Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI June 2012



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன ஆனி (ஜுன் - 2012)                                                     விலை: ரூ.10/-

நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ...........
2. திருக்குறள் - அமைச்சு அதிகாரத்திற்கு - குருநாதர் அருளுரை ……………
3. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் ................

அருளும் அடைவார் திண்ணம்
அப்பனே உள்ளம் துவண்டோர்
மருள் மாயை உழன்றவரும்
மகானாவர் அருள் ஞான நூலை

நூலை வணங்கி வாசிக்க
நிலைமாறி தெளிவு திடம் பெறுவர்
கலை எண்ணம் அருள் தேடல்
காண எண்ணம் கொண்டவரும்

கொண்டவரும் குறுமுனி அருள் பெற்ற
குடிலின் நூலை வணங்கிவர
உண்டாகும் ஏற்றம் மாற்றம்
உயரிய நிலைவார் அருளாசி
- மகான் பதஞ்சலியார் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள்செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன்
இரா.மாதவன்.

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.


திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
30.01.2003 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
திருக்குறள் அமைச்சு என்ற அதிகாரத்திற்கு
வழங்கிய அருளுரை

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்.

சித்தர்கள் போற்றித் தொகுப்பையும், ஔவையார் அருளிய விநாயகர் அகவலையும், ஆசான் வள்ளுவர் இயற்றிய திருக்குறளையும், ஆசான் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலையும் அன்பர்கள் பாராயணம் செய்தார்கள். அவர்களுக்கு, ஆசான் அகத்தீசர் ஆசி உண்டு.

அமைச்சு அதிகாரத்திற்கு முன் அரசியல் அதிகாரத்தில் மன்னர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்று திருக்குறளில் ஆசான் வள்ளுவர் கூறியுள்ளார்.

அதை நாம் ஞானத்துக்காக மாற்றி சில பாடல்களுக்கு விளக்கம் சொன்னோம். திருக்குறளுக்கு நான் முழுமையான, பூரணமான விளக்கம் தரவில்லை. மேலும் மன்னனுக்காக சொல்லப்பட்ட அறிவுரையை, ஆன்மீகம் ஆக்க முடியாது. ஆகவே அறத்துப்பாலுக்கு உரியது முப்பத்தெட்டு அதிகாரம் மட்டுமே. அறத்துப்பாலில் உள்ள முப்பத்தெட்டு அதிகாரத்துக்கு மட்டுமே ஞானக்கருத்துக்களை பேசினோம்.
ஆகவே அமைச்சியலில், அமைச்சருடைய செயல்பாடுகள், அவர் எப்படி இருக்க வேண்டுமென்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.

மனதை அரசனாகவும், அறிவை அமைச்சராகவும் அமைச்சியலை பேசலாம். இப்போது அரசன் எங்கு இருக்கிறான்? உடம்பு என்ற கோட்டையில் இருக்கிறான். உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன் இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான்.

ஆக அரசன் என்ற மனமும், அறிவு என்ற மந்திரியும் முன்செய்த வினையின் காரணமாக, தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நல்வினை இருந்தால் தெளிவான மனம், தெளிவான அறிவு, தெளிவான நல்ல சிந்தனை, நல்ல மனம் இவையெல்லாம் இருக்கும். நல்வினை இல்லாததால், மனம் என்ற அரசன் நெறிதவறி நடப்பான். அறிவு என்ற அமைச்சன் என்ன அறிவுரை சொன்னாலும், மனம் என்ற அரசன் கேட்கமாட்டான்.

மன்னன் தெளிந்த அறிவுடையவனாக இல்லையென்றால், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன், மனது என்ற மன்னனுக்கு போதிக்க வேண்டும். இப்ப இரண்டு பேருக்குமே தெளிவு இல்லை. நாம் முன்செய்த வினையின் காரணமாக, இந்த பிறவி எடுத்திருப்பதால் நம்முடைய மனமும், அறிவும் தெளிவில்லாமல் உள்ளது. ஆக இந்த இருவருக்கும் தெளிவு இல்லாவிட்டால் ஆன்மா என்ன செய்யும்?
மனம் என்ற மன்னன், மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்கள் வழியே செல்லுகிறான். அறிவு என்ற அமைச்சன் மனம் என்ற மன்னனைப் பார்த்து, “மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட திருடர்கள், கயவர்கள், வேடர்கள் இவர்களின் பேச்சைக்கேட்டு நீ அவர்களின் போக்கில் போகாதே” என்று அறிவு என்ற அமைச்சன் சொன்னாலும், மனம் என்ற மன்னன் கேட்க மாட்டான்.

மனம் என்ற மன்னன் பொறி, புலன் வழியே செல்கிறான், அங்கு அறிவுரை எடுபடவில்லை.

பொறி ஐந்து, புலன் ஐந்து ஆகும். கண் என்பது ஒரு பொறி. கண்களில் பார்த்து ஒரு பொருள் புலப்பட்டால் அது புலன். செவி என்பது பொறி. ஒரு செய்தியை, செவியால் சேகரிக்கப்பட்டு அதைப்பற்றி சிந்தித்தால் அது புலன். நாவு என்பது கருவி. சாப்பிட்ட பொருள்களின் சுவையை அறிந்தால் அது புலன். மூக்கு என்பது பொறி. மகிழம்பூ வாசனை, நெய் வாசனை, தக்காளிசாத வாசனை, சோம்பு வாசனை என வாசனைகளை இனம்பிரித்து காட்டும். இது புலன். மெய் என்பது உடம்பு. குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும் உள்ளதை உடம்பின் மூலமாக தொடு உணர்ச்சியால் அறியும் அனுபவத்தை புலன் என்று சொல்வார்கள்.

மனம் என்று சொல்லப்பட்ட மன்னன், அறிவு என்ற அமைச்சன் சொல்லுகின்ற கருத்தை கேட்காமல், பொறிபுலன் வழியே செல்கிறான். ஆக இவர்கள் இரண்டுபேரும் இப்படி முரண்பட்டு இருக்கிறார்கள். ஆக, மனது என்ற மன்னன், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் பேச்சை கேட்கவேண்டும்.

மனது என்ற மன்னன், புலன் வழியே செல்கிறான். புலன் வழியே, மனம் என்னும் மன்னன் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது. புலன்களை நெறிப்படுத்த முடியாது. மனம்தான் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். புலன் வழியே மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது.

இப்படி இருக்கும்போது உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையை அல்லது கோட்டையை எப்படி இவர்களால் காப்பாற்ற முடியும்? இப்படிப்பட்ட ஒரு நிலையில் உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியிலே ஒரு சத்தம் கேட்குது. இத்தனை நாளாக யாரும் கவனிக்கவில்லை. நரம்பும் தோலுமாக நோய்வாய்ப்பட்டு எலும்பு கூடாக உடம்பில் சதை இல்லாமல் தேவாங்கு மாதிரி கட்டிலில் பல ஆண்டுகள் கிடக்கும் ஒரு, நோயாளியிடமிருந்து சத்தம் வருது.

மனம் என்ற அரசன், அறிவு என்ற அமைச்சரைப் பார்த்து “இந்த உடம்பு என்னும் கோட்டைக்குள் ஒரு சத்தம் வருது” என்ன வென்று போய்ப்பார்ப்போம் என்று சொல்லி பார்க்கும்போது அந்த கட்டிலிலே, ஆன்மா நலிந்து மெலிந்து நொந்து கிடக்குது. இந்த ஆன்மாவுக்குரிய பலகோடி வினைகள் காரணமாக பலகோடி ஜென்மங்கள் எடுத்திருக்கு. பலகோடி ஜென்மங்களாக ஒவ்வொரு உடம்பிலும் ஆன்மா தங்குவதும், அதனால் உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கிறபாவம் உயிரைச் சார்ந்து விட்டது. இது மனம் என்கிற மன்னனுக்கும், அறிவு என்ற அமைச்சனுக்கும் தெரியாது.

தனி உடம்பு பாவம் செய்யாது. உயிரும் உடம்பும் செய்யக்கூடிய பாவம், உடம்புக்கு நலிவு வந்து, நோய் வந்து உடம்பு இறந்துவிடும். ஆனால் உயிருக்கு நலிவு இல்லை, நோயில்லை, பரிணாம வளர்ச்சி இல்லை. ஆனால் செய்த வினையை மட்டும் உயிர் வாங்கி வச்சுக்கும். இப்படி பலகோடி ஜென்மங்களில் பலகோடி உடம்பெடுத்து பாவம் செய்ததினாலே ஆன்மா நலிவுற்றுக் கிடக்கு. அதற்கு ஒரு வீர உணர்ச்சி இல்லை, தெம்பில்லை, நோய்வாய்ப்பட்டு கிடக்கு.

ஆன்மா, “நீங்க ரெண்டு பேரும் என்னை கவனிக்கவே இல்லை. நான் இந்த உடம்பிற்கு வந்து நாற்பத்தைந்து வருஷம் ஆச்சு. நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை நீங்க கவனிக்கல. அதனால நான் நலிந்து இருக்கிறேன்” என்று இப்படி ஆன்மா, மனதையும் அறிவையும் பார்த்து சொல்லுது.
மனம் என்ற மன்னன் அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து “இவருக்கு (நலிந்த ஆன்மா) என்ன செஞ்சா சரியா வரும்? என்ன வைத்தியம் செய்றது?” என்று கேட்டான்.

அதற்கு அந்த நலிந்த ஆன்மா “எனக்கு உங்களால் எதுவும் கொடுக்க முடியாது. என்னால் எதுவும் சாப்பிட முடியாது. எனக்கு அருளும், புண்ணியமும்தான் வேணும். நான் சாப்பிடும் உணவு அருளும், புண்ணியமும்தான். புண்ணியமும், அருளும் இருந்து கொடுத்தீங்கன்னா ரொம்ப தெம்பா இருப்பேன்” என்று ஆன்மா, மனம் என்ற மன்னனையும், அறிவு என்ற அமைச்சனையும் பார்த்து சொன்னது.

மனம் என்ற மன்னன், “நம்மிடம் உள்ள வசதிக்கு நாம என்ன புண்ணியம் செய்ய முடியும்” என்று அறிவு என்ற அமைச்சரிடம் கேட்கிறான்.
அதற்கு அறிவு என்ற அமைச்சன், “இப்ப இருக்கிற மூலதனத்தைக் கொண்டு நாம எந்த புண்ணியத்தையும் செய்ய முடியாது” என்று சொல்லுகிறான்.

“இருக்கக்கூடிய பொருளைக் கொண்டு புண்ணியத்தை செய்து ஆன்மாவுக்கு உணவு தருவோம். புண்ணியமும் அருள் பலமும்தான் ஆன்மாவுக்கு உணவு. அருள்பலம் ஆன்மாவுக்கு நல்ல உணர்ச்சியைத் தரும். அந்த அருளை எப்படி சேகரிப்பது என்று” மனம் என்னும் மன்னன், அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து கேட்கிறான்.
அப்ப ஒரு சத்தம் வருகிறது “என் திருவடியைப் பற்றுங்கள்” என்று உள்ளே இருந்து ஒரு சத்தம் வருகிறது.

"அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும், ஆன்மாவும் இருக்கும்போது, என் திருவடியைப் பற்றுங்கள் என்று உள்ளே ஒரு ஓசை கேட்கின்றது” இந்த மூவரும் இவ்வாறு சொல்வது யார்? என்று பார்க்கும்போது அகத்திய முனிவர் இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.

“அருள் பெறுவதற்கு வேறு இடம் தேவை இல்லை. என் திருவடியைப் பற்றுங்கள்” என்றார் அகத்திய முனிவர். மன்னன் என்ற மனம், அன்னதானம் செய்தது, அகத்தீசன் திருவடியை பூஜை செய்தது. இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.

பிறகு அறிவுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கும் அகத்தீசர் போதிக்கிறார். அன்னதானம் செய்வது நல்லதுதான் என்று கூறி, மேலும் “என் திருவடியைப் பற்றுங்கள். என் திருவடியைப் பற்றினால் உங்களுக்கு நான் அருள் செய்வேன்'' என்றார்.

"ஆன்மா நலிந்துவிட்டால், ஆன்மா கோட்டையை (உடம்பை) விட்டு போய்விட்டால், ஆன்மா இல்லாத உடம்பிற்குள், மன்னனாகிய உனக்கும் (மனம்) வேலையில்லை. அமைச்சனாகிய அறிவுக்கும் வேலை இல்லை. ஆசானாகிய எனக்கும் இங்கு வேலை இல்லை” என்றார்.

இதைக்கேட்ட மனம் என்ற மன்னன், ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறார். மகான் அகத்தீசரை பூஜை செய்யசெய்ய, அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் தெளிவு அடைகிறான். இருவரும் பூஜை செய்கிறார்கள். மனம் என்று சொல்லப்பட்ட மன்னனும், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சனும் சேர்ந்து ஆசான் திருவடியைப் பூஜை செய்கிறார்கள்.

மனமும் அறிவும் சேர்ந்து, ஆசான் திருவடியை பூஜை செய்கிறார்கள். பூஜை செய்ய பூஜை செய்ய அறிவும் மனமும் சிறப்படையும், ஆன்மாவும் ஆக்கம் பெற்றது. ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஒருவர் எடுத்துச் சொல்ல வேண்டும். மனம் என்ற மன்னன் மடையனாக இருந்தால், அறிவு என்ற அமைச்சனால் ஒன்றும் சொல்ல முடியாது.

மன்னனின் (மனதின்) லோபித்தனத்தைக் கண்டு அமைச்சர் (அறிவு) வருந்துவார். ஆக ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா நலிவடைந்தால் இந்தக் கூட்டைவிட்டு போய்விடும். கூட்டை விட்டு போகும் முன்னே “கூடலி முன்னே கதி கொள்ள வேண்டும்” என்பார்.

இந்த உடம்பு அழிவதற்கு முன்னே ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடுவதற்கு அன்னதானம்தான் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதற்கு அறிவு வேண்டும். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும். அதேசமயம் அருளையும் தருவார். அருள் பெருகினால் அறிவு சிறப்பாக வேலை செய்யும், லோபித்தனம் இருக்காது, சீலமும் பெருகும்.

ஒவ்வொருவருடைய உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன் இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான். ஆன்மாவும் இருக்கு. மூவரும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஞானிகளை வணங்கினால் நமக்கு உணர்த்துவார்கள்.

இப்ப நாம அகத்தீசாய நம, அகத்தீசாய நம, அகத்தீசாய நம என்று சொல்லுகிறோம். தினமும் அகத்தீசனை வணங்குங்கள், அகத்தீசனை வணங்குங்கள் என்று பேசுறோம். ஏனயா வணங்கனும்? என்று கேட்டால் ஆன்மா நலிந்து கிடக்கு. ஆன்மா நலிந்தால் இந்த கோட்டையிலே (உடம்பிலே) நீடித்து இருக்க முடியாது. இந்தக் கோட்டையை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஆன்மா, ஆக்கம் பெற வேண்டும். அதுக்குத்தான் அகத்தீசனை வணங்க சொல்றோம்.

ஆன்மா ஆக்கம் பெறாமல், உடம்பு மட்டும் ஆக்கம் பெற்று என்ன பயன்? இந்த உடம்பு நல்ல திடமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா உரம்பெற்று இருக்க வேண்டும்.

ஆன்மா பலகோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. ஆனால் உடம்போ அவரவருக்கும் முப்பது வருஷம், நாற்பது வருஷம், ஐம்பது வருஷம், அறுபது வருஷம், எழுபது வருஷம், எண்பது வருஷம் போல ஒரு குறுகிய காலத்தில் வந்தது இந்த உடம்பு. ஆக குறுகிய காலத்தில் வந்த, இந்த உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையை ஒருவர் சொல்ல வேண்டும்.

இயல்பாக எதையும் அறிவுக்கு உணர்த்த முடியாது. நல்வினை இருந்தால், ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக் கொள்ள வேண்டுமென்று அறிவுக்கு யாரேனும் ஒருவர் உபதேசிப்பார்கள்.
ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ளுங்கள். இதற்கு என்ன உபாயம் என்றால், முற்றுப்பெற்றவன் திருவடியை பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும். இதுபோன்ற செயல்களால்தான் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு வேலை செய்யும். மனமென்ற மன்னனும் தெளிவடைவான். இதையே மகான் திருவள்ளுவர்,

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231.

ஈதல் - கொடுத்தல், இசைபட வாழ்தல் - புகழ்பட வாழ்தல்.
ஊதியம் - அன்னதானம் செய்வதால் ஆன்மாவுக்கு ஊதியம் வரும், புகழும் உண்டாகும். ஆன்மாவுக்கு ஆன்ம இலாபம் உண்டாகும். ஆன்மாவுக்கு ஆக்கம் வரும்.
அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும்.

ஏன் உயிர்க்கு ஆக்கம் தேடிக் கொள்ள வேண்டும். உடல் மாசு காரணமாக உயிர்மாசுபட்டு இருக்கு. இந்த காமதேகத்தின் காரணமாக இந்த தேகத்தில் உள்ள உயிருக்கும் மாசு இருக்கும்.
உயிருக்கு மாசு வந்தால் அறிவு மங்கிவிடும். மனம் தெளிவடையாது. ஞானிகள் மீது செலுத்தும் பக்தியாலும், தானதவம் செய்வதாலும் உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ளலாம்.

இந்த உயிர் ஆக்கம் பெறபெற மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் தெளிவடைவார்கள். இதனால், ஆன்மா தெளிவு அடைய அடைய உடம்பைப்பற்றிய உணர்வு வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், உடம்பை காப்பாற்றிக் கொள்வது நல்லது என்ற உணர்வு வரும்.

அப்ப உடம்பை எப்படி காப்பாற்றிக் கொள்வது? அசைவ உணவு கொடுத்து உடம்பை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. உடம்புக்கு சைவ உணவைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும். உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும், என்ற எச்சரிக்கை உணர்வு வரும்.

உயிர் என்பது மூச்சுக்காற்று இயக்கம். மூச்சுக்காற்று வந்து போய்கிட்டு இருக்கும். உடம்பு என்ற கோட்டை அல்லது அரண்மனை, திடமாக இருந்தால்தான் மூச்சுக்காற்று இயல்பாக வந்துபோகும். உடம்பு என்ற கோட்டை நலிந்தால் நிச்சயமாக வந்து போகின்ற காற்று நின்றுவிடும். வந்து போகின்ற காற்று நின்றுவிட்டால், ஆன்மா உடம்பை விட்டு பிரிந்துவிடும்.

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்று அது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 36.
என்பார் ஆசான் திருவள்ளுவர்.

ஆன்மாவுக்கு முதிர்ச்சியில்லை, பரிணாம வளர்ச்சியில்லை, நரைதிரை மூப்பு இல்லை, ஈளை இருமல் இல்லை. ஆனால் அது தங்குகின்ற உடம்பு என்ற வீட்டுக்கு நரைதிரை உண்டு, ஈளை இருமல் உண்டு. ஆன்மாவுக்கு நோய் கிடையாது. உடம்புக்குத்தான் நோய் உண்டு.

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க - பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. ஏனென்றால் எந்த விநாடியும் உயிர் போகலாம்.
மேலே இருந்து வந்த இந்த ஆன்மா, ஒன்பது வாசல் கொண்ட அரண்மனை என்ற இந்த உடம்பில் தங்கி உள்ளது. ஆன்மாவின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கம். இந்த மூச்சுக்காற்று உடம்பிலுள்ள, ஒன்பது வாசல் வழியே எப்போது வேண்டுமானாலும் போய்விடும்.

கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று ஆக ஏழு வாசல், கண்டத்துக்கு மேலே உள்ளது. கண்டத்துக்கு கீழே மல ஜல துவாரம் ஆக இரண்டு. ஆக மொத்தம் ஒன்பது வாசல், இந்த உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனைக்கு ஒன்பது வாசல் உள்ளது. இதை அடைப்பதற்கு ஒரு கல் உள்ளது. அந்த ஒன்பது வாசலை ஒரு மந்திரத்தால் அடைக்கலாம். இதை ஔவையார்,

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
- மகான் ஔவையார் - விநாயகர் அகவல் - வரி எண் 34.

என்பார்.

அப்ப ஒன்பது வாசலை, அடைக்கும் மந்திரம் ஒன்று உண்டு என்பார் ஔவையார். அந்த மந்திரம் மூச்சுக்காற்று இலயப்படுதல் ஆகும். இதை மகான் திருவள்ளுவர்,

வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் - 38.
என்கிறார்.

நாட்களை வீணாக்கக் கூடாது. நாட்களை வீணாக்காமல் நல்லபடி
செயல்படுவதை, “வாழ்நாள் வழியடைக்கும் கல்'” என்பார். இங்கே மற்ற உலோகங்களைக் குறிப்பிடாமல் ஏன் கல் என்கிறார், என்றால் மற்ற உலோகங்கள் நாட்பட நாட்பட வீணாய் போய்விடும். ஆனால் இயற்கையாக உள்ள கல் அவ்வித மாற்றத்திற்கு உள்ளாகாது. எனவே உதாரணமாக மாறாத நிலைக்கு கல் என்றார்.

ஒன்பது வாசல் உள்ள உடம்பில் மூக்கு வழியாக வந்துபோகின்ற காற்றை, ஆசான் துணைக்கொண்டு ரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் செலுத்திவிட்டால், இந்த ஒன்பது வாசலும் அடைபட்டு போய்விடும். இந்தக்காற்று பத்தாம் வாசல் வழியே செல்லும். காற்றானது பத்தாம் வாசல் வழியே சென்று அடங்கும் வரையில் இந்த ஒன்பது வாசல் உள்ள உடம்பை (வீட்டை) பாதுகாக்க வேண்டும்.

இந்த உடம்பு நல்லபடியாக இருக்கும்போதே, நல்ல காரியங்களை விரைந்து செய்து கொள்ள வேண்டும். இந்த உடம்பு நலியும். இந்த உடம்புக்கு நரை, திரை, மூப்பு வந்து வீணாய் போய்விடும். அதற்குள் இந்த உடம்பை நமக்கு குறையில்லாத துணையாக மாற்ற வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர்,

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்று அது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 36.
என்பார்.

மனம் என்ற மன்னன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்கள் வழியே செல்லத்தான் நினைப்பான். மனதிற்கும், அறிவிற்கும் போராட்டம் நடக்கும். மனம், அறிவு சொன்னபடி நடக்காது. மனதை முறைப்படுத்த வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், பொறிபுலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
பொறிபுலன்களை கட்டுப்படுத்துவது சின்ன விஷயம் இல்லை. இதற்கு ஞானிகளின் ஆசி இருக்க வேண்டும்.

மூச்சுக்காற்று இயக்கம் இருந்தால், ஆன்மா உள்ளது என்று அர்த்தம். ஒருவன், நடமாடிக் கொண்டு இருக்கிறான் என்றால், அங்கே மூச்சுக்காற்று இயக்கம் இருக்கிறது என்று அர்த்தம், அதை அடைக்க வேண்டும். பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் மூச்சுக்காற்று நுழையும் வரையில் அதை நாம் அடைக்க முடியாது.
அந்த இடத்தில் ஒரு கல் வைத்து அமைத்து இருக்கிறான். அப்ப மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும். மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்தால் மட்டும் போதுமா? அதை அடைக்கத் தெரிய வேண்டும் அல்லவா? இடதுபக்கம் வருகின்ற காற்றையும் (இடகலை), வலதுபக்கம் வருகின்ற காற்றையும் (பிங்கலை) சேர்த்து ஆசான் துணைகொண்டு புருவமத்தியில் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு செலுத்திவிட்டால் “வாழ்நாள் வழி” அடைத்துவிட்டது என்று அர்த்தம்.

அப்ப மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும், இதற்கு துணை இருக்க வேண்டும். உடம்பும் ஆன்மாவும் திடமாக இருக்க வேண்டும்.
ஆன்மா மாசுபட்டால், ஆன்மா நலிந்தால், ஆன்மா மெலிந்தால், அறிவு மாசுபட்டுவிடும், அறிவு மங்கிவிடும். மனமும் தெளிவடையாது. ஆன்மாவிற்கு ஆக்கம் தருவது பக்தியும், புண்ணியமும்தான். அதை விரைவாக செய்து கொள்ள வேண்டும் என்பது ஞானிகளின் கருத்து. நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன், இன்று இல்லை. இப்படித்தான் வாழ்க்கை அமைந்துள்ளது என்பார் ஆசான் திருவள்ளுவர். இதை,

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.
என்பார்.

நெருநல் உளன் ஒருவன் - நேற்று நல்லபடியாக உள்ள ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகம். நேற்று நல்லபடியா, திடகாத்திரமாக இருந்தார், இன்று இல்லை, என்று ஒருமாசம் இரண்டு மாசம் பேசுவார்கள். அப்புறம் மறந்தே விடுவார்கள்.
இப்படி கோடானுகோடி மக்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். புகழ் வாய்ந்தவர்கள் என்றால், அவர்களின் புகழ் பத்து வருஷங்களுக்கு இருக்கும். சிலபேருக்கு நூறு வருஷங்கள் வரைக்கும் அவரோட புகழ் இருக்கலாம். இதை ஆசான் திருவள்ளுவர்,

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 234.

உலகமெல்லாம் புகழ்பட ஒருவர் வாழ்ந்தால், அவர்கள் தான் பெருமைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். அதற்குள் நிலையான காரியங்களை செய்துகொள்ள வேண்டும், என்பார் ஆசான் திருவள்ளுவர். பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் அந்தக்கல்லை வைத்து வழியை அடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு ஞானிகள் தான் அருள்செய்ய வேண்டும். மேலும் ஆசான் திருவள்ளுவர்,

நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 335.

நாச்செற்று - நாவடங்கி, விக்குள் மேல் - சிலருக்கு ஆன்மா பிரியும்போது விக்கல் வரும். மூலாதாரத்திலிருந்து அந்த ஆவி பிரியும்போது விக்கல் வரும். எந்த மனிதனும் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நம்மை நோக்கி எமன் வந்து கொண்டே இருக்கிறான். அறியாமையாகவும், வறுமையாகவும், பகையாகவும், பல்வேறு பிரச்சனைகளாகவும் எமன் வருகிறான்.
கோபம், பொறாமை, வஞ்சனை போன்ற படைகள் நம்மை எதிர்த்து தாக்க வந்துகிட்டு இருக்கு. நரை, திரை, மூப்பு, ஈளை, இருமல் போன்ற பிரச்சனைகளும் நம்மை நோக்கி வருகிறது

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்களும் நமக்கு பகைவன் தான். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்பட்ட கரணங்களும் நமக்கு பகைவன்தான்.
பொறி ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு ஆக கருவிகள் பதினான்கு. தத்துவம் தொண்ணூற்றாறில் இந்த பதினான்கு கருவிகள்தான் முக்கியம். எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளில் பத்து நாடி முக்கியமானது. அந்த பத்து நாடியிலும் ஒரு நாடிதான் மிக முக்கியமானது என்று, ஒளவையார் கூறுவார்.

இந்த பதினான்கு கருவிகளும் நமக்கு எமனாக உள்ளது. தத்துவங்களெல்லாம் நம்முடன் ஒத்துழைக்காது. தேகம் காமதேகம் என்பதாலும், தேகத்தில் கசடு உள்ளதாலும், பொறிபுலன்கள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை.

ஞானிகள் தேகபந்தம், காமவிகாரம் ஆகியவற்றை தலைவன் துணைகொண்டு நீக்கி விடுகிறார்கள். காமதேகம் நீங்கினால், ஆன்மா தெளிவடையும். ஆன்மா தெளிவடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் சிந்தை சிறப்பாக செயல்படும்.
அறிவு, சிந்தை என்ற மனிதனின் எண்ணங்களுக்கு தெளிவை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதனால் சிந்தை சிறப்பாக செயல்படும்.

அறிவே அமைச்சன், மனமே மன்னன். அறிவு, மனம், ஆன்மா இந்த மூன்று பேரும் சேர்ந்தே, இந்த உடம்பை காப்பாற்ற வேண்டும். நாம் உலகத்தை காப்பாற்றுவதை பிறகு பார்த்துக்கலாம். முதலில் நமது உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆக நற்காரியத்தை விரைந்து செய்து கொள்ள வேண்டும். நற்காரியம் செய்து கொண்டால்தான் ஆன்மஜெயம் பெறலாம்.

நாம் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நம்முடைய வினைக்கு தகுந்தவாறுதான் நம் அறிவு வேலை செய்யும்.

முன்செய்த பாவம் மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை இருக்காது. அங்கே கீழ்த்தரமான புத்திதான் இருக்கும். முன் செய்த பாவம்தான், பொல்லாத வறுமையாக இருக்கு. தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குதல், தேவையில்லாத பகையை உருவாக்குதல், தீர்க்கமுடியாத நோய், ஆழ்ந்து சிந்திக்க முடியாத மனநிலை போன்றவைகள் முன்செய்த பாவத்தால் வருபவை.
நல்வினை மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை, தெளிந்த அறிவு, திடமான உடம்பு, எதைப்பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காத பண்புகள் எல்லாம் இருக்கும். அங்கு சினம் இருக்காது. நல்வினை மிகுந்து இருந்தால் கொடிய கோபம், நம்மை அடிமைப்படுத்த முடியாது. நல்வினை மிகுந்திருந்தால் பொறாமை உணர்வு இருக்காது.
நமக்கு எமனாக இருப்பது கோபமும், பொறாமையும், பேராசையும்தான். பொல்லாத காமதேகமே நமக்கு எமனாக இருக்கு. தீவினை மிகுந்திருந்தால், பகை, பிரச்சினைகள் இருக்கும், மனதில் நிம்மதி இருக்காது. இவையெல்லாம் தேகத்தின் குற்றமல்ல.

இந்த தேகத்தின் இயல்பை அறிந்து, அது கெடுவதற்கு முன்பே, அதற்கு நரை, திரை, மூப்பு வருவதற்கு முன்னே , ஈளை, இருமல் வருவதற்கு முன்பே, நாம் இந்த தேகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
பூஜை செய்தால்தான் உடம்பை காப்பாற்றிக் கொள்கிற பக்குவம் வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்கிறவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள அறிய வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும். இதை மகான் இராமதேவர், நீ மூச்சுக்காற்றோடு பழக வேண்டுமென்பார். பிராணாயாமம் அல்லது யோகாப்பியாசம் செய்வதற்கு முன்னே மூச்சுக்காற்றின் இயக்கத்தைப் பற்றியும், அது என்ன செய்யும் என்பதைப்பற்றியும் ஆசான் இராமதேவர் சொல்லியிருக்கிறார்.
ஆன்மஜெயம் பெறுவதற்கு ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் அறிவை தெளிவடையச் செய்யும். அப்ப ஆன்மாவுக்கு ஆக்கம் தர வேண்டும். ஆன்மாவுக்கு அருள்தர வேண்டும்.
ஆன்மா ஆக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் தெளிவான அறிவாக இருக்கு. அதே மனமாக இருக்கு. அப்ப ஆன்மாவுக்கு தெளிவை உண்டாக்க வேண்டும்.

ஆன்மா, காமம் என்ற இருட்டிலும், நரகம் என்று சொல்லப்பட்ட இந்த உடம்பிலும் இருக்கு. எனவே அந்த ஆன்மாவுக்கு ஆக்கம்தர வேண்டும். ஆன்மாவுக்கு ஊக்கம் தரவேண்டும். ஆன்மா தெளிவடைய வேண்டும். ஆன்மாவிற்கு ஒளிதர வேண்டும்.

எல்லா ஞானிகளும் சிறந்த பக்தியாலும், விடா முயற்சியாலும் ஆன்மஜெயம் பெற்றார்கள். அவர்கள் ஆன்ம ஒளி பெற்றவர்கள், ஆன்ம ஒளியைக் கண்டவர்கள், ஆன்ம ஜோதியைக் கண்டவர்கள். அத்தகைய பெருமை மிகுந்த ஞானிகளின் திருவடியைப் பற்றும் போது ஆன்மா தெளிவடையும், ஆன்மா ஒளி பெறும். இதை ஆன்மஜோதி என்பார்கள்.
நாம் ஞானிகளை வணங்குகிறோம். வணங்கவணங்க, பூஜைசெய்ய, பூஜைசெய்ய, நாமஜெபம் செய்யசெய்ய, ஆன்மாவினுடைய மாசு தீரும்.
பக்தி செய்யசெய்ய, புண்ணியம் செய்யசெய்ய இருட்டில் கிடக்கிற ஆன்மா வெளிச்சத்துக்கு வரும். ஆன்மாவிற்கு சிறிது வெளிச்சம் கிடைத்தால் அறிவு தெளிவடையும்.

ஆன்மாதான் அறிவாகவும் இருக்கு, மனமாகவும் இருக்கு. புண்ணியம், பக்தி என்ற ஒளியை இருட்டில் கிடக்கிற ஆன்மாவுக்கு தருகிறோம். இதனால் நரகத்திலும், இருட்டிலும் கிடக்கிற ஆன்மா தெளிவடைகிறது. ஆன்மா தெளிவு அடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் ஆன்மாவைப்பற்றி அறியும். ஆன்மாவுக்கு ஆக்கம் தந்தால், அறிவு தெளிவடையும். தெளிவடைந்த உயிர், தெளிவடைந்த அறிவு ஆன்மாவைப்பற்றி சிந்திக்கும்.

தெளிவடைந்த அறிவு ஆன்மாவைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தால், உடம்பின் இயல்பைப்பற்றி தானே அறியுமென்று சொல்லவும் வேண்டுமோ! நிலையில்லாத ஒரு உடம்பை பெற்றிருக்கிறோம். உடம்பு திடமாக இருக்கும்போதே, ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவு வரும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடும்போது ஆன்மா மூச்சுக்காற்றை மையமாக கொண்டிருக்கிறதென்று அறியலாம்.
ஆன்மாவே மனமாகவும், அறிவாகவும் இருக்கிறது. அதுவே தெளிவான சிந்தனையாகவும், அதன் காரணமாகவே பொறிபுலன் இயக்கமாகவும் இருக்கிறது. அதுவே அந்தகரணங்களின் இயக்கமாகவும் இருக்கும்.
ஆன்மாவின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாக உள்ளது. ஆன்ம இயக்கமே அறிவாக இருக்குது. மூச்சுக்காற்றின் இயக்கமே மனமாக இருக்குது. ஆன்மாவுக்கு வெளிச்சம் தந்தால், அறிவு வெளிச்சமாக இருக்கும்,

மனதும் செம்மைப்படும். இதற்கு என்ன உபாயம்? வாசிக்காற்று எனப்படும் மூச்சுக்காற்றோடு பழக வேண்டும். இதைத்தான் ஆசான் இராமதேவர் கூறியிருக்கிறார். சைவ உணவை உண்ண வேண்டும். தவத்திற்கு இடையூறாக இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.
நமக்கு ஒரு நாளைக்கு இருபத்தோராயிரத்தி அறுநூறு முறை சுவாசம் வந்து போய்கிட்டு இருக்கும். அந்தக்காற்றை ஒருகல் வைத்து, வந்து போக முடியாதபடி அடைக்க வேண்டும். ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி - ஒன்பது வாசலும் அடைபட்டு போகும்.
வந்து போகின்ற மூச்சுக்காற்றே வாழ்நாளாக இருக்கிறது. அந்த மூச்சுக்காற்றை அடக்கி விட்டோம். மூச்சுக்காற்று வெளியில் போனால்தானே மரணம்? உள்ளே தங்கிவிட்டால் வழி அடைத்துவிட்டது என்று பொருள். ஒன்பது வாசலும் அடைபட்டு போகும். இதுபோன்ற ஒரு பயிற்சி செய்ய, மகான் இராமதேவர் சொல்லுகிறார்.

என் திருவடியைப் பற்று என்று மகான் இராமதேவர் சொல்லமாட்டார். ஆனால் ஆசான், நான் சொல்கிறேன் மகான் இராமதேவர் திருவடியைப் பற்றுங்கள். மகான் இராமதேவர் திருவடியைப் பற்றுங்கள், அவர் உங்களுக்கு அருள் செய்வார். ஆன்மஜெயம் பெற்றவர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆன்மஜெயம் என்றால், நம் உடம்பில் வந்துபோகின்ற மூச்சுக்காற்றை, ஓர் இடத்தில் வைத்து அடைத்துவிட்டால், அந்தக்காற்று வெளியே வராது. இப்படி செய்பவர்களை ஆன்மஜெயம் பெற்றுவிட்டார்கள் என்பார்கள்.
ஆன்மா என்பது மூச்சுக்காற்று. மூச்சுக்காற்று வந்து போகின்ற பாதை அடைபட்டு விட்டது. அந்தக்காற்று மூலாதாரத்தில் தங்கி, குண்டலினி சக்தியை உருவாக்கி தேகத்தில் இருக்கிற கசடை நீக்கும்.
தேகம் அசுத்த தேகம். இந்த தேகத்தில் கசடு உள்ளது. கசடு இருந்தால் அறிவு வேலை செய்யாது. அசுத்த தேகத்தில் ஆன்மா இருக்கு. ஆன்மா அறிவாகவும், மனமாகவும் இருக்கு. தேகக்கசடு நீங்கினால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால், ஆன்மாவைப்பற்றி அறியலாம். ஆன்மாவைப்பற்றி அறிந்தால் உடம்பைப்பற்றி அறியலாம். ஞானிகள் ஆசான் திருவடியை பூஜை செய்கிறார்கள், பக்தி செலுத்துகிறார்கள், புண்ணியம் செய்கிறார்கள். இவர்களின் பூஜையைக்கண்டு மகான்கள் அருள் செய்கிறார்கள்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
- திருமந்திரம் - சமாதிக்கிரியை - கவி எண் 1913.

அந்தம் என்பது முடிவு. ஆதி என்பது தொடக்கம். ஞானிகள் தொடக்கமும், முடிவும் இல்லாதவர்கள், மரணமில்லாத பெருவாழ்வு பெற்றவர்கள், வாசி வசப்பட்டவர்கள், வந்து போகின்ற காற்றை அடைத்தவர்கள், அதை புருவ மத்தியில் ஒடுக்கியவர்கள், அந்தக்காற்று புருவமத்தியில் ஒடுங்கியதால் ஆன்மஜெயம் பெற்றவர்கள்.
அப்பேர்ப்பட்ட ஞானிகளை வணங்குகிறான், பூஜை செய்கிறான், அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று பூஜையில் கேட்கிறான்.

ஞானம் என்பது உடம்பைப் பற்றி அறிதல், உயிரைப்பற்றி அறிதல், மனதைப்பற்றி அறிதல், அறிவைப்பற்றி அறிதல், கருவி கரணங்களைப் பற்றி அறிதல் ஆகும்.
அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று ஆசானைக் கேட்கிறான், காலை மாலை கேட்கிறான், இரண்டு கைகளை கூப்பி விழுந்து வணங்கி கேட்கிறான், அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேன் செய்த குற்றங்களை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் மனம் இரங்கி அருள் செய்கிறவரை தினமும் கேட்கிறான்.
ஒரு பக்கம் புண்ணியம் செய்கிறான், ஒரு பக்கம் சைவஉணவை மேற்கொள்கிறான். பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்கிறான். உயிர்க்கொலை செய்யவில்லை. சுத்த சைவ உணவாக உண்கிறான். தினம்தினம் தியானம் செய்கிறான். அன்னதானம் செய்கிறான். இதையெல்லாம் பார்த்து ஆசான் மகிழ்ச்சி அடைகிறார். புண்ணியம் பெருகிவிட்டது. பூஜையும் புண்ணியமும் செய்யசெய்ய பாவங்கள் தீரும்.

நம்முடைய பாவம் தீரத்தீர வறுமை இருக்காது. பாவம் தீரத்தீர நோய் இருக்காது. பாவம் தீரத்தீர நல்ல சிந்தனை வரும். பாவம் தீரத்தீர பொறாமை இருக்காது. பாவம் தீரத்தீர சினம் இருக்காது. பாவம் தீரத்தீர பேராசை இருக்காது. பாவம் தீரத்தீர பழிவாங்கும் உணர்ச்சி இருக்காது. பாவம் தீரத்தீர நானென்ற கர்வம் இருக்காது. பாவம் தீரத்தீர பண்பும், பக்குவமும் வரும். அப்ப பாவம்தான் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது.

பூஜை செய்ய, பூஜை செய்ய உயர்ந்த பண்புகள் தானே வரும், பாவம் தீரும். பாவம் தீர்ந்தால் நித்தியம் எது? அநித்தியம் எது? அழியக்கூடியது எது? அழியாதது எது? என்று உணர்த்தப்படும். பாவம் தீர்ந்தால் அறிவு சிறப்படையும், சிறப்பான அறிவும் வரும், அறிவுக்கு ஒளி கிடைக்கும்.

அறிவுக்கு ஒளி வந்தால் ஆன்மாவுக்கு ஒளி வந்ததாக அர்த்தம். ஆன்மாவுக்கு ஒளி வந்தால், அறிவுக்கு ஒளி வந்ததாக அர்த்தம். அப்ப தெளிவான மனம் வந்தது. இத்தகைய ஆன்மஜெயம் பெற்ற ஞானிகளை வணங்குகிறோம், பூஜை செய்கிறோம். திருமூலதேவா, காலாங்கிநாதா, போகதேவா, இராமலிங்கசுவாமிகளே, கருவூர் முனிவர் ஐயா, மாணிக்கவாசகர் ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா, திருநாவுக்கரசர் ஐயா, பதஞ்சலிமுனிவர் ஐயா, அருணகிரிநாதர் ஐயா இப்படி ஞானிகளை அழைக்கிறோம்.

இப்படி எல்லாம் கூப்பிட்டு நீங்கள் பெற்ற ஆன்மஜெயத்தை அடியேனும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மஜெயம் பெற்றுக்கொள்ள அடியேன் என்ன செய்ய வேண்டும்? ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ளவும், ஆன்மலாபம் பெறவும், அடியேன் என்ன செய்ய வேண்டுமென்று ஞானிகளை கேட்க வேண்டும்.

ஆன்ம லாபம் பெறுவதற்கு, பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்ய வேண்டும். பிறஉயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்தால் ஆன்மாவுக்கு லாபம் கிடைக்கும். லாபம் என்பது ஆக்கம், ஊதியம் எனப்படும்.
ஆன்மாவுக்கு ஆதாயத்தை தேடிக்கொண்டோம், ஊதியத்தை தேடிக்கொண்டோம். ஆதாயம் பெற்ற ஆன்மா தெளிவடைந்ததால் அறிவு தெளிவடைந்தது. அறிவு தெளிவடைந்ததால் மனம் செம்மைப்பட்டது. புண்ணியத்தாலன்றி மனம் செம்மைப்படாது.

அப்ப அமைச்சன் என்று சொல்லப்பட்ட அறிவும், மனம் என்று சொல்லப்பட்ட மன்னனும், ஆன்மாவும் இந்த உடம்பைவிட்டு போவதற்கு முன்பே, இந்த உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே உபதேசமும் ஆகும். இதுவே அறிவுரையும் ஆகும்.

எமன் நம்மை நோக்கி பகைவனாக, பொறாமையாக, வஞ்சனையாக, பேராசையாக, கொடுமையாக, வறுமையாக, நோயாக, ஈளை இருமலாக வந்து கொண்டிருக்கிறான். புண்ணியம் என்ற வாளாலும், அருள் என்ற வேலாலும் எமனை தாக்க வேண்டும். இல்லையென்றால் வீழ்த்த முடியாது.
எமனை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்? ஞானிகளை விடாது வணங்க வேண்டும்.

ஞானிகளை வணங்குவதற்கு தனியாக ரூம் போட்டு வணங்கனுமா என்ன? அது வெட்டிவேலை. வெளியூர் செல்லும்போது அகத்தீஸ்வரா, நந்தீசா, திருமூலதேவா, இராமலிங்கசுவாமிகளே, மாணிக்கவாசகர் ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா, திருநாவுக்கரசர் ஐயா என்று மனதிற்குள்ளேயே சொல்லி, இந்த பாவியையும் ஒரு பார்வை பார் ஐயா! என்று வேண்டினால் போதும்.

இப்படி பஸ்ஸில் போகும் போதோ, குளிக்கும் போதோ, சாப்பிடும் போதோ அல்லது தூக்கம் வரும்வரை ஞானிகள் நாமத்தை மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஞானிகள் அத்தனை பேருமே, ஆன்மஜெயம் பெற்றவர்கள், வாசி வசப்பட்டவர்கள்.

இவர்களெல்லாம் இந்த உயிரை உடம்புக்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டவர்கள்.
ஒன்பது வாசல் உள்ள இந்த உடம்புக்குள் ஆன்மாவை பத்தாம் வாசலுக்குள் செலுத்துகின்ற பக்குவம் ஒருவனுக்கு வந்தால், அவனே முழு மனிதன், அவனே மாவீரன்.

பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட இடத்தில் மூச்சுக்காற்று தங்கிவிட்டால், ஈளை, இருமல் இருக்காது. அது கபத்தை அறுத்துவிடும். நரை, திரை, மூப்பையும் அறுத்துவிடும். நல்ல தெளிவான சிந்தனை வரும். அப்ப வந்து போகின்ற காற்றை அந்தப்பக்கம் செலுத்தி அடைத்து விட்டான். இது ஞானிகள் ஆசியில்லாமல் முடியாது. அந்தக்காற்று புருவமத்தியில் ஒடுங்கும்போது, இவன் யாரை வணங்கினானோ, யாரை நோக்கி பூஜை செய்தானோ, அவனும் அந்தக்காற்றோடு உள்ளே ஒடுங்குவான். இதற்கெல்லாம் முழுமுதல் காரணம் ஆசான் அகத்தீசர்.

ஆசான் அகத்தீசர் மகான் சுப்ரமணியருடைய முதல் சீடர். அவர்தான் உடம்பிற்குள்ளேயே தங்க முடியும். அவர்தான் இதை செய்ய முடியும். ஆசான் ஞானபண்டிதனும் தங்கலாம். அவர்களுக்கு (ஞானபண்டிதன், அகத்தீசன்) இதுதான் வேலை, வேறு வேலை இல்லை.

ஆசான் அகத்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ பூஜை செய்யலாம். நாம் யாரை வணங்கினாலும் அல்லது பூஜை செய்தாலும் அகத்தீசர்தான் இதை செய்யவேண்டும். அவர்தான் அக்னியை (மூலக்கனலை) எழுப்ப வேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமையில்லை. மூலாதாரத்தில் இருந்து ஆசான் அகத்தீசர்தான் அக்னியை எழுப்ப வேண்டும்.

நாம் திருமூலதேவா என்று சொன்னாலும், புஜண்ட மகரிஷி என்று சொன்னாலும், போகமகாரிஷி என்று சொன்னாலும், இராமலிங்க சுவாமிகள் என்று சொன்னாலும் அருள் செய்வார்கள். இவர்கள் அத்தனைபேரும் என் பிள்ளைகள் என்பார், ஆசான் அகத்தீசர். என் பிள்ளைகள் நாமத்தை சொன்னாலே எனக்குத் தெரியும், என்பார் ஆசான் அகத்தீசர்.

நான் ஆசான் அகத்தீசரையும், அவரின் பிள்ளைகளையும் அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேன் ஆன்மஜெயம் பெறவேண்டும் என்று வேண்டினேன். ஆன்மஜெயம் என்றால் மூச்சுக்காற்று வசப்படுதல் ஆகும். மூச்சுக்காற்று வசப்பட்டால் இனி பிறப்பு இருக்காது. இதைத்தான் வாழ்நாள் வழியடைக்கும் கல், என்றார் மகான் திருவள்ளுவர்.

பூஜையையும், புண்ணியத்தையும் செய்வதால் ஆசான் அகத்தீசர் மனம் மகிழ்ச்சி அடைவார். ஆசான் அகத்தீசர் ஒருவரை நோக்கி நல்லபிள்ளை என்று சொன்னால் ஒன்பது கோடி ஞானிகளும் நல்ல பிள்ளை என்று சொல்வார்கள்.)

அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில் - குகை என்பது புருவ மத்தி, பத்தாம் வாசல்.

இவன் தலைவன் மீது செலுத்துகின்ற பக்தியும், பரிவும் ஆசான் மனதை தொட்டுவிட்டால், அவர் மகிழ்ந்து நல்லபிள்ளை என்பார். ஆசான் அகத்தீசர் நல்லபிள்ளையென்று முடிவு எடுத்துவிட்டால், மகனே உனக்கு நான் அருள் செய்கிறேன், உனக்கு என்ன வேண்டுமென்று கேட்பார்.
அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் ஆன்ம ஜெயம் பெறவேண்டும். அடியேன் மரணமிலா பெருவாழ்வு பெறவேண்டுமென்று கேட்க வேண்டும்.
வந்து போகின்ற காற்று, வெளியே சென்று உள்ளே வராவிட்டால் அது மரணம், காற்று உடம்பிற்குள் மீண்டும் வந்தால் பிழைத்துக் கொண்டான், என்று அர்த்தம். இந்த இரண்டுக்கும் இடையிலே வந்துபோகிற காற்றை, பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் செலுத்திவிட்டால் மரணமில்லை. இதுவே மரணமிலா பெருவாழ்வு.

காற்று வந்துபோனா மரணம் உண்டு. இங்கே காற்று வந்து மீண்டும் வெளியே போகவில்லை. ஆசான் அகத்தீசர் மனம் மகிழும்வரை, என்று மனம் மகிழ்கிறாரோ, என்று அருள் செய்கிறாரோ அதுவரை பக்குவமாக பொறுமையாக இருக்க வேண்டும். குகை என்பது ஓட்டை வாசல், அது புருவமத்தியாகும். இந்த உடம்புதான் குகை செய்து இருந்திடில் என்கிறார்.

சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே

பெரிய மன்னனாக இருந்தாலும் சரி, பரதேசியாக இருந்தாலும் சரி. ஏழையாக இருந்தாலும் சரி. இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் சரி, முடிவில்லாத பேரானந்தத்தில் இருப்பார்கள், என்று கூறுகிறார் திருமூலர்.
அந்த வாய்ப்பை நாமும் பெறவேண்டும். வாசிப்பழக்கம் அறிய வேண்டும், மூச்சுக்காற்றோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

மூச்சுக்காற்றோடு தொடர்பு என்பது, மூச்சுக்காற்று தொடர்பு உடையவரது மூச்சுக்காற்றோடு தொடர்புகொண்டு மூச்சுக்காற்றைப் பற்றி அறிதல். யோகம் என்பது உண்டுதான், யாரும் மறுக்க முடியாது.
புண்ணியம் செய்து, பக்தி செலுத்தி, பிறகு யோகத்தை தொடவேண்டும். புண்ணியமும், பக்தியும் இல்லாமல், மூச்சுக்காற்றை தொடர்பு கொண்டால் சும்மா இருக்கக்கூடிய சங்கை ஊதிக்கெடுத்தது போலாகிவிடும்.

நம்ம உடம்புல மூலாதாரத்துல குண்டலினி சக்தி என்ற ஒன்று இருக்கு, அது அமைதியா இருக்கு. மூச்சுக்காற்றை கவனித்தால் சாதாரணமாக எழும்பாது. ஆனால் இடகலையையும் பிங்கலையையும் கவனிக்க ஆரம்பித்தால், குண்டலினி சக்தி செயல்பட ஆரம்பித்துவிடும். அதை இயக்கும் முறை நமக்கு, தெள்ள தெளிவாக தெரிய வேண்டும்.

அந்தமுறைகள் தெரியாவிட்டால் அந்தசக்தி நம்மை கொன்று விடும். குண்டலினி சக்தி என்பது மூச்சுக்காற்று ஒடுங்குகிற இடம். அந்த இடத்தை உந்திக்கமலத்துக்கு கீழ்பகுதி மூலாதாரம் என்று சொல்லுவோம். அந்த இடத்தில்தான் குண்டலினி சக்தி இருக்கு. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் என்று சொல்லப்படும் ஆறாதாரங்களில் சுவாதிஷ்டானத்துக்கும், மூலாதாரத்துக்கும் இடையில் உள்ள மையப்பகுதியில் அந்தக்காற்று ஒடுங்க வேண்டும்.
காற்று மட்டும் ஒடுங்கினால் போதுமா? தலைவனும் தங்க வேண்டும். தலைவன் தங்கினால்தான், தலைவன் தான் பெற்ற மாசற்ற தேகத்தை, இவனைச்சார்ந்து இவனுடைய தேகத்தையும் மாசற்ற தேகமாக்குவான்.
குற்றமற்ற தலைவன் குற்றமற்ற தேகம் கொண்டு, நம்பால் அன்புகொண்டு குற்றமுள்ள நம் உடலில் தங்குகிறான். என்ன ஒரு கருணை?

மாசற்ற, ஒளிபொருந்திய ஆசான், காமதேகமாகிய இந்த நாற்றம் பொருந்திய தேகத்தில் வந்து பொருந்துகிறான்.
ஏனய்யா இவ்வளவு கருணையென்று கேட்டால் ஆசான், “அவன் என் பிள்ளை , என் மகன், என் திருவடியை உருகி தியானம் செய்திருக்கிறான். பாவம் என் பிள்ளை , அவன் காமதேகத்தில் கிடந்து அல்லல்படுகிறான். காமதேகம் என்ற கசடில், நரகத்தில் கிடக்கிறான். என்னை , அவன் உருகி தியானம் செய்ததால், நான் பெற்ற ஒளி உடம்பை அவன் உடம்பைச் சார்ந்து, அவனைப் பெறச் செய்வேன்” என்பார் ஆசான். என்னய்யா கருணை இது! என்று கேட்டால், அதற்கு ஆசான் "அவன் மன்னனாக இருந்தாலும் சரி, அவன் எவனாக இருந்தாலும் சரி, இதை நான் செய்வேன்” என்பார்.

சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்

அவன் அரசராக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, இல்லறத்தானாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி, யார் என்னை உருகி தியானம் செய்தாலும், நான் அவர்கள் உடம்பில் தங்குவேன்.
நான் தேகசித்தி பெற்றவன், ஒளி உடம்பு பெற்றவன், காமதேகம் அற்றவன், விகாரம் அற்றவன், சாந்தமே வடிவானவன், எக்காலத்திலும் இருக்கக் கூடியவன். அழிவு இல்லாத நான், அழியக்கூடிய அவன் உடம்பில் தங்கி இந்த தேகக்கசடை நீக்கி, நான் பெற்ற பேரின்பத்தை அவனையும் அடையச் செய்வேன் என்பார். இந்த நிலையை பெற ஆசான் ஆசி வேண்டும்.

ஆசான் ஆசியில்லாமல் மூச்சுக்காற்றை கட்டுதல், மூச்சுக்காற்றைப் பற்றி அறிதல், ரேசக, பூரக, கும்பகம் செய்தல், இது எதுவாக இருந்தாலும் சரி, அது ஆபத்தில் போய் முடியும். குண்டலினி சக்தி, பிராணாயாமம் செய்யும்போது, எழுவதற்கு ஆரம்பித்து விடும். அதுக்கு ஒரு உத்வேகம் இருக்கும். முறைதெரியா விட்டால் அது நம்மை கொன்று விடும். ஆசான்தான் இதை உணர்த்துவார். அவருடைய ஆசியால்தான் இதை செய்ய முடியும்.

மகான் சிவவாக்கியர் சொல்வார்,

சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுத்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.
- மகான் சிவவாக்கியர் - யோக நிலை - கவி எண் 21.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பார். நீ மூச்சுக்காற்றை கவனித்தாலே, குண்டலினி சக்தி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அது சும்மாதான் கிடந்துச்சு. இவன் அதை ஊதிக் கெடுத்துட்டான்.
இவன் மூச்சுக்காற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல், ஒன்று கிடக்க ஒன்று செய்தால், அது மூலாதாரத்தில் கிடக்கும் குண்டலினியை தூண்ட ஆரம்பிச்சிடும்.

தூண்ட ஆரம்பிச்சால் வெறிகொண்டு எழுந்திருப்பாள் அவள். எழுந்த குண்டலினி சக்தி, என்னை ஏன் எழுப்பினாய் என்று கேட்பாள்? முறை தெரியாது, தேவையில்லாமல் என்னை எழுப்பிவிட்டாய், உன்னை கொன்றே விடுவேன் என்பாள். மலச்சிக்கல் உண்டாகும், ரத்தக் கொதிப்பு உண்டாகும். மரணத்தை உண்டாக்க மூல காரணமாயிருக்கும் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி, குண்டலினி சக்தியே நம்மை கொன்று விடுவாள். அவளை தொடுவதற்கு முன்பே தலைவனின் ஆசிபெற வேண்டும். இல்லையென்றால் சக்தியாக இருக்கும், அவளே காளியாக மாறி விடுவாள்.
அந்த குண்டலினி சக்தி நம் உடம்பில் எப்படி இருக்கிறாள்? பலலட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னே இவன் ஆன்மா என்று தோன்றியதோ, குண்டலினி சக்தியும் அன்றே தோன்றிவிட்டாள்.

குண்டலினி சக்தி உடம்பில் உள்ள மூலாதாரத்திற்கு மத்தியில் உள்ளது. அவள் தோன்றிய அன்று முதல் இன்றுவரை யாரும் அவளை கவனிக்கவில்லை.
அந்த குண்டலினி சக்தியை தலைவன் துணை கொண்டுதான் தட்டி எழுப்ப வேண்டும்.

சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால் சங்கு இரண்டு - மூக்கு துவாரம். தாரை என்பது புருவமத்தி. இரண்டு பக்கம் வருகின்ற சுவாசத்தை நிறுத்தி ரேசக, பூரக, கும்பகம் செய்து, அதை புருவமத்தியில் ஆசான் துணை கொண்டு செலுத்தி விட்டால், அது தேககசடை மாற்றி, உடலை ஒளிஉடம்பு ஆக்கும். இது நம்மால் செய்ய முடியுமா? ஆசான் துணை கொண்டுதான் செய்ய முடியும்.

எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளுக்கு இடையில், இந்த மூச்சுக்காற்று இருக்கிறது. இந்த நாடி நரம்புகளுக்குள்ளேயே இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய மூன்று நாடிகளும் சன்னல், பின்னலாய் நரம்புகளுடன் கோர்த்துக்கொண்டு இருக்கும்.

இதைத் தெரியாமல் மக்களெல்லாம் இறந்து போகிறார்கள். இதை, “மங்கிமாளுதே யுலகில் மானிடங்கள் எத்தனை” என்பார். மூச்சுக்காற்று உள்ளே தங்கிவிட்டால், அவனுக்கு மரணமில்லை. இந்த வாய்ப்பை பெறுவதற்குதான் மகான் இராமதேவர் முதல் தொடக்க நிலைப்பயிற்சியை கொடுத்தார். இதையே திருமூலர்,

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
- திருமந்திரம் - பிராணாயாமம் - கவி எண் 571.

காலை 5.30 மணிக்கு எழுந்து, காலை கடனை முடித்து விட்டு, சாஷ்டாங்கமாக ஆசான் இராமதேவரை அல்லது ஆசான் திருமூலதேவரை வீழ்ந்து வணங்க வேண்டும்.
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பின்பு, அப்படியே எழுந்து வினாத்தண்டு நிமிர்ந்த நிலையில் இருக்குமாறு உட்கார வேண்டும். பின்பு மூச்சுக்காற்றை இழுத்து விட வேண்டும். மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போது, வயிற்றில் உணவு இருக்கக் கூடாது. ஏற்கனவே உண்ட பழைய உணவு வயிற்றில் இருந்தால் ஆகாது. மலஜலத்தை சுத்தமாக கழிக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வினாத்தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். விடாது நிமிர்ந்து இருந்து கொண்டு வலது நாசியை வலது கை பெருவிரலால் அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மெதுவாக காற்றை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு ஆட்காட்டி விரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசி வழியாக காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும். இது ஒரு சுற்று எனப்படும். காற்றை ஸ்தம்பிக்கக் கூடாது. இதை செய்வதற்கு ஆசான் திருவருள் துணை வேண்டும்.

திருவருள் துணையில்லாமல், இதை தொடக்கூடாது என்று பலதடவை சொல்லியிருக்கிறோம். இதை சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் என்பது போல ஒன்று கிடக்க ஒன்று செய்யக்கூடாது. திருவருள் துணையும், குரு அருள் துணையும் இருந்தால்தான் இது உணர்த்தப்படும்.

இப்படியெல்லாம் யோகப்பயிற்சி இருக்கிறது. யோகப்பயிற்சி இருந்தால்தான் ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்க முடியும். அவன் மூச்சுக்காற்றோடு பழகுகிறான். மூச்சுக்காற்றோடு பழகி எந்தப்பக்கம் சூரியகலை இயங்குகிறது, எந்தப்பக்கம் சந்திரகலை இயங்குகிறது என்பதை அறிகிறான். ரெண்டு பக்கத்திலும் சுவாசத்தை இழுக்கிறோம். நாம் முன்னமே சொல்லி இருக்கிறோம். சுவடி நூலிலேயும் இருக்கு, மூச்சுக்காற்றை தொடத்தான் சொல்லியிருக்கிறேன். இராமதேவரும் அப்படியே சொல்லி இருக்கிறார்.

மூச்சுக்காற்றை தொடுவதற்கு முன்பே, ஆசான் திருவடியை பூஜைசெய்துதான் தொட வேண்டும். இடகலையையும், வலகலையையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் - இருகாலும் என்பது இடகலையும், பிங்கலையும் ஆகும். காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை - எங்கே காற்றை பிடிக்க வேண்டும்? பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் பிடிக்க வேண்டும்.

வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் - 38.

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
- மகான் ஔவையார் - விநாயகர் அகவல் - வரி எண் 34.

என்றார் மகான் ஔவையார். காற்று ஒடுங்குமிடம் புருவமத்திதான். புருவமத்தியில் காற்றை ஒடுக்காமல் வேறு இடங்களில் காற்றை பிடித்தால் உடம்பு கெட்டுவிடும்.

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

கூற்று என்பது எமன். எமனையும் உதைக்கலாம் என்பார். இங்கே எமன் யார்? ஈளை, இருமல், நரை, திரை, மூப்பு இவையெல்லாம் நமக்கு எமன். முதுமை நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கு. நோய் ஒரு எமன். அதை வெல்லலாம், அதை உதைக்கலாம், அதை தூக்கி எறியலாம்.

பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட ஒன்றை அறிந்து கொள்ளாமல், எமனை வெல்ல முடியாது. அந்த வாய்ப்பை பெறுவதற்குதான் மகான் இராமதேவர் சுவடிகளில், யோகப்பயிற்சியைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

இதை அன்பர்கள் பின்பற்ற வேண்டும். ஆகவே அமைச்சன் என்று சொல்லப்பட்ட அறிவு, தெளிவான உபதேசத்தைப் பெற்றிருக்க வேண்டும். அமைச்சன் தெளிவான உபதேசத்தைப் பெற்றிருந்தால்தான் மனம் என்ற மன்னனை காப்பாற்ற முடியும். மன்னன் நல்வினை செய்தவனாக இருக்க வேண்டும். மனம் என்று சொல்லப்பட்ட அரசனுக்கு நல்வினை மிகுந்து இருந்தால்தான் சிந்திப்பான். அமைச்சன் என்று சொல்லப்பட்ட அறிவின் உபதேசத்தை கேட்பான்.

இன்றைக்கு அமைச்சியலைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அமைச்சன் என்ற அறிவின் பேச்சை, மனம் என்ற மன்னன் கேட்க வேண்டுமென்றால், அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அந்த புண்ணியமே ஆன்மாவுக்கு ஆக்கம் தரும். ஆன்மாவுக்கு ஆக்கம் தந்தால், அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் மனம் செம்மைப்படும். ஆக இந்த வாய்ப்பை எல்லோரும் பெறவேண்டும் என்பதுதான் ஞானிகளின் விருப்பம். இதற்கு நிறைய பொறுமை வேண்டும். தினம்தினம் தியானம் செய்து பழக வேண்டும்.

அன்னதானம் செய்வதற்கு அன்பர்கள் செல்கிறார்கள். அன்பர்களை ஆசான் திருமூலதேவர், ஆசான் அகத்தீசர் பார்க்கிறார்கள். அவர்கள், தொண்டர்களைப் பார்த்து “நல்ல பிள்ளைகள் தர்மகாரியத்தை தடையில்லாமல் செய்கிறார்கள், சலிப்பில்லாமல் செய்கிறார்கள்” என்பார். இங்கே (ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில்) அன்னதானம் செய்கிறவர்களுக்கும், இங்கே தொண்டு செய்கிற மக்களுக்கும் ஞானம் சித்திக்கும், தடையே இருக்காது. இங்குள்ளவர்கள் பல ஜென்மங்களில் தொண்டு செய்து வந்ததாலே, போட்டி இருக்காது, பொறாமை இருக்காது, பூசல் இருக்காது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பு செலுத்துவார்கள்.

இங்கு தொண்டு செய்தால் நிச்சயம் ஞானம் சித்திக்கும். அவர்களுடைய தொண்டை ஆசான் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். ஆசான் தொண்டர்களை நல்ல பிள்ளைகள் என்பார். இதை அவன் வாசியைத் தொடும் போதே, தொடும் அவனுக்கு தெரியும்.

மகான் இராமதேவரையும், மகான் திருமூலதேவரையும், மகான் அகத்தீசரையும் வணங்கி பூஜை செய்தால், அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும் நம் வசம் ஆவார்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படும் புலன்களும் நமக்கு துணை இருப்பார்கள்.

இவர்களை வேடர்கள் என்றும், கள்வர்கள் என்றும் சொல்வார்கள். இந்த ஐம்புல வேடர்கள், ஐம்புல கள்வர்கள், திருடர்கள் நம்வசமாக வேண்டும். இவர்கள் ஏன் நம் வசமாகவில்லை? வினை மிகுதியாக இருப்பதால் பொறிபுலன்கள் நமக்கு அடங்கவில்லை.

பொறிபுல னடங்கிய காலே - பரி
பூரணப்பொருள் வந்து வாய்க்குமப் பாலே
அறிஞரு மறியாது போலே – காணும்
ஆனந்த வெள்ளத்தி னாடின தாலே.
- மகான் மஸ்தான் சாகிபு - ஆனந்தக்களிப்பு - கவி எண் 19.

புண்ணியம் மிகுதியானால் நம்வசம் பொறிபுலன்கள் அடங்கும். பொறிபுலன் அடங்கினால் மனம் அடங்கும். மனம் என்பது ஆன்மா. ஆன்மா என்பது மூச்சுக்காற்று. ஆன்மா அடக்கம் என்பது மனம் லயப்படுதல் ஆகும், மனம் அடங்கிவிடுதல் ஆகும்.

மனமென்னும் மாட்டங்கிற் றாண்ட வக்கோனே – முத்தி
வாய்த்ததென் றெண்ணேடா தாண்ட வக்கோனே.
- மகான் இடைக்காட்டுச்சித்தர் - கவி எண் 13.

என்று சொல்வார்கள்.
மனம் என்னும் மாடு அடங்க வேண்டும். மனம் என்ற மாடு அடங்கினால்தான், முக்தி வாய்க்கும் என்பார்.

சினமென்னும் பாம்பிறந்தாற் றாண்டவக்கோனே – யாவுஞ்
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.
- மகான் இடைக்காட்டுச்சித்தர் - கவி எண் 14.

ஆகவே சினம் அடங்கும். மனம் அடங்கினால் சினம் அடங்கும். மனம் அடங்கினால் பொறிபுலன் அடங்கிவிட்டது. மனம் அடங்கிவிட்டது, வாசி அடங்கிவிட்டது. வாசி அடங்கிவிட்டால் ஆன்ம ஜெயம் பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தம். அப்ப ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மாவிற்கு ஆதாயத்தை தேடிக்கொள்ள வேண்டும்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 31.

ஏன் உயிர்க்கு மட்டும் என்று சொன்னார்? உயிர் ஆக்கம் பெற்றால்தான், உடம்புக்கும் ஆக்கம் வரும். உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். உடம்பு ஒரு காலத்தில் நலியும். உடம்புக்கு நலிவு என்பது மரணம். உடம்பினுடைய நலிவு நோய். இவையெல்லாம் இயல்பான ஒன்றுதான்.
எனவே அறத்தைவிட மேம்பட்ட ஆக்கம் ஆன்மாவுக்கு என்னடா? என்று கேட்பார், ஆன்ம ஜெயம் பெற்ற ஆசான் திருவள்ளுவர்.

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231.

இங்கேயும் உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்பார். உயிருக்கு ஆதாயம் தேடிக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. பக்தி செலுத்தணும். அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா, காலாங்கிநாதா, போகதே வா, கருவூர் தேவா, மாணிக்கவாசகா என்று இப்படி சொல்லுவதுதான் பக்தி.

பக்தி செலுத்தசெலுத்த தெளிவான அறிவு வரும். பக்தி செலுத்தசெலுத்த செல்வம் பெருகும். பக்தி செலுத்த செலுத்த நோய் இருக்காது. பக்தி செலுத்தசெலுத்த சாந்தம் உண்டாகும். பக்தி செலுத்தசெலுத்த ஆரோக்கியம் உண்டாகும். பக்தி செலுத்தசெலுத்த நட்பு பெருகும்.

பக்தியே நல்ல அறிவாக இருக்கு. பக்தியே நல்ல மனமாக இருக்கு. பக்தியே வறுமை இல்லாத வாழ்வு தரும். ஆக ஒரு புறம் பக்தி செலுத்தி, மறுபுறம் அன்னதானம் செய்து ஆன்மஜெயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பக்தியும் அன்னதானமும் இல்லாமல் ஆன்மஜெயம் பெறமுடியாது.
ஆகவே, மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதலும், அதோடு பழகுதலும் போன்ற செயல்கள் செய்வதற்கு முக்கியமாய், தேவைப்படுவது பக்தியும், அன்னதானமும் மட்டுமே. இவ்வாறு செய்தால் ஆசானுடைய அருளைப் பெறலாம்.

அருள்னா எப்படி இருக்கும்? மஞ்சளா இருக்குமா? சிவப்பா இருக்குமா?
ஆசான் அகத்தீசர் மனமகிழ்ந்து இவன் நல்லப்பிள்ளை என்பார். ஆசானுடைய மகிழ்ச்சியே அறிவு. ஆசானுடைய மகிழ்ச்சியே செல்வம்.

ஆசானுடைய மகிழ்ச்சியே நோயில்லா வாழ்வு. ஆசானுடைய மகிழ்ச்சியே உடல் ஆரோக்கியம். ஆசானுடைய மகிழ்ச்சியே கருணை. ஆசானுடைய தயவினாலேயே எல்லா நன்மையும் உண்டாகும்.
ஆசான் “இவன் நல்லபிள்ளை, நல்லபிள்ளை” என்று நினைக்க வேண்டும். “இவனுக்கு நல்ல மனசு இருக்கு. இவன் நம்பால் பற்று கொண்டவன். இவன் நம்மேல் அன்பு கொண்டவன். ஆகவே இவனுக்கு நாம் அருள் செய்ய வேண்டும். இவனுக்கு கருணை காட்ட வேண்டும். இவனுக்கு நாம் தயை காட்ட வேண்டும். இவன் நல்ல பிள்ளை” என்று எண்ணி ஆசான் ஒருவனை தேர்ந்தெடுத்தால் அந்த தேர்வுக்குத்தான் அருள் என்று சொல்லுவார்கள்.

ஆசானுடைய அருளை பெற்றாச்சு, அப்படீன்னு சொன்னா, நாம நல்லபிள்ளைன்னு முடிவெடுத்திருக்கிறார்னு அர்த்தம். ஆசானுடைய அந்த அருளை பெறுகின்றவன்தான் எல்லா நன்மைகளையும் அடைய முடியும்.
ஆசானின் மகிழ்ச்சியே அருளாகும். ஆசான் மனம் மகிழ வேண்டும்.

ஆசான் நமக்கு துன்பம் வரும்போது தடுப்பார். நமக்கு நோய் வரும்போது நோயை நீக்குவார். வறுமை இருக்கும்போது வறுமையை தீர்ப்பார். கடன்சுமையை தீர்ப்பார். இவையெல்லாம் ஆசானின் அருளை பெற்றவர்களுக்கு கிடைக்கும்.

ஆசான் நல்ல மனசோடு நமக்கு அருளுவார். அவரது மனசே நல்ல மனசு. அவரது தயையே கருணை. ஆசான் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். நம்மீது அன்பு வைத்திருக்கிறார். இவன் நல்லபிள்ளை என்று சந்தோஷப்படுகிறார். அவர் சந்தோஷப்பட்டாலே குடும்பத்தில் பிரச்சினை இருக்காது.

ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவன் சந்தோஷப்படுகிறான். ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவன் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கு. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு வறுமை இல்லை. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு செல்வம் பெருகுது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு நல்ல சிந்தனை வந்தது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனிடமுள்ள லோபித்தனம் நீங்கியது.

ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு நோயில்லா வாழ்வு வந்தது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு உடல் ஆரோக்கியம் வந்தது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு நல்ல நட்பு பெருகியது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு சிறந்த அறிவு வந்தது. ஆசான் மகிழ்ச்சி அடைகிறார், இவனுக்கு எதையும் தாங்கிக்கொள்கின்ற அறிவு வந்தது. ஆசான் மகிழ்ச்சி அடைய அடைய இவனுக்கு வைராக்கியம் வந்தது.


ஆசான் மகிழ்ச்சி அடைய அடைய எடுத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்கு வந்தது. ஆகவே ஆசானின் மகிழ்ச்சியே நமக்கு அருளாக மாறும்.
இப்ப ஒருவருக்கு சாப்பாடு போடுறோம். அதற்கு தயை என்று பொருள். ரெண்டு நாளா பட்டினியா கிடந்தவனுக்கு நல்ல சாப்பாடு போட்டா, அவன் அடையும் மகிழ்ச்சியே இவனுக்கு கிடைத்த அருள். அப்ப சாப்பாடு போட்டா அருள் காட்டுகிறான், அருள் செய்கிறான் என்று அர்த்தம்.
ஒருவன் மற்றவனுக்கு பிரதிபலன்பாராது ஒரு உதவி செய்தால் அது அருள், அது கருணை அல்லது ஜீவகாருண்யம் என்று பொருள்.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது துடைத்து.
- திருக்குறள் - ஈகை - குறள் எண் 221.

ஒருவன் மற்ற உயிருக்கு நன்மை செய்தால், அது அவன் அருள் செய்துவிட்டான் என்று அர்த்தம். இதைக்கண்டு ஆசான் மகிழ்ச்சி அடைகிறார். அந்த மகிழ்ச்சியே அருளாக மாறும். இதனால்தான் ஆசான் அகத்தீசர் அவனைப் பார்த்து நல்ல பிள்ளை என்பார்.
நல்ல காரியம் செய்கிறான். பேராசை இல்லை, பொய் இல்லை, வஞ்சனை இல்லை, குணக்கேடு இல்லை, சினமில்லை, வன்மனம் இல்லை, சின்னபுத்தி இல்லை, நல்ல மனசு இருக்கு, அப்ப நல்லமனம் உள்ளவனை நல்லப்பிள்ளை என்று சொல்லுவார் ஆசான் அகத்தீசர். நல்லப் பிள்ளை என்று சொன்னால் அருள் செய்யப் போகிறார் என்று அர்த்தம்.

இப்போது பொறாமை இருக்கு, பொய்சொல்லும் பழக்கம் இருக்கு, கொடிய கோபம் இருக்கு, பழி வாங்கும் உணர்ச்சி இருக்கு, சாந்தம் இல்லை, மனம் ஒரு நிலைப்படவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனை இருக்கு. இவையெல்லாம் தீருவதற்கு ஒரே வழி ஆசான் திருவடியைப் பூஜிப்பதுதான்.

ஆசான் திருவடியை பூஜிக்காமல் ஒருவனுக்கு சாந்தம் வராது, ஆசான் திருவடியைப் பூஜிக்காமல் ஒருவனுக்கு வறுமை தீராது. ஆசான் திருவடியைப் பூஜிக்காமல் ஒருவனுக்கு கடன் சுமை தீராது. ஆசான் திருவடியைப் பூஜிக்காமல் ஒருவனுக்கு ஆரோக்கியம் வராது.
ஆசான் ஆசிபெறாமல் ஆன்மஜெயம் பெற முடியாது. ஆசான் ஆசிபெற்றால் வாசிவசப்படும். வாசிவசப்பட்டால் ஆன்மஜெயம் பெறலாம். ஆன்மஜெயம் பெற்றால் மரணமிலா வாழ்வு பெறலாம். ஆகவே அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும் தெளிவுபெற வேண்டும் என்ற ஒரே ஒரு மையக்கருத்தை வைத்துதான், நான் பேசியிருக்கிறேன்.

ஆன்மா தெளிவடைந்தால் எல்லாமே நல்லபடியாக நடக்கும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்றால் பக்தி செலுத்த வேண்டும். பக்தி, பூஜை துணையோடுதான் மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும், மூச்சுக்காற்றோடு பழக வேண்டுமென்று சொல்லி, இதுநேரம் வரைக்கும் நான் அமைச்சியலுக்கு ஞானக்கருத்தாக சொல்லியிருக்கிறேன். அந்த அதிகாரத்தில் ஒரு கவியைக்கூட தொடவில்லை.

திருக்குறளில் அமைச்சியல், படையியல் போன்ற அதிகாரங்களில் மன்னனைப் பற்றி சொல்லியிருப்பார்கள். மன்னனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்கள்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள் பவர்க்கு.
- திருக்குறள் - இறைமாட்சி - குறள் எண் 383.

என்பார். காலம் கடத்தாமை, தூங்காமை, சிறந்த அரசியல் கல்வி, துணிவு, வீரவுணர்ச்சி இவை மன்னனுக்கு வேண்டியது.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
- திருக்குறள் - இறைமாட்சி - குறள் எண் 382.

என்பார். எதையும் கண்டு மன்னன் அஞ்சக்கூடாது. ஈகை குணம் இருக்க வேண்டும். சிறந்த அறிவு இருக்க வேண்டும். ஊக்கம் இருக்க வேண்டும். இந்த நான்கு குணமும் குறைவுபடாமல் இருக்க வேண்டும். இத்துடன் மன்னனுக்கு மான உணர்ச்சியும் இருக்க வேண்டும் என்பார்.

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு.
- திருக்குறள் - இறைமாட்சி - குறள் எண் 384.

அரசன் நெறி வழுவக்கூடாது. அரசனுக்கு மானஉணர்ச்சி வேண்டும். அரசன் பாவம் செய்யக்கூடாது. இதெல்லாம் அரசனுக்கு வேண்டும் என்பார் வள்ளுவர்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
- திருக்குறள் - அமைச்சு - குறள் எண் 632.

இந்தக்குறளில் அமைச்சனுக்கு தேவையான குணப்பண்புகளைப் பற்றி பேசுவார். நாங்க அறிவை அமைச்சனாகவும், மனதை மன்னனாகவும் வைத்து பேசியிருக்கிறோம். உங்களுக்கு கிடைத்தற்கரிய, பெறுதற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கிறது. இளமை இருக்கும்போதே செய்ய

வேண்டியதை செய்து கொள்ள வேண்டும். பத்து வயசு, பன்னிரெண்டு வயசு, பதினைந்து வயசு பிள்ளைகள் எல்லாம் ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்கிறார்கள். இது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

ஒரு முறை இரண்டரை வயசு பையன் "ஓம் அகத்தீசா” என்று சொன்னதை கேட்டேன். ஒருமுறை அந்த பையன் “ஓம் அகத்தீசா” என்று சொன்னால், ஒன்பது கோடி ஞானிகளும் அவனைப் பார்ப்பார்கள். அவர்கள் எல்லோரும் அந்தப் பையனை “நல்லப்பிள்ளை, நல்லப்பிள்ளை” என்பார்கள். நல்லப்பிள்ளை என்று சொன்னாலே, அருள் தரப்போறாங்க என்று அர்த்தம்.

அப்ப நல்ல அருள் என்பது அவர்களின் (ஞானிகள்) கருணை. அவர்களின் கருணையை பெறப்போகிறோம். இரண்டு வயது, ஐந்து வயது குழந்தைகள் எல்லாம் ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் சத்தியமாக ஞானியாவார்கள், தடை யேயில்லை. இதுபோன்று ஐந்து வயசுள்ள குழந்தைகள் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது.

"ஓம் அகத்தீசாய நம” என்று இரண்டு வயசிலேயும் சொல்லலாம், ஐந்து வயசிலேயும் சொல்லலாம், பத்து வயசிலேயும் சொல்லலாம், இருபத்தைந்து வயசிலேயும் சொல்லலாம், எப்ப வேணுமானாலும் சொல்லலாம், சொல்லிக்கிட்டே இருக்கலாம். சொல்ல சொல்ல அருள் கிடைக்குது. அருள் என்பதே ஆசானுடைய கருணை. அவர்களுடைய கருணை நமக்கு கிடைக்குது. இப்படி இருந்தால்தான் பெறுதற்கரிய மானுடப்பிறவியை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அற்புதமான பிறவி நமக்கு கிடைத்திருக்கிறது. பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட புருவமத்தி மனிதனுக்கே உரியது. மற்ற ஜீவராசிகளுக்கு கிடையாது.
எல்லாம்வல்ல கடவுள் மனிதனுக்கு மட்டுமே பத்தாம்வாசல் என்ற சொர்க்கவாசலை தேகத்தில் சிரசில் வைத்திருக்கிறான். அந்த வாசல் வழியாக உள்ளே சென்று மரணமிலா பெருவாழ்வு பெறவேண்டும் என்றால், "ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி தியானம் செய்ய வேண்டும்.

இதுநேரம் வரையில் திருக்குறளில் உள்ள அமைச்சியலுக்கு என் அறிவுக்கு எட்டியவாறு பேசியிருக்கிறேன். கற்றுணர்ந்த பெரியோர்களும், தாய்மார்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.

*************************************************************************************************************************************



திருச்சி மாவட்டம்,
துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஔவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

14. கண்டொன்று சொல்லேல்

ஒரு கிராமத்தில் பண்புள்ள இரு குடும்பத்தினர் இரண்டு மூன்று தலைமுறைகளாக ஒருவருக்கொருவர் அன்புடனும் பண்புடனும் பழகி வந்தனர்.

இப்படி இருக்கும் காலத்தில் இருவரும் அந்த கிராமத்திலேயே அடுத்தடுத்து வசித்து வந்தனர்.

ஒரு சமயத்தில் ஒருவரது குடும்பத்தில் உள்ளவரது சித்தப்பா மகளது திருமணத்திற்கு அவர் செல்ல வேண்டி வந்தது. அந்த திருமணத்திற்கு கலந்து கொள்ள எண்ணிய அவர் திருமணத்திற்கு சென்று அங்கேயே தங்கி மூன்று அல்லது நான்கு நாட்கள் செயல்பட வேண்டியிருந்தது.

அவரது குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும். வெளியூரில் இப்படிப்பட்ட குழந்தையை வைத்துக்கொண்டு திருமண காரியத்தில் செயல்பட முடியாது என்பதாலும், அவரது மனைவியையும், குழந்தையையும் அவர்கள் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அவர் தனது குடும்ப நண்பரும், தனது பக்கத்து வீட்டில் வசிப்பவருமான தனது நண்பரிடம் சென்று நான் எனது சித்தப்பா மகள் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது, சென்றால் வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை.

அதனால் எனது மனைவியையும் குழந்தையையும் என்னுடன் அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. முக்கியமான திருமணமாதலால் செல்லாமல் இருக்கவும் முடியாது. எனவே எனது மனைவி மக்களை இங்கேயே விட்டுவிட்டு, நான் மட்டும் திருமணத்திற்கு செல்கிறேன். எனது குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும் நோய் தீவிரமடைந்தால் மருத்துவரிடம் சென்று குழந்தைக்கு சிகிச்சை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நண்பரும் என்னப்பா! இப்படி சொல்லிவிட்டாய், நாங்கள் இருக்கிறோம். உனது குடும்பமும் எனது குடும்பமும் ஒன்று. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாமல் சென்று வா என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

இருவரது குடும்பமும்,

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
- திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 44.

என்ற குறளிற்கு ஏற்ப பழிக்கு அஞ்சி நியாயமான முறையில் பொருள் சேர்த்தும், தம்மை நோக்கி வருகின்ற விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று வரும் விருந்தை மனமகிழ உபசரித்து, மகிழ்ந்தும் வாழக்கூடிய பண்புள்ள குடும்பங்களாகும்.

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொ லினதே அறம்.
- திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 93.

என்பதற்கு ஏற்ப தன்னை நாடிவருபவர்களிடம் இன்முகத்தோடு வரவேற்று அவர்களை இனிமையுடன் உபசரித்து, மனமகிழ்ந்து உள்ளம் கலந்த இன்சொல் பேசும் தன்மை உடையவர்களாய் இருந்தனர்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.
- திருக்குறள் - குடிமை - குறள் எண் 953.

என்பதற்கேற்ப உயர்குடிப்பிறப்பாளர்க்கே உரித்தான முகமலர்ச்சியுடனும், பிறருக்கு கொடுத்து உதவும் ஈகை குணத்துடனும், இனிய சொற்களை பேசுபவர்களாகவும், எக்காலத்தும் பிறரை இகழ்ந்து பேசாத பண்பினையும் உடையவர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.
இவ்விரு குடும்பத்தினரும் கொண்ட நட்பின் தன்மையானது,

செயற்கு அரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்கு அரிய யாவுள காப்பு?
- திருக்குறள் - நட்பு - குறள் எண் 781.

என்ற குறளிற்கு ஏற்ப ஒருவருக்கொருவர் தகுதியுள்ள நட்பாகவும், இரு குடும்பத்தினரும் இணைந்து பலகாரியங்களை செம்மையுற செய்வதற்கும் உறுதுணையாகவும், உள்ளதாகவுமான நட்பாய் இருந்து வந்தது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவது ஆம் நட்பு.
- திருக்குறள் - நட்பு - குறள் எண் 788.

என்ற குறளிற்கு ஏற்ப ஒருவருக்கு ஏதேனும் துன்பம் எனில், மற்றொருவர் இவர் கேட்காமலேயே அவரது துன்பத்தை உணர்ந்து தானே வலியவந்து, உதவும்படியாக உள்ளதுமான நட்பாய் இருந்து வந்தது.

இப்படி ஒருவருக்கொருவர் ஒருதாய் பிள்ளைகள் போல் பழகிவந்தனர். இப்படி ஒருவருக்கொருவர் தூயமனதோடு பழகி வந்ததால், இவர்களது குடும்பத்தை நோக்கி பல உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். எப்போதும் அந்த குடும்பங்கள் கலகலப்பாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் அதே தெருவில் வசித்து வந்த, எதிர் வீட்டுக்காரர், இவர்களது நட்பையும், வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பிடிக்காமல் அவர்கள்மீது பொறாமைப்பட்டார்.

இப்படி இருக்கும் காலத்தில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு நண்பர் சென்று விட்டார். இரண்டு நாள் கழித்து, இரவு நேரம் திடீரென பக்கத்துவீட்டு நண்பரின் குழந்தைக்கு வலிப்பு நோய் தீவிரமடைந்து, குழந்தை சொடுக்கி சொடுக்கி அழ ஆரம்பித்து விட்டது.

இதனால் அவரது மனைவி பக்கத்து வீட்டு நண்பரை அணுகி, நிலைமையை கூறினாள். அவரும் அடடா! நண்பனும் என்னிடம் இதைப்பற்றி கூறிவிட்டுத்தான் சென்றான்.

அது இவ்வளவு தீவிரமாக இருக்குமென்று தெரியவில்லை எனக் கூறி, குழந்தையின் நோயின் தீவிரத்தைப் பார்த்து, இரவானாலும் பரவாயில்லை எனக்கூறி, நண்பரின் மனைவியையும், குழந்தையையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, அருகிலுள்ள நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனே சென்றார்.
நகரத்திற்கு சென்று, அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து நோயின் தீவிரம் குறையும்வரை அங்கேயே தங்கி, வலிப்பின் தீவிரம் குறைந்தவுடன் காலையில் குழந்தையை கூட்டிக் கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

இப்படி இரவில் நண்பரும், அவரது நண்பரின் மனைவியும், குழந்தையும் இருசக்கர வாகனத்தில் சென்றதை பொறாமையுடைய எதிர்வீட்டுக்காரர் பார்த்தார். அவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதையெல்லாம் சிந்திக்காமல் அவர்களைப் பற்றி தவறாக எண்ணினார்.

வெளியூர் சென்ற நண்பரும் திரும்பி வந்தார். பொறாமையுடைய எதிர்வீட்டுக்காரர் அவரை சந்தித்து, நீங்கள் வெளியூர் சென்றிருந்தபோது உங்களது மனைவியை உனது நண்பன் தனது இருசக்கர வாகனத்தில் இரவில் வெளியே அழைத்துச்சென்று காலையில்தான் திரும்பி வந்தான். என்னவென்று தெரியவில்லை. பார்த்துக் கொள்! என சந்தேகப்படும்படியான சூழ்நிலை உள்ளதுபோல் அங்கே நடந்த உண்மையை அறியாமலும், அதை விசாரிக்காமலும் கூறினார்.
இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றதை பார்த்தது உண்மைதான். ஆனாலும் எதற்காக சென்றார்கள், அவர்கள் அப்படி

செல்லவேண்டியதின் அவசியமென்ன? எந்த சூழ்நிலையின் காரணமாக சென்றார்கள்? என்பதையெல்லாம் எண்ணாமலும் விசாரிக்காமலும் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும், பொறாமையின் காரணமாக பிறர் சந்தேகப்படும்படியான ஒரு சூழலை உருவாக்கி, அவரது நண்பரிடம் கூறினார்.

எதிர் வீட்டுக்காரர் இவ்வாறு கூறியதும், ஊரிலிருந்து திரும்பிய நண்பரோ ஒருவர்மீது ஒருவர் கொண்ட நட்பின் ஆழத்தாலும், அவரது உயர் குடிப்பிறப்பின் தன்மையாலும் தெளிந்த அறிவுடையவராக இருந்ததாலும், எதிர் வீட்டுக்காரரிடம் ஐயா! இந்த விஷயம் எனக்கு தெரியும், நான்தான் எனது நண்பனிடம் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால், எனது மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு நகரிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்கச் சொன்னேன். அதற்காகத்தான் சென்றிருப்பார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.

எனது நண்பனைப் பற்றி எனக்குத் தெரியும். இதுபோன்ற கீழ்த்தரமான அறிவு உங்களுக்கு இருக்கக் கூடாது. இப்படி உண்மை அறியாமல், பிறரிடம் கீழ்த்தரமான வஞ்சனை எண்ணத்துடன் சொன்னால், அவர்கள் குடும்பம் வீணாக போயிடும். இப்படி பிறர் குடும்பத்தை கெடுக்கும் கீழ்த்தரமான எண்ணங்களை விட்டொழித்து நன்றாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பிவிட்டார்.

இப்படி கண்ட காட்சி உண்மையானதாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள உண்மை தெரியாமல், உண்மைக்கு புறம்பாக தானே ஏதோ கற்பனை செய்து சொல்வது பாவச்செயலாகும். இருவரது நட்பும், ஆழமானதாக இருந்ததால், நண்பர்களுக்குள்ளும் பகை ஏதும் ஏற்படவில்லை. இதுவே வேறொரு சாதாரண மனிதராக இருந்திருந்தால், எதிர்வீட்டுக்காரரது பொறாமையான உண்மையறியாத வார்த்தைகளினால் அவர்களது நட்பில் விரிசல் உண்டாகி, அந்த இரண்டு குடும்பங்களுமே அல்லலுற நேரிட்டிருக்கும்.
மேலும் பல விபரீத சந்தேகங்களும், அதனால் விபரீத விளைவுகளும் வந்து சேர்ந்து பாவியாகி இருப்பார்கள் என்பதை உணர வேண்டும்.

எனவே கண்ணால் கண்ட காட்சி உண்மை என்றாலும் அதன் உண்மைப் பொருள் தெரியாமல், நாமாக ஏதாவது கற்பனை செய்துகொண்டு, உண்மைக்கு புறம்பாக சொல்வது பாவம், என்பதையே மகான் ஔவையார் கண்டொன்று சொல்லேல் என்கிறார்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
- திருக்குறள் - கயமை - குறள் எண் 1079.

சமுதாயத்தில் உள்ள சிலர், பிறர் மகிழ்ச்சியாக உடுப்பதையும், நன்கு அறுசுவை உண்டு, ஒருவருக்கொருவர் மனம்விட்டு கலகலப்பாக பேசி மகிழ்ந்திருப்பதை பார்த்தால் பொறாமைப்படுவார்கள். முன் செய்த புண்ணியத்தின் காரணமாக சில வசதியானவர்கள், நல்ல உயர்ந்த உடைகளும், ஆபரணங்களும் அணிந்திருப்பார்கள். எப்போதும் நல்ல தரமான அறுசுவை உணவை உண்டு, எப்போதும் கலகலப்பாக சந்தோஷமாக அந்த குடும்பத்தினர்கள் இருப்பார்கள்.

இதைக் கண்டு சிலர் பொறாமைப்பட்டு, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படி பிறர் வளர்ச்சியையும், அவர்களது மகிழ்ச்சியையும் கண்டு பொறாமைப்படுபவர்கள், கண்டிப்பாக உண்மையை மறைத்து அவர்கள் மீது அவதூறுகள்தான் சொல்வார்கள்.
எனவே அவர்கள் கண்டதாக சொல்வதை, பிறர் அப்படியே நம்பாமல் அதில் உள்ள உண்மையை ஆராய்ந்துதான் ஏற்க வேண்டும். இதைவிட அவர்கள் பொறாமையுடன் சொல்வதை கேட்காமல் இருப்பதே நல்லதாகும்.

கண்டொன்று சொல்லேல் - இதற்கு மற்றுமொரு உதாரணம் கூட சொல்லலாம். நட்போடு உள்ள இரு குடும்பங்களும், ஒருவர்மீது ஒருவர் சகோதர பாசத்துடன் பழகிவந்தனர். அவர்கள் வீட்டிலுள்ள பையனும், இவர்கள் வீட்டில் உள்ள பெண்ணும் சமவயது உடையவர்கள்.

சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்து வந்தனர். இப்படி இருக்கும் காலத்தில் பொதுத் தேர்வின்போது, இருவரும் நண்பர் வீட்டில் தேர்வுக்காக இரவு பத்துமணிக்கு மேலாகியும் ஒன்றாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த அக்குடும்பத்தினர் மீது பொறாமையுடைய எதிர்வீட்டுக்காரர், பெண்ணை பெற்றவரிடம், உங்கள் பெண்ணுடன் அந்த பையன் வெகுநேரமாகியும் ஏதோ செய்து கொண்டிருக்கிறான். என்னவென்று கவனியுங்கள்! என பொறாமையுடன் கூறினான்.

அதற்கு பெண்ணை பெற்றவரோ, அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக ஒரே பள்ளியில் படிப்பவர்கள். இருவரது குடும்பமும் பலவருடங்களாக நட்புடன் பழகி வருகிறோம். அவர்களிருவரும் சகோதர சகோதரிகளாக பழகி வருகிறார்கள். அவர்கள் மீது களங்கம் கற்பிக்காதீர்கள். நாங்கள் அவர்களைப் பற்றி நன்கு அறிவோம். அவர்கள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். எனவே இதுபோன்று நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு பார்த்ததை ஆராயாமல் உண்மை தெரியாது, நீங்களாக ஏதாவது சொல்லி பிறர் குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ண வேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டார்.

அதேபோன்று மற்றொரு சம்பவம். மார்ச் மாதத்தின் இறுதியில் அந்த வருடத்திற்கான கணக்கினை வருமானவரித்துறையினரிடம் சமர்ப்பிப்பது ஒவ்வொரு வணிக ஸ்தாபனத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

ஒரு வணிக ஸ்தாபனத்தில் இரு நண்பர்கள், ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும், அன்புடன் பழகியும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கூட்டாக வியாபாரம் செய்தார்கள். அப்படி இருக்கும் காலத்தில், மார்ச் மாதத்தின் கணக்கினை முடிக்கும் பொருட்டு, கடையின் வரவு செலவுகளை கவனித்து வரும் நண்பர், கணக்கினை சரிபார்த்து இறுதி நாளுக்குள் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில், வீட்டிற்கு சென்று இரவு பத்து மணிக்குமேல் மீண்டும் கடைக்கு வந்து, வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தார்.

இந்த இரு நண்பர்கள் எப்போதும் ஒற்றுமையாகவும், இணைபிரியாமலும், மகிழ்வுடனும் இருந்துகொண்டு வியாபாரத்தையும் திறமையாக நடத்தி, வியாபாரத்தில் மென்மேலும் வளர்ந்து வருவதை பொறுக்காத அருகில் உள்ள கடைக்காரர் இவர்கள்மேல் பொறாமை கொண்டார்.

அந்த பொறாமையின் காரணமாக, மறுநாள் கடையில் கூட்டாக உள்ள மற்றொரு நண்பனிடம் ஐயா! என்னவென்று தெரியவில்லை, இரவு பத்து மணிக்குமேல் உங்கள் நண்பர் மீண்டும் கடையை திறந்து, கடைக்குள் இரவு வெகுநேரம் வரை ஏதோ செய்து கொண்டிருக்கிறார். இதை கவனியுங்கள். எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கிறதென புறம் சொல்லி குற்றம்சாட்டி பேசினார்.

அதற்கு அந்த நண்பரோ, எனது நண்பரைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும், எனது நன்மையின் பொருட்டே இருக்குமேயன்றி தீமையை செய்ய மாட்டான். அவனைப்பற்றி தவறாக சொல்லி, எங்கள் நட்பை பிரிக்க பார்க்காதீர்கள். இரவு பத்து மணிக்குமேல் அவன் கணக்குகளை சரிபார்ப்பதற்காக வருவானென்பது எனக்கும் தெரியும். என்னிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தான். அது தெரியாமல், கண்ணால் கண்டதை வைத்துக் கொண்டு தீர விசாரிக்காமல், இப்படி பிறர்மேல் குற்றம் சொல்லி, அவருடைய வாழ்க்கையைப் பாழ்படுத்தி விடாதீர்கள். இது மிகப்பெரும் பாவமென கூறி கடிந்து அனுப்பிவிட்டார்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்ட நண்பர்களாதலால், இவ்வாறு குறை சொன்ன போதும், அவர்களுக்குள் பிரச்சனைகள் ஏதும் எழவில்லை. இதுவே சற்று புரிந்து கொள்ளாமல், அருகில் உள்ளவர்கள் பேச்சைக்கேட்டு அவர்கள் சொன்னதில் உள்ள உண்மைப் பொருளை ஆராயாது நம்பியிருந்தால், அந்த இரு நண்பர்களின் வாழ்வும் வீணாகிவிடும், பகையாகிவிடுவார்கள் என்பதை உணர வேண்டும்.

யார் பார்த்ததாக கூறினாலும், அதை தீர விசாரித்துதான் முடிவெடுக்க வேண்டும். கண்ணால் கண்டதை உண்மையென்று எண்ணக்கூடாது.

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
- திருக்குறள் - புறங்கூறாமை - குறள் எண் 181.

பல்வேறு புராணங்களிலும், வேதங்களிலும், ஆகமங்களிலும், பிரபந்தங்களிலும், இன்னும் அநேக நூல்களிலும் இறைவன் உண்டென்றும், பாவபுண்ணியங்கள் உண்டென்றும், அவரவர் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப, வாழ்வு அமையுமென்று கூறுகின்றனர்.

இப்படி மனிதசமுதாயத்திற்காக இறைவனாலும், பெரியோர்களாலும், கூறப்பட்ட அறத்தைப் பற்றி ஒருவன் அவதூறும் செய்யலாம். அறவழி செல்லாமல் பாவபுண்ணியங்களும் இறைவனும் இல்லையென்று கூறி, பாவங்களைச் செய்து மகிழ்பவனாகவும் இருக்கலாம். ஆனால் அதுவும் பிறிதொரு காலத்தில் அந்த இறைவனால் மன்னிக்கப்படும்.

ஆனால் கண்ணால் கண்ட போதும், அதன் உண்மைப் பொருளை உணராது, நடக்காத ஒன்றை நடந்ததாக, உண்மைக்கு புறம்பாக புறம் சொல்வது மீளமுடியாத பாவத்தில் ஆழ்த்திவிடும். கடவுள் அவனை மன்னிக்க மாட்டார். எனவே அறச்செயல்கள் செய்யாவிடினும் குற்றமில்லை. அதனை விடுத்து, அறம் அல்லாதவற்றை செய்தாலும் தப்பில்லை. ஆனால் அது செய்தவனை மட்டுமே பாதிக்கும்.

ஆனால் நடக்காத ஒன்றை, நடந்ததுபோல் சொல்லும் புறங்கூறும் செயலினால் அவன் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பலபேர் அவனால் பாதிக்கப்படுவார்கள். ஏன்? சில சமயம் ஒட்டுமொத்த சமுதாயமே பாதிப்பிற்கு உள்ளாகவும் நேரிடும் என்பதால் அதன் கொடுமையை உணர்ந்து, மகான் ஔவையார் கண்டொன்று சொல்லேல் என அறிவுரை கூறுகிறார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment