Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI July 2012


அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன ஆடி (ஜுலை - 2012)                                                     விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு
2. மகான் கபிலர் ஆசி நூல் -
3. சைவமே ஜென்மத்தை கடைத்தேற்றும் குருநாதர் அருளுரை........
4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர்

மகான் கபிலர் ஆசிநூல்:-

நூலதனில் ஆக்கம் திடம்
நல்வழி யோக ஞான அவுசதம்
கோலமதாய் ஆரோக்யம் குடும்பநலம்
குறையில்லா மணவாழ்வு அமைதி

அமைதி வளம் ஆற்றல் உயர்வு
அனைத்து சூட்சும விளக்கம்
அமைதிபெற வருமுலகில் ஞானியர்கள்
அடுக்கடுக்காய் விளக்கம் அருளி நிற்பார்

அருளாசான் ஆசி பெற்ற நூலிது
ஆசானே வருவதுபோல் அவரவர் குடியில்
திரு அருள்பட திங்கள் தோறும் வருகவே
தெரியவரும் அருள் பொருள் வளம்
- மகான் கபிலர் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு
R.சுரேஷ் - 94434 21935




துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.


திருச்சி மாவட்டம்,
துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
11.02.2006, தைப்பூச விழாவில் அருளிய
அருளுரை
சைவமே ஜென்மத்தை கடைத்தேற்றும்

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே, வணக்கம். அன்பர்களெல்லாம் அவர்களுடைய அனுபவத்தை சொன்னார்கள்.

முதலில் நான் தமிழக அன்பர்களையும், தமிழக மக்களையும் வணங்குகிறேன். அடுத்து குடிலைச் சார்ந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்களை வணங்குகிறேன். அடுத்து மலேசிய நாட்டு அன்பர்களையும், மற்ற நாட்டில் உள்ள அன்பர்களையும் வணங்குகிறேன், அவர்களின் திருவடியையும் வணங்கி ஆசி பெறுகிறேன்.

இந்த சங்கம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு காரணம் தொண்டர்கள் தான். தொண்டர்களுடைய அயராத உழைப்பால்தான், தூய்மையான உழைப்பால்தான், தூய மனசாட்சியுடன் கூடிய உழைப்பால்தான் இந்த சங்கம் இந்த அளவுக்கு உயர்ந்தது.

இந்த சங்கம் எடுத்துக்கொண்ட ஒரே லட்சியம் ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல். இந்த சங்கம் ஒரு நிரந்தரமான சங்கம், உண்மையான சங்கம். இதை எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். இங்கே பசியாற்றுவித்தல் நடக்கிறது. இப்பொழுது கூட ஆறாயிரம் பேர் பசியாறியதை கேட்டு அறிந்து கொண்டேன்.

எந்த இடத்தில் பசியாற்றக்கூடிய எண்ணம் இருக்கோ, அந்த சங்கம் வளர்ச்சியடையும். அங்கே பன்னீர் மரம் இருக்கு, முதல் நாளில் நிறைய பூத்துக் குலுங்கும் மறுநாள் பார்த்தால் எல்லாம் கீழே கொட்டிப்போகும். இப்படியெல்லாம் சில சங்கங்கள் இருக்கும். அவைகள் எல்லாம் பசியாற்றக்கூடிய எண்ணம் இல்லாத சங்கங்கள்.

நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், என்றும் நறுமணம் உள்ள சங்கம். காரணம் இங்கே பசியாற்றக்கூடிய எண்ணம் உள்ளது. பசியாற்றக் கூடிய எண்ணம் உள்ள இடத்தில் தலைவன் இருப்பான். ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்றக்கூடிய எண்ணம், அந்த தயவு இருந்தால் அங்கே ஆசான் அகத்தீசரும், நந்தீசரும், திருமூலதேவரும், கருவூர்முனிவரும் இருப்பார்கள். தயவு இல்லாவிட்டால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போய்விடுவார்கள்.

ஆக ஒரு குடும்பத்தில் உள்ள தலைவனிடமோ அல்லது தலைவியிடமோ யாரேனும் பசி என்று வந்து கேட்டால், உடனே உணவு தர வேண்டுமென்று நினைத்தால் அங்கே அகத்தீசன் வந்து தங்கிவிடுவார். அவ்வாறு தங்குவதற்கு பக்தி செய்ய வேண்டும்.

பக்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும். ஓம் அகத்தீசாய நம, ஓம் கருவூர் தேவாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம என்று சொல்ல வேண்டும், சித்தர்கள் போற்றித் தொகுப்பை படிக்கலாம்.

யாரொருவர் ஞானிகளை வணங்குகிறார்களோ, அவர்கள் எதை விரும்பினாலும் கைக்கூடும். 1008 திருமணம் என்று சொல்லி, 1184 திருமணம் செய்து வைத்தோம். இது மிக சாதாரண சின்ன விசயம், இது ஒரு பெரிய விசயமல்ல. 1008 திருமணம் செய்து வைப்பதை போகிறபோக்கில் லேசாக செய்யமுடியுமென்று சொல்ல முடியுமா? அப்படிப்பட்ட பிரும்மாண்ட விசயத்தையே லேசாக செய்யலாம் என்று சொல்லுகிறபோது இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆசான் அகத்தீசர் ஆசியிருந்தால் எதை வேண்டுமானாலும் இலகுவாகச் செய்யலாம். தினமும் அகத்தீசா அடிமையை ஏற்று அருள் செய்யவேண்டும் என்று கேட்டால் அவர்கள் எதைவேண்டுமானாலும் செய்ய அருள்செய்வார்கள். எதையும் செய்யும் வல்லமையைப் பெறலாம்.
உலகத்திற்கே முதுபெரும் தலைவனாக இருக்கக்கூடிய ஞானிகளை வணங்கினால்தான் எதையும் செய்யமுடியும். தொண்டர்களும் தினமும் வணங்கி பூஜை செய்கிறார்கள்.

ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்று சொல்ல ரொம்ப சுலபமாக இருக்கும். இதை நான் மட்டுமல்ல இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் இலகுவாக சொல்லலாம். ஞானிகளின் நாமத்தை ஐந்து வயது பையன் கூடச் சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்வதற்கு கல்வியோ, பட்டமோ தேவையில்லை. இந்த நான்கு மகான்களின் நாமத்தை சொன்னாலே போதும், அவர்கள் எதையும் செய்வார்கள். அத்தகைய ஆற்றல் அவர்களுக்குண்டு.

எல்லோரும் பிரம்மிக்கத்தக்க காரியத்தை இவர்கள் லேசாக செய்துவிடுவார்கள். எல்லோரும் பிரமிக்கத்தக்க கூடிய காரியத்தை லேசாக செய்யக்கூடிய வல்லமை ஞானிகளின் திருவடி துணையால்தான் முடியும்.
தவம் என்பது கடினமில்லை. நான் கடினமான தவம் செய்கிறேன் என்று சொல்லி உங்களை மிரட்டுகிறார்கள். நாம் தவம் செய்வதை லேசாக நினைக்கிறோம்.

தவம் செய்வது எப்போது கடினமில்லை 'அகத்தீசா, நாயினும் கடையேனாகிய என்னை ஏற்று அருள் புரிய வேண்டும்” என்று யார் சொல்லுகிறானோ அவனுக்கு தவம் எளிய முறையில் சித்திக்கும்.
தவம் என்பது என்ன? ஆசான் திருவடியே தவம்.
சாகாக்கல்வி என்பது என்ன?
ஆசான் திருவடியே சாகாக்கல்வி ஆசான் திருவடியே சகல செல்வத்தையும் தரும்.
ஆசான் திருவடியே நாம் செய்த பாவத்தையெல்லாம் பொடியாக்கும்.

பாவம்தானே வறுமையாக மாறும். பாவம்தானே பகையாக மாறும். ஒரு மனிதனுக்கும் அவனது குடும்பத்திற்கும் என்ன வேண்டும்? ஒரு மனிதனுக்கு தங்குவதற்கு வீடு வேண்டும், வருவாய் தரக்கூடிய உத்தியோகம், தொழில் அல்லது வியாபாரம் வேண்டும். ஆக உணவு, உடை, இருப்பிடம் அதற்கு தேவையான வருவாய் வேண்டும்.
சரி வருவாய் இருக்கு, உடல் ஆரோக்கியம் வேண்டுமல்லவா? கணவனுக்கும் மனைவிக்கும் உடல் ஆரோக்கியம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வேண்டுமல்லவா, இருவருக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமல்லவா.
இருவருக்கும் ஒற்றுமை இருக்கு, பண்புள்ள புத்திரபாக்கியம் வேண்டுமல்லவா. பண்புள்ள புத்திரபாக்கியம் இருந்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் செய்ததாக அர்த்தம்.

ஆக கணவன் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும். பண்புள்ள புத்திரபாக்கியம் வேண்டும். கடன் சுமை இல்லாத வாழ்வு வேண்டும். தகுதியுள்ள நட்பு இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் வேண்டும், பக்தி வேண்டும். உணவு, உடை, தங்குவதற்கு வீடு வேண்டும். நான் சொன்ன இவையெல்லாம் மனிதனுக்கு அத்தியாவசியமான நித்திய தேவைகள்.
சரி, இந்த தேவைகளை யார் தருவார்? எப்படி தருவார்கள்? ஞானிகளை வணங்கினால் தருவார்கள்.
இராமலிங்க சுவாமிகளே, நீங்களெல்லாம் பெரியவர்கள். ஐயா எனக்கு அருள் செய்யுங்கள் என்று கேட்டால் அருள் செய்வார்கள்.
ஆசான் இராமலிங்க சுவாமிகளும், அகத்தீசரும், நந்தீசரும் நமக்கு எப்போது அருள்செய்வார்கள்?

புலால் உண்ணாமல் இருந்தால் நமக்கு அருள் செய்வார்கள். புலால் என்பது ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகும். புலாலை மாமிசம் என்றும் சொல்லுவார்கள்.
புலாலை சாப்பிடக்கூடாது. ஏனய்யா சாப்பிடக்கூடாது? உயிர்க்கொலை செய்து உண்ணுகின்ற மக்களுக்கு ஞானிகள் அருள்செய்ய மாட்டார்கள்.
புலாலை உண்டு பழக்கப்பட்டிருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? அதனால் ஒன்றும் குற்றமில்லை. நேற்று வரை சாப்பிட்டிருக்கலாம்.

இராமலிங்க சுவாமிகளே, இந்த புலால் உண்ணுகின்ற பழக்கத்திலிருந்து, ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுகின்ற பாவச்செயல்களிலிருந்தும், இந்த கொடிய பழக்கத்திலிருந்தும் அடிமை விடுபடவேண்டும் என்று கேட்டால் கட்டாயம் அருள் செய்வார்கள்.
நாம் அருள் செய்யுங்கள் என்று கேட்க வேண்டும். அப்ப அவர்கள் என்ன செய்கிறார்கள்? இவன் சரியான நேரத்தில் நம்மிடத்தில் வந்துவிட்டான். இவனுக்கு நிச்சயமாக அருள் செய்யலாம் என்று அருள் செய்வார்கள்.

அப்ப நான் உயிர்க்கொலை செய்யக்கூடாது, புலால் உண்ணக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன், அதற்கு நீங்கள்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் அருள்புரிவார்கள்.

எங்கே உயிர்க்கொலை செய்து உண்ணுகிறார்களோ, அங்கே இறைவன் இருக்க முடியாது. அவர்களுக்கு ஞானிகள் அருள் செய்ய மாட்டார்கள். இந்த துறையே அன்பின் முதிர்ச்சிதான். அன்பின் முதிர்ச்சியே ஞானமாக மாறும். அந்த அன்புணர்ச்சியை தருவது ஞானிகள் திருவடிதான்.

நான் எவ்வுயிருக்கும் இடையூறு செய்யாதிருக்க அருள் செய்ய வேண்டும். பிற உயிர்கள் எனக்கு இடையூறு செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும், அதைப் பொறுத்துக் கொள்ளுகின்ற பண்பையும் நீ எனக்கு தர வேண்டும், அடியேன் உன் அடிமை. இந்த அடியேன் தாய்மை குணத்தோடு இருக்க வேண்டுமென்று இராமலிங்க சுவாமிகளையும் ஆசான் அகத்தீசரையும் கேட்கிறோம்.

இப்ப, குடும்பத்தலைவன் என்ன செய்ய வேண்டும். என்னுடைய மனைவி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும்படி அடியேன் நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள வேண்டும். மனைவி மக்கள், தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்பவர்களெல்லாம், மனமார நம்மை வாழ்த்த வேண்டும். அவர்கள் இதயத்தில் நம்மீது ஒருவித கசப்புணர்ச்சி இருக்கக்கூடாது. அப்பப்பா! இவன் கொடுமைக்காரன் என்று அவர்கள் நம்மை சொல்லக்கூடாது.
மனைவி கணவனைப் பார்த்து, இவன் இப்போது என்ன செய்வானோ, அடுத்து இவனால் என்ன நடக்குமோ என்று பயப்படக்கூடாது. மனைவி பயப்படாமலிருக்கும் அளவிற்கு கணவன் மனைவி மீது அன்பாக நடந்து கொள்ளணும்.

இப்ப ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால், தன்னைச் சார்ந்தவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும். மனைவி, மக்கள், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள், தாய், தந்தை, தன்னை சார்ந்தவர்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்ள கற்றுக்கொள்கிறவன் நிச்சயமாக கடவுள்தன்மை அடைவான்.

வெளியே தெரியாமல் கொடுமைக்கார பாவி என்று மனைவி நினைத்தாலோ அல்லது வேலை செய்கிறவன் நினைத்தாலோ அல்லது தன்னை சார்ந்தவர்கள் கொடுமைக்கார பாவி, கொடுமைக்காரன் என்று நினைத்தால், நிச்சயம் அவன் என்ன செய்தாலும் முன்னேற முடியாது.
அப்ப மனைவி மக்கள், தாய், தந்தை இவர்களையெல்லாம் கடவுளின் மறுபிறப்பாக பார்க்க வேண்டும். கடவுளின் சொரூபமாக பார்க்க வேண்டும். மனைவி கடவுள் கொடுத்த பிச்சை.
தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் எல்லோரும் கடவுளால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். இவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த ஆன்மீகமாகும்.

வீட்டில் உள்ளவர்களின் மனது பதறும்படியாகவோ அஞ்சும்படியாகவோ நடக்கக்கூடாது. எப்பொழுது கணவன் வருவார் என்று மனைவி ஏங்கவேண்டும். எப்ப மனைவி வருவாள் என்று கணவன் ஏங்க வேண்டும். எப்ப அப்பா வருவார் என்று பிள்ளைகள் ஏங்க வேண்டும். எப்ப மகன் வருவான் என்று தாய் தந்தை ஏங்க வேண்டும். எப்பொழுது நண்பனை பார்க்கலாம் என்று நண்பனும் விரும்பவேண்டும். நம் முதலாளி எப்ப வருவார் என்று வேலைக்காரன் நினைக்க வேண்டும்.

ஆக ஒவ்வொருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி உண்டுபண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும். இந்த அறிவு திருவருள் துணையில்லாமல் யாருக்கும் வராது.
தன்னைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும் மனம் வெதும்ப நடந்து கொண்டு, வெளி மக்களிடம் இனிமையாக பேசுவார்கள். நீ வீட்டில் உள்ளவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளாமல், வெளியே தேனொழுக பேசி என்ன பயன்? அதனால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது.

நமக்குத் துன்பம் வந்தால் தாய், தந்தை, மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்கள்தான் துணையாக இருப்பார்கள். இவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்வதே சிறந்த அறிவாகும். ஆக இந்த அறிவை யார் தருவார்? ஆசான் அகத்தீசர்தான் இதை தருவார். பூஜை செய்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். பூஜை செய்துதான் இதைப் பெற வேண்டும்.

கணவன், என்னை சார்ந்தவர்கள் என்னை புண்ணியவான் என்று அன்போடு பார்க்க வேண்டும், என்னை கொடுமைக்காரன் என்று சொல்லாத அளவுக்கு நான் நடந்து கொள்ளவேண்டும், என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டிக் கொண்டால் ஆசான் அகத்தீசன் அருள் செய்வார்.

ஆக ஆசான் அருளைப் பெறுவதற்கு அடிப்படையே ஒருவன் சைவத்தை மேற்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிட வேண்டும், சைவத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
புலால் உணவு உண்ணக்கூடாது. புலால் உணவு உண்ணுகிறவர்களுக்கு ஜீவகாருண்யம் இருக்க முடியாது. இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 253.

கைகளில் ஆயுதம் வைத்திருப்பவன் கருணையோடு இருப்பானா? நிச்சயம் இருக்க மாட்டான். நான் இனி சைவ உணவுதான் மேற்கொள்வேன், அசைவ உணவை உண்ண மாட்டேன் என்று ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். இப்படி இருந்தால் இதயத்தில் ஒரு கனிவு சிந்தை வரும். நேற்றுவரை உண்டிருந்தாலும் அதை மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும், ஆசான் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

அப்ப உணவிலும் சைவம், உள்ளத்திலும் சைவம். உள்ளம் எப்போது சைவமாகும்? நான் பிறருக்கு இடையூறு செய்யாதிருக்க அருள்செய்ய வேண்டும். யாரேனும் எனக்கு இடையூறு செய்தாலும், மீண்டும் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய எண்ணம் எனக்கு வரக்கூடாது. அதுபோன்ற உயர்ந்த எண்ணத்தை நான் மேற்கொள்ள வேண்டும். ஆக நான் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டுமென்ற சைவ உணர்வு இதயத்தில் வந்தது. அப்ப உணவிலும் சைவம், உள்ளத்திலும் சைவம். உள்ளம் சைவமாக வேண்டும் அது எப்போது வரும்? அகத்தீசா அடியேன் தூய மனதோடு இருக்க வேண்டும்.

தூய மனது என்றால் என்ன? பழிவாங்கும் உணர்ச்சியும், பிறருக்கு இடையூறு செய்யக்கூடிய எண்ணமும் இருந்தால் அங்கே தூய மனசு இல்லை.
பிறருக்கு மகிழ்ச்சி உண்டு பண்ணக்கூடிய எண்ணத்தை எனக்கு தரவேண்டுமென்று கேட்க வேண்டும். இப்படி கேட்பதுதான் உணர்வில் சைவம்.
அடுத்து செய்கையில் சைவம் வேண்டும். செய்கை எப்ப சைவமாகும்?
நமது செயல்களால் பிறருக்கு துன்பம் தரக்கூடாது. நாம் ஈட்டுகின்ற பொருளிலோ, நாம் உண்ணுகின்ற உணவிலோ அல்லது நமது இன்பத்தில் பிற உயிர்க்கு துன்பமோ தராது இருந்தால் அது செய்கையில், செயலில் சைவம்.

அடுத்து சொல்லிலே சைவம். பேசும்பொழுது இனிமையாக பேசவேண்டும். முன்செய்த வினையின் காரணமாக கடுகடுப்பாக பேசி பழக்கப்பட்டிருப்பார்கள். அதை மாற்றிக் கொள்ள வேண்டும். கருணையே வடிவான அகத்தீசன் ஆசி இல்லாமல் ஒருவருக்கு அந்த கருணையான சொற்கள் வராது.
இதயத்தில் தூய்மை இருந்தால்தான் சொல்லிலே தூய்மை இருக்க முடியும். ஆக இதயத் தூய்மைக்கு என்ன காரணம்.

மனம் தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
- திருக்குறள் - சிற்றினம் சேராமை - குறள் எண் 456.

ஆக மனத்தூய்மைக்கு பூஜைதான் காரணம். பூஜை செய்யாவிட்டால் மனதில் தூய்மை வராது. நாம் வணங்கும் தலைவன் தூய்மையானவன், ஜீவகாருண்யத்தலைவன், ஜீவகாருண்ய வள்ளல், கருணையே பொருந்திய ஆசானை வணங்க வணங்க நம்மிடமுள்ள குணக்கேடுகளெல்லாம் நீங்கிவிடும்.

குணக்கேடுதான் மீண்டும் பிறவிக்குக் காரணமாக இருக்கும். பிறரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுதல் ஒரு குணக்கேடு. அடுத்து அவா, அவா எனும் பேராசை மனிதனை நரகத்திற்கு தள்ளுவதும் பேராசையே. தன் உழைப்பால் வருகின்றப் பொருளை அனுபவிப்பது குற்றமில்லை. எப்படியும் பொருள் சேர்க்க வேண்டும் என நினைத்து ஐயாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு பத்தாயிரத்திற்கு

எழுதிவாங்குவான். ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அல்லது வீட்டை இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து எழுதி வாங்கிவிடுவான், இது பேராசை. அந்த மாதிரி ஐயோ படுபாவி குறைந்த பணத்தை கொடுத்து வீட்டையும், நிலத்தையும் கைப்பற்றிவிட்டான் என்று சொல்லும்போது அது பாவச்செயலாகிவிடும். ஆகவே அதுபோன்ற குணக்கேடுகள் எல்லாம் நீங்க வேண்டும்.

அப்ப ஆசானிடம், என்னிடம் உள்ள குற்றங்கள் இன்னும் உணர்த்தப்படவில்லை, அதனை உணர்த்த வேண்டுமென்று திருவடி பணிந்து கேட்கவேண்டும். நான் பொறாமைபடுகிறேனா, பேராசைக்காரனா, அளவு கடந்த சினம், கோபம் உள்ளவனா அல்லது பிறர் மனம் புண்பட பேசுவதில் வல்லவனா என்பதை தாங்கள்தான் எனக்கு உணர்த்த வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும்.

ஆக பொறாமை, பேராசை, கடும் சினம், கோபம், பிறர் மனம் புண்பட பேசுதல் போன்ற இந்த நான்கு குணக்கேடுகளும் மனிதனை நரகத்திற்கு தள்ளும். என்னிடமிருந்து இந்த குணக்கேடுகள் நீங்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.

ஞானிகளெல்லாம் குணப்பண்புள்ளவர்கள். அவர்களிடம் குணக்கேடுகளிருந்தால் அவர்கள் ஞானிகளாக ஆகியிருக்க முடியாது. அவர்கள் ஆசான் ஞானபண்டிதனாகிய சுப்ரமணியரை வணங்கி தம்மிடமுள்ள குணக்கேட்டை நீக்கிக் கொண்டார்கள். குணக்கேடுகள் நீங்காமல் ஒருவன் திருவருளை பெறமுடியாது. அப்ப திருவருள் பெறுவதற்கு குணக்கேடுகள் நீங்க வேண்டும். அதற்கு முதலில் வழிபாடுதான் முக்கியம்.

ஆசானிடம் எடுத்த உடனேயே என்னிடம் இருக்கின்ற குறையை அடியேன் உணர்ந்துகொள்ள அருள் செய்ய வேண்டும், என் மனம் என்னை பாராட்டிக் கொண்டே இருக்கிறது. என்னிடம் இருக்கின்ற குணக்கேடுகளை நீக்குவதற்கும் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் அருள் செய்வார்.

அப்ப எனக்கு உயர்ந்த எண்ணங்கள் வேண்டும், எனக்கு தயை சிந்தனை வேண்டும், அதுவும் உன் திருவருளால் வேண்டுமென்று கேட்டால் அருள் செய்வார். தயைசிந்தை அல்லது ஜீவகாருண்யம் அல்லது ஜீவதயவு யாரிடம் இருக்கும்?
சுயநலம் இருந்தால் அங்கே தயை சிந்தனை இருக்க முடியாது. தயை சிந்தை இருந்தால் அங்கே சுயநலம் இருக்க முடியாது.

ஆக தயைசிந்தை வேண்டும். தயை சிந்தை எப்படி வரும்? ஞானிகளெல்லாம் தயை சிந்தை உள்ளவர்கள், ஜீவகாருண்யம் உள்ளவர்கள், வல்லவர்கள், கருணையே வடிவானவர்கள்.
கருணையே வடிவான மக்களை பூஜைசெய்ய பூஜைசெய்ய நம்முடைய இதயத்தில் இருக்கும் வன்மனம் நீங்கும். கருணை உள்ளம் வரும். பிறகு பிறருக்கு
உதவ வேண்டுமென்று நினைக்கின்ற தயை சிந்தனை வரும். தயை சிந்தனை உள்ள இடத்தில் தலைவன் வந்து தங்குவான்.

இப்ப நமக்கு தயை சிந்தனை வேண்டும், ஜீவகாருண்யம் வேண்டும். திருக்குறளுக்கு பொருந்திய வாழ்வு வாழவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும். முதலில் புலால் மறுக்க வேண்டும். அடுத்து மாதம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.
மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்வதும், புலால் மறுப்பதும், ஜீவகாருண்யத்தின் தலைமை கொள்கை. வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ந்து கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அண்ணனோ, உடன் பிறந்தோர்களோ, மனைவியோ, தாய் தந்தையோ அல்லது வேலை செய்பவர்களோ மனதிற்குள்ளே வெளியே தெரியாமல் பாவி, பாவி என்று சொன்னால் நிச்சயமாக ஒருவன் கடவுள் தன்மையை அடைய முடியாது.

அப்ப தயை சிந்தனை உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? தன்னிடம் வேலை செய்கின்றவன் முகத்தை பார்க்க வேண்டும். “என்னப்பா ரொம்ப சோர்வா இருக்கியே சாப்பிட்டாயா?” என்று கேட்டால் அது தயை சிந்தனை.

தன்னிடம் வேலை செய்கின்றவன் தன்னை பாராட்ட வேண்டும். அப்ப வேலை செய்கின்றவன் முகத்தை பார்த்து இவன் சாப்பிட்டிருப்பானா இல்லையா என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆக நம்மிடம் வேலை செய்கின்றவர்கள், தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள் இவர்களெல்லாம் மகிழ்ந்து கொள்ளும்படியாக நடந்து கொள்வது தயை சிந்தனை.

ஆக தயை சிந்தனை, தலைவன் ஆசியில்லாமல் வராது. இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசானை கேட்க வேண்டும். அடியேன் தயை சிந்தனையோடு வாழவேண்டும், அடியேன் தூய மனதோடு இருக்க வேண்டுமென்று ஆசானிடம் நாங்கள் இப்படியெல்லாம் கேட்டு கேட்டுத்தான் பெற்றிருக்கிறோம்.

நம்முடைய சங்கம் (ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்) 30 வருசமாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கு. மேலும் வளரும். மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். என்னுடைய சிந்தனையும் செயலும் உயர்ந்துகிட்டே இருக்கு. சிந்தை உயருது. சங்கமும் வளருது.

இங்கே உள்ள தொண்டர்கள் அத்தனை பேரும் உயர்ந்த தொண்டர்கள். அதனால்தான் நான் முதலில் வணங்கும்போதே ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்களின் திருவடிகளை வணங்கினேன். இந்த சங்கத்துக்கு யார் யார் பொருளுதவி செய்கிறார்களோ அவர்களின் திருவடியை வணங்குகிறேன். மலேசிய அன்பர்கள், மற்ற நாட்டில் உள்ள அன்பர்கள் திருவடியை வணங்குகிறேன். அவர்கள் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இந்த குடிலில் இருப்பவர்கள் யாரேனும் பசியோடு இருக்கிறார்களா? எல்லோரும் சாப்பிட்டார்களா? என்பதை அடிப்படையாக வைத்து செயல்படுவோம். எல்லோரும் பசி இல்லாமல் இருக்கிறார்கள். இங்கு எந்த குறையும் இல்லை. ஒருவரோடு ஒருவர் விகற்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அப்ப குடிலில் இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில்தான் தலைவன் தங்கி இருப்பான்.

ஆகவே நம்மை சார்ந்தவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதே ஓர் உயர்ந்த எண்ணமாகும். இந்த எண்ணம் யாரால் வரும்? ஆசான் அகத்தீசனால் வரும். எனக்கு பொருள் பற்று இருந்தால் நிச்சயம் இந்த எண்ணம் எனக்கு இருக்க முடியாது. “அடியேன் பொருள் பற்று இல்லாதவனாக இருக்க வேண்டும்” என்று ஆசானிடம் கேட்டோம்.

ஒரு சங்கத்தின் தலைவன், சங்கத்தில் இருப்பவர்கள், முக்கியஸ்தர்கள் பொருள் பற்று உள்ளவராக இருந்தால், சங்கத்தை சார்ந்து இருப்பவர்களுக்கு நிச்சயமாக அவர்கள் நல்லது செய்ய மாட்டார்கள். மலேசியா, தமிழக, மற்ற நாட்டில் உள்ள அன்பர்கள் கொடுத்த பொருளையெல்லாம் மதம் கொண்ட யானை எறிவதுபோல் வீசி எறிந்துவிட்டோம். ஆசான் எனக்கு அந்த வாய்ப்பை தந்தார். இந்த அறிவு ஆசான் கொடுத்தது. பொருளைக்கண்டு மயங்காத ஆற்றல் ஆசான் கொடுத்த பிச்சை ஆகும்.

இந்த சங்கம் பல இன மக்களைக் கொண்ட ஒரு சங்கம். சில சங்கத்தில் குறிப்பிட்ட இனமக்கள்தான் இருப்பார்கள். மற்றவர்கள் அந்த சங்கத்தின் உள்ளே நுழைய முடியாது. ஆனால் இங்கே எல்லா இன மக்களும் ஒருதாய் மக்களாக இருப்பதற்கு என்ன காரணம்? தூய மனது. இந்த தூய மனது ஆசான் அகத்தீசனால் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் காலையில் எழும்போதே ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். “பூஜை செய்கிறோம் ஐயா” பூஜையில் என்ன கேட்க வேண்டும்?
என்னிடமிருக்கின்ற குணக்கேடுகளை புரிந்து கொண்டு அதை நீக்கிக்கொள்ள அருள் செய்ய வேண்டுமென்று கேட்கவேண்டும்.
அடியேன் சாந்தமுள்ளவனாகவும், ஜீவதயவுள்ளவனாகவும், கருணையுள்ளவனாகவும் வாழவேண்டுமென்றும் கேட்க வேண்டும்.

கருணைதான் அருள். ஆன்ம இயற்கை பெருந்தயவே அருள் என்றார். ஆன்ம இயற்கை பெருந்தயவே அருளாக ஆகும் என்றார். இப்ப அருளுக்கு என்ன விளக்கம்? இந்த சங்கம் அருள் உள்ள சங்கம். இப்ப ஆறாயிரம் பேர் சாப்பிட்டுள்ளார்கள். மேலும் மக்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இது அருள் உள்ள சங்கம். எங்கே நற்காரியம் நடக்குதோ அங்கே அருள் இருக்கிறது என்று அர்த்தம். தொடர்ந்து நற்காரியம் நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

இப்ப குடும்பத்தில் சிறந்த குடும்பம் எதுவென்று கேட்டால், மாதம் இருவருக்கு ஒரு குடும்பத்தலைவனோ அல்லது தலைவியோ அன்னதானம் செய்தார்கள் என்றால் அவர்களின் குடும்பம்தான் உயர்ந்த குடும்பம். தனக்குள்ள சக்திக்கேற்ப ஒரு ரசம், ஊறுகாய் கொடுத்து விருந்தை உபசரிக்கிற குடும்பம் உயர்ந்த குடும்பம். மாதம் ஒருவருக்கோ, இருவருக்கோ அன்னதானம் செய்தால் அது மிகப்பெரிய உயர்ந்த குடும்பம். இதைவிட பெரிய உயர்ந்த குடும்பம் ஒன்று இருக்கு. ஒன்றல்ல, நூறல்ல, ஓராயிரமல்ல, ஒரு லட்சம் குடும்பம் இருக்கு அது எந்த குடும்பம்? “நாங்கள் எந்த உயிரையும் கொன்று சாப்பிடமாட்டோம்” என்று சொல்லுகின்ற குடும்பம் மிக உயர்ந்த குடும்பம்.

"எங்கள் குடும்பத்தினர் யாரும் புலால் உண்ணமாட்டார்கள்” என்று சொல்லுகின்ற மக்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்ப உயர்ந்த குடும்பம் புலால் உண்ணாத குடும்பம். உயர்ந்த குடும்பம் விருந்தை உபசரிக்கின்ற குடும்பம். மாதம் ஒருவருக்காவது அல்லது இருவருக்காவது அன்னதானம் செய்கின்ற குடும்பம் உயர்ந்த குடும்பம். காலையில் எழும்போதே “ஓம் அகத்தீசாய நம்” என்று சொல்லும் குடும்பம் உயர்ந்த குடும்பம்.

ஞானிகள் அத்துணை பேரும் ஜீவகாருண்ய வள்ளல்கள். ஜீவதயவுள்ளவர்கள் அவர்களை வணங்க வணங்க முன்செய்த பாவங்கள் தீரும். முன்செய்த பாவமே கடன் சுமையாக மாறும், முன்செய்த பாவமே நோயாக மாறும். அப்ப உடல் ஆரோக்கியத்திற்கு என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்க என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும். சொந்த வீடு அமைவதற்கு என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும்.

ஆக கடன்சுமை இல்லாமல் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். சொந்த வீடு அமைய வேண்டும். நோயில்லா மனைவி, நோயில்லா பிள்ளை, நோயில்லா வாழ்வு அமைய வேண்டும். இப்படியெல்லாம் அமைந்திருந்தால் அது உயர்ந்த குடும்பம். இந்த வாய்ப்பு எப்ப கிடைக்கும்? சாமர்த்தியத்தால் வருமோ? வராது. அதுக்கு புண்ணியம் வேண்டும். புண்ணியம் செய்யாமல் இந்த வாய்ப்பு கிடைக்காது.
உணவு, உடை, தங்கும் வசதி, போதிய வருவாய், நோயில்லா குடும்பம், நோயில்லா மனைவி, நோயில்லா பிள்ளைகள், குடும்பத்தில் அமைதி இவ்வளவும் இருப்பதற்கு பொருள்மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு அருள் வேண்டும். அப்ப அருள் என்பது என்ன?
ஆன்ம இயற்கை பெருந்தயவே அருளாகும். தயவுதான் அருள். குடும்பத்தலைவனும், தலைவியும் அருள் சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும்.

அவர்கள் புலால் உண்ணுகின்ற மக்களாக இருந்தால் தயைசிந்தை இருக்க முடியாது.
ஒருகோழியையோ, மீனையோ உயிரோடு அறுப்பார்கள். அது மிக கொடுமையானது. கோழியை அறுக்கும்போது அது அப்படியே துடிக்கும். அதன் துடிப்பை உணரும் அறிவு வந்து விட்டால் அங்கே தலைவன் வந்துவிட்டான் என்று அர்த்தம். உயிர் மீனை வாங்கி அதை துடிக்கதுடிக்க கழுத்தை அறுத்து குடலை எடுத்துவிடுவாங்க. அதன் அசுத்தத்தையும் எடுப்பாங்க. அதன் வால் மட்டும் துடிக்கும். ஆட்டை அறுக்கும்போது அந்த ஆடு துடிப்பதை பார்ப்பாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது ஐயோ பாவம்! என்று நினைக்கின்ற இதயத்தில்தான் கடவுள் இருப்பார்.

அந்த இரக்க சிந்தனை எப்போது வரும்? இராமலிங்க சுவாமிகளே! இன்னும் உயிர்கள்படும் துன்பத்தை என்னால் உணரமுடியவில்லை. அந்த பாவச்செயலை காணும்பொழுதெல்லாம் என் உள்ளம் நடுங்க வேண்டுமென்று கேட்டால் ஆசான் இராமலிங்க சுவாமிகள் அருள் செய்வார்கள். சில இடத்தில் ஞானிகள் அந்த காட்சியைப் பார்த்தால் அப்படியே மனம் வெதும்புவார்கள். அப்ப அந்த துன்பத்தை கண்டு உணரக்கூடிய அறிவு எப்போது வரும்? புலால் மறுப்பதும், மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்வதும், பூஜை செய்வதுமாக இருந்தால் வரும். பூஜை செய்தால்தான் இந்த உயர்ந்த எண்ணம் வரும். அப்படிப்பட்ட எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நேற்றுவரை நாம் புலால் உண்டிருக்கலாம் இன்று மாற்றிக் கொள்ளலாம். அப்ப, அகத்தீசா! எனக்கு ஜீவதயவு வேண்டும், அடியேனுக்கு ஜீவகாருண்யம் வேண்டுமென்று கேட்க வேண்டும். ஜீவதயவை மேற்கொள்ள வேண்டும். ஜீவதயவு இருந்தால்தான் திருவருள் இருக்கும். அப்ப ஜீவதயவு என்பது அருள். அப்ப இந்த ஸ்தாபனம் (ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்) அருள் ஸ்தாபனம். இந்த சங்கம் நற்காரியம் செய்து கொண்டே இருக்குது. இதையெல்லாம் செய்வதற்கு ஆள் சாமர்த்தியமா? பணபலமா? ஆள்பலமும் வேணும், பணபலமும் வேணும், தொண்டர்களும் இருக்கணும், முக்கியமாக அருளும் வேண்டும்.

அருள் என்பது கருணை சிந்தனை, ஜீவதயவு, நல்ல மனசு, தயை சிந்தை. ஆக தயை சிந்தை இருந்தால்தான் எந்த காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். முதல் நாள் பூத்துக்குலுங்கும் பன்னீர் பூக்கள் மறுநாள் கொட்டிவிடும். அதுபோல சில சங்கத்தில் பிரும்மாண்டமான கட்டிடங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆரவாரமான கூட்டமிருக்கும். நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே வரும். என்ன காரணம்? தலைமை தாங்குகிறவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தயை சிந்தை இல்லாமல் இருப்பார்கள்.

ஆனால் இந்த சங்கம் வளருவதற்கு என்ன காரணம்? தயை சிந்தை. ஆக அந்த கருணை பொருந்திய உள்ளங்களை கொண்டவர்கள் நிறையபேர் இங்கே இருக்கிறார்கள். இங்கே தொண்டர்கள் பத்து மூட்டை அரிசி சமைப்பார்கள். அதை கிராமத்திற்கு கொண்டு போவாங்க. கிராமத்தில் ஐநூறு அல்லது ஆயிரம் பேர் இருப்பாங்க. சாதத்தையும், ரசத்தையும் ஊற்றிக்கொண்டு போய்கிட்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட நாளொன்றிற்கு 48 மூட்டை (நாலேமுக்கால் டன்) வரை சமைச்சு தினம் 26,000 பேர்களுக்கு சாதம் போட்டிருக்கிறோம். அப்ப எவ்வளவு பேர் பாடுபட்டு கிராமத்திற்கு சென்று சாப்பாடு போட்டிருப்பார்கள்? சகிப்புத் தன்மையோடு ஒவ்வொரு கிராமத்திலேயும் 500, 1000 பேர்களுக்கு என்று பல கிராமங்களுக்கு தினமும் சாதமும் ரசமும் கொடுத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம்? அருள் சிந்தை, கருணை. அது யாரால் கொடுக்கப்பட்டிருக்கு? கருணையே பொருந்திய ஆசானையும், ஞானிகளையும் வணங்கியதால் அந்த வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்.

ஆக இந்த சங்கம் இதுவரை 2216 திருமணங்கள் செய்து வைத்துள்ளது. இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறரால் செய்ய முடியாத ஒன்றை இந்த சங்கம் செய்யும். இங்குள்ள அன்பர்கள் செய்வார்கள். காரணம் தூய மனசு. தலைவனின் திருவடியில், கடவுளின் சன்னிதானத்தில் இருக்கிறோமென்று செய்திருக்கிறார்கள். இந்த சங்கம் இன்னும் பல அற்புத செயல்களை செய்யப்போகிறது. அது போகபோகத்தான் தெரியும். இப்ப கண் சிகிக்சை முகாம் நடத்தியிருக்கிறோம், தண்ணீர் கொடுத்திருக்கிறோம்.

ஆக இவை எல்லாம் செய்வதற்கு அடிப்படைக் காரணம் கருணை சிந்தனை. அதற்கு அடிப்படைக் காரணம் பக்தி. நாங்கள் வணங்கினால், போற்றினால், புகழ்ந்தால் ஞானிகளைத்தான் வணங்குவோம். ஆசான் இராமலிங்க சுவாமிகளே, மாணிக்கவாசகர் ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா, திருநாவுக்கரசர் ஐயா, அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா, கருவூர்தேவா நீங்களெல்லாம் பெரியோர்கள், நாங்கள் மேற்கொள்ளும் அறப்பணிக்கு நீங்கள் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டோம். அவர்களும் அருள் செய்தார்கள். நாம் எதை விரும்பிகேட்கிறோமோ அதைதான் செய்வார்கள்.
யோகிகள், ஞானிகள், துறவிகள் ஆசானிடம் என்ன கேட்க வேண்டும்?

அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். உன் திருவடியைப் பூஜித்து அடியேன் மரணமிலாப் பெருவாழ்வு பெறவேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் முன்செய்த வினையின் காரணமாக ஏதேனும் இடையூறு வந்தாலும், அதை நீக்கி அடியேனுக்கு ஞானசிந்தை தந்து அடியேனை ஏற்று அருள் செய்யவேண்டுமென்று கேட்டிருக்கிறோம்.

இனி நான் கருப்பைக்கு செல்லக்கூடாது, அடியேன் மரணமிலாப் பெருவாழ்வு பெறவேண்டுமென்று கேட்போம், யோகிகளும் கேட்கணும்.
அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்றோம். ஞானம் என்றால் என்ன? அறிவு, சிறப்பறிவு.

இப்ப இல்லறத்தார்கள் என்ன கேட்க வேண்டும்? மனைவி மக்களுக்கு நோய் வரக்கூடாது. எங்கள் குடும்பத்தில் இதுநாள் வரையிலும் புலால் உண்டிருக்கிறோம். இதுநாள் வரையிலும் குலதெய்வத்திற்கு ஆடு, கோழி வெட்டியிருக்கிறோம். இனிமேலாவது அதுபோன்ற செயல்களில் நாங்கள் ஈடுபடக்கூடாது. இப்ப குலதெய்வம் துஷ்டதெய்வமாக இருக்கலாம். அங்கே சர்க்கரை, வெண்பொங்கல் வைத்து பூஜை செய்யணுமே தவிர ஆடு, கோழி வெட்டுவதாக வேண்டிக்கொள்ளக் கூடாது. நேற்று வரையிலும் செய்திருக்கலாம். இனிமேலாவது செய்யாமல் இருக்க அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.

இப்படி இல்லறத்தான் கேட்கும் போது? ஞானிகள் இவன் சரியான நேரத்தில் வந்துவிட்டான் என்பார்கள். குலதெய்வத்தின் பெயராலோ அல்லது உண்பதற்காகவோ உயிர்க்கொலை செய்யமாட்டேன் என்ற உறுதிநிலை மேற்கொள்ள வேண்டும்.

உயிர்க்கொலை செய்கின்ற இடத்தில் தலைவன் இருக்க மாட்டான். புலால் உண்ணுகின்ற இடத்தில் தலைவன் இருக்க மாட்டான். நேற்றுவரையில் அந்த குணக்கேடுகள் இருந்தாலும் இனி மாற்றிக் கொள்ளலாம். ஆகவே ஒரு குடும்பம் முன்னேற்றம் அடையவேண்டுமென்றால் அங்கே புண்ணியபலம் வேண்டும். புண்ணியபலம் இல்லையென்றால் குடும்பம் நிலை உயரமுடியாது. சில குடும்பங்கள் ஓஹோ என்று வளரும், சில ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ச்சியடையும். என்ன காரணம்? புண்ணிய பலம் குறைந்துவிட்டது. ஏதோ நம்மிடம் பலஹீனம் இருக்கு, என்ன பலஹீனம்? புலால் உண்ணுகின்ற பலஹீனம். அடுத்து அன்னதானம் செய்யவில்லை. விருந்தை உபசரிக்கவில்லை. அப்ப விருந்தை உபசரித்தல், அன்னதானம் செய்தல், புலால் மறுத்தல் பிறருக்கு நன்மை செய்ய நினைத்தல், ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தல், தினமும் பக்தி செலுத்துதல் போன்ற காரியத்தை குடும்பத் தலைவன் செய்ய வேண்டும்.
அப்ப குடும்பத்தலைவன் புலால் மறுக்க வேண்டும். விருந்தை உபசரிக்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் சிறுதெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக்கூடாது. ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். ஞானிகளைப் பூசிக்க வேண்டும். நல்ல நட்பை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் குடும்பத்திற்கு அடிப்படை. இப்படி இருந்தால்தான் குடும்பத்தலைவர் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இன்னும் சிலபேர் ஊசி, மருந்து, மாத்திரை என்று சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். என்ன காரணம்? வள்ளுவ சுவாமிகளைக் கேட்டால் அது முன்செய்த வினைப்பயன் என்றார்.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
- திருக்குறள் - இன்னா செய்யாமை - குறள் எண் 320.

நீ எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிறாயோ, அந்த அளவுக்கு துன்பப்பட்டுதான் ஆகவேண்டும் என்பார்.
நாம் பிற உயிர்களுக்கு இடையூறு செய்யாதிருக்க அருள் செய்ய வேண்டுமென்று இராமலிங்க சுவாமிகளை கேட்கிறோம், அகத்தீசரைக் கேட்கிறோம், திருவள்ளுவரைக் கேட்கிறோம். அய்யா! இதுவரையில் யாரும் இப்படி கேட்டதில்லையென்று அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

நான் பிற உயிர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கின்ற அறிவு தரவேண்டுமென்ற எண்ணம், அந்த வேண்டுகோள் அவனை உயர்த்தும். பிற உயிர்கள் எனக்கு இடையூறு செய்தால், அதை சகித்துக்கொள்ளக்கூடிய, பொறுத்துக் கொள்ளக்கூடிய, மன்னித்துக் கொள்ளக்கூடிய பண்பு எனக்கு வேண்டுமென கேட்கவேண்டும். இவ்வாறு இல்லறத்தானும் துறவறத்தானும் கேட்கலாம்.

சரி! இல்லறத்தான் என்ன கேட்கவேண்டும். நான் யாருக்கும், என்னுடைய மனைவி, மக்கள், உடன்பிறந்தவர்களுக்கு பேராசைக் காரணமாகவோ அல்லது பொறாமைக் காரணமாகவோ இடையூறு செய்யக்கூடாதென்று கேட்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டுமென்று கேட்டால் அருள் செய்வார்கள். அப்ப அந்த தூய மனசை, அந்த உயர்ந்த எண்ணத்தை ஞானிகளிடம் வேண்டி கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து நாமஜெபம் செய்ய வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கூட உட்கார்ந்து நாமஜெபம் செய்ய வாய்ப்பு இல்லாவிட்டால் பஸ்ஸில் போகும்போதோ, சைக்கிளில் போகும்போதோ நடந்து போகும்போதோ அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா என்று சொன்னால் போதும், அந்த பூஜையை ஆசான் அகத்தீஸ்வரர் ஏற்றுக்கொண்டு அருள் செய்வார்.

ஆசான் அகத்தீசரிடம் எனக்கு உயர்ந்த எண்ணம் வேண்டும், தயை சிந்தை வேண்டுமென்று கேட்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரிடத்தும் தயை சிந்தை வேண்டும். தயை சிந்தைதான் ஒருவனுக்கு முக்கியம். மனைவியை அடிப்பான், அவள் அடிக்காதே, அடிக்காதே என்று சத்தம் போடுவாள். அவன் சத்தம் போடாதே, சத்தம் போடாதே என்று மீண்டும் மீண்டும் அடிப்பான். இவனே கொடிய பாவி.

மனைவியின் துன்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்தந்தையர் துன்பத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறருடைய துன்பத்தை உணர முடியாத அறிவு இருந்தால் அங்கே எப்படி இறைவன் இருப்பான்? ஆக ஆசானிடம், “நான் பிற உயிர்கள்படும் துன்பத்தை அறியக்கூடிய அறிவு எனக்கு வேண்டுமென்று கேட்க வேண்டும். பிற உயிர்கள் படும் துன்பத்தை உணரக்கூடிய அறிவு வேண்டுமென்று கேட்டாலே அந்த இடத்துக்கு இறைவன் தானே வந்துவிடுவான்.
நோயில்லாமல் நீ வாழ வேண்டுமா? என்று ஒரு இல்லறத்தானை ஆசான் திருவள்ளுவர் கேட்டார். "ஆமாம் என்பான் ” இல்லறத்தான். அதற்கு ஆசான் திருவள்ளுவர்,

நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
- திருக்குறள் - இன்னா செய்யாமை - குறள் எண் 320.

நீ நோயில்லாமல் வாழ வேண்டுமென்றால் பிற உயிருக்கு துன்பம் செய்யாதே. பிற உயிருக்கு துன்பம் செய்தால் நிச்சயம் உனக்கு துன்பம் வரத்தான் செய்யும். அதை நானும் தடுக்க முடியாது, யாரும் தடுக்க முடியாது, எவரும் தடுக்க முடியாது. சாட்சாத் பரபிரும்மமாகிய ஆசான் சுப்ரமணியரே தடுக்க முடியாது.

ஆக நீ எந்த அளவுக்கு துன்பம் செய்தாயோ அந்த அளவுக்கு துன்பத்தை அனுபவித்தே ஆகவேண்டும். இங்கு “நோய்” என்று சொல்லாமல் “நோயெல்லாம்” என்று சொன்னார் ஆசான் திருவள்ளுவர். ஆக அது வறுமையாக இருக்கலாம், மனஉளைச்சலாக இருக்கலாம், பகையாக இருக்கலாம், விடாது பற்றி இருக்கும் நோயாக இருக்கலாம். அப்ப பிற உயிர்க்கு துன்பம் செய்தால் நிச்சயம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

ஆகவே ஆசான் என்ன செய்வார்கள்? நான் எவ்வுயிருக்கும் இடையூறு செய்யாதிருக்க வேண்டும். பிற உயிர் மகிழும்படி நான் நடந்து கொள்ள வேண்டும். எவ்வுயிருக்கும் இடையூறு செய்யாதிருக்கக்கூடிய அறிவு தரவேண்டும். பிறர் மகிழும்படி அடியேன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வேண்டுகோள் ஒருவரை உயர்த்தும்.
குடும்பத் தலைவன் என்ன செய்ய வேண்டும்?

என் மனைவி மக்கள் மகிழும்படி அடியேன் நடந்து கொள்ள வேண்டும். இவர்களெல்லாம் என்னை பாராட்ட வேண்டும். அவன் என் மனைவி என்னை உயர்ந்தவனென்று சொல்ல வேண்டும். அவள் என் கணவன் உயர்ந்தவனென்று சொல்ல வேண்டும். பிள்ளைகள் அப்பா உயர்ந்தவரென்று சொல்ல வேண்டும். தாய் தந்தை என் மகன் உயர்ந்தவனென்று சொல்ல வேண்டும். நண்பர்கள் என்னை உயர்ந்தவனென்று சொல்ல வேண்டும். உடன் பிறந்தவர்கள் உயர்ந்தவனென்று சொல்ல வேண்டும்.

இதைவிட மிக மிக முக்கியம் நம்மிடம் வேலை செய்கிறவர் நம்மை உயர்ந்தவன் என்று சொல்ல வேண்டும். நம்மிடம் வேலை செய்கிறவர் நம் முதலாளி உயர்ந்தவர் என்று சொல்ல வேண்டும். என்ன காரணம்? வேலைக்காரரிடம் நூறு ரூபாய் உழைப்பை வாங்கிவிட்டு இருபது ரூபாய், முப்பது ரூபாய் சம்பளம் கொடுத்தால் என்னாகும்? இப்படி இருந்தால் முதலாளி நல்லவன் என்று, வேலை செய்கிறவர் எப்படி சொல்லுவார்?

ஆகவே பிறர் துன்பத்தை அறியக்கூடிய அறிவு, பக்தியாலும், அன்னதானத்தாலும்தான் வரும். பக்தியும் அன்னதானமும் இல்லையென்றால் நிச்சயமாக பிறர் துன்பத்தை உணர முடியாது. மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் போதும். ஒருவன் ஒருவருக்கு அன்னதானம்

செய்தால், அவன் நிச்சயம் பலருக்கு அன்னதானம் செய்வான்.
இப்ப தமிழகம் முழுவதும் அன்னதானம் செய்துகொண்டு வருகிறார்கள். அன்னதானம் செய்யக்கூடிய இடத்தில் தயை சிந்தை இருக்கத்தான் செய்யும். மக்களுக்கு அன்னதானம் செய்யக்கூடிய எண்ணம் இருந்தால் புலால் உண்ண மாட்டார்கள். அன்னதானம் செய்தால் தங்கள் குலதெய்வத்திற்கு வெண் பொங்கலோ, சர்க்கரை பொங்கலோ வைத்து பூஜை செய்வார்களே தவிர, ஆடு, கோழி வெட்ட மாட்டார்கள்.

அன்னதானம் செய்தால் புலால் உண்பது பாவமென்ற அறிவு வரும். அன்னதானம் செய்தால் முன்செய்த பாவங்கள் தீரும். பாவம்தானே வன்மனமாக மாறும். பாவம்தான் நோயாக மாறும். பாவம்தானே வறுமையாக மாறும். பாவம்தானே கடன் சுமையாக மாறும். பாவம்தானே குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் செய்துவிடும். பாவம்தானே ஊனம் உள்ள பிள்ளையாக பிறக்கும். பாவம்தானே மூர்க்கத்தனமான பிள்ளையாக பிறக்கும்.

ஆக புண்ணியம் பெருக வேண்டும். புண்ணியம் செய்ய செய்ய மூர்க்கத்தனமான பிள்ளைகளும் பண்புள்ள பிள்ளைகளாக மாறிவிடும். புண்ணியம் செய்ய செய்ய, அன்னதானம் செய்ய செய்ய நோயில்லா வாழ்வு வரும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பக்தி வரும். ஆகவே பிற உயிர்கள் மகிழும்படி செய்தால் கடவுள் மகிழ்ச்சி அடைகிறார். பிற உயிர்கள் அத்தனையும் கடவுளின் அவதாரமாக இருக்கிறது. ஆக உயிர்கள் மகிழ்ச்சி அடைந்தால் சிவனும் மகிழ்ச்சி அடைகிறான். உயிர்கள் மகிழ்ச்சி அடையாவிட்டால் எல்லாம்வல்ல பரசிவனும் சோர்கிறான்.

எல்லா உயிரும் சிவத்தின் கூறுதான். சிவத்தின் கூறுதான் மனைவியாக இருக்கலாம், தாயாக இருக்கலாம், பிள்ளைகளாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம். உடன் பிறந்தவர்களாக இருக்கலாம். நண்பனாக இருக்கலாம். வேலை செய்பவராக இருக்கலாம். ஆக எல்லாம் சிவத்தின் கூறுதான்.

ஆக இதயம் தூய இதயமாக மாற வேண்டும். ஆகவே அருள்சிந்தை என்பது கருணை பொருந்திய உள்ளம் என்பதாகும். அந்த கருணை பொருந்திய உள்ளம் எப்பொழுது வரும்? என் மனம் வன்மனமாக இருந்தது. பிறரை அடக்கி ஆள வேண்டுமென்று நினைத்தேன். ஆசானை வணங்கினோம், அடியேன் வன்மனத்திலிருந்து விடுபட வேண்டுமென்று கேட்டோம். ஆசான் அருள் செய்தார்.

ஆக கருணை பொருந்திய ஞானிகளை வணங்கினால் கருணை சிந்தைதானே வரும். அருள் பொருந்திய ஞானிகளை வணங்கினால் அருள் சிந்தைதானே வரும். அருள் என்பது கருணை என்றும், ஜீவகாருண்யம் என்றும் பொருள்படும். அப்ப ஜீவதயவு என்பதும் அருள்தான். கருணை பொருந்திய சிந்தைதான் அருள் சிந்தையாக மாறும். வன்மனம் உள்ளவர்களும் மாறுவார்கள்.
அன்னதானம் செய்தால் வன்மனம் நீங்கும். இங்கே அவரவர் வீட்டில்

அன்னதானம் செய்தால் சிலர் கிண்டல் செய்வார்கள். ஆகவே குடும்ப தலைவனும், குடும்ப தலைவியும் என்ன செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், வயலூர், பழனி, மதுரை, திருப்பரங்குன்றம் போன்ற உயிர்பலி கொடுக்காத புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும்.

அங்கே ஏழைகள் கொடும் பசியோடு வாசலில் உட்கார்ந்து இருப்பார்கள். ஒரு பத்து பொட்டலம் தயிர் சாதமோ இல்லை புளி சாதமோ வாங்கி அங்கே உட்கார்ந்திருக்கிற ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை இதுபோல புண்ணிய இடங்களுக்கு போய் அங்கே வாசலில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்து வந்தால் என்ன ஏற்படும்? வறுமை தீரும். தயை சிந்தை அருள் சிந்தை வரும்.

அருள் சிந்தை என்பது நல்ல மனசு. கருணை பொருந்திய மனம். அத்தகைய மனம் எல்லோருக்கும் வேண்டும். அந்த மனம் இருந்தால் செல்வம் தானே பெருகும். தொட்டதெல்லாம் வெற்றிதான். தோல்வி என்ற பேச்சே இருக்காது. எதை தொட்டாலும் வெற்றிதான். ஆக அருள் சிந்தை, கருணை சிந்தை, ஜீவதயவுள்ள மனம், பக்தி செலுத்த செலுத்தத்தான் வரும்.

பக்தியோடு, “அடியேன் அருள் சிந்தை உள்ளவனாக இருக்க வேண்டும். அடியேன் ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஜீவதயவு உள்ளவனாக இருக்க வேண்டும். அடியேன் புலால் உண்ணுகின்ற பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும். இன்று முதல் என் குலதெய்வத்துக்கு உயிர்பலி இடுவதை நான் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்க வேண்டும்.

இங்கே நான் என்ன சொல்கிறேன் என்றால் குலதெய்வத்தை வணங்கக்கூடாது என்று சொல்லவில்லை. குலதெய்வத்தை வணங்குவதற்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல் இன்னும் அநேக பதார்த்தங்கள் இருக்கு. இவைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.

உயிர்க்கொலை செய்து பூஜை செய்ய மாட்டேனென்று எண்ணுகின்ற சிந்தைதான் அருள் சிந்தை. அந்த ஜீவகாருண்யமுள்ள, ஜீவதயவுள்ள, ஜீவ சிந்தனையை பெறுவதற்குத்தான் இந்த சங்கம் பாடுபடும்.

ஜீவகாருண்யம் வேண்டும். ஜீவதயவு வேண்டும். இந்த சிந்தை பெறுவதற்குத்தான் இந்த சங்கம் பாடுபடும். ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்று சொன்னார் மகான் இராமலிங்க சுவாமிகள். ஆக ஞானிகளை தொடர்ந்து பூஜை செய்தும் அன்னதானம் செய்தும் வந்தால் வன்மனம் மாறும்.

அன்னதானம் செய்கின்ற இடத்தில் நிச்சயமாக சுயநலம் இருக்க முடியாது. அன்னதானம் செய்யக்கூடிய இதயத்தில் மதவெறி இருக்க முடியாது. அன்னதானம் செய்யக்கூடிய இதயத்தில் பொறாமை உணர்ச்சி இருக்க முடியாது. அன்னதானம்

செய்யக்கூடிய மனிதனிடம் கோபம் இருக்க முடியாது. அன்னதானம் செய்பவர் பிறர் மனம் புண்பட பேசமாட்டார். இதற்குமுன் பேசி இருந்தாலும் குற்றமில்லை.
நான் ஆசான் இராமலிங்க சுவாமிகளையும், ஆசான் மாணிக்க வாசகரையும், ஆசான் திருஞானசம்பந்தரையும், ஆசான் திருநாவுக்கரசரையும், ஆசான் அகத்தீசரையும் பூஜை செய்திருக்கிறேன். அவர்கள் திருவடியை பூஜைசெய்ய பூஜைசெய்ய என் குணக்கேடுகளெல்லாம் உடைந்துவிட்டது.

யான் என்ற கர்வம், பொருள்வெறி, மதவெறி, பிறரை அடக்கி ஆளுதல், பழி வாங்கும் உணர்ச்சி போன்ற குணக்கேடுகளெல்லாம் என்னை விட்டு நீங்கி விட்டது. என்னிடம் இருக்கும் குணக்கேடுகளை உணர்ந்து நீக்கி கொள்ள அருள்செய்ய வேண்டுமென்று பூஜையில் நாம் கேட்கணும்.

ஆக தலைவனை பூஜை செய்ய பூஜை செய்ய எல்லா குணக்கேடுகளும் தானே நீங்கிவிடும். குணக்கேடுகள் நீங்கும்போதே தயை சிந்தை, அருள் சிந்தை வந்துவிடும். அப்ப அருள் சிந்தைதான் இறைவனை அடைய காரணமாக இருக்கும். அருள் சிந்தையே தவமாக மாறும். அருள் சிந்தையே நோயில்லா வாழ்வை தரும். அருள் சிந்தையே கடனில்லா வாழ்வு தரும். அருள் சிந்தையே குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். அருள் சிந்தையே உயிர்க்கொலை செய்யமாட்டேன் என்ற உணர்ச்சியை உண்டாக்கும். ஆக அருள் சிந்தை உள்ள மக்கள்தான் கடவுளை அடைவார்கள். அருள் சிந்தை ஒரு மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வும் தரும். அப்ப அருள் சிந்தை இருந்தால் தன்னைப்பற்றி அறியக்கூடிய தகைமையும் வரும்.

எனவே, அருள்சிந்தை என்ன என்பதை மறுபடியும் சொல்கிறேன். அருள் என்பது நல்ல மனம், கருணை மனம், கருணை என்பதாகும். தினமும் பூஜை செய்து அருள் சிந்தையை உயர்த்திக்கொள்ள வேண்டும், பெருக்கிக்கொள்ள வேண்டும். நமது எண்ணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அன்னதானம் செய்கின்றபோது அந்த பண்பு வரும்.
ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யும் பொழுது அவரின் மலர்ந்த முகத்தை பார்க்கிறோம். அந்த மலர்ந்த முகமே இவனுக்கு கடவுளை அறியக்கூடிய அறிவைத் தரும்.

ஒரு குடும்பம் அல்லது ஒரு குடும்பத் தலைவன் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி உள்ள குடும்பம் உயர்ந்த குடும்பம். விருந்தை உபசரிக்கும் குடும்பம் உயர்ந்த குடும்பம். ஆக உயர்ந்த குடும்பம் தினசரி பூஜை செய்தே ஆகவேண்டும்.
காலையில் எழும்போதே ஓம் அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா என்று சொல்ல வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இவர்கள் நாமத்தை விடாமல் சொல்ல வேண்டும். இப்படி சொல்பவர்கள் கண்டிப்பாக நிலை உயர்வார்கள்.
நாம் வணங்கக்கூடிய தலைவன் எதையும் செய்வார். ஆணை பெண்ணாக்குவார், பெண்ணை ஆணாக்குவார். நம் பாவத்தையெல்லாம் பொடிப்பொடியாக்குவார்கள். அப்பேர்ப்பட்ட ஆசானை நாம் வணங்குகிறோம்.

பக்தி செலுத்த வேண்டும். யார் மீது பக்தி செலுத்த வேண்டும்? முற்றுப் பெற்ற முனிவர்களாக உள்ளவர்கள் மீது பக்தி செலுத்த வேண்டும். ஆசான் இராமலிங்க சுவாமிகளோ, திருஞானசம்பந்தரோ, மாணிக்கவாசகரோ, அகத்தீசரோ, நந்தீசரோ சாதாரணமானவர்கள் அல்ல. இவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள்.

இத்தகைய ஞானிகள் நாமத்தை சொல்லச்சொல்ல குணக்கேடுகள் உடைந்துவிடும். அவர்கள் நாமத்தை சொல்ல கடன் சுமை நீங்கி, எல்லா நன்மையும் உண்டாகும், தயை சிந்தை வரும். தயை சிந்தை உள்ள ஞானிகளை வணங்கினால் தயை சிந்தை வரும், அருள் சிந்தை உள்ள ஞானிகளை வணங்கினால் அருள் சிந்தை வரும்.

ஞானிகளெல்லாம் அருள் சிந்தை உள்ளவர்கள். ஞானிகள் கருணை உள்ளவர்கள். அவர்கள் நாமத்தை சொல்லி பூஜை செய்தால் நமக்கு அந்த குணப்பண்பு வரும். இதன் முடிவு எப்படியிருக்கும்? என்னய்யா இதெல்லாம் செய்ய வேண்டுமா? என்று கேட்டால்
மரணமில்லாப் பெருவாழ்வு என்ற ஒன்று உண்டு! மரணமில்லாப் பெருவாழ்வு என்ற ஒன்று உண்டு! மரணமில்லாப் பெருவாழ்வு என்ற ஒன்று உண்டு! என்பதை தெரிந்து கொள்வதற்குதான்.
மனிதனாக பிறந்தால் சாகத்தானே வேண்டும்? இல்லை, சாக வேண்டியதில்லை.

அப்ப சாவது என்பது என்ன? உடம்பில் மூச்சுக்காற்று நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகும். அந்த காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிடும். புருவமத்தியில், சுழிமுனையில் மூச்சுக்காற்று ஒடுங்கிவிட்டால் அவனுக்கு சாவு வராது. அந்த வாய்ப்பு எல்லா மனிதனிடமும் இருக்கு.
எல்லோருக்கும் இடதுபக்கம் வருகின்ற காற்றும், வலது பக்கம் வருகின்ற காற்றுமிருக்கிறது. எல்லோருக்கும் புருவமத்தி என்கின்ற சுழிமுனையும் இருக்குது. இது பத்தாம் வாசல் எனப்படும்.

இந்த பத்தாம் வாசலினுள்ளே யாரும் நுழைய முடியாது. என்ன காரணம்? குணக்கேடுகள் அல்லது வன்மனம் அல்லது பாவச்செயல் பத்தாம் வாசலுக்குள் செல்லாதபடி செய்துவிடும்.
சுழிமுனை வாசல் என்ற அந்த பத்தாம் வாசலில் நுழைந்து விட்டால் அவனுக்கு மரணமில்லை. அங்கே நுழைவதற்கு என்ன வேண்டும்? அதற்கு அங்கே நுழைவதற்கு ஜீவகாருண்யம்தான் முக்கியம், அருள்தான் முக்கியம்.
அருள் சிந்தை இல்லாதவன் பத்தாம் வாசலாகிய சுழிமுனையை அடைய முடியாது.
இடதுகலை (சந்திரகலை) பின்கலை(சூரியகலை) புருவமத்தி என்பது சுழிமுனை. இது பத்தாம் வாசல் எனப்படும். இந்த பத்தாம் வாசலுக்குள் செல்வதற்கு ஒரே வழி ஜீவகாருண்யம்தான் என்று மகான் இராமலிங்கசுவாமிகள் நம்மிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ஜீவகாருண்யம் நேற்றுவரை இல்லாமல் இருக்கலாம். இன்று குணத்தை மாற்றிக் கொள்ளலாம். பக்தி செலுத்த செலுத்த குணக்கேடுகள் நீங்கிவிடும். அன்னதானம் செய்தால் பாவச்சுமை தீரும். அன்னதானம் செய்தால் புண்ணியமும் பக்தி செலுத்தினால் சிறப்பறிவும் உண்டாகும்.

இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அருட்பெருஞ்சோதியாகிய இராமலிங்க சுவாமிகளும், மகான் மாணிக்கவாசகரும், ஆற்றல் பொருந்திய திருஞானசம்பந்தரும், நாவுக்கரசராகிய திருநாவுக்கரசரும், உலக மகா மேதையான அகத்தீசரும் முதுபெரும் தலைவனான ஆசான் ஞானபண்டிதன் ஆசியும் உங்களுக்கு இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் எல்லாம் பெறுதற்கரிய மானுடப்பிறவியைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு முறையாவது அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா, காலாங்கிநாதா, போகமகாரிஷி என்று ஒருமுறை சொன்னால் போதும், கடவுள் தன்மை அடையலாம்.
மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் சிறப்படைவான், அதுமட்டுமல்ல அவன் ஞானியும் ஆவான். அதே சமயத்தில் குணக்கேடுகளெல்லாம் நீங்க வேண்டுமென்று ஆசானைக்கேட்டு நீங்கள் எல்லா வளமும் பெற வேண்டும்.

இன்று பூஜையில் யார் யார் கலந்து கொண்டார்களோ அவர்கள் அத்தனை பேரும் அருள் சிந்தை உள்ளவர்கள். அருளாற்றல் பெற்றவர்கள், எதையும் செய்யக்கூடிய ஞானிகளின் ஆசியை நீங்களெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்களெல்லாம் இன்று முதல் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் எவ்வுயிரையும் கொல்ல மாட்டேன். அதற்குரிய அறிவும், சிந்தையும், தெளிவும் நீர் எனக்கு தந்தருள வேண்டும். இன்று முதல் நான் உயிர்க்கொலை செய்து உண்ணமாட்டேன். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் தந்து என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும்.

இன்று முதல் உன் திருவடியை பூஜை செய்வதற்கு நீர் எனக்கு அருள் செய்ய வேண்டும். உன்னுடைய அருள் இல்லையென்றால் உன் திருவடியைப் பற்ற முடியாது. நான் செய்த பாவம் உன் திருவடியை பூசிக்காமல் சிறுதெய்வத்தை வணங்குகிறேன். உன் திருவடியைப் பற்றுவதற்கு நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை மனமுருக பூஜிக்க வேண்டும். ஆசான் அகத்தீசரிடம் இன்னும் என்ன கேட்க வேண்டும்?

உன் திருவடியைப் பற்றி பூசிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும். என் பாவத்தையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிடுவேன். என் பாவம் என்னைக் கண்டு அஞ்சி நடுங்கும். பகைவர் அஞ்சி நடுங்குவார்கள். என்னை வஞ்சிப்பது என் காமதேகம். அது என்னை விட்டு நீங்கி விடும்.

ஆகவே என்னை வஞ்சிக்கின்ற எல்லாவற்றையும் உடைத்தெறியும் ஆற்றல், உனது திருவடிக்கு உண்டு. ஆக எனக்கு ஒன்றும் வேண்டாம். தினமும் உன் திருவடியைப் பற்றி பூஜிப்பதற்குரிய வாய்ப்பு கொடுத்தால் போதும். நான் பலகோடி ஜென்மத்தில் செய்த பாவங்களெல்லாம் என்னைவிட்டு நீங்கிவிடும்.

ஆகவே உன் திருவடியைப் பற்றி பூஜிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டுமென்று ஆசான் மாணிக்கவாசகரையும், திருஞானசம்பந்தரையும், திருநாவுக்கரசரையும், இராமலிங்க சுவாமிகளையும், அகத்தீசரையும் பூஜித்துக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
குணக்கேடு தீராமல் ஒருவன் கடவுள் தன்மை அடையமுடியாது. குணக்கேடு நீங்குவதற்கு அருள் சிந்தையே காரணமாக இருக்கும்.

அருள் சிந்தை இருக்குமிடத்தில் குணக்கேடு இருக்காது.
அருள் சிந்தை இருக்குமிடத்தில் ஜாதி இருக்க முடியாது.
அருள் சிந்தை உள்ள இடத்தில் சுயநலம் இருக்க முடியாது.
அருள் சிந்தை உள்ள இடத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இருக்க முடியாது.
அருள் சிந்தை இருக்குமிடத்தில் வறுமை இருக்காது.
அருள் சிந்தை இருந்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அருள் சிந்தை இருந்தால் சிறப்பறிவு உண்டாகும்.
அருள் சிந்தை இருந்தால் தன்னைப் பற்றி அறிவான்.
அருள் சிந்தை இருந்தால் நம்மைக் கண்டு யமன் நடுங்குவான்.

அப்ப, அருள் சிந்தையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு நமது சிந்தனையை உயர்த்திக் கொள்ள வேண்டும். செயலில் தூய்மை இருக்க வேண்டும். உணவில் சைவம் இருக்க வேண்டும். உள்ளத்தில் சைவம் இருக்க வேண்டும். சொல்லில் சைவம் இருக்க வேண்டும். சில பேர் கடுமையாகப் பேசியே பாவியாகி விடுவான். “அடப்பாவி! என்ன இப்படி கொடுமையாகப் பேசுகிறான், பாவி!” என்று ஒருவனைப் பார்த்து பிறர் சொன்னாலே அவன் பாவியாகிவிடுவான். சிலர் உருட்டி பார்த்து, கடுமையாகப் பார்த்தே பாவியாவான். அந்தப் பார்வையே பிறரை நடுங்கும்படி செய்துவிடும். ஆக அவன் பார்த்தே பாவியாவான்.

சிலருடைய செய்கையெல்லாம் அருவருப்பாகவே இருக்கும். எப்போதும் பிறர் மனம் புண்படும்படியாகவே செயல்படுவான். அவனும் நரகத்திற்கு போவான். பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவன் நரகத்திற்கு போவான்.
ஆக நரகத்திற்கு தள்ளக்கூடிய குணக்கேடுகள் நீங்கினால் அன்றி ஒருவன் கடவுள் தன்மை அடைய முடியாது. அருள் சிந்தை இருந்தால் அங்கே பொறாமை இருக்க முடியாது. அருள் சிந்தை இருந்தால் அங்கே பேராசை இருக்க முடியாது. அருள் சிந்தை இருந்தால் அங்கே கொடுமை இருக்க முடியாது. அருள்சிந்தை இருந்தால் பிறர் மனம் புண்பட பேசமாட்டான். பிறர் மனம் மகிழும்படி பேசுவான். அருள் சிந்தை இருந்தால் வஞ்சனை நீங்கும். அருள் சிந்தை இருந்தால் கடன் சுமை நீங்கும். அருள் சிந்தை இருக்கிற இடத்தில் பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் வரும்.

அருள் சிந்தை என்பது ஜீவதயவு, ஜீவகாருண்யம், கருணை எனப்படும். பிற உயிர்களுக்கு கருணைக்காட்டினால் சிறப்பறிவு வந்துவிட்டது என்று பொருள். அருள் சிந்தையே ஞானமாகும். அருள் சிந்தையே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். தவம் செய்வது மிகக் கடினம் என்று இங்கே சொன்னார்கள். இல்லை, இல்லை இல்லவே இல்லை மிகமிக எளிது.

நாங்க இப்படி கேட்கிறோம், அகத்தீசா, திருஞானசம்பந்தரையா, திருநாவுக்கரசரையா நீங்களெல்லாம் பெரிய ஞானிகள், பெரிய மகான்கள் நீங்களெல்லாம் அடியேனை வழி நடத்திச் செல்லவேண்டும். எனக்கு, எது நல்லது கெட்டது என்று தெரியாது. என் செய்கையால் யாராவது ஒருவர் பாதிக்கப்படலாம் அல்லது மகிழ்ச்சியடையலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது.

ஆகவே எனது அகமும், புறமுமாக என் சிந்தையில் அமர்ந்து என்னை வழி நடத்திச் செல்லவேண்டும். அடியேன் யானென்ற கர்வத்தின் காரணமாகவோ அல்லது முன்செய்த பாவத்தின் காரணமாகவோ தவறு செய்துவிடுவேன். எனவே என் சிந்தையில் சார்ந்திருந்து என்னை வழி நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்போம்.

காலையில் எழும்போதே, “அகத்தீசா அடியேனின் சிந்தையில் சார்ந்திருந்து என்னை வழிநடத்தி செல்ல வேண்டும். என்னை என்னுடைய விருப்பத்திற்கு செயல்படவிட்டால், நான் தவறு செய்து பாவியாகி விடுவேன். அடியேன் பாவியாகாதிருக்க அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் புண்ணியவானாகின்றான் என்று பொருள். அடியேன் அருள்சிந்தையோடு இருக்க வேண்டுமென்று கேட்டால் அவன் நிலை உயரப்போகிறான் என்று பொருள். ஆக அருள் கடாட்சமாக, கருணை கடலாக ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களை வணங்கியதால் அருள் சிந்தை வந்தது. அருள் சிந்தை உள்ள மக்கள் தான் கடவுளை அடைவார்கள். அருளின் முதிர்ச்சியே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும்.

ஆகவே அன்பர்கள் நீங்கள் எல்லோரும் அருள்சிந்தை பெற பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். வேறு எந்த பயிற்சியும் கடவுளை அடைய எடுபடாது. எந்த பயிற்சி செய்தாலும், அது உடலுக்குத்தான் பயிற்சியே தவிர, உள்ளத்திற்கு இல்லை.

உள்ளத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். ஏ மனமே! உனக்கு யான் என்ற கர்வம் இருக்கு. லோபித்தனம் இருக்கு. இன்னும் புலால் உண்ணுகின்ற பழக்கம் உன்னிடமிருக்கு. இன்னும் உயிர்கொலை செய்யும் நாட்டமிருக்கு. இதுபோன்ற குணக்கேடுகளெல்லாம் நீங்கவேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை?
- திருக்குறள் - இன்னா செய்யாமை - குறள் எண் 315.

என்றார் வள்ளுவர்.

ஆசான் திருவள்ளுவர் முதுபெரும் ஞானி. அவர் இயற்றியதுதான் திருக்குறள். திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது. ஒரு வீட்டில் திருக்குறள் இருந்தால் அங்கே கடவுள் இருப்பதாக அர்த்தம். தினமும் ஒரு குறளை படித்துவிட்டு போகிறான் என்றால், கடவுளிடம் பேசிவிட்டு போகிறான் என்று அர்த்தம். திருக்குறளைப் பார்த்தாலே புண்ணியம், தொட்டால் அதைவிடப் புண்ணியம், படித்தால் அதைவிடப் புண்ணியம், திருவள்ளுவரை கடவுளாக நினைத்தால் அதைவிட புண்ணியம். திருவள்ளுவரை மாபெரும் தலைவனென்றும் பரபிரம்மமென்றும் பார்க்க வேண்டும்.
திருக்குறளைத் தொட்டால் திருவள்ளுவரின் திருவடியைத் தொட்டதாக அர்த்தம். எல்லாம்வல்ல ஈசனின் திருவடிகளைத் தொட்டதாக அர்த்தம். ஆக திருக்குறள், திருஅருட்பா போன்ற நூல்கள் வீட்டில் இருக்க வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு தத்துவங்களும் திருக்குறளில் உள்ளது.

திருவள்ளுவரை கடவுளாக பார்ப்பவன் நிச்சயமாக புண்ணியவான் ஆவான். புண்ணியம் செய்த மக்கள் வீட்டில்தான் திருக்குறள் இருக்கும். ஆக எல்லோரும் அருள் சிந்தையோடு இருக்க வேண்டும். அருள் சிந்தை ஒளி விளக்காக மாறும்.

ஆக அருள் சிந்தையைப் பெற்று, அகத்து இருளை நீக்கி, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று கேட்டு, இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் முதுபெரும் தலைவன் ஆசான் ஞானபண்டிதன் ஆசியும், அளவில்லா சித்தி பெற்ற ஆசான் அகத்தீசர் ஆசியும், நந்தீசர் ஆசியும், இராமலிங்க சுவாமிகளின் ஆசியும் உங்களுக்கு இருக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

நான் குடில் அன்பர் திருவடியை தினமும் பூஜிப்பவன். நான் இங்கிருந்தாலும் காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆக இங்கே உள்ளவர்கள் உயர்ந்த தொண்டர்கள், புண்ணியவான்கள், முன் ஜென்மத்தில் ஞானிகளுக்கு தொண்டு செய்த மக்கள். அவர்களெல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். நான் அடைந்த பேரின்பத்தை அவர்கள் அடைய வேண்டும். நான் அடைந்த ஞானத்தை அவர்கள் அடையவேண்டும். நான் அடைந்த ஞானம் எதுவென்று கேட்டால் "ஞானிகளின் திருவடியே நம்மை நிலை உயர்த்தும்” என்பதுதான்.

ஆக தொண்டர்கள் இந்த வாய்ப்பை பெறவேண்டும். அவர்கள் முன்செய்த வினை நீங்கி, அவர்களும் நிலை உயரவேண்டும், அவர்களும் மரணமிலாப் பெருவாழ்வு பெறவேண்டும், அவர்களும் தன்னையறியக்கூடிய திறனை அடைய வேண்டும்.


அவர்களும் ஞானிகளின் ஆசிபெற்று பேரின்பம் அடைய வேண்டுமென்று சொல்லி, நம்மை சார்ந்தவர்களும் நல்லபடி இருக்கவேண்டும், இந்தக்குடிலைச் சார்ந்தவர்களுக்கு எந்த குறையும் வரக்கூடாது, அவர்களுக்கும் ஞானம் சித்திக்க வேண்டுமென்று ஆசான் அகத்தீசரைக்கேட்டு நீங்கள் எல்லோரும் நீடுவாழ வேண்டுமென்று வாழ்த்தி முடிக்கிறேன். வணக்கம்.

################################################################################################


திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
15. 'ங'ப்போல் வளை

மகான் ஒளவையார் ஒரு மனிதன் தனது வாழ்வில் எப்படி இருக்க வேண்டுமென்பதை குறிப்பிடுவதற்காக அம்மனிதன் நடந்துகொள்ளும் முறையை விளக்க தமிழ் எழுத்தில் உள்ள ங என்ற எழுத்தை அதன் வடிவத்தை பயன்படுத்தி விளக்குகிறார். அதாவது “ங” என்ற எழுத்தானது ஒரே நேர் கோடாகவோ வட்டமாகவோ ஒரு சீராக இல்லாமல் மேல் நோக்கியும் பின் கிடைமட்டமாகவும் பின் வளைந்தும் இறங்கியும் நெளிந்தும் சுருங்கியும் விரிந்தும் நிமிர்ந்தும் காணப்படுகிறது.

அதுபோலவே ஒரு மனிதன் தனது வாழ்வில் பல்வேறுவிதமான பிரச்சனைகளையும் பல்வேறு சூழ்நிலைகளையும் சந்திக்க நேரிடும். அப்போது அவன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான மனநிலையிலேயோ ஒரே தன்மையான நடைமுறையை கடைப்பிடித்தால் அதனால் அவனுக்கு பாதிப்பு ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்று தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் காத்தல் வேண்டும் என்கிறார். இப்படி பலரும் பல சந்தர்ப்பங்களை சந்திக்க நேரிட்டால் அதனை குரு அருள் துணையினால் அதன் தன்மையையும் சூழ்நிலையையும் அறிந்து அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.

எனது வாழ்வில் நானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் அப்பிரச்சனைகளை, எல்லாம்வல்ல ஆசான் ஞானப்பண்டிதன் ஆசியினாலும் சித்தர்கோன் அகத்தீசன் ஆசியினாலும் முற்றுப்பெற்ற ஞானிகள் ஆசியினாலும் அந்த சூழ்நிலைகளையெல்லாம் சந்தித்து, தானென்ற கர்வம் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் உறுதியாய் இருந்தும் சமாளித்து வந்துள்ளேன். இவை எனக்கு ஆசான் ஆசியினால் உணர்த்தப்பட்ட ஒன்றாகும். இப்படி பல அனுபவங்களை எனது வாழ்வில் நான் சந்தித்துள்ளேன். ஆசான் ஆசியினால் அவற்றிலிருந்து விடுபட்டு உள்ளேன்.

ஒரு மனிதன் தனது முயற்சியினாலும் தனது முன்ஜென்ம புண்ணிய பலத்தினாலும் நல்ல செல்வத்தை பெற்று பெரிய செல்வந்தனாக இருக்கலாம், பெரிய பொறுப்பில் பெரிய மனிதனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவனுக்கு "ங" என்ற எழுத்தின் வடிவம் போன்ற குண இயல்பு வேண்டுமென மகான் ஒளவையார் கூறுகிறார்.
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் தனது முயற்சியினாலும் தான் முன்செய்த நல்வினைகள் காரணமாகவும் தேவையான செல்வத்தை

பெற்றிருந்தான். ஏராளமான செல்வம் இருந்தபோதும் அவன், தானென்ற கர்வம் இல்லாமலிருந்தான். அவன், தான் பெற்ற செல்வம் என்பது தனக்கு மட்டுமல்ல இது இறைவனால் தனக்கு கொடுக்கப்பட்டதன் நோக்கமே தன்னையும் தன்னை சார்ந்த சுற்றத்தையும், தன்னை நாடி வரும் விருந்தையும் உபசரித்து
காப்பதற்கே என்பதை நன்கு உணர்ந்தவனாகி

காக்கை கரவா கரைந்து உண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
- திருக்குறள் - சுற்றம் தழால் - குறள் எண் 527.

காக்கை தனக்கு கிடைத்ததை மறைத்து வைக்காமல் சுற்றத்தை கூவி அழைத்து உண்ணும். அது போலவே ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு என்ற குறளிற்கு ஏற்ப அந்த செல்வந்தன் தனது சுற்றத்தாரை அழைத்து போற்றி பாதுகாத்து வந்தான். அவன், தான் பெற்ற செல்வமே சுற்றத்தாரை காப்பதற்கே என்பதையும் உணர்ந்தவனாகி

சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
- திருக்குறள் - சுற்றம் தழால் - குறள் எண் 524.

சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தை பெற்றதனால் பெற்ற பயனாகும் என்ற குறளிற்கேற்ப வாழ்ந்தான். அது மட்டுமன்று தானும் தனது சுற்றமும் மட்டும் நன்மை பெறும் பொருட்டு செல்வம் தரப்படவில்லை. தன்னை நாடி வரும் வறியவர்கள், துறவிகள், இயலாதவர்கள் ஆகியோர் துயர் துடைக்கவும், காக்கவும் பயன்படுவதற்காகவும் என்பதையும் உணர்ந்தவனாகி

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 42.

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் நலிந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டால் பிரேதத்தை எடுக்கும் ஈமச்சடங்கை செய்வதற்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான் என்ற வள்ளுவர் குறளின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வரலானான்.

அவன், தன் வாழ்வில் செல்வம் படைத்தோம் என்ற செருக்கினால் தனக்கு தனி மரியாதை வேண்டுமென்றும் தனக்கென தனியான வசதிகள் வேண்டும் என்பதெல்லாம் மறந்து தானும் தனது குடும்பத்தினரும் தனது சுற்றத்தாரும் எவ்விதம் வாழ்கின்றனரோ எந்த விதமான வசதிகளை பெற்றுள்ளனரோ அதை மட்டுமே தானும் பெற்று அவர்களைப் போலவே இவனும் வாழ்ந்து எல்லோரும் ஒரே தன்மையினராக எண்ணி

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.
- திருக்குறள் - ஆள்வினை உடைமை - குறள் எண் 615.

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன் தன் சுற்றத்தாருடைய துன்பத்தை போக்கி தாங்குகின்ற தூண் ஆவான் என்ற குறளிற்கும், வள்ளுவர் வாக்கிற்கும் ஏற்ப வாழ்ந்து தனது குடும்பத்தையும், சுற்றத்தையும், தன்னை சார்ந்த எல்லோரையும் தாங்கும் தூணாகவும் அனைவரும் வந்து தங்கும் பெரும் ஆலமரமாகவும் அவனது சமூகத்திற்கே ஒரு தாங்குதளமாகவும் வாழ்ந்து வரலானான்.

இப்படி வாழ்ந்து வரும் காலத்தில் அவனது செல்வ நிலையின் காரணமாகவும் இன்னும் பல காரணங்களினாலும் பலர் அவனுக்கு இடையூறு செய்தனர். ஆனால் அவன் அவற்றையெல்லாம் மதிக்காது அவர்கள் செய்யும் இடையூறுகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்து அவற்றை அனுசரித்து சென்றான்.

இவ்விதம் பணிந்து போனதால் அவன் வீரஉணர்ச்சி இல்லாதவன் அல்ல. ஏனெனில் அவன் தனிமனிதன் அல்ல. அவனைச்சார்ந்து அவனது குடும்பமும் அவனது உற்றார் உறவினர்களுக்கும் இன்னும் பலரது குடும்பத்தினருக்கும் வறியவருக்கும் அவன் தூண் போல் இருந்து செயல்பட்டதால் அனுசரித்து சென்றான்.

அவன் பணிந்து செல்லாமல் எதிர்த்து நின்றால் அதன் விளைவு தன்னைச் சார்ந்த அனைவரையும் பாதிக்கும் என்பதாலேயே அவ்விதம் பல இடங்களில் பணிந்து சென்று தன்னை எதிர்த்தவர்களையும் அனுசரித்து சென்று அவர்களையும் நட்பாக்கிக் கொண்டு

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
- திருக்குறள் - பொறை உடைமை - குறள் எண் 158.

செருக்கினால் தீங்கான வற்றைச் செய்தவரை தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும் என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வரலானான். அவனது செல்வத்தினாலும் ஆள்பலத்தினாலும் அவன் நினைத்தால் தமக்கு இடையூறு செய்தவர்களை பலவிதங்களில் கண்டித்தும் தண்டித்தும் அவர்களை வென்றுவிடலாம். ஆனால் அவனோ தனக்கு வரம்புகடந்து துன்பம் செய்தவரையும் பொறுமையால் பொறுத்துக் கொண்டான்.

ஏனெனில் பணிவே ஒருவனது உயரிய செல்வம் என்பது பல பெரியோரின் கருத்தாகும். அதுவே ஒரு இல்லறத்தானுக்கும் சரி துறவு மேற்கொள்பவர்களுக்கும் சரி அதுவே மிகச்சிறந்த பண்பாகும்.

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
- திருக்குறள் - அடக்கம் உடைமை - குறள் எண் - 125.

பணிவுடையவராக ஒழுகுதல் பொதுவாக எல்லோருக்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாக செல்வருக்கே அது மற்றொரு செல்வம் போன்றதாகும் என்பதை உணர்ந்து பணிந்து செயல்படலானான்.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
- திருக்குறள் - சான்றாண்மை - குறள் எண் 985.

ஆற்றலுடையவரின் ஆற்றலானது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

என்ற குறளிற்கேற்ப பகைவரிடம் பணிந்து சென்றே தனது பகையை வென்று தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் எவ்வித இடையூறு வராமலும் காத்து அவனது குலத்திற்கே ஒரு உதாரணமாகவும் அனைவருக்கும் ஒரு நிழல் தரும் ஆலமரம் போன்றும் இருந்து காப்பாற்றினான்.

இப்படி ஒரு தனிமனிதன் தன் வாழ்வில் ஔவை கூறியது போல் "ங" என்ற எழுத்தைப்போல் சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் நிமிர்ந்தும் அதாவது பணிந்து போக வேண்டிய சூழ்நிலையில் பணிந்தும் எதிர்த்து நின்று செயல்பட வேண்டிய தருணங்களில் எதிர்த்து நின்று எதிர்ப்புகளை சமாளித்தும் செல்தல் வேண்டும்.

ஆனால் தனது செயல்களினால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தன்னை நாடியுள்ளவர்களையும் மனத்தில் கொண்டு, தான் செயல்பட வேண்டுமே அன்றி தனது பண, ஆள் பலத்தின் அடிப்படையில் முடிவெடுத்தால் அதன் விளைவு தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மற்றொரு உதாரணமும் சொல்லலாம். முன் கூறியதைப் போன்றே பல பண்புகளையும் பணிவையும் பெற்ற செல்வந்தனொருவன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனது முன்ஜென்மங்களில் செய்த வினைகள் காரணமாக அவனது வாழ்வில் சோதனைகள் பல ஏற்பட்டு ஒரு சூழ்நிலையில் தனது செல்வத்தை இழந்து வறிய நிலைக்கு ஆட்பட வேண்டி வந்தது. ஆனாலும் அந்த வறிய நிலையிலும் தனது வறுமையின் காரணமாக தலைகுனியாமலும் தனது பணிவையும் பண்புகளையும் இழக்காமல் தலைநிமிர்ந்து வாழலானான்.

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தான். தனக்கு நேர்ந்த வறுமையை வெளிக்காட்டாமல் தான் செல்வ நிலையில் உள்ளபோது எப்படி நடந்து கொண்டு பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டானோ அதேபோல வறுமையிலும் நடந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட வறுமையை தாங்கி கொண்டதோடு மட்டுமல்லாமல், அந்த

வறுமையை போக்கிக் கொள்ளும் பொருட்டு பிறரிடம் சென்று இரந்து கேளாமல் வறுமையின் காரணமாக பணிந்தும் செல்லாமல் முன்பு இருந்தது போலவே நீதி நெறியோடு தர்மசிந்தையோடு வாழ்ந்தான்.
அவன் தனது வறுமையை போக்க தனது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ சென்று புலம்பாமலும் அவர்களிடம் இரந்து கேளாமலும் மிகுந்த உறுதியான மன நிலையில் இருந்து அந்த வறுமையைப் போக்கிக் கொள்ள எந்தெந்த வழிகளில் செயல்பட வேண்டுமோ அந்தந்த வழிகளை கடைப்பிடித்து அயராது பாடுபட்டு வறுமையின் பிடியிலிருந்து தானும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றி பெருமிதத்தோடு வாழ்ந்தான்.

இப்படி ஒரு மனிதன் தன் வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் கீழிறங்க அதாவது தாழ்ந்த நிலைக்கு செல்ல வேண்டி வரலாம். அப்போதும் அவன் அந்த தாழ்ந்த நிலையின் காரணமாக பணியாமல் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று கூறுகிறார் ஒளவையார்.

மேலும் ஒரு மனிதன் தனது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். அப்படி பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அப்பிரச்சனைகள் காரணமாக நடுநிலை மாறாது நடுநிலையோடு இருந்து அந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு கிராமத்தில் வழக்கு ஒன்று வந்தது. அந்த வழக்கில் வாதி ஏழை, பிரதிவாதி செல்வம் படைத்தவன். ஏழையின் வீடும் வசதி படைத்தவன் வீடும் பக்கத்து பக்கத்து வீடாகும். பணக்காரன் ஏழைக்கு இடையூறு செய்தான். அதனால் ஏழை ஊரில் உள்ள பெரிய மனிதர்களிடம் சென்று முறையிட்டான். அப்போது அவ்வழக்கை விசாரிக்கும் ஊர் பெரிய மனிதர் ஏழைக்கு ஒரு தீர்ப்பு என்றும், வசதி படைத்தவனுக்கு ஒரு தீர்ப்பு என்றும் கூறாமல் நடுநிலையில் நின்று வழக்கை விசாரித்து உண்மையை அறிந்து வசதிபடைத்தவனாக இருந்தவன் செய்தது தவறு என்பதை உணர்ந்து வசதிபடைத்தவனை கண்டித்து தீர்ப்பு சொன்னார்.

இப்படி வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் தராசு எப்படி தன்னிடம் உள்ள பொருள்களின் தன்மையைப் பாராது, அதன் நிறையின் அடிப்படையில் எடையை காண்பிக்கிறதோ அது தங்கமானாலும் சரி இரும்பானாலும் சரி எந்தப்பக்கம் எடை அதிகமாக உள்ளதோ அந்தப்பக்கம் முள் விலகி காண்பித்து அதன் எடை அதிகத்தை காண்பிக்கிறதோ அதுபோல நீதி எவரிடம் உள்ளதோ அவரது பக்கம் நீதி எங்குள்ளதோ அந்தப்பக்கம் நீதி எந்த செயலில் உள்ளதோ அந்த செயலை செய்ய வேண்டுமென ஔவையார் கூறுகிறார். இதையே வள்ளுவரும்,

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
-    திருக்குறள் - நடுவுநிலைமை - குறள் எண் 118.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் என்கிறார்.


மகான் ஒளவையார் வாழ்வியலை முற்றும் உணர்ந்தவர். அவர் ஒரு மனிதன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் ஒரே எழுத்தின் மூலம் மனித சமுதாயத்திற்கு விளக்குகிறார்.

இங்கு “ங” என்ற எழுத்தை கவனித்தால் எழுத்தின் ஆரம்பம் முதலில் கீழிருந்து மேலாக “ங '' ஆரம்பிக்கிறது. பிறகு மேலே கிடைமட்டமாக செல்கிறது “ங” பிறகு மேலிருந்து கீழாக செல்கிறது “ங” பிறகு வளைந்து செல்கிறது “ங” பிறகு கீழ்புறம் கிடைமட்டமாக செல்கிறது “ங”, பிறகு கீழிருந்து மேலாக செல்கிறது " ங ".
 இப்படி “ங” என்ற தமிழ் எழுத்தானது மேல்நோக்கி மேல்புறம் கிடைமட்டமாகி பின்கீழிறங்கி பின் வளைந்து பின் கீழ் கிடைமட்டமாகி பின் கீழிருந்து மேல்முகமாக செல்கிறதோ அதுபோல ஒரு மனிதனின் வாழ்வில் தலைநிமிர்ந்தும் உயர்ந்தநிலையில் இருந்தபோதும் நீதி தவறாது நடுநிலையில் (கிடைமட்டமாக) இருக்க வேண்டும்.

உயர்ந்த நிலையில் இருந்து கீழே தாழ்ந்த நிலைக்கு (கீழ்முகமாக) வந்தாலும் நடுநிலை தவறக்கூடாது (கீழ் கிடைமட்டம்) எந்த சூழ்நிலையையும் அனுசரித்து வளைந்தும் நெளிந்தும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து வாழ வேண்டுமென்றும் (வளைவு) கீழ்நிலைக்கு அதாவது வறுமையில் வாடினாலும் தனது பண்புகளை இழக்காமல் தலை நிமிர்ந்து பணியாமல் வாழவேண்டுமென்றும் (கீழிருந்து மேல்) கூறுகிறார்.

மகான் ஒளவையார் போன்ற ஞானிகளெல்லாம் கடல் போன்ற கருத்துக்களை யெல்லாம் ஒரு சிறிய சொல்லிற்குள் அடக்கி விரிவான பொருளையெல்லாம் சுருக்கி சொல்வதில் வல்லவர்கள். அதுபோல “ங” என்ற எழுத்தே ஒரு மனிதனின் வாழ்வியல் தத்துவம் என்பதை உணர்த்தவே தமிழில் "ங" என்ற எழுத்து உருவாக்கப்பட்டது. இந்த “ங'' என்ற எழுத்தின் மூலமாகவே மனித வாழ்வின் அமைப்பை விளக்குகிறார் மகான் ஒளவையார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 



No comments:

Post a Comment