய்யும். அதுதான் முன்செய்த கர்மம் என்பது.

கண்ணன் : நல்ல ஆற்றல், அறிவு, திறமை, முயற்சி இத்தனையும் இருந்து ஒரு சில பேருக்கு கிடைக்க வேண்டிய இடம் கிடைக்கவில்லை. அதேசமயத்தில் ஒரு தீயவழியில் போகிறவன் சீக்கிரமாக பணக்காரனாகி விடுகிறான். புகழ் அடைந்துவிடுகிறான். அப்படி எண்ணும்போது நல்ல வழியில் இருப்பவன் யோசிக்கிறான். ஏன் நல்ல வழியில் அமைதியாக எதுவுமில்லாமல் இருக்கனும்? அதற்கு அந்த வழி நல்லது போலிருக்கே! அவனுக்கு எல்லாமே கிடைத்து விடுகிறதே என்று நினைக்கிறான்.

குருநாதர் : அதெல்லாம் சும்மா. சிலபேருக்கு செல்வம் சேருகிறது என்று சொன்னால் அது முன் செய்த நல்வினை. அதற்காக அவன் தவறான பாதையில் போகிறானா? அது முன் செய்த நல்வினை இருந்தது, செல்வம் சேர்ந்தது. அதற்காக அவனை குறை சொல்ல முடியாது. அவன் பாதையை இவன் பின்பற்ற நினைத்தானென்றால் உள்ளதும் போய்விடும்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
- திருக்குறள் - வினைத்தூய்மை - குறள் எண் 659.

பிறர் வருந்தும்படி பொருள் சேர்த்தால் நம்மை வருந்தும்படி செய்துவிட்டு போகுமென்று சொன்னார் ஆசான் திருவள்ளுவர்.

கண்ணன் : கிடைத்த அளவை வைத்து அமைதியடைய வேண்டுமா?
குருநாதர் : அதற்கு திருவருள் துணையிருக்க வேண்டும். மனதை விரிவுபடுத்திக் கொண்டே இருப்பான். முதலில் ஒரு இலட்சம் சேர்ப்பான். அப்புறம் இன்னொரு இலட்சம் சேர்ப்பான். அப்புறம் இன்னொரு இலட்சம் சேர்ப்பான்.

இந்த மனது ரப்பர் பை. விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். கிடைத்தது போதுமென்று நினைப்பதற்கு புண்ணியவான்களுக்கு மட்டும்தான் முடியும். புண்ணியவான்கள் மட்டும் நமக்கு இவ்வளவுதான் என்று நிறைவடைவான். மற்றவனெல்லாம் செல்வம் சேரச்சேர அதுல செய்யலாம், இதுல செய்யலாம். அதுல பத்துகோடி கிடைக்கும், இதுல ஐந்து கோடி கிடைக்கும், இப்படி போய்க்கிட்டே இருப்பான். கடைசிவரை கற்பனை பண்ணிக்கொண்டே போய்க்கொண்டிருப்பான். வயதாகி கொண்டே இருக்கும். ஊர் போய் சேர்ந்திடுவான்.

கண்ணன் : புண்ணியவான்களுக்கு கிடைத்த அளவை வைத்தே மனதிருப்தியும் மனநிறைவும் கிடைக்குமா?
குருநாதர் : அவன் புண்ணியவான் ஆனாலும் ஞானிகள் திருவடியை அவன் பூஜை செய்திருக்க வேண்டும். புண்ணியம் செய்த மக்கள், திருவடி பூஜையை செய்தால்தான் கிடைத்தது போதுமென்று கடவுள் நமக்கு இவ்வளவுதான் கொடுத்திருக்கிறான். நமக்கு அவ்வளவுதான் அமைப்பென்று இருப்பான். மன அமைதி அவனுக்கு கிடைக்கும்.

தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 7.

ஞானிகள் ஆசியில்லாமல் மகான் இராமலிங்க சுவாமிகள் ஆசியில்லாமல் ஒருவனுக்கு சாந்தம் உண்டாகாது. கிடைத்தது போதுமென்று நினைக்கின்ற எண்ணமே ஞானிகள் ஆசியால்தான் முடியும். ஏனென்றால் மனது விரிவடைந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். கோடிக்கணக்காக சம்பாதித்து கொண்டேயிருப்பான். இன்னும் கோடி என்று போய்க்கொண்டே இருப்பான். கடைசியாக கோடிக்கணக்காக சம்பாதித்தவன் தெருக்கோடியில் போய் நிற்பான்.

கண்ணன் : பிரளயம், பூகம்பம், சுனாமி, விஷவாயு இப்படி நிறைய விபரீதங்களால் மக்கள் தொகை இழப்பு நடக்கிறது. பூமியில் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வெள்ளப்பெருக்கு வருகிறது. இன்னும் கடல் கொந்தளிக்க போகுது. உலகமே அழியப்போகிறதென்று வெளிநாட்டில் விஞ்ஞானத்தில் ஆதாரங்களை காட்டுகிறார்கள். அப்படி இருக்கிறப்ப நாம் நல்லது செய்து புண்ணியம் செய்து அன்னதானம் செய்து இந்த உலகம் சுபிட்சமாக இருக்குமென்று நம்பிக்கொண்டிருக்கலாமா?

குருநாதர் : ஞானிகளை வணங்குகின்ற மக்கள் மிகுதி ஆகஆக அவர்கள் புண்ணியத்தால் இயற்கையை வெல்லலாம். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றணுமென்ற நினைப்பு இருப்பவன் தான் சான்றோன், அவன்தான் ஞானி. அதுபோன்ற பண்புள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து பேராவது இருக்க வேண்டும். இன்றைக்கு நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை.

நூற்றுக்கு ஒருவர் கூட இல்லையெனில் என்ன செய்யும்? இயற்கைச் சீற்றங்கள் வரும். உலகம் அழியத்தான் செய்யும். ஞானிகள் தான் அதைத் தடுக்க முடியும். புண்ணியவான்கள் நிறைய பேர் இருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் புண்ணியக் கூட்டம் இருக்க வேண்டும். புண்ணியக் கூட்டம் இருந்தால் இயற்கைச் சீற்றத்தைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் அவ்வளவுதான் இயற்கை சீற்றம் புகுந்து அடித்து நொறுக்கி விட்டுப்போகும்.

கண்ணன் : அந்த பயம் மக்களுக்கு ஏன் இன்னும் வரவில்லை? அந்த விழிப்புணர்ச்சி ஏன் இன்னும் வரவில்லை?
குருநாதர் : அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், ஒவ்வொருத்தரும் நாம நாற்பது ஆண்டுக்கு இருப்போம். நூறு ஆண்டுக்கு இருப்போம். ஐநூறு ஆண்டுக்கு இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருப்பான். நாளைக்கு சாகப்போகிறோமென்று அவனுக்கே தெரியாது. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.

நேற்று நல்லபடி இருந்தான். அட காலையில் பார்த்தேனய்யா. நல்லாப் பேசிக்கிட்டு இருந்தாரு. காலையில்தானே பார்த்தேன். இப்ப பார்த்தேன். ஊருக்குப் போயிட்டாரு என்பான். ஆக "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு” என்றார் ஆசான் திருவள்ளுவர்.

எந்த மனிதனுக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாது. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 337.

அடுத்த நிமிடம் இருப்பது அவனுக்கேத் தெரியாது. திடீரென விபத்து நடக்கும், வாகனம் அடித்து நொறுக்கிட்டுப் போகும். ஆனால் நினைப்பு மட்டும்? ஒரு பொழுதும் வாழ்வதறியார். ஒரு நொடிப்பொழுதாவது தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க மாட்டானடா மடையன் !
இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொல்கிறார். அப்ப உலகமே கற்பனையில் இருக்கும். ஆனால் ஞானிகள் மட்டும் இன்றைக்கு நாள் போச்சு இனி வராது என்பார்கள்.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 334.

இன்றைக்குப் பொழுது போய்விட்டது. நாளைக்கு எமன் வந்து விடுவானே? நாமென்ன செய்வது? என்று பயப்படுவது ஞானிகள் மட்டும்தான். ஆனால் இல்லறத்தான் அப்படியல்ல. அவன் பாட்டுக்கு கற்பனை பண்ணிக்கிட்டே இருப்பான். அவன் போய்கினே இருப்பான்.

கண்ணன் : இறப்பு வந்து பணக்காரன், ஏழை என்று பார்ப்பதில்லை, படித்தவன், படிக்காதவன் என்று பார்ப்பதில்லை, நல்லவன் கெட்டவன் என்று பார்ப்பதில்லை. ஆனால் நிலையில்லாத உலகத்தில் எப்படி மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கிறார்கள்? மற்றவர்களுக்கு கெடுதல் பண்ணுகிறார்கள்? தீங்கு செய்கிறார்கள். நல்லது செய்ய மறுக்கிறார்கள் அல்லது சும்மா இருப்பது தர்மம் என்றுகூட இருக்கமாட்டேன் என்கிறார்களே?

குருநாதர் : எவனொருவன் மற்ற உயிருக்கு இடையூறு செய்கிறானோ? அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பவே முடியாது. எந்த அளவுக்கு உயிரினங்களுக்கு மகிழ்ச்சி உண்டு பண்ணுகின்றானோ? அந்த அளவுக்குக் கடவுள் ஆசி பெறுகிறான்.
அது ஏன் அப்படியென்றால் எல்லாம் கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு எந்த அளவுக்கு நன்மை செய்கிறானோ? அந்த அளவுக்கு கடவுள் ஆசி பெறுகிறான் அவன். பிற உயிர்களுக்கு பொருளாதாரத்தின் காரணமாகவோ , காமத்தின் காரணமாகவோ யான் என்ற கர்வத்தின் காரணமாகவோ பதவியின் காரணமாகவோ வேறு பல காரணமாகவோ எவன் கர்வம் கொண்டு பிற உயிர்களுக்கு இடையூறு செய்தானானால் கடவுள் கோபத்திற்கு ஆட்படுவான், தண்டிக்கப்படுவான்.

கண்ணன் : நிறைய மார்க்கங்கள் இருக்கு. ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொன்று சொல்லுது. அதனால் மனித மனங்களில் சில குழப்பங்கள் வருது. எது சரியான மார்க்கம்?
குருநாதர் : ஒரே மார்க்கம். அது என்ன மார்க்கம் என்றால், அதுதான் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம்தான் ஒரே மார்க்கம்.

ஜீவகாருண்யம் என்னவென்று கேட்டால் மனைவிகிட்ட அன்பு காட்டுடா, தாய் தந்தையரிடம் அன்பு காட்டுடா, உன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையிடம் அன்பு காட்டு. அவர்கள் மனதார உன்னை வாழ்த்தணும்.

அவர்கள் உன்னை வாழ்த்தும்படி நடந்து கொண்டால்தான் நல்லது. அன்பு என்பது எந்த அளவுக்கு உயர்கிறதோ? அந்த அளவுக்கு அவன் கடவுள் தன்மை அடைகிறான். அது ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம்தான் உண்மை .

அந்த மார்க்கம்தான் உண்மை. காருண்யமே கருணை, ஜீவதயவு, அதற்கு மாற்றுப்பேச்சே இல்லை. ஜீவதயவு எங்கே இருக்கிறதோ? அங்கே கடவுள் இருக்கிறான். உயிர்களிடத்தில் கருணையோடு இருந்தால், புலால் உண்ண வேண்டுமென்ற நினைப்பு வருமா?

புலால் உண்ணுகின்றவன் என்ன செய்வான்? முயல் அழகாயிருக்கும். அதை அப்படியே பிடித்து கழுத்தை அறுப்பான். அடே பாவி! இவ்வளவு மென்மையான உயிரை அறுக்கிறாயடா! அந்த புலாலின் மேல் சாப்பிட இருக்கும் விருப்பத்தினால்தானே அந்த மென்மையான உடலை அறுக்கிறாய். அது கைகால் துடிக்கும். இது வன்மனம் இல்லையா? ஜீவகாருண்யம்தான் ஞான வீட்டின் திறவு கோல் என்று எண்ணும்போது உயிரினங்கள் பால் கருணை காட்டுவது எதுவோ? அதுவே கடவுளாவதற்குரிய முறை. அதுதான் ஆன்மீகம். அதுதான் உண்மை .

கண்ணன் : பக்தி, ஆன்மீகம், தோத்திரப்பாடல்கள், நாமாவளி எதுவுமே இல்லாது ஒரு குடியானவன் கூட உயிர்களிடத்திலே அன்பு காட்டினால் போதுமா? அது பக்திதானே?

குருநாதர் : அவன் குடியானவனாக இருந்தாலும் சரி. அவன் யாராக இருந்தாலும் சரி. அவன் காலை மாலை பூஜை செய்ய வேண்டும். பூஜை என்பது வேறு ஒன்றுமில்லை. காலையில் எழும்போதே அகத்தீசா! இன்றைக்குப் பொழுது நல்லபடியாக இருக்க வேண்டும். என் விவசாயம் நல்லபடியாக நடக்க வேண்டும். என் குடும்பம் நல்லபடியாக இருக்க வேண்டுமென்று கேட்க வேண்டும். இப்படி கேட்டால் அதுதான் ஆன்மீகம். அதுதான் ஜீவகாருண்யம். குளிக்கும்போது கூட ஒரு மரத்தடியில் நின்று குளித்தால் அது ஆன்மீகம்.

கண்ணன் : எப்படி அது?
குருநாதர் : வீட்டுக்குப் பின்னால் மரம் இருக்குமல்லவா? தென்னம்பிள்ளை இருக்குதல்லவா? இரண்டு மூன்று குடம் குளிப்பான். அந்த தண்ணீர் வீணாகாமல் மரத்திற்கு போகிறதல்லவா? அதுவும் ஆன்மீகம்தான்.
கண்ணன் : ஆக எந்த வகையிலாவது பிறருக்கு உதவுவது போல் செயல்கள் இருக்க வேண்டும்?

குருநாதர் : ஒரு மரத்திற்கடியில் நின்று குளிப்பது ஆன்மீகம்தான். அதே சமயத்தில் பால் கறக்கும் போது கன்றுகுட்டிக்கு கொஞ்சம் பால் கொடுக்க நினைப்பது ஆன்மீகம். கன்றுகுட்டிக்கு பால் கொடுத்துவிட்டு கறக்க நினைப்பது ஆன்மீகம். சுத்தமாக கறந்து விட்டானானால் அது ஆன்மீகமல்ல. அது பாவச்செயல்.

கண்ணன் : ஆக ஆன்மீகம் என்பது இந்த மாதிரி கருணை, அன்பு எல்லவாற்றிலும் இருக்கிறது.
குருநாதர் : ஆமாம் கருணையில்லாதவனுக்கு ஆன்மீகமில்லை. தயைசிந்தை இல்லாதவனுக்கு ஆன்மீகமில்லை. தயை சிந்தை , அருள், காருண்யம், கருணை எல்லாம் ஒரே பொருள். அருள் என்பதே தயை சிந்தைதான்.

கண்ணன் : கோவிலுக்கே போகாதவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியும். அப்போ? கோவிலுக்கே போகாமல் ஒருத்தன் அன்பு செலுத்துவது மூலமாகக் கூட ஆன்மீகவாதியாக முடியுமா?
குருநாதன் : அன்புதான் கடவுள் என்று சொல்கிறார் அல்லவா.

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே”

என்கிறார் மகான் இராமலிங்க சுவாமிகள் தமது ஆறாம் திருமுறையில்.
அப்போ திருமந்திரத்தில் ஆசான் திருமூலர் சொல்லும்போது கூட, அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் என்னடா! இப்படி சொல்கிறார் ஆசான் திருமூலர் தமது திருமந்திரத்தில்,

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
- திருமந்திரம் - அன்புடைமை - கவிஎண் 270.

அன்பு வேறு சிவம் வேறல்ல. திருமந்திரத்தில் ஆசான் திருமூலர் இதை சொல்லியிருக்கிறார். அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார். அவனெல்லாம் மூடனடா என்றார்.)

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - சிவம் வேறு அன்பு வேறில்லை. மனைவியை சிலபேர் கொடுமைப்படுத்துவான். சிலபேர் தண்ணி போட்டுகிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்துவான். அவள் தடுமாறுவாள். இது பாவச்செயல்.

எந்த அளவுக்கு மனைவி மக்கள் தாய் தந்தையை, உடன்பிறந்தவர்களை மகிழ்விக்கிறானோ? அந்த அளவிற்கு அது புண்ணியச்செயல். வருகின்ற விருந்தினர்களை வந்த விருந்தை உபசரிக்க நினைப்பதே அருள்தான்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
- திருக்குறள் - விருந்தோம்பல் - குறள் எண் 86.

வருகின்ற விருந்தினரிடம் தினந்தினம் அன்பு காட்டுகின்றவனுக்கு வறுமை என்கிற பேச்சேயில்லை என்றான்.

கண்ணன் : உங்களைப் பின் பற்றணும். குருவாக ஏற்றுக் கொள்ளணும் என்பவர்களுக்கு நீங்கள் சொல்கின்ற அறிவுரை என்ன?
குருநாதர் : என்னைக் குருவாக ஏற்றுக்கொள்ள நான் விரும்ப மாட்டேன். நான் சாதாரண ஆள்தான். என்னைக் குருவாக நினைக்காதே? நான் சராசரி மனிதன்தான். இன்னும் நாயினும் கடையன் நான்.

எனக்கு குரு ஆசான் அகத்தீசர்தான். எனது ஆசான் ஞானபண்டிதன்தான். எனது ஆசான் திருஞானசம்பந்தன்தான். எனது ஆசான் திருமூலதேவர்தான். எனது ஆசான் பதஞ்சலி முனிவர்தான். எனது ஆசான் புஜண்டமகரிஷிதான். இவரைத்தான் குருவாக நீ ஏற்றுக் கொள்ளணும். என்னை நீ குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. என்னை குருவாக ஏற்றுக் கொள்ளாதே? எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்வேன்.

கண்ணன் : உங்களை வழிகாட்டியாக நினைக்கலாமா?
குருநாதர் : அது நினைக்கலாம். இப்ப கைகாட்டி இருக்கிறது. கைகாட்டி இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் இது தம்மம்பட்டி, இது திருச்சி, இது முசிறி என கைகாட்டி இருக்கும். நான் கையைத்தான் காட்டலாமே தவிர நான் கைகாட்டிதானே தவிர குரு இல்லை.

கண்ணன் : ஜனங்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக, உற்சாகமாக வாழ்வதற்கு என்ன எளிய வழி?
குருநாதர் : இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணம், மகிழ்ச்சியோடு இல்லாதிருப்பதற்கு காரணம் என்னவென்றால்? முதலில் சின்ன வீடு கட்ட ஆரம்பிப்பான். பக்கத்து வீட்டுக்காரன் வருவான். இரண்டு பெண்பிள்ளை இருக்கு. பெரிய வீடாக கட்டு என்பான். அவன் கடன் வாங்கி வீடு கட்டுவான். விசயம் தெரிந்தவன் சொல்வான்.

இப்ப ஒரு பிள்ளைக்கு நாலு வயது, ஐந்து வயதாச்சு. அதுக்குள்ள கடன் வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வான். பக்கத்து வீட்டுக்காரன் சும்மா இருக்க மாட்டான். இவனை கடனாளி ஆக்கணும் என்பதற்காக வருவான். வீடு கட்டுகிறாயா பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு. பின்னாடி மருமகன் வருவானேன்னான். அது அப்ப பேசிக்கலாம்.

இப்போதைக்கு இருக்கிறதுக்கு வீடு கட்டுன்னு சொல்ல மாட்டான். கடன் வாங்கி வீடு கட்டுவான். கடைசியில் என்ன செய்வான்? எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ஊருக்கு போவான். அப்ப குடும்பஸ்தன் மன அமைதி பெறுவதற்கு ஒரு எல்லைக்குள்ளே இருக்க வேண்டும். நம் சக்தி எது அதற்கு மட்டும்தான் செய்யணும். சக்திக்கு உட்பட்டுச் செய்பவன் நிம்மதியாக இருக்கலாம். கற்பனை பண்ணிக்கொண்டு போகிறவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறான்.

கண்ணன் : எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் சுபிட்சமாக இருப்பதற்கு ஏதாவது?
குருநாதர் : எதிர்காலம் என்பது பருவமழையை அடிப்படையாக கொண்டது. எதிர்காலம் சுபிட்சமாக இருக்க வேண்டுமென்று சொன்னால், அது பருவ மழையை அடிப்படையாக கொண்டது. ஆனால் இன்றைக்குக் காலம் பருவமழை தவறி விட்டது.

இந்தியா விவசாய நாடு. இந்தியா மற்ற நாடு மாதிரியில்லை. ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தொழில்வள நாடுகள்.
இந்தியா விவசாய நாடு. இந்திய விவசாயிகள் எல்லாம் வேலையில்லாமல் நகரத்தை தேடிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நகரத்தில் ஒண்டி ஒதுங்க குடிசை போட்டுக்கொண்டு இருக்கிறான். நான் அதையெல்லாம் பார்த்தேன். இங்கே இருந்த விவசாயிகள் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு சுபிட்சமடையணும் என்று சொன்னால் பருவமழை பெய்ய வேண்டும். பருவமழை இல்லையென்றால் நாடு சுபிட்சமடையாது.

கண்ணன் : எதிர்காலத்தில் உலக அழிவு ஏற்பட போகிறதே என்று எல்லோரும் சும்மா இருந்து அப்படியே சோம்பேறியாக இருந்துவிட்டால்?
குருநாதர் : எதிர்காலம் அழிவு வருவது உண்மைதான். ஆனால் தடுக்கும் வல்லமை ஞானிகளுக்குத்தான் உண்டு.

கண்ணன் : சாதாரண மக்கள் வந்து அதை எப்படி பின்பற்றுவது?
குருநாதர் : சாதாரண மக்கள் அல்ல. ஆன்மீகவாதிகள் மட்டும்தான் அதை சிந்திக்க முடியும். எவ்வளவு பெரிய விபத்து வந்தாலும் இயற்கைச் சீற்றம் வந்தாலும் ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் ஆபத்து இருக்காது. வேதாரண்யத்தில் சுனாமி அடித்தது. சுனாமியில் சிக்கிய ஒரு அன்பரை கொண்டுபோய் ஒரு மரத்தில் சிக்க வைத்துவிட்டது. அவர் ஆன்மீகவாதி. எனவே அவர் அந்த மரத்தில் சிக்கி உயிர்பிழைத்தார். ஆதலால் எவ்வளவு சீற்றம் வந்தாலும் ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் ஆபத்து வராது.

கண்ணன் : நீங்கள் சொன்னது உண்மை. நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர் சமாதி இருக்குமிடத்தை சுனாமி ஒன்றுமே செய்யவில்லை.
குருநாதர் : கிட்ட நெருங்க முடியாது. பொய்கை நல்லூரில் சுனாமி வந்தால் ஞானிகள் அப்படியே வெடுக்கென்று முழுங்கிடுவாங்க.

கண்ணன் : சுனாமியே உள்ளே நுழையவில்லை. மற்ற பக்கத்து கிராமமெல்லாம் நுழைந்தது.
குருநாதர் : பொய்கை நல்லூரில் சுனாமி வந்ததென்று சொன்னால் வெடுக்குன்னு முழுங்கிட்டு போயிடுவார். பொய்கைநல்லூர் கோரக்க மகரிஷி கிட்ட கடல் சென்றால் உர்உரென்னு உறிஞ்சி ஏழு கடலையும் குடித்து ஏப்பம் விட்டுட்டுப் போய்விடுவார்.

கண்ணன் : அப்ப அருளால் எதிர்கால பேரழிவுகளிடமிருந்து தப்பிப்பதற்கு வழியிருக்கா ?
குருநாதர் : ஒரே வழி ஞானிகள் தான் அதைத் தடுக்க முடியும். கோரக்கமகரிஷி இது போன்ற ஞானிகள்தான் எதிர்காலத்தில் இருக்கக் கூடிய சுனாமியையோ, பூகம்பத்தையோ, புயலையோ இன்னும் எது வந்தாலும் உடைத்து எறிந்து வெற்றி காண முடியும். அவ்வளவுதான்.

கண்ணன் : நம்ம கொள்கைகளை இன்னும் பரப்புவதற்கு இன்னும் எளிய முறை தீவிரமான முயற்சி?
குருநாதர் : ஒன்றே ஒன்று. ஆன்மீகம் என்பதே சிலபேர் , பலபேர் பலவகையாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். பலவாறுப்பேசி குழப்பிக்கிட்டு இருப்பார்கள். அது அவன் மேல் குறையில்லை. மக்கள் ஏமாறுகிறான். எந்த அளவுக்கு ஏமாறுகிறவன் இருக்கிறானோ? அந்த அளவுக்கு போலி ஆன்மீகவாதி இருக்கிறான்.

கண்ணன் : இதை ஒரு சிலர் வியாபாரமாக மாத்திட்டாங்க.
குருநாதர் : ஆன்மீகத்தை வியாபாரமாக்குகின்றவன். அவன் நினைக்கிறான். நாம் எல்லோரையும் ஏமாத்திக்கிட்டு இருக்க, காசு சம்பாதிக்க நினைக்கிறான். ஆனால் அவனுக்கு நரகம் காத்துகிட்டு இருக்கு. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
- திருக்குறள் - பேதைமை - குறள் எண் 835.

ஒரு பிறப்பில் இல்லறத்தானை ஏமாற்றி மூட்டைக் கட்டுகின்றவன் பூராவும், ஏழு ஜென்மத்திற்கு நரகத்திற்கு போவான். அதனாலே இந்த காவி உடை கட்டுவது தூய உள்ளம் உள்ளவங்கத்தான் கட்டணும். இந்த காவி உடையைக் காட்டிகிட்டு மக்களை ஏமாற்றி காசு வாங்குகிறவர்கள் எல்லாம் கடைசி காலத்தில் நாறி, கைகால் வீங்கி, கிட்டே நெருங்க முடியாத அளவுக்குப் போகும்.

ஆமாம் ஆரம்பத்தில் தெரியாது அவனுக்கு. பொது மக்களை ரொம்ப ஏமாற்றனும் என்று நினைக்கிறான். ஆனால் இந்த போலி ஆன்மீகவாதிகள் போலிச்சாமியார்கள் இருக்கிறானல்லவா? அவனோடு இருக்கின்ற அத்தனை பேருமே வருகிறவர்களிடம் ரொம்ப பணிவாக பேசுவான். நயமாகப் பேசுவான். இவர் கடவுள், ஆணைப் பெண்ணாக்குவார். பெண்ணை ஆணாக்குவார்.

அங்கே புதைச்சு வைத்தால் இங்கேயிருந்து வருவார். அந்த ரூமில் அடைத்து வைத்தால் இந்த ரூமிலிருந்து வருவாரென்று பொய் சொல்லுவான். இப்படியெல்லாம் பொய் சொல்லி பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி ராத்திரி நேரத்துல மது மங்கையென்று இருப்பான். அப்ப கூட இருக்கிறவன் பூராவுமே தலைவனே அயோக்கியப் பயல். கூட இருக்கிறவன் பரம அயோக்கியப் பயல். தலைவனே அயோக்கியப் பயல்.

அதனாலே உண்மைப் பொருள் தெரிந்தவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். வேணாம்பா இருந்தா கொடுப்பா இல்லாவிட்டால் வேண்டாம். அப்படி சொல்வானே தவிர எப்படியாவது உள்ளுக்கு நுழைவதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கட்டு என்றான். அடே! எதற்கு ஆயிரம் ரூபாய் கட்ட சொன்னே? ஒரு இடத்தில் கேள்விப்பட்டேன். மாலை போட்டு வந்ததற்கு ரசீது கொடுத்தான். எதற்குடா ரசீது? போய் மாலை போட்டுகிட்டு வந்தல்ல ரசீது முந்நூறு ரூபாய் என்றான். என்னப்பா மாலை அப்படி போடக்கூடாதில்லை, பாடை கட்ட வேணுமில்ல? மாலை போடுவதற்கு முந்நூறு ரூபாய். அப்ப செத்துப்போனால் பாடை கட்டணுமில்ல? அதற்கு ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூபாய். ஆக இரண்டாயிரம் ரூபாய் கட்டினால், பாடை கட்டலாம் என்றான். ஆக எவனொருவன், பணம் கட்டினால்தான் சாதாரண மக்கள் உள்ளுக்கு வரணும். வசதியுள்ளவன் மட்டும்தான் உள்ளுக்கு போகிறான் என்று சொன்னாலே நிச்சயம் அங்கே அயோக்கியத்தனம் இருக்கென்று அர்த்தம்.

கண்ணன் : அதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் வருமா?
குருநாதர் : ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவன் இருக்கத்தான் செய்வான். இந்த உலகம் தோன்றியது முதல் அப்படித்தான் இருக்கிறது. போலி சாமியார்கள் இருக்கத்தான் செய்கிறான். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அரசாங்கம் மட்டும் கண்டுபிடிக்க வேண்டும்.

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடமூட நண்ணுமால்
நாள்தோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
- திருமந்திரம் - இராசதோடம் - கவி எண் 239.

திருமந்திரத்தில் ஆசான் திருமூலர் சொல்லியிருக்கிறார். அரசாங்கம் ஞானிகளுக்கு பாதுகாப்பு தருவது நல்லதுதான். ஆனால் அதே சமயத்தில் ஞானிபோல் நடித்துக் கொண்டிருக்கிறானே அவனைக் கண்டுபிடிக்கவில்லை எனில் நாள்தோறும் நாடு கெடமூட நண்ணும் என்று சொன்னார்.

ஆசான் திருமூலர் என்ன சொல்கிறார்? ஞானியைப் பாதுகாப்பது நியாயம்தானடா. மூடர்களை வளர்த்து விட்டாயானால் பருவமழை தவறும், நாடு கெட்டுப் போகும். நல்ல மழை பெய்து ஐம்பது கலம் விளைந்ததென்றால் நாற்பது கலம் வைத்துக் கொள்வான். பத்து கல நெல்லை விற்பான். விற்றுவிட்டு ஒரு சேலை வாங்குவான். ஒரு பித்தளைப் பாத்திரம் வாங்குவான். பொருளாதாரம் வந்து கொண்டே இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் இந்தியாவிற்கு மட்டும் சொல்கிறேன் விவசாயம்தான். இந்த நாடு விவசாய நாடு. டெல்டா பகுதி, சமநிலைப் பகுதி இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் விவசாயம் உயர உயர செல்வநிலைப் பெருகத்தான் செய்யும். அப்ப பருவமழை தவறினால் போச்சு.

கண்ணன் : விளைநிலங்கள் ஒரு பக்கம் குடியிருப்புகளாக ஒரு பக்கம் மாறிகிட்டிருக்கே?
குருநாதர் : மழை பெய்யவில்லை. அவன் என்ன செய்வான்? ஞானிகள் வந்தால் பருவ மழை பெய்யும். அவன் சொல்வான். இன்ன பகுதியில் இன்ன பயிர் போடு. இங்கே எண்ணை வித்து போடு. இந்த பகுதி பூராவும் இவ்வளவு மழை பெய்யும்.

ஞானிகள் ஆட்சி வந்ததென்றால் இந்த மாவட்டத்தில் இதுதான் விளையும், அதைப்போடு. நிலக்கடலை, துவரை பருப்பெல்லாம் போடு. எண்ணை வித்துக்களைப் போடு என்பார்கள். இந்த இடத்தில் நிலப்பகுதிக்கு நஞ்சைதான். இந்த நிலப்பகுதிக்கு இன்னென்ன செய் என்று சொல்லிவிட்டு பிரித்து பிரித்து எழுதிக் கொடுப்பாங்க. நல்ல பருவ மழை பெய்யும். நிறைய தானியங்கள் உற்பத்தியாகும். இப்ப லிட்டர் அறுபது, எழுபது, நூறுக்கு விற்குது. வாங்கும் சக்தியில்லை.

அதுதான் சொல்கிறேனே! ஒரு நாடு, இந்தியா மட்டும் முன்னேறுவதற்கு அடிப்படை காரணம் விவசாயம்தான். விவசாயம் உயர்ந்ததென்றால் வாங்கும் சக்தி தானே வரும். இப்ப ஒரு பொருள் உற்பத்தி செய்கிறார்கள். நவீனமான பொருள் உற்பத்தி செய்யலாம். உற்பத்தி செய்தாலும் வாங்கும் சக்தி வேண்டுமல்லவா? வாங்கும் சக்தியில்லாமல் பொருள் உற்பத்தி செய்து எதற்காகும்? வாங்கும் சக்தி இருக்கணும்னா வாங்குகிறவர்களிடம் பணம் இருக்கணும். உற்பத்தி செய்தாலும் வாங்கும் சக்தி வேண்டுமில்லையா? வாங்கும் சக்தி வேண்டுமென்றால் பருவமழை பெய்யணுமில்லையா? பருவ மழை பெய்யாவிட்டால் அவன் என்ன செய்வான்? அதை பிளாட் போட்டு விற்றுவிடுவான். அதுதான் இந்த நாட்டில் விவசாய நிலத்தையெல்லாம் ஏன் பட்டா மனை போடுகிறானென்றால் மழையில்லை. ஞானிகள் ஆட்சி வந்ததென்றால் பருவமழை ஒழுங்காகப் பெய்து கொண்டிருக்கும். அப்ப செல்வநிலை பெருகும். அப்போ வாங்கும் சக்தி இருக்கும்.

கண்ணன் : அந்த காலம் வெகுவிரைவில் வருமா?
குருநாதர் : அதை இப்ப சொல்லக்கூடாது. இரகசியம். அதை இப்ப சொல்லக்கூடாது. இன்றைக்கு அந்த வார்த்தையை நான் பயன்படுத்தக் கூடாது. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - அடக்கம் உடைமை - குறள் எண் 122.

நீ உயிரோடு வாழ ஆசைப்பட்டால் அடக்கமாயிரு என்றான்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு - அதைவிட மேம்பட்டது ஒன்றில்லை என்றார். ஆக நாங்க இப்ப எதையும்

பேசக்கூடாது. நாங்க பேசினால் எனக்கும் ஆபத்து வரும். அதனால் இப்ப அடக்கமாக இருப்பது நல்லது.

கண்ணன் : அதுபோலவே இராமலிங்க அடிகளார் கையில் விளக்கோட மனிதனைத் தேடுகிறேன் என்றார். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்றார். இன்றைக்கும் அதே நிலைமைதானா மாறியிருக்கிறதா?
குருநாதர் : இன்னமும் ஆன்மீக நாட்டம் உள்ள மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவனெல்லாம் போலி சாமியார்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவன் என்ன செய்வான்? தாடி வைத்திருப்பான், உருத்திராட்ச மாலை இருக்கும். அப்படியே நடிப்பான். இந்த நடிப்பைக் கண்டு ஏமாறுவான். தோற்றத்தைக் கண்டு முடிவெடுக்கக் கூடாது. அதை சொல்லும்போது உண்மை ஆன்மீகம் செய்ய முடியாது. அவ்வளவுதான் உண்மை .

கண்ணன் : உங்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு என்ன காரணம்?
குருநாதர் : என்னிடமிருப்பதா? தூய மனது இருந்தால் அங்கே நகைச்சுவை இருக்கத்தான் செய்யும். எப்ப பார்த்தாலும் ஐயோ! நம்மிடம் பத்து கோடி இருக்கே. அதிகாரி வந்தால் என்ன செய்வது? அவன் வந்தால் என்ன செய்வது? இவன் என்ன செய்வது? என்ற அச்சம் இருக்காது. மிச்சமில்லை அச்சமில்லை. போடா! இங்கே வெறுங்கை. (சில்லறைக் காசுகளை காண்பித்து) இதுபோல வைத்திருப்போம். நிறைய காசு இதுதாண்டா காசு. இந்த மாதிரி எங்கள் வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும். எங்கள் வாழ்க்கை இதே மாதிரிதான் இருக்கும். சில கோடி பொருள் வந்தது. எவ்வளவு இருப்புன்னு கேட்டான். இதோ வெறும் சில்லரை காசு வைத்திருக்கிறோம்.

எங்கே பொருள் பற்று இருக்கிறதோ? எங்கே காமம் இருக்கிறதோ? எங்கே யானென்ற கர்வம் இருக்கிறதோ? பிறரை மதிக்கவில்லையோ? அவன் தான் பயந்துகொண்டு இருக்கணும்.

கண்ணன் : இவ்வளவு எளிமையாக இருப்பதற்கு யார் கற்றுக்கொடுத்தது?
குருநாதர் : எனது ஆசான் அகத்தீசர் கற்றுக் கொடுத்தார். பார்ப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும். இது போன்று எளிமையாக இருக்கும்போது பாமரமக்கள் கூட தேடி வருவார்கள். ரொம்ப ஆடம்பரமாக இருந்தால் ஐயோ என்று அப்படியே போய்விடுவான். அப்போ மக்களிடம் எளிமையாக பேச வேண்டும். நயமாக பேச வேண்டும். வஞ்சனை இருக்கக் கூடாது.

காசுக்காக எளிமையாக பேசுகிறான் என்றால் அது ஏமாற்று வேலை. பணம் இருந்தால் கொடுக்கலாம். இங்கே எல்லோரும் சாப்பிடலாம். வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரும் சாப்பிடலாம். யாரையும் யாருன்னு கேட்கமாட்டாங்க. வருகிறவர்களையெல்லாம் சாப்பிடுங்க சாப்பிடுங்க என்று சொல்லிகிட்டே இருப்பாங்க. மற்ற இடங்களில் இருபத்தைந்து ரூபாய் பணம் கட்டினால்தான் சோறு என்பார்கள்.

ஏண்டா உன்னிடத்தில் கோடிக்கணக்கில் பொருள் இருக்கிறது. வருகிறவர்களுக்கு சோறு போட்டால் என்ன? சொன்னாலும் கேட்க மாட்டான்.

நான் முன்பே சொல்லியிருக்கிறேன். தலைமை தாங்குகிறவன் அயோக்கியன். அவன் கூட இருக்கிறவன் பரம அயோக்கியன். இதைவிட என்ன சொல்வது? காவி கட்டியிருப்பான், ஊரையெல்லாம் ஏமாற்றுவதற்கு.

இப்போ நான் காவி கட்டியிருப்பது மக்களுக்காக. இல்லையென்றால் கட்டமாட்டேன். இங்கே சாமியார் ஒருவர் இருக்கிறார்னு பார்ப்பதற்கு ஒருத்தன் வந்தான். நம்மைப் பார்த்தான். என்ன சாமியாருக்குண்டான ஒன்றுமே இல்லை, தாடியில்லை. இவரெல்லாம் சாமியார் இல்லையடா என்றான்.

இதைத்தான் நாங்கள் அப்போதே சொன்னோம். தோற்றத்தைக் கண்டு முடிவெடுக்காதே. உண்மை இருக்கான்னு பார். இங்கே நடக்கின்ற உண்மையை பார்த்துவிட்டு முடிவெடு. நீ என்னைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொன்னால் நானென்ன செய்ய முடியும். ஆசான் பட்டினத்தார் சொல்வார்,

பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.

ஆசான் பட்டினத்தார் காஞ்சிபுரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஒருத்தன் வந்தான். இவரது எளிமையைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொல்லிவிட்டான். அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் என்ன உங்களை இப்படி பேசுகிறான் என்று சொன்னார்கள். அதற்கு அவர், "அவன் கோட்டான் மாதிரி” என்றார்.
கூகை என்றால் கோட்டான். பகலில் அதற்கு கண் தெரியாது. ஆனால் பிரம்மாண்டமான சூரியன் பகலில் இருக்கு. ஆனால் கோட்டானுக்கு மட்டும் பகலில் கண் தெரியாது. இதை ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

பொல்லா இருளகற்றும் - அமாவாசை இருட்டு போல இருக்கும். ரொம்ப காரிருள் என்பார்கள். மழை மேகம் மூடியிருந்தால் காரிருளாக இருக்கும். அப்ப சூரியன் வந்தவுடன் வெளிச்சமாகிவிடும்.

பொல்லா இருளகற்றும் கதிர் - கதிர் என்றால் சூரியன். கூகையின் புண்கண்ணிற்கு - இந்த கோட்டானுக்கு பகலில் இருட்டாக இருக்கு என்று சொன்னார். அதுபோல உண்மை ஞானிகளான எங்களை கண்டுபிடிக்க முடியாது. மேலும் ஆசான் பட்டினத்தார் சொல்லிலும் தெரிந்து கொள்ளலாம் என்பார்.

பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.

இப்படியும் காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார் ஆசான் பட்டினத்தார். அப்போ அடிப்படை என்னவென்றால் ஞானிகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பார்.

பொருளுடையோரைச் செயலிலும் - நிறைய பொருளிருந்தது என்றால் வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான். அதிலிருந்து அவனிடம் நிறைய பணம் இருக்குதென்று தெரிந்து கொள்ளலாம்.

வீரரைப் போர்க்களத்தும் - வீரமுள்ளவனை எங்கே பார்க்க வேண்டும். போர்க்களத்தில் பார்க்க வேண்டும். இங்கே வாய்சவடால் அடிப்பான். போர்க்களத்தில் அவனவன் தலை உருண்டுக்கிட்டே இருக்கும். அங்கே போகும்போது பயந்துவிடுவான்.

தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் - ஒருவனை பார்க்கும் போதே மிகத்திறமையான ஆள் என்று சொல்லிவிடுவார்கள்.

அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகும் - ஞானிகள் தன்னுடைய பேச்சில் ஒருவனுக்கு மாயையை உண்டுபண்ண மாட்டார்கள். அவனுக்கு தெளிவான பாதையை காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஞானியை பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

அவர் பேச்சு அத்தனையும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும். அப்படி பேசுபவரைதான் கண்டுபிடிக்க வேண்டும். ஞானிகளை அப்படித்தான் அடையாளம் காட்டுவார் ஆசான் பட்டினத்தார். ஒருவனுடைய பேச்சு மற்றவனை மடையனாக்கும்படி இருந்தால் அவன் அருளில்லாதவன். ஆனால் ஞானிகள் பேச்சு தெளிவாக இருக்கும். இதுதான் மார்க்கம். இதைக் கடைப்பிடி என்று சொல்வார்கள்.

கண்ணன் : ஆன்மீகம், அறம், அன்னதானம் இதிலெல்லாம் செயல்படுத்த திட்டமிட்ட காரியங்கள் நிறைய இருக்கிறதா?
குருநாதர் : பொருள் வரவர செய்து கொண்டிருப்போம். மலேசிய அன்பர்கள் இதற்கு ரொம்ப உதவி செய்திருக்கிறார்கள். இந்த சங்க வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்துள்ளார்கள். மலேசிய மக்களும் தமிழர்களும் கொடுத்த பொருளை வைத்துதான் அறப்பணிகள் செய்து கொண்டிருக்கிறோம். நாளைக்கு பொருள் இல்லாவிட்டால் இன்று முதல் அன்னதானம் இல்லை என்று போர்டு வைப்போம், இருந்தால் செய்வோம். அணையில் தண்ணீர் இருந்தால் திறந்து விடுவோம். அணையில் தண்ணீர் இல்லாவிட்டால் மதகை மூடிவிட்டு போய்விடுவோம். ஆனால் இதுவரை அப்படியில்லை. இதயத்தில் தூய்மை இருந்ததென்றால் செல்வம் குவியும். இந்த மனதில் தூய்மை இருந்ததென்றால் வேண்டியது கிடைக்கும்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
- திருக்குறள் - தவம் - குறள் எண் 265.

தவசிகள் எதை விரும்புகிறார்களோ அது வந்து கொண்டே இருக்கும்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - விரும்பியதை விரும்பியவாறு செய்வதால்.

செய்தவம் ஈண்டு முயலப் படும் - மேலும் மேலும் தவம் செய்ய செய்ய உலகத்தில் விரும்புகின்ற அனைத்தையும் கொண்டு வந்து குவித்துவிடுவார்கள். என்ன தடையிருக்கும்?

2714 இலவச திருமணங்கள் செய்திருக்கிறோம். நாலு கோடி பேருக்கு சோறு போட்டிருக்கோம். ஆசான் அகத்தீசர் கேட்டார். உனக்கு இன்னும் என்ன வேண்டும்? உன்னால் முடிந்ததை செய்து பார் என்று சொல்லிவிட்டார். அவங்களிடம் ஒரு பழக்கம். எவன் தூய்மையாக இருக்கிறானோ? அவன் விரும்புபவதையெல்லாம் அள்ளிக் கொள் என்பார். அது மலேசியா மக்களாக இருந்தாலும் சரி. இந்திய மக்களாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி. உலக மக்களை கொண்டு வந்து குவித்துக் கொண்டே இருப்பார்கள். போதுமா? இன்னும் வேண்டுமா? என்பார்கள்.

நான் இருப்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்பது அவருக்கு தெரியும். இவன் பலகோடி கொடுத்தாலும் தங்கத்தையே கொண்டு வந்து குவித்தாலும் இது குப்பை. இதை ஏன் கொடுக்கின்றீர்கள்? இதை கொண்டு போய் ஏழைக்கு கொடு என்பேன்.

நவரத்தினங்களையும் தங்கத்தையும் பார்த்து இது எல்லாம் நாங்கள் குப்பை என்போம். அப்படிப்பட்ட மனது இருந்தால் தான் ஆசான் கொடுப்பார். பொருளை வாங்கி வாங்கி மூட்டையாக கட்டி வைத்தால் ஆசான் பார்ப்பார். இந்த போலி சாமியார்களெல்லாம் இல்லறத்தான் கொடுத்த செல்வத்தை அந்த பாவமூட்டையை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்திருப்பான்.

பெரிய மகான் என்று இல்லறத்தான் மூட்டை மூட்டையாக சென்று கொடுக்கிறான். இந்த போலி சாமியாரோ இல்லறத்தான் பாவத்தை முழுவதும் இவன் மூட்டை கட்டிக்கொண்டிருக்கான். இந்த போலிசாமியார்களிடம் இருக்கிற மூலதனம் முழுவதும் இமயமலை அளவு பாவமூட்டை அது.

கண்ணன் : இந்த ஓங்காரக்குடில் சேவையை அங்கங்கே இருந்து நேசிக்கிற இரசிக்கிற விரும்புகிற அன்பர்கள் செய்யலாமா? இல்லே ஓங்காரக்குடில் வந்துதான் செய்யணுமா?
குருநாதர் : எங்கே வேண்டுமானாலும் செய்யலாம். சென்னையில் இருக்கிறார்கள். அங்கேயும் செய்யலாம். எங்கேயெல்லாம் அறப்பணி நடக்கிறதோ? அங்கேயெல்லாம் ஓங்காரக்குடில் என்று அர்த்தம். எங்கேயெல்லாம் தர்ம சிந்தனை இருக்கிறதோ அங்கேயெல்லாம் ஓங்காரக்குடில் என்று அர்த்தம்.

கண்ணன் : அங்கேயெல்லாம் நீங்களும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
குருநாதர் : நான் எங்கே இருக்கிறேன் ? ஆசான் இருக்கிறார். ஆனால் ஒன்று நடந்ததை சொல்கிறேன். லண்டனில் ஒரு அன்பர் இருக்கிறார். அவர் கூடவே இருப்போம். ஆசான் கூட இருக்கிறார். நீங்கள்தான் பக்கத்தில் இருக்கிறீர்களே என்பார்.

மார்க் என்ற ஒரு அன்பர் இலண்டனில் இருக்கிறார். அவர் ஆசி வேணும் என்பார். கூடவே ஆசான் இருக்கிறார் என்பேன். அதான் பக்கத்தில் இருக்கிறீர்களே என்பார். அவர் சாப்பிடும்போது தட்டை இழுத்திருப்பேன். அகத்தியர் தட்டை இழுத்த உடனே, என்ன விளையாடுகிறீர்கள் என்றார்.

அப்ப உலகத்தில் எந்த இடத்தில் பார்த்தாலும் என் உருவம் தெரியும். ஆனால் அன்போட நினைக்கணும். தூயமனது இருந்ததென்றால், கூடவே இருப்போம். மலேசியாவில் அந்த அனுபவம் இருக்கு . லண்டனில் இருக்கு. இந்த உலகத்தில் எங்கே பார்த்தாலும் என் உருவம் தெரியும், நினைத்தால் இருப்போம்.

கண்ணன் : ஒருமுறை ஓங்காரக்குடிலுக்கு வந்து சென்றவர்களுக்கு அதன் நோக்கம், நோக்கம் எல்லாமே மனதில் பதிவற்குதான் இந்த செயல்பாடுகள்?
குருநாதர் : முதலில் ஓங்காரக்குடிலுக்கு வந்து செல்வதற்கே புண்ணியம் செய்திருக்கனும்? ஓங்காரக்குடில் மண்ணில் அடி வைப்பதற்கே அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாவிகளையெல்லாம் உள்ளுக்கு விடமாட்டார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் ஓங்காரக்குடிலை சுற்றியிருப்பாங்க. ஓங்காரக்குடில் ஒன்பது கோடி ஞானிகளும் உள்ள இடம். பாவி என்றால் அப்படியே தள்ளி விடு என்பார்.

கண்ணன் : உள்ளே நுழைபவர்களுக்கே அப்படின்னா. உள்ளே சேவை செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய புண்ணியம் இங்கே?
குருநாதர் : சேவை செய்பவர்கள் அத்தனை பேரும் ஞானியாவார்கள். தூயமனதோடு சேவை செய்பவர்கள் இருக்கிறார்கள். எங்கள் அருகிலேயே தொண்டு செய்பவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்று மலேசிய அன்பர்களும் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளிலும் தொண்டு செய்கிறார்கள்.


கண்ணன் : இந்த மாதிரி அன்னதானம் புண்ணியத்தை அவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்களா?
குருநாதர் : ஆமாம். மலேசியா அன்பர்களும் ஞானியாவார்கள். வருங்காலத்தில் மலேசியா அன்பர்களும் தமிழக அன்பர்களும் சேர்ந்து ஒரு இலட்சம்பேர் ஞானியாவார்கள். அப்போ இப்படிப்பட்ட வாய்ப்பை ஒரு இலட்சம் பேர் பெறுவார்கள்.

கண்ணன் : குறிப்பாக மலேசிய மண்ணில் உங்களுடைய ஆன்மீகம், கொள்கைகள் பரப்பப்படுவதற்கு காரணம் என்ன?
குருநாதர் : அது அவர்கள் செய்த புண்ணியம்? மலேசியா மக்கள் தொண்டு செய்கிறார்கள், புண்ணியம் செய்கிறார்கள் என்றால் புண்ணியவான்கள் மட்டும்தான் தொண்டு செய்வார்கள். உலகத்தில் ஞானிகளுக்கு தொண்டு செய்த மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆசான் அகத்தீசர், நந்தீசர், திருமூலதேவர் போன்ற ஞானிகளுக்கு தொண்டு செய்த மக்கள் தான் இங்கு இருக்கிறார்கள். உலகத்தில் மலேசியாவிலும் இந்தியாவிலும் மற்றும் எல்லா இடங்களிலும் ஞானிகளுக்கு தொண்டு செய்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஞானியாவார்கள். அவர்கள் காலத்தில்தான் இயற்கையை அப்படியே முழுங்கிவிடுவார்கள்.

கண்ணன் : அது எப்போ நடக்கும்?
குருநாதர் : அதான் சொல்லக் கூடாது. அதுமட்டும் சொல்லக்கூடாது.

கண்ணன் : அதிகமாக பொருள் சேர்ப்பதற்கு வீடு கட்டுவதற்கு வாகனம் வாங்குவதற்கு ஆசைப்படுபவர்களெல்லாம் அந்த ஆசையை கொஞ்சம் குறைத்துக் கொள்வது எப்படி?
குருநாதர் : பக்தி செலுத்தினால் அன்றி ஆசை ஒழியாது. இல்லாவிட்டால் மனது விரிந்து கொண்டே போகும். மனது ரப்பர் பை போன்றது. போட்டு அழுத்த அழுத்த விரிந்து கொண்டே இருக்கும். ஞானிகளிடம் தொண்டு செய்த மக்கள் மலேசியாவில் இருக்காங்க மற்றும் தமிழகத்திலும் உலகம் முழுவதும் இருக்காங்க. ஓங்காரக்குடிலைச் சார்ந்து ஒரு இலட்சம் பேர் ஞானியாவார்கள்.

கண்ணன் : எப்போது இந்த உலகம் மேன்மை பெறும், உன்னதமாகும்.
குருநாதர் : வருங்காலத்தில் புயல் காற்று அடித்தால், ஞானிகள் மூச்சை உள்ளிழுப்பது போல் அந்த புயல்காற்றை உள்ளே இழுத்துவிடுவார்கள். அந்த புயல் உள்ளுக்குப் போய்விடும். பூகம்பம் வந்ததென்றால் அப்படியே வெடுக்கென்று விழுங்கிடுவார்கள். கடல் கொந்தளித்தது என்றால் வாயை வைத்து உறிஞ்சினால் கடல் கொந்தளிப்பு அப்படியே நின்று போய்விடும். எல்லா இயற்கை சீற்றங்களும் இவர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் அசைந்தால் எல்லாம் அசையும்.

கண்ணன் : இந்த இயற்கை சீற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியினை இவர்களுக்கு யார் கொடுத்தது? எப்படி வந்தது?
குருநாதர் : ஆசான் அகத்தீசர்தான் அந்த வல்லமையை கொடுக்க முடியும். இயற்கை சீற்றங்களை வெல்லுகின்ற வல்லமை ஆசான் அகத்தீசருக்கு உண்டு, ஆசான் பதஞ்சலிமுனிவருக்கு உண்டு, ஆசான் திருமூலதேவருக்கு உண்டு, ஆசான் கருவூர்தேவருக்கு உண்டு, ஆசான் இராமலிங்க சுவாமிகளுக்கு உண்டு.

கண்ணன் : இந்த இரகசியத்தை சாதாரண ஜனங்கள் புரிந்து கொள்வது என்றைக்கு?
குருநாதர் : சாதாரண மக்களுக்கு என்ன இருக்கு? ஓங்காரக்குடிலுக்கு வருவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன இருக்கும்? ஓங்காரக்குடிலில் அடி வைப்பதற்கே கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். என்னை புரிந்து கொள்வதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என்னை யாரென்று தெரிந்து கொள்வதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இப்போது வயது எனக்கு 76. இன்னும் கொஞ்ச நாள் போனால் 66 ஆகி விடும். அப்புறம் 56 ஆகும். கடைசியில் 26க்கு வந்துவிடுவோம். இந்த வாய்ப்பை பெற்றவன் கோடிக்கு ஒருத்தன் இருப்பான். எங்களை இனம் கண்டுபிடிக்க முடியாது. தற்பெருமை அல்ல இது. எங்களை இனம் கண்டுபிடிக்க முடியாது. எங்களை இனம் கண்டுபிடிப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

முதலில் ஓங்காரக்குடில் வருவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். குடிலாசான் யாரென்று அறிவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். குடிலாசான் இன்ன தன்மை உள்ளவர் என்பதை தெரிந்து கொள்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியம் செய்யாவிட்டால் என்னை அறிய முடியுமா? பார்த்தவுடன் தெரிகிற மாதிரி எனக்கென்ன பெரிய ஜடாமுடியா இருக்கு?

அப்ப இந்த துறை எப்படி இருக்கு? எல்லோருக்கும் ஒரு வழிப் பாதைதான். எனக்கு மட்டும் இருவழிப்பாதை (Two Way) போய்விட்டு திரும்பி வருவோம். ஆனால் சக்கரவர்த்திக்கும் போனது போனதுதான். போய்கிட்டுதான் இருக்க முடியும். ஆனால் நாங்க மட்டும் திரும்பி வருவோம். இப்ப 76, இன்னும் பத்து வருடம் கழித்து 66, அப்புறம் 56, 46, 26. இந்த வாய்ப்பு எங்களுக்கு ஆசான் ஆசியால் கிடைத்திருக்கு.

கண்ணன் : இந்த வாய்ப்பு எல்லோருக்கும் உண்டா? இந்த வாய்ப்பை நோக்கி சாதாரண மனிதனும் முயற்சி பண்ணலாமா?
குருநாதர் : அதற்கு ஒரே வழி ஆசான் திருவடிதான். தவம் என்றால் என்ன? ஓம் அகத்தீசாய நம என்பதே தவம். உன் திருவடிக்கு கொத்தடிமையாக இருந்து தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பது தவம். உன் திருவடியை தினம் பூசிக்க வாய்ப்பு கொடப்பா. நீங்களெல்லாம் பெரியவங்க என்று நினைப்பது தவம். இப்படித்தான் நான் ஆசானை கேட்டிருக்கிறேன். நாயினும் கடையேன் சொறி பிடித்த நாய். என்னைப் போன்ற பாவி இந்த உலகத்தில் யாரும் இல்லையப்பா. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டேன்.

நீங்களும் இப்படி கேட்க வேண்டும். ஞானிகளை பார்த்து நீங்களெல்லாம் பெரியவங்க. நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு அருள் செய் தாயே! என்று கேட்டு இன்னும் கீழே இறங்கி வரணும். இப்ப சொல்வது கடுகுதான். உங்கள் காலில் இருக்கும் தூசிக்கு கூட சமமாக மாட்டேன். உங்கள் பாதத்தின் இடது கால் சுண்டு விரல் தூசிற்கு கூட சமமாக மாட்டேன். இப்பேர்ப்பட்ட பாவியாகிய நானும் உன் திருவடியை தினமும் பூசிக்க அருள் செய்யப்பா என்று கேட்டால் அது தவம்.

கண்ணன் : எல்லோருக்கும் வாழ்த்தும் ஆசீர்வாதமும் கொடுங்கள்.
குருநாதர் : ஒரே வார்த்தை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ? அங்கெல்லாம் தலைவன் இருப்பான். நாம் தேடிக்கொண்டு போகவேண்டியதில்லை. புண்ணியவான்கள் இருக்கும் இடத்தை கடவுள் தேடிக்கொண்டு போவான். பாவி இருக்கும் இடத்தை கடவுள் திரும்பி பார்க்காமல் போய்விடுவார், அவ்வளவுதான். உலக மக்கள் சுபிட்சமாக இருப்பதற்கு ஒரே வழி. ஞானிகள் தான் கடவுள் என்று எண்ண வேண்டும். அவர்கள் தான் எதையும் சாதிப்பார்கள். என்ன காரணம்? எந்த ஞானியும் சாக மாட்டான். எவனொருவன் மரணத்தை வென்றானோ அவன் தான் கடவுள். இயற்கை படைக்கும் போதே காமத்தையும் சேர்த்துதான் படைக்கும். இதை ஆசான் திருவள்ளுவர்,

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 370.

எந்த இயற்கை உன்னை படைத்ததோ அந்த இயற்கையின் துணை கொண்டே வென்றால் நிச்சயம் கடவுள் தன்மை அடையலாம். ஆரா இயற்கை அவாநீப்பின் - ஆசையை நிரப்ப முடியாது. இன்றைக்கு காலையில் புரோட்டா சாப்பிடுவோம். காலையில் இட்லி சட்னி சாப்பிடுவோம். மத்தியானத்திற்கு என்ன குழம்பு என்று கேட்பான். தினந்தினம் சாப்பிட்டுகொண்டுதான் இருப்பான். தினந்தினம் காசு சேர்த்துக்கொண்டுதான் இருக்கான். அவனுக்கு நிரப்பவே முடியாது. இது இயற்கை. இதை சரிப்படுத்தனும். இது சாதாரண விசயமல்ல.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 370.

எந்த இயற்கை உன்னை தோற்றுவித்ததோ? அந்த இயற்கையே உன்னைக் காப்பாற்றும் என்றார் ஆசான் திருவள்ளுவர். யோகிகளுக்கு மட்டும்தான் இந்த இரகசியம் தெரியும். இயற்கையை வெல்லுவது சின்ன விசயமல்ல. முதலில் சிந்தனையாக இருப்பான். பின் ஆண் பெண் கூடும்போது சுக்கிலசுரோணிதமாக மாறுவான். பிறகு பத்துமாத தீட்டு வெளியாகாமல் பிறப்பான். பிறகு பரிணாம வளர்ச்சிக்கு உட்படுவான். பாலபருவமாக இருப்பான். வாலிபனாக இருப்பான். முதியவனாவான். அப்புறம் மூச்சை விட்டுவிடுவான். ஆனால் ஞானிகள் மட்டும் அப்படியில்லை. எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையின் துணை கொண்டே மீண்டும் இளமையை பெறலாம்.

கண்ணன் : மரணத்தை வெல்லலாம். மறுபிறப்பு?
குருநாதர் : மரணமே இல்லையென்றால் அப்புறம் மறுபிறப்பு ஏது?

கண்ணன் : சாதாரண ஜனங்களுக்கு பூர்வ ஜென்மம்?
குருநாதர் : சாதாரண ஜனங்களுக்கெல்லாம் வேறு வழியேயில்லை. அவர்கள் கோவிலுக்கு போகனும் , வணங்கனும். சாதாரண மக்களுக்கு அவ்வளவுதான். ஞானிகளோட தொடர்பு இருக்க வேண்டும். இப்ப இருநூறு தொண்டர்கள் ஓங்காரக்குடிலிலேயே தங்கியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் பாடுபட்டு பாடுபட்டு கை உரம் ஏறிப்போச்சு. அன்னதானம் செய்து கை காய்ச்சி போச்சு. இந்த கூட்டம்தான் அந்த துறைக்கு வரும். சரி ஓங்காரக்குடிலுக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவன் புண்ணியவான். ஓங்காரக்குடில் சார்பாக மலேசியாவில் தூய மனதோடு தொண்டு செய்கிறார்கள். அவர்களையும் ஆசான் கைவிடமாட்டார். அவர்களும் தங்கள் நிலை உயர்வாங்க.

கண்ணன் : பொதுவாக ஜனங்களுக்கு சுபிட்சமாக ஒரு வாழ்த்துச் செய்தி.
குருநாதர் : பொதுவாக ஞானிகள் ஆசியில்லாமல் சுபிட்சமாக இருக்க முடியாது. ஞானிகள் இறங்கினாலன்றி இந்த நாட்டில் பருவமழை தவறத்தான் செய்யும். அவங்க காலத்தை சொல்ல மாட்டேன். அவங்க இறங்கினால் பருவ மழை பெய்யும். அப்போது தெரிந்து கொள்ளலாம் ஞானிகள் வந்து விட்டார்களென்று. அப்போது முப்போகம் விளையும். நிலங்களை பிளாட் போட்டு விற்க நேரமிருக்காது. எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். அப்பப்பா பால் பாக்கியம் இருக்கும். எங்கு பார்த்தாலும் அறம் வளரும். இப்படி இருந்தால் ஞானிகள் வந்து விட்டார்கள் என்று அர்த்தம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஞானிகள் ஆட்சி வந்ததென்றால் பருவ மழை தவறாமல் பெய்கின்றது என்று அர்த்தம். ஓஹோ ஞானிகள் இறங்கிவிட்டார்கள். அப்புறம் என்ன குறை?

கண்ணன் : இப்படிப்பட்ட நல்லது நடக்குமென்று நம்பிக்கையோடு வணங்கி விடை பெறுகிறோம்.


திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
25. அரவ மாட்டேல்

அரவம் என்பது பாம்பாகும். பாம்பு என்னும் உயிரினமானது தமது வாயில் நச்சுப்பற்களோடு நஞ்சை வைத்துக் கொண்டுள்ளது. அது கொடுமையான உயிரினம். அத்தகைய கொடிய உயிரினத்தோடு யாரும் விளையாடமாட்டார்கள் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. மிகப்பெரும் வீரர்கள் கொண்ட படையில் பாம்பு புகுந்துவிட்டால் அந்த வீரர் படை தம் வீரத்தை மறந்து நடுங்கும், அந்த அளவிற்கு கொடியது பாம்பாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே.

முதுபெரும் ஞானியாகிய மகான் ஒளவையார் இத்தகைய பொருளில் அரவ மாட்டேல் என்பதை பாம்போடு விளையாடாதே என்ற பொருளில் கூறுவதாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் இதன் உள்ளார்ந்த உண்மையான பொருள் வேறாகும்.

சிலர் பல ஜென்மங்களில் செய்த பாவங்களினால் அவர்களது மனம் மிகவும் கொடுமையான வன்மனமாக மாறி எப்போது பார்த்தாலும் முகத்தில் கடுகடுப்போடு இருப்பார்கள். அவர்களது சொற்கள் விஷத்தை உமிழ்வதுபோல் இருக்கும். அவர்கள் வஞ்சனை உள்ளவர்களாக இருப்பார்கள்.

அவர்களை யாரேனும் சிறிது நகைப்புடன் கேலியாக விளையாட்டாக கூறினாலும் அவர்களால் அதைத் தாங்க முடியாது. மிகக் கொடுமையான முறையில் தாக்கும் இயல்புடையவர்கள். அத்தகையோரிடம் யாரும் நட்பு கொள்ள மாட்டார்கள்.

அவர்களிடம் யாரும் வீண் வாக்குவாதத்திற்கோ வம்பிற்கோ செல்ல மாட்டார்கள். அவர்களை பார்த்து ஏளனமாக கூறினால் சொன்னவர்களை கொன்றே விடுவான் பாவி.

அவன் தோற்றத்தில் மனிதனாக இருந்தாலும் இயல்பில் நஞ்சினை உடைய பாம்பை போன்றவனாவான். அத்தகைய கொடுமையான பாவியிடம் நட்பு கொள்ளாதே. நட்பு கொண்டால் அவன் உன்னை அழித்துவிடுவான் என்பதையே மகான் ஔவையார் அரவமாட்டேல் என கூறுகிறார். இதை உலக இயல்பின்படி எடுத்துக் கூறலாம்.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
- திருக்குறள் - தீவினை அச்சம் - குறள் எண் 201.

அதனினும் மற்றுமோர் உட்பொருள் உள்ளது. அது வழிவழி வருகின்ற திருக்கூட்ட மரபினருக்காக சொல்லப்பட்டதாகும். மகான் ஒளவையார் ஞானியாவார். அவர் ஞானிகளை வணங்கி போற்றி வாழுகின்ற இல்லறத்தானுக்காக அவன் நலமுடன் வாழ வேண்டும் எனும் பெருங்கருணையினால் கூறியதுதான் இந்த "அரவமாட்டேல்” என்கிற அறிவுரையாகும்.
ஞானமார்க்கத்தில் குரு சீடர் பாரம்பரியமாக பலப்பல இரகசியச் சொற்களை ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்திய சொற்களில் ஒன்றுதான் ''அரவம்” என்கிற சொல்லாகும். ஞானமார்க்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

அரவம் என்றால் பாம்பு என்ற பொருள் இருந்தாலும் அரவம் என்பது ஞானமார்க்கத்தில் யோக நிலையில் ஒரு ஞானி வாசிப்பயிற்சியாகிய வாசி யோகத்தின் போது மூச்சுக்காற்றினை "அரவம்" என்ற இரகசிய வார்த்தையால் குறிப்பிடுவார்கள். இடது நாசியில் வருகின்ற காற்றை கருஞ்சாரை (கருநாகம் ) என்றும் வலது பக்க நாசியில் வருகின்ற காற்றை வெஞ்சாரை (வெண்நாகம்) என்றும் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய வாசிப்பயிற்சியானது மும்மலதேகத்தின் மும்மலக் குற்றத்தை நீக்குதல் பொருட்டு ஆசான் ஞானபண்டிதன் உடனிருக்க ஞானிகள் துணையோடு காலம்காலமாக சிறிது சிறிதாக கணப்பொழுதும் நினைவினின்று வழுவாது காலநேரம் பாராது சதாசர்வகாலமும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யோகப்பயிற்சியாகும்.

இத்தகைய யோகப்பயிற்சியானது வழிவழி வருகின்ற தொண்டர் கூட்டத்திற்கு குருமுகாந்திரமாக குருநாதர் உடனிருந்து உடற்தகுதி, உணவு முறை, சூழ்நிலை, தட்பவெப்பம் போன்றவற்றிற்கேற்பவும் தவத்தின் தன்மைக்கேற்பவும் அளந்து அளந்து சொல்லி தரப்பட்டு கவனத்துடன் அதிநுட்பமாக செய்கின்ற ஒரு பயிற்சியாகும்.

இந்த பயிற்சி செய்கின்றவர் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரது யோகமும் தவமும் பாழ்பட்டு, ஏன் சமயத்தில் இறந்துவிடவும் கூடும். ஒரு துறவு நிலை கொண்டவரானாலும் ஆசான் துணையின்றி செயல்பட்டால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் உள்ளே சென்ற காற்றானது வெளியேற முடியாமல் அவனைக் கொன்றுவிடும்.

அதுமட்டுமல்ல இல்லறத்தார்கள் மிகமிக ஆற்றல் வாய்ந்த இந்த வாசியோகப்பயிற்சியினை செய்யக்கூடாது. ஏனெனில் வாசியோகப்பயிற்சியின் அளவு, காலம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாமலும் அதன் தன்மை தெரியாமலும் செய்வார்களேயானால் இறுதியில் இறந்து விடுவார்கள். வாசியோகப் பயிற்சியின் போது நம் உடம்பிலுள்ள மூலக்கனலே எழும்பி அளவிலாத உஷ்ணத்தை கொடுக்கும். இல்லறத்தானுக்கு ஞானக்கனலும், அவனிடமுள்ள காமக்கனலும் சேர்ந்து உடம்பில் அளவில்லாத வெப்பத்தை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் முதல் பலப்பல நோய்களை உண்டாக்கி கடைசியில் அவனை இறந்துவிடும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.

எனவே இத்தகைய தகுதியில்லாத செயலை இல்லறத்தான் செய்தல் ஆகாது என்பதினாலேயே அரவ மாட்டேல் (காற்றுடன் விளையாடாதே, வாசிப்பயிற்சியை விளையாட்டாகச் செய்யாதே) என மறைபொருளாக கூறி வைத்தார் மகான் ஒளவையார்.

காணுமூச் சடக்கி விழியதை யுருட்டிக்
கபாலமுந் திறந்தனர் கோடி
கனத்தவாய் வதனால் குன்மநோ யணுகி
கலங்கினோ ரவரொரு கோடி
தோணுமெய் மறந்து சுழன்றுட னெழும்பி
சொக்கினோ ரவரொரு கோடி
சூலைவாய் வணுகி சுவாலையு மெழுப்பிச்
சுரமதா லிறந்தவர் கோடி
ஊணுமுண் ணாக்கை யண்ணாக்கிற் றாக்கி
யுருண்டவ ரவரொரு கோடி
உயர்ந் துசா ணீளம் முழமது எழும்பி
யுறங்கியே யொடுங்கினோர் கோடி
பேணதி சார பேதிவந் தணுகிப்
பிறவியா லிறந்தனர் கோடி
பெருமையாய்க் கற்ப சாதனை யறிவார்
பிராணனு மொழிந்துமாண் டனரே.
- மகான் புலத்தியர் கற்பம்.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
- மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17.

காணுமூச் சடக்கி விழியதை யுருட்டிக்
கபாலமுந் திறந்தனர் கோடி

சிலர் சித்தர்களது நூல்களை படித்தோ அல்லது யோகம் சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று தானும் கற்றுக் கொள்ளாமல் தாம் ஏதோ முழுதும் கற்றுக் கொண்டது போல எண்ணி தம் மனதில் தோன்றியது ஏதோ கடவுளே நேரில் வந்து அருள் செய்ததுபோல் எண்ணி அதை உண்மை என்று நம்பி பிறருக்கு கற்று கொடுப்பதை இவரும் உண்மையென நம்பி அவர்கள் கூறுவதைப் போலவோ அல்லது தாமே சுயமாக எந்தவொரு துணையுமின்றி பக்தியின்றி, சித்தர்கள் வழிபாடுகளின்றி, தக்க ஆசான் துணையில்லாமல் சொல்லொன்னா நன்மை பயக்கின்ற இந்த கசடான தேகத்தையே தூய்மையானதாக மாற்றிதரும் வல்லமையுடைய அரவமாகிய மூச்சுக்காற்றினை அதன் இயல்பறியாமல் பிராணாயாமப் பயிற்சி என்ற பெயரில் மூச்சுக்காற்றை அதிவேகமாகவோ அல்லது மெதுவாகவோ உள்ளிழுத்து மூச்சை அடக்கி அப்படியே நிறுத்தி வைப்பார்கள்.

அப்படி மூச்சுக்காற்றை நுரையீரலில் நிறுத்தி வைக்கும்போது வாசி வசப்படாதவர்களுக்கு மூச்சுக்காற்றின் சூட்சும செயல்பாடுகளில்லாததால் அக்காற்று நுரையீரலிலேயே தங்கிவிடும்.

நமது தேகத்தின் அமைப்பின்படி நம் உடம்பிலுள்ள கரியமிலவாயு போன்ற நச்சுக்காற்றுகளும் நம் உடம்பிலிருந்து உற்பத்தியாகி ஏற்கனவே அழுத்தமாக உள்ள உள்ளிழுத்த காற்றுடன் கலந்து மேலும் அழுத்தம் அதிகமாகி வெளியே செல்ல வழியில்லாமல் மூச்சடக்கும் பகுதியில் உள்ள உள் நாவிற்கு கீழேயுள்ள மெல்லிய சவ்வு போன்ற பாகத்தினை கிழித்துக் கொண்டு மூளை கண் மூக்கு தொண்டை காதுகளிற்கு பொதுவாக உள்ள இணைப்பு பாதை வழியாக சென்று கபாலத்தில் முட்டி பலகீனமாக உள்ள இரத்த நாளங்களை உடைத்து இரத்தக் கசிவை உண்டு பண்ணி மூக்கின் வழியாகவோ காதிலோ இரத்தம் வடிய ஆரம்பித்து அதுவே பெருகி இறுதியில் மூளை பாதிக்கப்பட்டு இறந்து விடுவார். இப்படி முறையற்ற செயல் செய்து இறந்தவர் கோடிக்கணக்கானோர்.

கனத்தவாய் வதனால் குன்மநோ யணுகி
கலங்கினோ ரவரொரு கோடி

வாயுவினை (ஸ்தம்பிப்பதால்) உள்ளடக்குவதால் உடல் உஷ்ணம் அளவுக்கு அதிகமாக ஏறி குடலில் உள்ள பாகங்கள் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டு குடல் முழுவதும் புண்கள் தோன்றி குடல்புண் நோயாக மாறி ஆறாமல் அவதிப்பட்டு வலியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் கோடிக்கணக்கானோர்.

தோணுமெய் மறந்து சுழன்றுட னெழும்பி
சொக்கினோ ரவரொரு கோடி

ஒரு சிலருக்கு மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தி வைப்பதினால் புறக்காற்றினின்று உயிர்வளியாகிய பிராணவாயு கிடைக்காமல் மூச்சை அடக்குவதால் பிராணவாயு அளவு குறைந்து உடல் உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து மூளைக்கு தேவையான பிராணவாயும் குறைவதால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். அதை அவர்கள் யோகசித்தியாக எண்ணி அப்படியே விட்டால் அதுவே மயக்க நிலைக்கு கோமாநிலை எனப்படும் நினைவற்ற நிலைக்கு சென்று விடுவார்கள். ஒருசிலருக்கு மூச்சு விட முடியாமல் உள்ளுறுப்புகள் இயக்கம் நின்று மூளை பாதிப்படைந்து மூளை செயல்பாடு இழந்து இறுதியில் நின்று விடும். இப்படி தமது உயிரைப் பறிகொடுத்தோர் கோடிக்கணக்கானோர்.

சூலைவாய் வணுகி சுவாலையு மெழுப்பிச்
சுரமதா லிறந்தவர் கோடி

ஒரு சிலருக்கு அவர்கள் மூச்சடக்கும்போது உடம்பில் ஏற்பட்டுள்ள உஷ்ணத்தின் அளவு மிகுதியாக போய் அந்த உஷ்ணத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட காற்று அபரிமிதமாகி அதுவே இரத்த நாளங்கள் வழியாக சென்று உடம்பிலுள்ள அனைத்து பாகங்களிலும் சென்று எங்கெங்கு பலகீனமான இடங்கள் உள்ளதோ, குறிப்பாக கணுக்கள் எனப்படும் எலும்பு இணைப்புகளிலெல்லாம் தங்கி பின் வெளிப்பட முடியாமல் தாளமுடியாத வலியும் வேதனையையும் தந்து அதன்விளைவாக கடுமையான சுரமும் ஜன்னியும் வந்து இறந்து விடுவார்கள். இப்படி இறந்தவர்கள் கோடிக்கணக்கானோர்.

ஊணுமுண் ணாக்கை யண்ணாக்கிற் றாக்கி
யுருண்டவ ரவரொரு கோடி

சிலர் மூச்சுக்காற்றை வெகுநேரம் உள்ளே நிறுத்தி வைப்பதற்காக ஒருவித மோசமான பயிற்சியினை செய்வார்கள். நாக்கின் கீழ்பாகத்திலுள்ள தசை நாண்களை (Frenulum of Tongue) சிறிது அறுத்து புண்ணாக்கி பிறகு புண்ணை ஆற விடுவார்கள். பிறகு மீண்டும் அறுத்து புண்ணாக்கி ஆறவிட்டு இப்படியே தொடர்ந்து செய்து நாக்கை பின்னோக்கி வளைத்து குரல்நான் வரை கொண்டு செல்லுமளவிற்கு வளைத்து மூச்சுக்குழலின் மேல் நாக்கை பின்னோக்கி வளைத்து மூடிவைத்து வாயை மூடிக்கொள்வார்கள். அப்படியே அமைதியாக உட்கார்ந்து விடுவார்கள். உள்ளே உள்ள காற்றானது கபாலத்திற்கு சென்று கபாலத்தை தாக்காமலிருக்க இப்படியொரு முறையற்ற உபாயத்தைக் கையாளுவார்கள். ஆனால் சமயத்தில் உள்ளே மடக்கி வைத்த நாக்கானது மரத்துபோய் மீண்டும் வெளியே எடுக்க முடியாமல் போய் மூச்சுமுட்டி மிகப் பயங்கரமாக விகாரமான முறையில் மூச்சடைத்து இறந்து போவார்கள். இப்படி இறந்தோர் கோடிக்கணக்கானோர்.

உயர்ந் துசா ணீளம் முழமது எழும்பி
யுறங்கியே யொடுங்கினோர் கோடி

சிலர் மூச்சுக்காற்றை உள்ளடக்கி உள்ளடக்கி தொடர்ந்து பயிற்சிகள் செய்து தேகத்தை லகரியாகும்படி செய்வார்கள். உள்ளே நிறுத்திய காற்றின் இயக்கத்தினால் சில சமயம் அவர்கள் புவியீர்ப்பு சக்தியை மீறும் அளவிற்கு ஆற்றல் கிடைக்கக்கூடும். இப்படி தொடர்ந்து கடுமையான பயிற்சி செய்து உடம்பை சுமார் ஒருசாண் உயரத்திற்கு லகரியாக்கி தூக்குவார்கள். அவர்கள் மேலும் மேலும் உயரே எழும்பும் ஆசையில் மூச்சை அதிக நேரம் கட்டி பயிற்சி செய்வார்கள். இவர்கள் உயரே காற்றில் எழும்புவதை மக்கள் பார்த்து அதிசயப்படுவதை பார்த்து புகழிற்கு அடிமையாகி கிடைத்த சிற்சக்தியின் போதையில் மயங்கி பயிற்சியை தொடர்ந்து செய்து மூச்சுமுட்டி இறந்து விடுவார்கள். இது ஒருவித சிற்சக்தியே தவிர இதனால் யாதொரு பயனும் இல்லை. இவ்வாறெல்லாம் மரணமில்லா பெருவாழ்வை பெற முடியாது. இப்படி உலகம் வியப்பதற்காக கடுமையான பயிற்சிகள் செய்து மூச்சுமுட்டி இறந்தோர் கோடிக்கணக்கானோர்.

பேணதி சார பேதிவந் தணுகிப்
பிறவியா லிறந்தனர் கோடி

தக்க ஆசான் துணையின்றி முறையற்ற வாசிப்பயிற்சியாகிய பிராணாயாமப் பயிற்சி செய்தால் உடல் உஷ்ணம் அதிகமாகி அஜீரண கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாமல் போய் இறந்து போவார்கள். இப்படி இறந்தவர்கள் கோடிக்கணக்கானோர்.

பெருமையாய்க் கற்ப சாதனை யறிவார்
பிராணனு மொழிந்துமாண் டனரே.

யோகம் செய்கின்ற காலத்தில் உடம்பில் ஏற்படுகின்ற மாறுபாடுகளிற்கேற்ப அவரவர் உடற்தகுதிக்கேற்ப அவ்வப்போது மூலிகை கற்பங்களை கூறுவார்கள் ஞானிகள். இது அவரவர் உடல் உஷ்ணத்திற்கேற்பவும் யோகத்தின் அளவு தன்மை இவற்றை பொருத்தும் மாறுபடும். யோகத்திற்கென்று உள்ள மூலிகை கற்பங்களையும் பற்றி அறியாமலும் அப்படி நூல்கள் வாயிலாக அறிந்திருந்தாலும் அதை எப்படி எவ்வாறு எவ்வளவு சாப்பிட வேண்டுமென்று உணர்த்த ஆசான் துணையோ திருவருளோ ஆசியோ இல்லாததாலும் உடல் கெட்டு இறந்தவர்கள் கோடிக்கணக்கானோர்.

இப்படி யோகாப்பியாசமாகிய மாபெரும் கலையினை முழுக்க முழுக்க ஆசான் திருவடிக்கு கொத்தடிமையாக முழுச்சரணாகதி கொடுத்து தம்மால் ஆவதொன்றுமில்லை எல்லாம் உமது செயல் எல்லாம் ஞானிகள் செயல் தாங்கள் தாம் எம்மைச் சார்ந்து வழி நடத்தி காத்தருள வேண்டும் என்றெல்லாம் பலவாறாக மன்றாடி போற்றி துதித்தும் பயபக்தியோடு வணங்கி அடிமையாக ஒப்புவித்து அணுவளவும் பிசகாது குருநாதர் கட்டளையை சிரமேற்கொண்டு கணப்பொழுதும் குருநாதர் நினைவினை விட்டு நீங்காது செய்ய வேண்டிய சுவாசமாகிய வாசிப்பயிற்சியினை தாம் சில நூல்களைக் கற்றுக்கொண்டு கற்றுவிட்டதாக கற்பிதம் பண்ணி "ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக" அரவமாகிய வாசியை தொட்டால் நன்மைபயக்கக் கூடிய அந்த தூய காற்றே விஷமாக மாறி உம்மை கொன்றுவிடும் என்பதனாலேயே இதன் முக்கியம் கருதி ''அரவம் ஆட்டேல்” எனக் கூறுகிறார் மகான் ஒளவையார். மகான் ஒளவையார் மாபெரும் ஞானி யோக நிலை கற்றவர். ஆதலால் இதை மறை பொருளாக கூறுகிறார்.


26.03.2013 அன்று நடைபெற்ற
பங்குனி உத்திர பெருவிழாவில் ஓங்காரக்குடிலாசான் அருளுரை

உருகி பக்தி செலுத்தினால் முருகப்பெருமான் அருள் புரிவார்
உருகி பக்தி செலுத்தினால் முருகப்பெருமான் அருள் புரிவாரென துறையூர், ஓங்காரக்குடிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் நடந்த பங்குனி உத்திர பெருவிழாவில் ஆசான் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் ஆன்மீக அன்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருளுரை வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்காரக்குடிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் பங்குனி உத்திர பெருவிழா ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தலைமையில் 26.03.2013, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

விழாவில் குடிலாசான் ரெங்கராஜதேசிக சுவாமிகள் ஆன்மீக அன்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருளுரை வழங்கி பேசியதாவது,
உலகில் முதலில் ஞானத்தை அடைந்தவரும், முழு முதற் கடவுளும், சித்தர்களுக்கெல்லாம் தலைவனும், அழைத்த அக்கணமே அஞ்சேல் என அருளுகின்றவரும் யாமிருக்க பயமேன் என அருளிய முருகப்பெருமானின் சித்தி நாளான பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் அவரை வழிபடுவது சிறப்பு.

முருகப்பெருமானின் முதன்மை சீடர் அகத்தியர் அவரால் தோற்றுவிக்கப்பட்டதும் அவருக்குப்பின் வழிவழிவந்த திருக்கூட்ட மரபினரான நவகோடி சித்தரிஷி கணங்களும் தேவர்களும், சப்தரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் இவ்விழாவில் அரூபநிலையில் பங்கேற்று ஆசி வழங்கினர். "ஓம் சரவண பவ, ஓம் அகத்தீசாய நம" என உருகி பக்தி செலுத்தினால் முருகப்பெருமான் அனைவருக்கும் அருள் புரிவார்.

நானும் இந்த மார்க்கத்தை பின்பற்றியே மேலான நிலையை அடைந்திருக்கிறேன். பக்தி செலுத்துவதில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. பாவி, புண்ணியவான் என பாகுபாடு இல்லை. அனைவருமே முருகப்பெருமானிடம் சரணாகதி அடைந்தால் முருகப்பெருமானின் அருளை பெறலாம். இவ்வாறு ஆசான் அருளுரை வழங்கினார்கள்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya