Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI May 2012


அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன வைகாசி (மே - 2012)
விலை: ரூ.10/-

நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு……
2. எமபயம் நீங்க ஓர் உபாயம் - குருநாதர் அருளுரை.......
3. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர்.............

மகான் புஜண்ட மகரிஷி ஆசிநூல்:-

அப்பனே அறுமுகனே வருவதன்னால்
அனைத்துக் கோடி சித்தர்களும்
ஒப்புதலுடன் வந்து கலந்து
உலகமக்கள் நன்மை அடைய அருளிடுவார்

அருள்குடிலாய் விளங்கி நிற்கவே
ஆக்கினை அல்லல் கண்ட மக்கள்
பொருள் வளமில்லா சஞ்சலம்
போட்டி வஞ்சம் வழி துவண்டவர்கள்

துவண்ட யாவரும் இடர்கள் அகன்று
தெளிவு ஞானம் வளம் பெறுவர்
அகண்ட உலகின் மக்கள் எல்லாம்
அரங்கர் குடில்வர நன்மை அடைவர்
- மகான் புஜண்ட மகரிஷி ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
வருகின்ற 5.5.2012 சனிக்கிழமையன்று நடைபெறுகின்ற அகத்தீசன் திருவிழா அன்னதானப்பெருவிழா மற்றும் சித்திரா பௌர்ணமி விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஞானியரின் அருளாசியைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.



துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.


ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.



திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
14.02.1998 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில் வழங்கிய அருளுரை

எமபயம் நீங்க ஓர் உபாயம்

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்.

நமக்கு மரணபயமே கொடிய பயம். ஆசானை வணங்க வணங்க பயம் நீங்கும், என்று முன்னமே சொல்லியிருக்கிறோம். மரணபயம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஆசானின் ஆசி இருக்க வேண்டும்.

ஞானிகளெல்லாம் மரணமிலா பெருவாழ்வு பெற்றவர்கள். மரணமிலா பெருவாழ்வை பெற்றவர்களை வணங்காமல் நமக்கு பயம் அல்லது அச்சம் நீங்காது. அவர்கள் எப்படி இந்த வல்லமையை பெற்றார்கள்? ஆசான் ஞானபண்டிதனை பூஜித்து இந்த வல்லமையை பெற்றார்கள். ஆசான் சுப்ரமணியர் திருஉருவ படத்தை பார்த்தால் அதில் ''யாமிருக்க பயமேன்” என்று இருக்கும். ஆக அவர்களுடைய ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு எப்போது அந்த உணர்வு வரும்? எந்த காரியத்திலும் தலைவனை முன்னிறுத்தி செய்ய வேண்டுமென்ற நினைவு வருவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காலையில் எழும்போதே ஆசான் ஞானபண்டிதனை வணங்க வேண்டுமென்ற உணர்வு வரவேண்டும். அவர்தான் பெரியோன், தலைவனின் ஆசியை பெறவேண்டும். ஆசான் சுப்ரமணியர் அமரர்க்கு தலைவன். அவரை வணங்க வேண்டுமென்ற உணர்வு வரவேண்டும். சாதாரணமாக மனிதனுக்கு அந்த நினைவு வராது. இதை நான் சொல்லவில்லை, ஆசான் அருணகிரிநாதரே இதை சொல்கிறார்,

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே .
- மகான் அருணகிரிநாதர் - கந்தர் அலங்காரம் - கவி எண் 20.

ஆக கடவுளை அல்லது தலைவனை அறிந்து பூஜை செய்ய உங்கள் வினைகள் விடாது.

ஆக ஆசான் அருணகிரிநாதர், சேவற்கொடியோனின் அடிபணியாமல், உலகத்தில் வாழ நினைக்கும் அறிவில்லாதவர்களே என்று நம்மை சாடி பேசுகிறார். அப்ப நம்மீது அன்பு இல்லையென்றால் அப்படி சாடி பேசியிருக்க மாட்டார்.

தலைவனை யாரென்று அறிந்து வணங்க வேண்டும். ஆசான் சுப்ரமணியரை, முதுபெரும் ஞானியென்று எண்ணி வணங்க வேண்டும். அப்படி வணங்குவோர்களுக்கு அச்சம் இருக்காது, பயம் இருக்காது. காரணம் ஆசான் சுப்ரமணியர் எமபயத்தை வென்றவர்.
ஆசான் சுப்ரமணியரை வணங்கி நம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நினைவு வரவேண்டும். ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்தால் வறுமை இருக்காது, அச்சம் இருக்காது. அதே சமயத்தில் பகை இருக்காது.

நாம் வளர்ச்சி அடைய அடைய பகை இருக்கும். அதனால் பிரச்சினை ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆக அந்த பயமும் ஆசான் அகத்தீசர் ஆசியால் நீங்கிவிடும். அவர்கள் ஆசியால் பகையும் நட்பாகிவிடும்.

பகைமை எப்போது நீங்கும்? நாம் தினமும் பூஜை செய்தால் பகை இருக்காது. அப்படியே பகை இருந்தாலும் அது செயல்பட முடியாது. இவனுக்கு தலைவன் ஆசி இருக்கு. பகைவரின் கண்களைப் பார்க்கிறான், முகத்தைப் பார்க்கிறான். கண்களைப் பார்த்து அவனுடைய பகை உணர்ச்சியை தெரிந்து கொள்கிறான். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்கிறார்.

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள் - குறிப்பு அறிதல் - குறள் எண் 709.

நம்மைக் கண்டு மிக இனிமையாகப் பேசுகின்றான். ஆனால் நம்மீது வேற்றுமை இருக்கிறது என்பதை அவன் கண்களில் தெரிந்து கொள்ளலாம். இதை ஆசானிடம் சொன்னால், " அவன் கிடக்கிறான், பொடிப்பயல்” என்பார்.

"நான் வேல்படை உள்ளவன், நீ தினமும் என்னை பூஜை செய்வதால், அவனுடைய பகைமை உன்னை ஒன்றும் செய்யாது” என்பார் ஆசான்.
அதற்கு "அவன் கண்களிலிருந்து பகைமை உணர்ச்சி வெளிப்படுகிறதே, நீர்தான் அருள் செய்யணும்" என்பான் தொண்டன்.
"நான் பார்த்துக்கொள்கிறேன், நீ கவலைப்படாதே" என்பார் ஆசான் ஞானபண்டிதன்.

ஆக ஆற்றல் பொருந்திய வேலவனை, ஆற்றல் பொருந்திய ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்வதனால் பகைமையும் இருக்காது, இருந்தாலும் செயல்படாது. அவர்களுக்கு பகைவர்களால் பயமில்லை.

நாம் வளர்ச்சி அடைய அடைய பொறாமை உள்ளவர்கள் நம்மீது ஒரு பழிசுமத்த நினைப்பார்கள், புறங்கூறுவார்கள். ஆகவே அந்தப் பகைகளை, ஆசான் ஆசியால் உடைத்துவிடலாம். எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள், ஆனால் எதிரிகளின் செயல்பாடுகள் முடமாக்கப்படுகிறது (செயல்படாமல் தடுக்கப்படுகிறது).

தொகையில்லை என்றாலும் பகை இருக்கத்தான் செய்யும். பகையை வெல்லும் வல்லமை வேண்டுமல்லவா? "நான் நல்லபடியாக நடந்து கொள்கிறேன், எனக்கு பகை உண்டோ ?” என்றான்.

"நீ நல்லபடியாக நடந்து கொள்ளலாம். ஆனாலும் உன் வளர்ச்சியை அவன் விரும்பவில்லை. உன் வளர்ச்சியை விரும்பாததனால் உன்மீது அவன் பொறாமைப்படுகிறான். நீ யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டாய் என்பது தெரியும். ஆனால் பொறாமையால் உனக்கு இடையூறு செய்ய நினைக்கிறார்கள்” என்பார்.

அதனால் அவன் என்ன செய்கிறான்? தினமும் காலையில் எழும்போதே ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்கிறான். நான் எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும். மற்றவர்கள் என்னிடம் பகை உணர்ச்சி காட்டியபோதும் புரிந்து கொண்டு அவர்களிடம் பெருந்தன்மையோடு இருக்க வேண்டும். பகையில்லாது இருக்க வேண்டுமென்று கேட்கிறான்.

ஆசானிடம் கேட்கும்போதே, நான் யாரிடத்தும் இடையூறு இல்லாத வாழ்க்கையை அடியேன் மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது பொறாமைப்படுதல், பழிவாங்குதல் போன்ற குணக்கேடுகள் என்னிடத்தில் இல்லாதிருக்க அருள்புரிய வேண்டுமென்று கேட்கிறான்.

ஆக, ஒருவனுக்கு பகை உருவாகியிருக்கென்றால் அது அவன் முன் செய்த வினையாகவும் இருக்கலாம். அந்த பகையை முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்க வேண்டும்? நட்பால் முடிக்க வேண்டுமென்ற நினைப்பு இருக்க வேண்டும்.

பகைக்குப் பகையை உருவாக்கி பகையை அழிக்கணும் அல்லது பகையை அடக்கணும் அல்லது பகையை முடிக்கணுமென்று பழிவாங்க நினைக்கும்போது வினை சூழும் என்று ஆசான் சொல்வார்.

தலைவன் இருக்கிறான், நமக்கு யாரும் இடையூறு செய்யமுடியாதென்ற எண்ணம் வந்தாலே அங்கே அச்சம், பயம் இருக்காது.

"அவன் என்னிடம் முரண்படுகிறான் ஆனால் நான் அவனுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை” என்று ஞானிகளிடம் கேட்பான். தலைவன் ஆசி இருந்தால்தான் இந்த குணம் வரும். தலைவன் ஆசி இல்லையென்றால் இந்த நினைவு வராது.

உலக மக்களுடைய இயல்பு பகைவனை அடக்க வேண்டும், பகைவனை அழிக்க வேண்டும் அல்லது பகைவனது ஆற்றலைக் குறைக்க வேண்டும் அல்லது முடமாக்க வேண்டுமென்று நினைப்பார்கள். பகைக்கு பகை என்பதை இயல்பாகவே மேற்கொள்வார்கள்.

பகையை முடமாக்க நினைக்கும்போதே பாதிக்கப்பட்டவன் நிச்சயமாக நமக்கு இடையூறு செய்யாமல் இருக்க மாட்டான். அப்ப நாம் என்ன செய்ய வேண்டும்? அவனை நட்பாக்க முயற்சி செய்கிறோம். அவன் மிகக்கொடூரமானவன் என்றாலும் அவனை நட்பாக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவன் முரண்பட்டு போய்க் கொண்டிருக்கிறானென்றால் என்ன செய்வது? இனி தலைவன் தான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது அந்த சூழ்நிலை வந்தால் நாம் ஆசானிடம் "அவனை நட்பாக்கி கொடு" என்று கேட்கிறோம். அவனை நான் வெல்ல நினைக்கவில்லை. அவனை வெல்லவே முடியாது. அவனிடம் பணிந்து போக வேண்டுமெனில் மான உணர்ச்சி என்னை தடுக்குது. நானும் மான உணர்ச்சி உள்ளவன் தானே. அவனிடம் எப்படி அடிபணிவது. ஆகவே, அவனுடைய மூர்க்கத்தனத்தை நீ முடமாக்க வேண்டுமென்றான்.
அதற்கு தலைவன் ஆசான் சுப்ரமணியர் "நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பார்.

"நீ சிறிது நாள் பொறுத்திரு அவனுடைய முனைப்பை உடைக்கிறேன், அவனை அழிக்க வேண்டிய அவசியமில்லை, பகை கொண்டவர்களை அழித்தால் உலகம் தாங்காது” என்றார்.
பகைவர்கள் அழிய வேண்டுமென்று நினைத்தால் அது எங்கே போய் நிற்கும். நாம என்ன செய்ய வேண்டுமென்றால் பகைவனும் வாழவேண்டுமென்று நினைக்க வேண்டும்.

"நீ உனது சிந்தனையில் மற்றவர்கள் அழிய வேண்டுமென்று நினைக்காதே. உன் சிந்தனையில் மற்றவர்கள் அழிய வேண்டுமென்று நினைத்தால் அந்த எண்ண அலைகள் அவனுக்கு மேலும் உரமூட்டி விடும், அவனும் வாழ வேண்டுமென்று நீ நினைக்க வேண்டும்” என்றார் ஆசான் சுப்ரமணியர். அவனும் வாழ வேண்டுமென்று நினைப்பது சாதாரண அறிவல்ல.

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனித வர்க்கமும் வாழத்தான் விரும்புகிறது. சாதாரண கருநாகப்பாம்பு கூட வாழநினைக்கும். யாரையாவது கண்டால் எப்படியாவது தப்பித்து ஓட நினைக்கும். ஆனால் ஆறறிவு உள்ள அத்தனை பேரும் நல்லபடி வாழவேண்டும் என்றுதான் நினைப்பான். வாழ நினைப்பவனுக்கு நாம் துணையாக இருக்க வேண்டுமே தவிர அவனை அழிக்க வேண்டுமென்று நினைக்கக் கூடாது. அப்படி அழிக்க வேண்டுமென்று நினைக்கும்போது மாசுபட்ட எண்ண அலைகள் நமது ஆயுளை குறைத்துவிடும். அவன் அறியாமை காரணமாக இடையூறு செய்கிறான். ஆசான் திருவள்ளுவர் இதை சொல்வார்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
- திருக்குறள் - பொறை உடைமை - குறள் எண் 158.

தகுதி என்றால் பெருந்தன்மை. பெருந்தன்மையால் வென்று விட வேண்டுமென்றார். மிகுதியான் மிக்கவை செய்தாரை - மிகுதி என்றால் அதிகம் என்று அர்த்தம். இங்கு மிக்க என்று ஏனய்யா சொன்னார்? வரம்பு கடந்து இடையூறு செய்துவிட்டான் அதனால் அப்படி சொன்னார்.
அப்ப தகுதி எப்போது வந்தது என்றான்? மன்னிக்கும் மனப்பான்மை வந்ததால் தகுதி வந்தது என்று அர்த்தம்.

ஒருவன் இடறிப் பேசுகிறான், வீண் வம்பிழுக்கிறான். இவனை அழிக்க வேண்டுமென்று பார்க்கிறான். ஆனால் இவன் அவனை நேருக்கு நேர் பார்க்காமலேயே வளைந்து கொடுத்து செல்கிறான். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் சினத்தைக் குறைத்துக் கொள்கிறான் அல்லது ஆசான் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஆக மன்னிக்கும் மனப்பான்மை போன்ற உயர்ந்த குணங்களெல்லாம் தலைவன் ஆசியில்லாமல் வராது.

ஒருவன் நம்மை இடறிப் பேசும்போது நமக்கு சினம் வரும். மான உணர்ச்சி மிகுதியாகும். ஆனால் ஆசானோ இந்த மான உணர்ச்சிக்கு இங்க இடமில்லை என்றார். அவன் அழியப் பிறந்தவன், அவன் அழிவதற்காக இடறிப்பேசுகிறான். நாம் வாழவேண்டும். அதனால் மான உணர்ச்சி உனக்கு தேவையில்லை என்பார்.

எத்தனை ஆண்டுகள் ஆயுள் பெற்றிருக்கிறோமோ அத்தனை ஆண்டுகள் ஆசான் ஆசி பெறுவதற்காக நாம் வந்திருக்கிறோம். ஆசான் ஆசி பெறுவதற்காக வந்த நாம் உணர்ச்சிவசப்பட நியாயமில்லை. அவன் மிகுதியான துன்பத்தை இவனுக்கு தந்தாலும், இவன் மிகுதியான பண்பை வெளிப்படுத்திக் காட்டுகிறான். ஆக, ஞானிகளால்தான் உயர்ந்த பண்பை வெளிப்படுத்திக் காட்ட முடியும்.

கோபம் கொள்ளாதவன் நீடிய ஆயுள் பெறுகிறான். அவனுக்கு இரத்தக்கொதிப்பே இருக்காது. உடம்பில் பலவீனம் இருக்காது. மிகுதியாக கோபம் வரவர உடம்பு தளர்ச்சி அடையும், நோய்கள் சூழும். அப்ப இதற்கு என்ன செய்வது? ஆசான் ஞானபண்டிதன் சாந்தமே வடிவானவர், மிகமிக சாந்தமே வடிவானவர். உலகத்தில் உள்ள எல்லோரையும் வெல்லும் வல்லமை உள்ள உலகப் போக்கிரி அவர்.
மிகமிக சாந்தமான ஆசான் ஞானபண்டிதரின் ஆசி பெறும் போது இதுபோன்ற குணக்கேடுகள் நமக்கு நிச்சயமாக வராது.

தகுதியைப் பெற்ற மிகப்பெரிய தகைமையாளன், ஆசான் ஞானபண்டிதன் திருவடியைப் பற்றுகிறோம். திருவடியைப் பற்றும்போது சாந்தம் வரும், பொறுமை வரும், பகைமை அழியும்.

பகைமை இல்லையென்றால் பயம் இருக்காது, அச்சம் இருக்காது. அப்ப பயமில்லாத வாழ்வு பெற வேண்டுமென்றால் அசுரனுக்கு பயங்கரமானவனாக விளங்கும் ஆசான் ஞானபண்டிதன் திருவடியை நாம் வணங்க வேண்டும். பூஜை செய்யசெய்ய நமக்கு தகுதியும் வரும்.

தகுதி என்பது எது? சாந்தம் தானய்யா தகுதி, தன்னடக்கம் தானய்யா தகுதி, மன்னிக்கும் மனப்பான்மைதான் தகுதி. ஆகவே ஆசான் சுப்ரமணியரின் ஆசி பெற்றவன் ஆயிரம் படை உள்ளவனையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை. நான் எனது ஆசான் ஞானபண்டிதன் திருவடியைப் பற்றுகிறேன். பெருந்தகையாளன் திருவடியைப் பற்றியதால் எனக்கு தகுதி வந்துவிட்டது, அச்சம் எங்களுக்கில்லை, யாரைக் கண்டும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வேல்படையால் வெல்லுவேன் என்றான்.

அப்ப வேல்படை எது? வேல்படை என்பது மன்னிக்கும் மனப்பான்மை என்றான். பகைக்கு பகை, இடருக்கு இடர் அல்ல.

ஆகவே மன்னிக்கும் மனப்பான்மையை தலைவன் தான் நமக்கு கொடுக்க வேண்டும். யானை மீது அமர்ந்து செல்பவனை, சுண்டெலி முறைத்து முறைத்துப் பார்த்தது. ஆனால் அவன் சிரித்துக் கொண்டே போகிறான். அதுபோல வலிமை பொருந்திய தலைவன் நமக்கு துணையாக இருப்பதனால் நமக்கு பயமில்லை. பகைக்கு அஞ்ச வேண்டியதில்லை. பகையை முடிக்க வேண்டியதில்லை. பகையை முடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைத்தால்தானே அந்த எண்ண அலைகளால் பிரச்சனை வரும், அந்த எண்ண அலைகள் நம்மை பாதிக்கும்.

ஆக, அச்சமில்லாத வாழ்க்கை, பயமில்லாத வாழ்க்கை நமக்கு கிடைக்க நாம் நமது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை இன்னும் மேலே போய் மகான் திருவள்ளுவப் பெருமான் சொல்கிறார்.

பகைநட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
- திருக்குறள் - பகைத்திறம் தெரிதல் - குறள் எண் 874.

பகையை நட்பாகக் கொள்ளுதல் என்பது சின்ன விசயமல்ல. மனித சமுதாயத்திற்கு பகையைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் பகை கொண்டவனிடமே மனம் விட்டு பழகுதல் என்பது சின்ன விசயமா என்ன? அவன் நம்மை அழிக்க நினைக்கிறான், பார்வையே கொடூரமாக இருக்கிறது. ஆனால் நம்மைப் பார்த்து சிரிக்கிறான், உட்பகையோடு செயல்படுகிறான். இதெல்லாம் இவனுக்குத் தெரியும்.
அவனை அப்படியே பார்க்கிறான், அவனிடம் மனம் விட்டு பேசுகிறான். ''வாங்க, வாங்க சௌகரியமா', என்பான் “பிள்ளைகள் எல்லாம் நல்லா

இருக்கா” என்பான், "உடம்பு இளைச்சது போலிருக்குது” என்பான். ஆனால் அவன் பூதம்மாதிரி குண்டாகத்தான் இருப்பான். ஆக அவனைக் கண்டு இவன் இப்படியெல்லாம் பேசி நட்பை பெருக்கிக் கொள்கிறான். இதைத்தான் பகை நட்பாக் கொண்டொழுகும் பண்பாளன் என்பார்.

என்னடா இது? நாம் இந்த அளவுக்கு இவனை அழிக்க நினைக்கிறோம், இவன் என்னடான்னா நம்மிடம் மனம் விட்டு பேசுகிறான், ஒன்றும் புரியவில்லை என்று நினைப்பான். நம்மை இடர நினைப்பவனிடமும் மனம் விட்டுப் பேசுகிறான். அவனுடைய ஆள் படையோ அல்லது அதிகாரபலமோ ஒன்றும் செய்ய முடியாது.

அவனிடம் மனம் விட்டு பேசுவதால் ஒன்று பகை உடையட்டும் அல்லது பகை முடமாகட்டும். ஏதோ ஒன்று நடக்கட்டும். "பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன்"

அத்தகைய பண்புள்ளவனிடம் அத்தகைய தகைமையுள்ளவனிடம் தங்கிவிடும் இந்த உலகு. இத்தகைய பண்புடையவனால்தான் எதையும் சாதிக்க முடியும். இதற்கு தலைவன் ஆசியிருக்க வேண்டும்.
ஆகவே அச்சம் இல்லாத வாழ்க்கை , நீடிய ஆயுள் தலைவன் திருவருளினால் கிடைக்கும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மை யவர்.
- திருக்குறள் - இகல் - குறள் எண் 855.

வீதி வழி போய்க் கொண்டிருக்கிறோம். பகைவன் நேருக்கு நேராக வருகிறான். அவன் நம்மைப் பார்த்து காறி உமிழ்வான், இடரிப்பேசுவான். இந்த நிலைமையை தவிர்க்க அந்த வீதிப்பக்கம் போகக்கூடாது. இது கோழைத் தனமல்ல. நமக்கு நீடிய ஆயுள் பெறுவதற்காக அந்தப் பக்கம் போகாமல் இருக்கிறோம். ஒருவன் முறைத்துப் பார்த்தால் அவனை நேருக்குநேர் பார்க்கக் கூடாது. இது கோழைத்தனமல்ல. எப்ப பார்த்தாலும் நாளுக்கு நாள் பகையை வளர்ப்பவர்களிடம் மன அமைதி இருக்கவே முடியாது, மன உளைச்சல்தான் இருக்கும், எப்பொழுதும் அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

ஆகவே பெறுதற்கரிய பிறவியைப் பெற்றிருக்கிறோம். இதுபோன்ற பண்பில்லாதவர்களிடம் மோத வேண்டிய அவசியமில்லை. நாம் கூற்றுவனைத்தான் வெற்றிக் காணவேண்டும். அவன் சக்கரவர்த்தியையும் தூக்கியெறிந்து விழுங்கி விடுவான். ஆக இத்தகைய கூற்றுவனை வெல்லுவதுதான் வீரம். ஆகவே ஒரு சராசரி மனிதனை வென்று நாம் என்ன செய்ய போகிறோம்.

"இகல் எதிரே சாய்ந்தொழுக வல்லாரை" இகல் - முரண்பாடு. முரண்பாடு இல்லாமல் சாய்ந்து ஒழுக வேண்டும். ஏன் அவ்வாறு சாய்ந்து ஒழுக வேண்டும்? நமக்கு கிடைத்தற்கரிய பிறவி கிடைத்துள்ளது. நீடிய ஆயுளைப் பெற்று எமபயத்தை வெல்ல வேண்டும். அந்த அச்சத்தை வெல்ல வேண்டும்.

மகான் மாணிக்கவாசகர், "யானேதும் பிறப்பஞ்சேன்” என்பார். எனக்கு அச்சமும் பயமும் இல்லையென்றார். அடுத்து என்ன சொல்கிறார், இறப்பதனுக்(கு) என் கடவேன் - நான் பிறப்பதற்கு அஞ்சவில்லை , இறப்பு ஒன்று வருமே ஐயா, அதற்கு என்ன செய்வது? என்பார். அடுத்தபடியாக மகான் பட்டினத்தார் சொல்வார்.

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே அறிவா ரில்லையே .
- மகான் பட்டினத்தார் - திருத்தில்லை - கவி எண் 7.

"முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடிசாம்பராய்” என்றார், ''யானே தும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்(கு) என் கடவேன் ” என்றார் மகான் மாணிக்கவாசகர்.

இறப்பு என்ற ஒன்று வருமே! அதை எப்படி நான் கடப்பது? அதை எப்படி நான் வெல்லுவது? அதை வெல்ல முடியாது. கூற்றுவனுக்குத்தான் அஞ்ச வேண்டும். இப்ப ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கூற்றுவன் என்றால் யார்?

நமது அறியாமையே நமக்கு கூற்றுவன், எமன். ஒரு செயலை அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டுமென்று கற்பனையில் முழ்கிக் கிடப்பான். கடைசியில் ஒன்றும் இருக்காது. ஆக இப்படிப்பட்ட அறியாமையே எமன். இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்.

பொல்லாத காமதேகமே கூற்றுவன் தான். யாரோ எமன், அவன் எங்கோ இருக்கிறானென்று நினைத்துவிட வேண்டாம். நமக்கு எமனே நம்முடைய பொறி புலன்கள். ஐம்புலன்களே எமனாக இருக்கிறது. பொல்லாத காம தேகமே எமன்.

ஆக பொல்லாத காமதேகத்தை எப்படி நீக்குவது? எப்படி வெல்வது? இதற்கு தலைவன் ஆசியிருக்க வேண்டும். தமக்கு பகையாகிய உடம்பை வென்றவர்கள் ஞானிகள். தமக்கு பகையாய் இருந்த உடம்பை வென்று வெற்றி கண்டவர்கள் ஞானிகள். அப்போதுதான் எமனை வெல்லலாம்.

நமது உடம்பே நமக்கு எமனாக இருக்கும். மிகுதியான காமத்தை உண்டுபண்ணும். அறியாமையை உண்டு பண்ணும். எதைப் பற்றியும் புரியாமல் செய்வதே இந்த உடம்புதான். என்னதான் மனதை கட்டுப்படுத்தினாலும், நமது

மனம் ஒரு நிலையில் நிற்காது. அப்ப மனமே நமக்கு எமனாக இருந்தால், யாரைய்யா உனக்கு வேறு எமன்? ஒன்றைப் பற்றி உணராமலேயே உணர்ந்ததாக நினைக்கின்ற நினைவே நமக்கு எமனாக இருக்கிறது. ஆனால் சமுதாயத்தில் உள்ள எமன்களிடமும் பகைவர்களிடமும் அடங்கிப்போகலாம். இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மை யவர்.
- திருக்குறள் - இகல் - குறள் எண் 855.

அப்படிப்பட்டவனை வெல்லுகின்ற வல்லமை யாருக்கு இருக்கிறது என்றார். அப்ப சமுதாயத்திலேயே மனித வர்க்கத்திலேயே பகைவன் நமக்கு எமனாக இருப்பான். அங்கே வெட்டிவிட்டான் குத்திவிட்டான் என்பான்.

எமனா வந்து வெட்டினான்? எமனா குத்தினான்? அதெல்லாம் ஒன்றுமில்லை. எமன் வரவில்லை . அவன் எண்பது வயதில் வரவேண்டியவன். இவனும் அவனும் பகைவன். ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டார்கள், வெட்டிக் கொண்டார்கள். ஓஹோ! அப்ப சமுதாயத்தில் நிறையபேர் எமன்களாக இருக்கிறார்கள். அப்ப அவனே எமன். அதனால்தான் அவனிடம் அடக்கமாக போகச் சொன்னார் ஆசான் திருவள்ளுவர்.

ஆக, சமுதாய எமன்களிடம் அடக்கமாக போனேன், அதனால் அவனிடம் இருந்து தப்பித்துக்கொண்டேன். இந்த உடம்பு என்று சொல்லப்பட்ட அசுரனிடமிருந்து எப்படி அய்யா தப்பித்துக்கொள்வது? தப்பிக்கவே முடியாது. ஆனால் என்னுள்ளேயே இருந்து எனக்கு அறியாமையை உண்டுபண்ணக்கூடிய எமனை எப்படி வெல்வது?

ஒருவன் எண்பது வயது வரை வாழ்ந்தாலே அவன் அடக்கமாக வாழ்ந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சமுதாய எமன்களை வென்றுவிட்டான் என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கு எண்பது வயது வந்தால் நரை திரை வருகிறது, முதுமை வருகிறது.
நாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு உள்ளோம். நமக்கு பசி, காமம், நலிவு, ஈளை, இருமல் வரத்தான் செய்யும்.

ஆக, இத்தகைய எமனை எப்படி வெல்வாய்? அடுத்து பேராசை என்ற ஒன்று உள்ளதே. பெரும் பொருளை திரட்ட வேண்டும், பெரும்பொருளை எப்படியும் திரட்ட வேண்டுமென்ற நினைவு வந்துவிட்டாலே எமன் வந்து விட்டானென்று அர்த்தம். ஞானிகள் அதை விரும்பவே மாட்டார்கள். அவர்கள் சமுதாய எமன்களையே வென்றவர்கள், இந்த பேராசை எனும் குணம் ஞானிகளுக்கு இடையூறு செய்யுமா என்ன? செய்யாது.
இந்த பேராசை என்ன செய்யுமென்பதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.

இறல்ஈனும் எண்ணாது வெஃகின்; விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
- திருக்குறள் - வெஃகாமை - குறள் எண் 180.

"இறலீனும் எண்ணாது வெஃகின்" எண்ணுதல் என்பது சாதாரண விசயமல்ல. பெரியோன் சொல்கிறான். மிகப் பெரியோன் சொல்கிறான். மிகப் பெரியவன் சொல்கிறான். மிகப் பெரியவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இறல் ஈனும் - இறப்பைத் தரும். எண்ணாது வெஃகின் - பொருளாதாரத்தின் மீது உள்ள பேராசை, எப்படியும் பொருளை கைப்பற்ற நினைத்தால் உன்னால் பாதிக்கப்பட்டவன் உனக்கு எமனாக மாறிவிடுவான். ஆக தலைவன் ஆசியால் சமூக எமன்களிடமிருந்து விடுபட்டு விட்டோம்.
ஆகவே புறப்பகையை எல்லாம் உடைத்து விட்டான். அகப்பகை? அகத்திற்கு உள்ள பகை எதுவென்றான்? அறியாமை அல்லது பேராசை.

அறியாமைதான் பேராசையாக மாறும். பேராசை என்ன செய்யும்? மிகுதியாக வட்டி வாங்க செய்யும். பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி ஊரை ஏமாற்றுவான். அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லி உழட்டுவான். கடைசியில் பொல்லாத பகைதான் மிச்சம்.

அறியாமை காரணமாக பொருள் ஈட்ட வேண்டுமென்று நினைத்தாலே வந்துவிட்டான் எமன் என்று அர்த்தம். பொருளை ஈட்டுக. நமக்குக் கொடுக்கக் கூடிய தலைவன் ஆசான் ஞானபண்டிதன் இருக்கிறார். அத்தகைய தலைவனைக் கேட்டு பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவன் யாரோ பாவம், நாம் ஏன் அவன் பொருளை மறைமுகமாக எடுக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.

இந்தப் பொருளாதாரத்தைப் பற்றி ஏனையா எண்ணுதல் என்று சொன்னார்? இந்த பொருள் எங்கே இருந்தது? இப்ப நம்மிடமிருக்கும் பொருள் எங்கேயோ இருந்து வந்தது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பொருள் நம்மிடம் இருக்கும்? இந்தப் பொருள் இப்படியே இருக்குமா? நாம் இன்னும் எத்தனை வருடம் இருப்போம்? இப்ப நம்ம வயது என்ன? இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்க போகிறோம்? என்று எண்ண வேண்டும் என்பதைத்தான் "எண்ணுதல் '' என ஆசான் திருவள்ளுவர் சொன்னார். ஆக இந்தப் பொருளாதாரத்தைப் பற்றி அவனுக்கு தெரியவில்லை. பொருளாதாரம் நிலையில்லாதது என்பதை அவன் அறியவில்லை.

"எண்ணாது'' என்பது மிகப் பெரியவார்த்தை . " எண்ணாது'' என்று மிகப்பெரியோன் சொல்கிறான். நமது ஆயுளைப் பற்றி எண்ண வேண்டும். இந்த உடம்பும் உயிரும் நிலையில்லாதது, அநித்தியமானதென்றும், நாம் சேர்த்த பொருள்

அநித்தியமானதென்றும், இதைக் கைப்பற்ற நினைப்பது அறியாமை என்றும், அப்படி செய்தால் வினை சூழுமென்றும், ஆக அது இறுதியைத் தரும் (மரணத்தை ) என்று எண்ணுவதை "எண்ணுதல்” என்றார் மகான் திருவள்ளுவர்.

அப்பப்பா! "எண்ணாது'' என்கின்ற வார்த்தை சொல்லவொண்ணாப் பேரானந்தத்தை தரும். ஆசான் திருவள்ளுவர், காவி உடை தரித்த கள்ளர்களைப் பற்றி சொல்லியிருப்பார். சாது போன்ற தோற்றம், காவி உடை தரித்திருப்பார்கள். சாது போன்று நடித்து அராஜகம் செய்துவிடுவான். ஒரு பக்கம் காம தேகத்தால் தடுமாறுவான், கலங்கியிருப்பான். எப்படியும் பொருள் சேர்த்து நாம் சுகபோகமாக இருக்க வேண்டுமென்று நினைப்பான்.

ஒரு பக்கம் காமதேகம். ஒரு பக்கம் முதுமை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் பொருள் ஈட்டவேண்டும் என்ற பலவீனங்கள். ஆக இதை "எண்ணாது வெஃகின்” என்றார். நிலையில்லாத உலகத்தில் நாம் இருக்கிறோம், நிலையான ஒன்றைப் பற்றி நாடியிருக்க வேண்டுமென்ற அறிவு வந்தால் தப்பித்துக் கொள்ளலாம். அருள் மட்டுமே நித்தியம் என்று அறிந்து, அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் அதுதான் அச்சமில்லா வாழ்வு.

நான் இன்று முதல், பொருளை விரும்ப மாட்டேன். ஆனால் விரும்புவேன் அதை முறை தவறி சேர்க்க விரும்பமாட்டேன். இந்தப் பொருள் இதற்கு முன்னர் யார் யாரை பாவியாக்கியது என்பதை நான் அறிந்து கொண்டேன். இப்போது நம்மிடம் இருக்கும் இந்த பொருள் வெகு பேரை பாவியாக்கியது, வெகுபேரை கொன்றது, வெகுபேரை நரகத்தில் தள்ளியது. இப்போது என்னிடம் வந்துள்ளது. வந்துள்ள இந்த பொருள் அன்புக்குரியதா, அறத்திற்குரியதா என்பது எனக்குத் தெரியவில்லை. அறத்திற்குரியதாக இருக்க வேண்டுமென்று ஆசானைக் கேட்க வேண்டும்.

செல்வத்தை நன்றாக கோடிக்கணக்கில் ஈட்டலாம், குற்றமில்லை. அது அன்போடும், அருளோடும் வந்ததாக இருக்க வேண்டும். முறைதவறி சேர்த்த பொருள் இறுதியை அல்லது இறப்பை தந்துவிடும். இதைத்தான் "இறல் ஈனும்" என்றார். " இறல்ஈனும் " என்றால் இறப்பைத்தரும். ஆக இதையெல்லாம் எண்ணி செய்கின்ற மக்களுக்கு கோடிக்கணக்கான பொருள் குவிந்திருக்கும். எல்லாம் அறத்திற்குட்பட்டதாக இருக்கும். அறத்திற்குட்படாதபோது அந்த பொருள் அவனுக்கு இறப்பைத் தரும்.

வாழ்க்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு அச்சம் இருக்காது. உயர்ந்த மக்களுக்குதான் இந்த உலகம் உயர்ந்த உலகம். அது அவர்களுக்கு எப்போதுமே இந்த உலகம் சொர்க்க லோகம் என்றார். அவர்களுக்கு அச்சமே இல்லை.

இந்த உலகம் மகிழ்ச்சியான உலகம். சுகபோகமான உலகம். இந்திர லோகம். உயர்ந்த உலகம். யாருக்கு இந்த உலகம் இந்திர லோகம்? அறியாமை இல்லாத மக்களுக்கு இந்திரலோகம். பேராசையில்லாதவனுக்கு இந்திரலோகம். பகையை வளர்க்க வேண்டாம், நட்பாக்கிக்கொள்ள வேண்டும் என்பவனுக்கு இந்திரலோகம். ஆக, இவர்களுக்கெல்லாம் இந்த உலகம் இந்திரலோகம், சுகபோக லோகம், தேவ லோகம் என்பார். பேராசைக்காரனுக்கு இந்த லோகம் நரகமாக இருக்கும். அவனுக்கு அசுர லோகமாக இருக்குமென்றார்.

பெரியோர்களுக்கு பயமிருக்காது. இந்த உடம்பைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். காரணம் இந்த உடம்பு அவர்களுக்கு துணையாக இருக்கும். "ஆலமாய் அவுணருக்கு , அமரர்க்கு அமுதமாய்” என்று மகான் அருணகிரிநாதர் சொன்னார். அவுணர் என்பவன் அசுரன், அறியாமை உள்ளவன்.

இந்த உடம்பு அவனுக்கு விஷமாக இருக்கு யாருக்கு? இந்த உடம்பு அறியாமை உடைய மூர்க்கருக்கு விஷமாக இருக்கு . அமரர்க்கு அமுதமுமாய் - இந்த உடம்பு அமிழ்தபானத்தை ஊட்டுகின்ற, தருகின்ற உடம்பு, சொர்க்க லோகத்தை தருகின்ற உடம்பு.

சொல்லவொண்ணா பேரானந்தத்தை தருகின்ற உடம்பு, கண்கொள்ளா காட்சியை தருகின்ற உடம்பு, அதி அற்புத உடம்பு. அவன் கண்ணை மூடினால் கண்ணை திறக்க முடியாதபடி சொல்லவொண்ணாத ஜோதியில் இலயித்து இருப்பான்.

"ஆனந்தம் ஆடரங்கம், ஆனந்தம் வாச்சியம்"
ஆடரங்கம் - இந்த கண்ணை மூடினால் சொல்லவொண்ணா பேரானந்தத்தை ஞானிகள் கண்டு களிப்பார்கள். அப்பேர்ப்பட்டவர்களுக்கு அந்த சொல்லவொண்ணா பேரானந்தத்தை தருவது உலகமா? உடம்பா? உயிரா? என்றால், இந்த உலகம் ஞானியர்களுக்கு மகிழ்ச்சியான உலகம்தான்.

ஞானிகள் எல்லோரும் சொல்ல வொண்ணா பேரானந்தத்தில் இருக்கிறார்கள். அவன் இவ்வுலகில் தான் இருக்கிறான். அவன் அறிந்து கொண்டவன், புரிந்து கொண்டவன். தினம் தியானம் செய்தவன். ஆசான் அகத்தீசரையும் திருமூலதேவரையும் ஆசான் சுப்ரமணியரையும் தியானம் செய்து வெற்றி பெற்றவன். அவனுக்கு எமபயம் இல்லை.

அப்ப விஷமாக உள்ள இந்த உடம்பை விஷமில்லாத அமிழ்தமாக மாற்றிக் கொண்டான். அது போல உடம்பை அமிழ்தமாக மாற்றி கொண்டவர்களுக்கு, இந்த உலகம் சொர்க்கமே. அந்த வாய்ப்பை பெற்றவர்களுக்கு அச்சமில்லை, பயமில்லை, எமனில்லை.
எமன் என்பது யார்? அறியாமையா? அறிவா? பொறிபுலனா? உடம்பா? உயிரா? இயற்கையா? ஆணா? பெண்ணா ? இகமா? பரமா? ஜீவான்மாவா?
பரமான்மாவா? ஆக எமன் என்பது அறியாமைதான். அந்த விசயத்தைப்பற்றி ஆசானிடம்தான் கேட்க வேண்டும். கேட்பவன் விஷத்தை வெல்லுவான். அப்ப விஷத்தை வெல்வதற்கு அதுதான் உபாயம்.

"ஆலமாய் அவுணருக்கு , அமரர்க்கு அமுதமாய்” அமரர் - தேவர். தேவன் யார்? ஒருவன் இருக்கிறான். அவன் தன் உடம்பை அமுதமாக்கி கொண்டவன். தேவன் யார் என்று கேட்டால், ஒருவன் இருக்கிறான் அவன் உத்தமன் உயர்ந்தவன். அத்தகையவனின் திருவடிகளை நாம் பூஜை செய்து கொள்ள வேண்டுமென்ற நினைவு வந்தால் அவன் தேவன், தன் எண்ணத்தை உயர்த்திக்கொண்டான்.

உலகத்தை அநித்தியம் என்று அறிந்து கொண்டான். மேலும் தம் அறிவும், கல்வியும், திறமையும் அநித்தியம் என்று அறிந்து கொண்டான். அனைத்தையும் அறிந்து கொண்ட அவனுக்கு இந்த உலகம் அமிழ்தமாக இருக்கும். ஆகவே பெரியோர்களின் ஆசிபெறவேண்டும். அதற்கு தினமும் பூஜை செய்யவேண்டும். தலைவனை புரிந்துகொண்டு தினம் பூஜை செய்கின்ற மக்களுக்கு இந்த உடம்பின் விஷம் மாறியது, விஷம் நீங்கியது என்றார்.

"அமரர்க்கு அமுதமுமாய்" அமரர் - அவன்தான் தெய்வீகமானவன்.
புண்ணுடம்பு பொன்னுடம்பாக மாறும். பொன்னுடம்பாக மாறுவதற்கு எமபயம் அவசியமில்லை. இந்த உடம்பை பொன்னுடம்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.

விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம் உருகக் கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம் பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- ஆறாம் திருமுறை - உற்றது உரைத்தல் - கவி எண் 1270.

அவரைப் போன்றோருக்கு பயமில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டார்கள். பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உடம்பை அமிழ்தமாக்கினார். ஆக அத்தகையவர்களை எமன் என்ன செய்வான்? ஒன்றும் செய்ய முடியாது. தலைவன் ஒருவன் இருக்கிறான் என்று தினம் தினம் ஆசிபெறும் அறிவுள்ளவனுக்கு இவ்வுலகம் சொர்க்க லோகம். தினம் தினம் ஆசிபெறும் அறிவுள்ளவனுக்கு இவ்வுலகமே சொர்க்கலோகம். அவனே தேவன் அவனே உயர்ந்தவன். இதை ஆசான் அருணகிரிநாதர் சொல்வார்.

ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீ
தரியதவ முநீவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா

மூலமாம் வினையறுத் தவர்கள் வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன் அறு முகன் குகன்
சரவணக் குமரன் வேலே.
- மகான் அருணகிரிநாதர் - வேல் விருத்தம் - கவி எண் 5.

ஆகவே இதெல்லாம் பெரியவர்கள் பேசுகின்ற கருத்துக்கள். எப்போது ஒருவன் தேவனாகிறான். தனக்கு மேலான ஒருவன் இருக்கிறான். அவனை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படி அறிந்து கொண்டவனுடைய திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால் அவன் தேவன் ஆவான்.

நமது அறிவும் திறமையும் நமக்கு போதும் என்று நினைத்தால் அசுரனாகிவிடுவான். நாம் அறிந்த அறிவெல்லாம் பயன்படாது. பெரியோர்களின் ஆசிபெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அறிவு இருந்தால் அவன் தேவனாவான். இந்த அறிவே மேம்பட்ட அறிவு. இதற்கெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு அச்சமில்லை. ஆக அச்சம் அல்லது பயம் இல்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கு நாம் திருவடியைப் பற்ற வேண்டும்.
மகான் நக்கீரர் சொல்வார்.

அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்ச மரந்தோன்றில் வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன்.
- திருமுருகாற்றுப்படை - 6

பகையை வெல்லலாம். பல சிந்தனைகளே நமக்கு பகையாக இருக்கு. அன்பர்கள் அச்சமும் பயமும் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் முதுபெரும் தலைவனான ஆசான் அகத்தீசர் , ஆசான் திருமூலதேவர், ஆசான் போகமகாரிஷி , ஆசான் அருணகிரிநாதர், ஆசான் கருவூர் முனிவர் போன்ற ஞானிகளை வணங்கி ஆசிபெற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் ஒரே தன்மையானவர்கள்.

இவர்கள் அத்தனை பேரும் உடம்பை தங்கமாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் சொல்லவொண்ணா பேரானந்தத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு பயமில்லை, பகையில்லை. பகையில்லாத வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். அமிழ்தபானத்தை உண்ணுகின்ற மக்களுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். அமிழ்தபானம் உண்ணுகிற மக்களுக்கு அல்லது தினம் பூஜை செய்கிற மக்களுக்கு பகை இருக்காது, அறியாமை இருக்காது. மகான் சட்ட முனிவர் சொல்வார்,

பாலனெனும் குமரனை நீ வணங்குவாயே வணங்கினால்
சகல சித்தும் கைக்குள்ளாச்சு - என்பார்.

சகல சித்தும் - எல்லா ஆற்றலும் உண்டாகும். பாலனெனும் குமரனை வணங்கினால், வணங்கியவர்க்கு உடம்பு அமிழ்தமாகும். ஆசான் சுப்ரமணியரை ஒன்பது கோடி சித்தர்களும் பூஜை செய்தவர்கள்தான். இப்ப ஆசான் சுப்ரமணியரும் மகான் திருமூலரும் எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் ஒரே இடத்துக்கு போனவர்கள் தான்.
ஆசான் அருணகிரிநாதர் இதை "இந்துவில்” என்பார். இந்து மதம் என்று சொன்னாலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடம்பைப் பற்றி அறிந்த மதம் இது. இந்து என்றாலே சந்திரன் அல்லது உடம்பு. இந்துவில் தண்ணென்று அமைந்து - உடம்பு வெப்பத்திற்கு உரியது. ஆனால் அரிய தவமுனிவருக்கு "இந்துவில் தண்ணென்று அமைந்து இருக்கும்” என்பார்.
இதையே சட்ட முனிவர் சொல்வார்,

வணங்கினாற் சகலசித்துங் கைக்குள்ளாச்சு
மைந்தனே அமுதமது சிந்துஞ்சிந்தும்
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும் பாரு
புணங்கினால் மனம் நினைக்கக் கூடாதப்பா
புத்தியது அறிவுக்குட் புகுந்துதானால்
அணங்கினா லாத்மாவும் ஒன்றாய்ப்போகும்
அப்பனே அதிசயத்தை யரைகிறேனே.
-மகான் சட்டமுனி சூத்திரம் 5.
பெரியோர்கள் தினம்தினம் பூஜை செய்து ஆசி பெற்றதினால் அவர்களுக்கு பயமில்லை, மரணபயமில்லை, அச்சமில்லை. அவர்களுக்கு எல்லாமே நன்மையாக நடக்கும். ஆக இன்று பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ஒரே மைய கருத்தை வைத்து பேசியிருக்கிறேன். இதை கேட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். கேட்டவர்கள் ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்தும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்தும் பயமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.

********************************************************************************

திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஔவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

13. அஃகஞ் சுருக்கேல்

வாழ்வில் ஒருவன் வசதியுடன் வாழ்வதும் வசதியற்று ஏழ்மையில் வாழ்வதும் அவரவர்கள் முன் ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் அமைகிறது.

இந்தியா ஒரு விவசாய நாடாகும். முன்செய்த நல்வினை அதாவது முன்செய்த புண்ணியத்தின் காரணமாக ஒருவனுக்கு நல்ல நிலமும், நல்ல நீர் ஆதார வாய்ப்பும் அமையப்பெற்று நல்ல விதத்தில் விவசாயம் செய்து வருவான். அவன் தான் பெற்ற செல்வத்தை தன் முயற்சியினால் வந்தது என பெருமைப்பட்டுக் கொண்டு பாவபுண்ணியங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து வருவான்.

சிலர் முன் ஜென்மத்தில் தாம் செய்த பாவபுண்ணியங்கள் காரணமாக இந்த ஜென்மத்தில் வறுமைக்கு ஆட்பட்டு பிறரிடம் கூலி வேலை செய்தும் மற்றும் பலவிதமான வேலைகள் செய்தும் வாழ்ந்து வருவார்கள்.

முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாக தாம்பெற்ற செல்வத்தைக் கொண்டு பலபேர்க்கு வேலைவாய்ப்பு தருவதோடு நீதிநெறி தவறாது தானதர்மங்களில் ஈடுபட்டு தாம்பெற்ற செல்வத்தையும் தன்னையும் நல்லமுறையில் உயர்த்திக் கொண்டு ஆன்மலாபத்தையும் பெறுதல் வேண்டும்.

ஒருவன் முன் ஜென்மத்தில் தான் செய்த புண்ணியத்தின் காரணமாக நல்ல நிலங்களையும் நல்ல நீர் ஆதாரத்தையும் பெற்று அதன் பயனாக நல்லமுறையில் விவசாயம் செய்து மிக்க வசதியுடன் வாழ்ந்து வந்தான்.

அவனிடம் முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக பலர் கூலி வேலை செய்து அந்த கூலியின் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி வாழ்ந்தார்கள். மேலும் அவனது நிலத்தில் அந்த கூலி ஆட்கள் கடுமையாக உழைத்தார்கள்.

தாம்பெற்ற இந்த செல்வமும் இந்த வசதி வாய்ப்பும் தான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் கிடைத்தது என்பதை அந்த முதலாளி உணரவில்லை. பொருள் பற்றின் காரணமாக தம்மிடம் வேலை செய்பவர்களுக்கு அந்த முதலாளி சரியான விதத்தில் கூலி கொடுக்கவில்லை. மேலும் அவர்கள் செய்த வேலைக்கான கூலியையும் உடனே கொடுக்கவில்லை. மேலும் அவர்களுடைய

கூலியை பிறகு வாங்கிக் கொள்ளலாம், பிறகு பார்க்கலாம் என பலவிதமாக கூறி அவர்களை ஏமாற்றி வந்தான். அப்படியே கூலி கொடுத்தாலும் அவர்களது கூலியை குறைத்து கொடுத்தான்.

அந்த காலத்தில் சிலருடைய வீட்டில் அளக்கும் கருவிகள் வைத்திருப்பார்கள். அப்படி அளக்கும் கருவிகளில் சிலர் சற்று உயரமான அளவை உடைய படிகள் வைத்திருப்பார்கள். அதில் ஒரு படி என இருக்கும். ஆனால் உண்மையில் அது ஒரு படியும் கூடுதலாக ஒரு நூறு மில்லி உள்ளவாறு படி அமைக்கும் போதே அப்படி அதிக கொள்ளளவு கொண்டதாக அமைத்திருப்பார்கள். இப்படி அதிக கொள்ளளவு கொண்ட படியை பிறரிடமிருந்து பொருள்களை அதாவது தானியம் போன்ற பொருள்களை வாங்குவதற்காக பயன்படுத்துவார்கள்.

அவர்களிடமே இன்னொரு படி இருக்கும், அது சாதாரண ஒரு படி அளவைவிட நூறு மில்லி குறைவாக கொள்ளளவு உடையதாக இருக்கும். இந்த குறைவான கொள்ளளவு உள்ள படியில் தான் பிறருக்கு தான் கொடுக்க வேண்டிய பொருள்களை அளந்து கொடுப்பதோடு வியாபாரம் செய்யும் போதும் பிறருக்கு தானியங்களை அளந்து கொடுப்பதுமாக இருந்தார்கள்.
தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கடினமாக வேலை வாங்குவதோடு தேவையான நேரத்தில் அவர்களுக்கு கூலியைக் கொடுக்காமலும், அப்படி கூலி கொடுத்தாலும் அந்த சிறிய படியில் அளந்து கொடுத்து மறைமுகமாக அவர்களுக்கு சேர வேண்டிய கூலியான தானியத்தை குறைத்து அளந்து கொடுத்து வந்தான்.

இது ஏதோ தான் திறமையாக செயல்படுவதாக எண்ணி, தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டும் இருந்தான். ஏழைக் கூலி தொழிலாளிகளும் அந்த பெரிய செல்வந்தனை பகைத்துக் கொண்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு கேடு வந்துவிடும் என்று எண்ணி தங்கள் விதியை நினைத்து அவனது கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டார்கள்.

ஆனால் தனது முதலாளிக்காக வியர்வை சிந்தி, வயல்களில் பாடுபட்டு உழைத்த உழைப்புக்கான நியாயமாக சேர வேண்டிய கூலியை தொழிலாளிக்கு கொடுக்காமல் குறைத்துக் கொடுத்தான். அந்த கூலித் தொழிலாளிகளின் மனவருத்தத்திற்கும் ஆற்றாமைக்கும் ஆளான அந்த முதலாளியின் செல்வம் அப்போது பெருகுவது போல தோன்றினாலும் பிற்காலத்தில் கூலியாட்களுக்கு கூலி குறைத்து கொடுத்த பாவத்திற்கு ஆட்பட்டு நாள்பட நாள்பட நிலவளமும் நீர்வளமும் இன்றி இறுதியில் இவனும், இவனது குடும்பமும் வறுமைக்குட்பட்டு நோய்வாய்ப்பட்டு ஏழ்மையில் சிக்கி உழன்று இவனும் கூலித் தொழிலாளியாகிவிட்டான்.

இவனது பொருட்பற்றின் காரணத்தால் பிறருக்கு நியாயமாக சேரவேண்டிய பொருளை குறைத்துக் கொடுத்ததால் இவன் பாவத்திற்கு ஆளாகி தன் வாழ்வை இழந்ததோடு இவனை நம்பி வந்த இவனது குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தி விட்டான்.
பிறரை வஞ்சித்து வாழ்ந்தவன் வறுமைக்கு உட்படுவான் என்பது இதன் சாரமாகும்.

ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த இருவர் அவரவர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் இருவரது நிலமும் ஒன்றையொன்று அடுத்தடுத்து இருந்தது. பின்புறம் உள்ள நிலத்துக்காரன் முன்புறமுள்ள நிலத்துக்காரனின் நிலத்தைக் கடந்து, தன் நிலத்திற்கு செல்லுமாறு நிலத்தின் அமைப்பு இருந்தது.

முன்புறமுள்ள நிலத்துக்காரரும் பின்புறமுள்ள நிலத்துக்காரரும் தமக்குள் ஒப்பந்தம் செய்து, பின்புறமுள்ள நிலத்துக்காரர் அறுவடைக்காலங்களில் தன் நிலம் வழியாக சென்று அறுவடை செய்து கொள்ளலாம் என்று பின்புறமுள்ள நிலத்துக்காரருக்கு சொந்தமான பாதை பாத்தியம் இல்லாதிருந்ததால் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

பின்புறமுள்ள நிலத்துக்காரர் பாதை வேண்டும், அதற்குரிய தொகையை கொடுத்து விடுகிறேன் என்று கேட்டாலும் முன்புறமுள்ள நிலத்துக்காரர் அதற்கு சம்மதிக்காமல் எனது நிலத்தின் பகுதியை பிரித்து விற்கமாட்டேன், வேண்டுமானால் ஒப்பந்தப்படி உங்களுக்கு தேவையான சமயங்களில் உதவி செய்கிறேன் என்றும் உனது நிலத்தை வேறொருவருக்கு விற்றால் இந்த ஒப்பந்தபடி நடக்க இயலாது என்று கூறிவிட்டான்.

முன்புறமுள்ள நிலத்துக்காரருக்கு பின்புறமுள்ள நிலத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாகவே மனதில் எண்ணிக்கொண்டிருந்தார். இப்படி உள்ள சூழ்நிலையில் பின்புறமுள்ள நிலத்துக்காரரின் மகளுக்கு திருமணம் பேசினார்கள். மகளின் திருமணத்திற்காக தனது நிலத்தை அவர் விற்க வேண்டி வந்தது. முன்புறமுள்ள நிலத்துக்காரரை அணுகி தனது நிலத்தை வாங்கி கொள்ளும்படியும் அதற்குரிய பணத்தை தந்தால் தனது மகள் திருமணத்தை நடத்த முடியுமென கூறினார்.
முன்புறமுள்ள நிலத்துக்காரரோ பின்புறமுள்ள நிலத்துக்காரரிடம் தக்கவிலை கூறாததால், பின்புறமுள்ள நிலத்துக்காரர் வேறு நபர்களிடம் நிலத்தை விலைபேசினார்.

மற்றவர்களோ ஒப்பந்தப்படி பாதை பாத்தியம் இல்லாததால் நாங்கள் அந்த நிலத்தை வாங்கினால் யாதொரு பயனும் இல்லை எனக்கூறி வாங்க மறுத்துவிட்டனர். இதனால் நிலத்தை விற்க முடியாமல் பழையபடி முன்புறமுள்ள நிலத்துக்காரரிடமே விலை பேசினார்.

ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை ஒரு லட்சம்தான் பெறும் என முன்புறமுள்ள நிலத்துக்காரர் திட்டவட்டமாக கூறிவிட்டார். வேறுயாரும் வாங்காத சூழ்நிலையினாலும் மகள் திருமணம் பேசியபடி நடக்க வேண்டுமென்ற கட்டாயத்தினாலும் பின்புறமுள்ள நிலத்துக்காரர் வேறுவழியின்றி முன்புறமுள்ள நிலத்துக்காரருக்கு விற்கவேண்டிய சூழ்நிலை வந்து முன்புறமுள்ள நிலத்துக்காரருக்கு விற்று தன் மகள் திருமணத்தை நடத்தினார்.

தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்று மகள் திருமணத்தை நடத்தி பின் மீதமுள்ள நிலங்களை வைத்து விவசாயம் செய்து வாழ்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவருக்கு சரியான விலை கிடைக்காததால் தன்னிடமுள்ள அனைத்து நிலங்களையும் விற்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் நிலத்தை முன்புறமுள்ள நிலத்துக்காரரிடம் குறைந்த விலைக்கு விற்று நிலத்தை பறிகொடுத்த பின், பிழைக்க வழியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்.

தனது பக்கத்து நிலத்துக்காரருக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் ஐந்து லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை ஒரு லட்சத்திற்கு வாங்கிய முன்புறமுள்ள நிலத்துக்காரர் அதை தன் திறமை என எண்ணினார்.
ஆனால் நாளடைவில் அவர் கடுமையான நோய்க்கு ஆளாகி அந்நோயை தீர்ப்பதற்காக தனது நிலங்களையெல்லாம் விற்று நோயை தீர்க்கப் போராடிய தோடு தனது குடும்பத்தினரையும் வறுமையில் வாடுமளவு செய்துவிட்டார்.


பிறருக்கு நியாயமாக சேர வேண்டிய பொருளை அநியாயமாக வஞ்சனை செய்து அபகரித்து கொள்பவனது வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறலால் பாதிப்பிற்கு உள்ளாகி கைப்பொருளை இழப்பதோடு கடுமையான விளைவுகளையும் உண்டாக்கிவிடும் என்பதையே மகான் ஒளவையார் அஃகம் சுருக்கேல் என்கிறார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment